Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவில் வந்தது நிஜத்தில் தோன்றியது.. நிஜக் கதை..!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகவீனமா இருக்கும் நாட்களில் தான் அப்படி நித்திரை கொள்வது... மற்றைய நாட்களில் எவ்வளவு தான் பிந்தி நித்திரை கொண்டாலும், வெள்ளன எழும்பிடுவமில்ல... ^_^

நான் சும்மா பகிடிக்கு எழுதி இருந்தன். நீங்கள் நிச்சயமாக 8 மணி நேரமாவது நித்திரை கொள்ளனும்..! அதுதான் உடல் நலத்துக்கு நல்லது. நேற்றுக் கூட ஒரு ஆய்வில் சொல்லி இருந்தார்கள் தற்போதைய ரீன் ஏஜ் ஆக்கள் குறைய நித்திரை கொள்வதால்.. இலகுவில் சோர்வடைகிறார்கள் என்று. அது பெரும்பாலும் உண்மை என்பதை நான் எனது அனுபவத்திலும் கண்டிருக்கிறன்..! அந்த நிலையை தவிர்ப்பது மூளைக்கும் உடலுக்கும் நன்றே..! :):icon_idea:

  • Replies 60
  • Views 7.9k
  • Created
  • Last Reply

நான் சும்மா பகிடிக்கு எழுதி இருந்தன். நீங்கள் நிச்சயமாக 8 மணி நேரமாவது நித்திரை கொள்ளனும்..! அதுதான் உடல் நலத்துக்கு நல்லது. நேற்றுக் கூட ஒரு ஆய்வில் சொல்லி இருந்தார்கள் தற்போதைய ரீன் ஏஜ் ஆக்கள் குறைய நித்திரை கொள்வதால்.. இலகுவில் சோர்வடைகிறார்கள் என்று. அது பெரும்பாலும் உண்மை என்பதை நான் எனது அனுபவத்திலும் கண்டிருக்கிறன்..! அந்த நிலையை தவிர்ப்பது மூளைக்கும் உடலுக்கும் நன்றே..! :):icon_idea:

அப்படித்தான் நானும் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் சாதாரண நாட்களில் 5 அல்லது 6 மணிநேரத்திற்கு மேல் நான் நித்திரை கொண்டது இல்லை, வரவும் வராது :lol:

Edited by குட்டி

தப்பிலி, பரீட்சைக் காலத்தில் அல்லது மறுமொழி வரும் காலத்தில் exam hall ல இருந்து பேப்பர் பேப்பராக எழுதுவம், ஆனால் எக்ஸாம் எழுதி முடிக்காமலே பேப்பரை வாங்கிக் கொண்டு போவது போல கனவு வந்ததுண்டா? :blink: :lol:

பரீட்சையில் பந்தி பந்தியா எழுதினால் குறைந்த புள்ளிகளாவது போடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்ததால் , விடை தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக நிறைய எழுதுவேன். :rolleyes:

இரசாயணவியலில் பதிலே தெரியாத ஒரு கேள்விக்கு 'கேள்வியின் நாயகமே இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா' என்று எழுதி, பெரிய முட்டையைப் பெற்றுக் கொண்டேன். :icon_mrgreen:

செய்த பாவமோ தெரியாது, இப்பவும் சிலவேளை கனவுகளில் 'chemistry ' பரீட்சை எழுதுவது மாதிரி கனவு கண்டு திடுக்கிட்டு விழிப்பேன். :(:lol:

பரீட்சையில் பந்தி பந்தியா எழுதினால் குறைந்த புள்ளிகளாவது போடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்ததால் , விடை தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக நிறைய எழுதுவேன். :rolleyes:

இரசாயணவியலில் பதிலே தெரியாத ஒரு கேள்விக்கு 'கேள்வியின் நாயகமே இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா' என்று எழுதி, பெரிய முட்டையைப் பெற்றுக் கொண்டேன். :icon_mrgreen:

செய்த பாவமோ தெரியாது, இப்பவும் சிலவேளை கனவுகளில் 'chemistry ' பரீட்சை எழுதுவது மாதிரி கனவு கண்டு திடுக்கிட்டு விழிப்பேன். :(:lol:

:lol: :lol: :lol:

அப்ப இன்னும் அவையள் கண்டுபிடிக்கல்லையா...! (ஜோக்ஸ்) :lol::D

மனிதர்கள் அனைவருக்குமே மனநோய் இருக்கிறது. ஆனால் அது குறிப்பிட்ட சதவீதத்தை தாண்டும் பொழுது தான் வெளிக்காட்டப்படுகிறது. நான் இன்னும் அந்த எல்லையை தாண்டேல்லை அண்ணா... :D

எப்பவாவது தாண்டினா நான் உங்களுக்கு சொல்லுறன் அவை கண்டுபிடிச்சிட்டினம் எண்டு. :icon_idea:

பரீட்சையில் பந்தி பந்தியா எழுதினால் குறைந்த புள்ளிகளாவது போடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்ததால் , விடை தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக நிறைய எழுதுவேன். :rolleyes:

இரசாயணவியலில் பதிலே தெரியாத ஒரு கேள்விக்கு 'கேள்வியின் நாயகமே இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா' என்று எழுதி, பெரிய முட்டையைப் பெற்றுக் கொண்டேன். :icon_mrgreen:

செய்த பாவமோ தெரியாது, இப்பவும் சிலவேளை கனவுகளில் 'chemistry ' பரீட்சை எழுதுவது மாதிரி கனவு கண்டு திடுக்கிட்டு விழிப்பேன். :(:lol:

தப்பிலி அண்ணா, இண்டைக்கு நான் சிரிக்கிறதை நிறுத்த முடியாது போல கிடக்கு. :D:icon_idea:

இரசாயம் என்பது தான் சரி...

Edited by காதல்

சுகவீனமா இருக்கும் நாட்களில் தான் அப்படி நித்திரை கொள்வது... மற்றைய நாட்களில் எவ்வளவு தான் பிந்தி நித்திரை கொண்டாலும், வெள்ளன எழும்பிடுவமில்ல... ^_^

நான் சும்மா பகிடிக்கு எழுதி இருந்தன். நீங்கள் நிச்சயமாக 8 மணி நேரமாவது நித்திரை கொள்ளனும்..! அதுதான் உடல் நலத்துக்கு நல்லது. நேற்றுக் கூட ஒரு ஆய்வில் சொல்லி இருந்தார்கள் தற்போதைய ரீன் ஏஜ் ஆக்கள் குறைய நித்திரை கொள்வதால்.. இலகுவில் சோர்வடைகிறார்கள் என்று. அது பெரும்பாலும் உண்மை என்பதை நான் எனது அனுபவத்திலும் கண்டிருக்கிறன்..! அந்த நிலையை தவிர்ப்பது மூளைக்கும் உடலுக்கும் நன்றே..!

நிச்சயம் அனைவருக்கும் தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். அதை விட அதிகமாக தூங்கினாலோ அல்லது தூக்கம் குறைந்தாலோ மூளை சோர்வு ஏற்படும்.

அதிக நாட்களுக்கு தூக்கமின்மை தொடர்ந்தால் அது மனநோய் உருவாகுவதற்கும் காரணமாகி விடும்.

இரவில் தூக்கம் குறைந்தால் அடுத்த நாள் முழுக்க ஒரே டென்ஷனா தான் இருக்கும்.... அதோட இரவில் தூக்கம் குறைந்தால் கண்ணை சுற்றி கருவளையம் ஏற்படும்....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் எனக்கு எப்பவாவது வரும். நான் அதை மறந்துவிடுவேன் ஆனால் சில மாதங்கள் சிலவருடங்கள் கழித்து கனவில் வருவதுபோல் சம்பவங்கள் கோர்வையாக நிகழும்போது கனவின் ஞாபகம் வரும். அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் தெளிவாகத் தெரியும் அந்த இடங்களில் நானும் சம்பந்தப்பட்டபடி இருப்பேன். என்னால் அடுத்து நிகழ இருப்பதை உணர முடியும் ஆனால் உரைக்க முடியாது. சில சமயங்களில் விரும்பாத நிறைந்த சோகங்களைத் தரக்கூடிய சம்பவங்கள் கூட நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாக என்னால் என்றோ காணப்பட்ட கனவின்பால் அதனை தடுக்கலாம் என்ற நினைப்புத் தோன்றும் ஆனால் ஏதோ ஒருவகையான சக்திக்குள் கட்டுண்டு அக்கனவைப்பற்றியோ அல்லது அடுத்து நிகழ இருக்கும் விடயத்தைப்பற்றியோ என்னால் பேச முடியாது இருக்கும். நிறையத் தடவைகள் இப்படியான திணறல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்று வரைக்கும் என்னால் ஏன் அதனைசொல்ல முடியவில்லை அல்லது அப்படியான கனவில் கண்ட அசம்பாவிதங்களில் இருந்து தப்பித்தோ அல்லது தவிர்த்தோ போக முடியவில்லை என்று தெரியவில்லை.

ஊரில் சில வீட்டில் உள்ள வீராவேசமான நாய்கள் குரைத்துக் கொண்டு அட்டகாசமாக நின்றிருப்பதை அறிந்திருப்பீர்கள் சில சமயங்களில் அவை குரைக்க முடியாமல் முனகும். அதனை பெரியவர்கள் அவதானித்து நாயின் வாய் கட்டப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்... அதாவது அந்த நாய்க்கு சில அபூர்வமான தன்மைகளை உணர முடியுமாம் அத்தகைய ஏதோ ஒரு வகையான விடயம் நாயின் வாயைக்கட்டிப் போட்டுள்ளதாகவும் சொல்வார்கள்.. அதைப்போல எனக்கும் கனவின் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதில் ஏற்கனவே நான் கனவாகக் கண்டது ஞாபகத்தில் வந்துவிடும் ஆனால் அதனைச் சொல்ல முடியாது. சில சமயங்களில் அவற்றைப்பற்றி மீளப்பார்க்கும்போது இந்த வாய் கட்டப்பட்ட நாய்கள்தான் ஞாபகத்தில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் பந்தி பந்தியா எழுதினால் குறைந்த புள்ளிகளாவது போடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்ததால் , விடை தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக நிறைய எழுதுவேன். :rolleyes:

இரசாயணவியலில் பதிலே தெரியாத ஒரு கேள்விக்கு 'கேள்வியின் நாயகமே இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா' என்று எழுதி, பெரிய முட்டையைப் பெற்றுக் கொண்டேன். :icon_mrgreen:

செய்த பாவமோ தெரியாது, இப்பவும் சிலவேளை கனவுகளில் 'chemistry ' பரீட்சை எழுதுவது மாதிரி கனவு கண்டு திடுக்கிட்டு விழிப்பேன். :(:lol:

நீங்கள் பரவாயில்லை கடைசி இரசாயணவியலில் தேர்வில் கேள்விகளை வாசித்துக் கொண்டு போக நித்திரை வந்து சோதனை மண்டபத்தில் நல்ல நித்திலை, தட்டி பேப்பரை தா அப்பு என்கிற போதுதான் அட சோதனை நேரம் முடித்துவிட்டது தெரியும்.

அரை துக்கத்தில செய்த கேள்விகள் எல்லாம் சரி போட்டு அடுத்த கட்டத்திற்கு போக வழி செய்திட்டாங்க :lol::D

நீங்கள் பரவாயில்லை கடைசி இரசாயணவியலில் தேர்வில் கேள்விகளை வாசித்துக் கொண்டு போக நித்திரை வந்து சோதனை மண்டபத்தில் நல்ல நித்திலை, தட்டி பேப்பரை தா அப்பு என்கிற போதுதான் அட சோதனை நேரம் முடித்துவிட்டது தெரியும்.

அரை துக்கத்தில செய்த கேள்விகள் எல்லாம் சரி போட்டு அடுத்த கட்டத்திற்கு போக வழி செய்திட்டாங்க :lol::D

:lol::D

இரசாயம் என்பது தான் சரி...

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D

இரசாயம் என்பது தான் சரி...

கட் & பேஸ்ட் தப்பிலியிடம் இருந்து :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் எனக்கு எப்பவாவது வரும். நான் அதை மறந்துவிடுவேன் ஆனால் சில மாதங்கள் சிலவருடங்கள் கழித்து கனவில் வருவதுபோல் சம்பவங்கள் கோர்வையாக நிகழும்போது கனவின் ஞாபகம் வரும். அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் தெளிவாகத் தெரியும் அந்த இடங்களில் நானும் சம்பந்தப்பட்டபடி இருப்பேன். என்னால் அடுத்து நிகழ இருப்பதை உணர முடியும் ஆனால் உரைக்க முடியாது. சில சமயங்களில் விரும்பாத நிறைந்த சோகங்களைத் தரக்கூடிய சம்பவங்கள் கூட நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாக என்னால் என்றோ காணப்பட்ட கனவின்பால் அதனை தடுக்கலாம் என்ற நினைப்புத் தோன்றும் ஆனால் ஏதோ ஒருவகையான சக்திக்குள் கட்டுண்டு அக்கனவைப்பற்றியோ அல்லது அடுத்து நிகழ இருக்கும் விடயத்தைப்பற்றியோ என்னால் பேச முடியாது இருக்கும். நிறையத் தடவைகள் இப்படியான திணறல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்று வரைக்கும் என்னால் ஏன் அதனைசொல்ல முடியவில்லை அல்லது அப்படியான கனவில் கண்ட அசம்பாவிதங்களில் இருந்து தப்பித்தோ அல்லது தவிர்த்தோ போக முடியவில்லை என்று தெரியவில்லை.

ஊரில் சில வீட்டில் உள்ள வீராவேசமான நாய்கள் குரைத்துக் கொண்டு அட்டகாசமாக நின்றிருப்பதை அறிந்திருப்பீர்கள் சில சமயங்களில் அவை குரைக்க முடியாமல் முனகும். அதனை பெரியவர்கள் அவதானித்து நாயின் வாய் கட்டப்பட்டுள்ளது என்று சொல்வார்கள்... அதாவது அந்த நாய்க்கு சில அபூர்வமான தன்மைகளை உணர முடியுமாம் அத்தகைய ஏதோ ஒரு வகையான விடயம் நாயின் வாயைக்கட்டிப் போட்டுள்ளதாகவும் சொல்வார்கள்.. அதைப்போல எனக்கும் கனவின் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதில் ஏற்கனவே நான் கனவாகக் கண்டது ஞாபகத்தில் வந்துவிடும் ஆனால் அதனைச் சொல்ல முடியாது. சில சமயங்களில் அவற்றைப்பற்றி மீளப்பார்க்கும்போது இந்த வாய் கட்டப்பட்ட நாய்கள்தான் ஞாபகத்தில் வரும்.

அய்... நம்மட சாகாரா அக்காக்கும் கனவு வருகுதாமில்ல..! :lol:

நன்றி அக்கா.. பகிர்ந்து கொண்டதற்கு..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.