Jump to content

சந்திரிகா – மன்மோகன்சிங் டில்லியில் சந்திப்பு.


Recommended Posts

முன்னாள் அதிபர் சந்திரிகாவிற்கும் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே திடீர் சந்திப்பு ஒன்று டில்லியில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பினால் மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது.

மஹிந்த இராஜபக்‌ஷ குடும்பம் இந்தியாவுடனான உறவினை சரியாகப் பேணவில்லை என்பதாலேயே இந்தியா சிறிலங்காவிற்கு எதிராக நடவடிகை எடுக்க துணிந்தது என்ற கருத்து சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் வெளியேயும் புகைந்து வருகின்றது. இதே வேளை சந்திரிகா இருந்திருந்தால் இவ்வாறான ஒரு விபரீதம் நடந்திருக்க மாட்டாது எனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலிலேயே இந்தச் சந்திப்பு சந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை உட்பட இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்திரிகாவின் விருப்பத்தைக் கேட்டதாகவும் அதற்கு அவர் பச்சைக் கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது இலங்கை அரசியல் விவகாரங்கள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்குச் சந்திரிகா விரிவான விளக்க மொன்றை வழங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

அத்துடன், இந்தியப் பிரதமரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியிடம் முக்கிய பல விடயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் அவசரப் பேச்சில் ஈடுபட்டமை கொழும்பு அரசியில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராப்போசன விருந்துடன் இந்த முக்கியச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசியல் தீர்வு குறித்து, இலங்கை அரசின் பிரதானக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு இந்தியா உள்ளூரத் தயாராகி வருகிறது எனத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு இடம்பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்திரிக்கா இருந்திருந்தால் இந்தி உறவு மட்டுமல்ல சர்வதேச உறவும் நல்ல முறையில் இருந்திருக்கும் அதே வேளை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளும் தொடந்திருக்கும். இதுவே சிங்களவர்களின் கருத்தாக இப்போது இருக்கின்றது.

http://thaaitamil.com/?p=16177

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

It shows the bankruptcy of Indian diplomacy.

Link to comment
Share on other sites

சந்திரிக்காவின் அறுந்த செருப்பை மன்மோகன் தைத்துக் கொடுத்திருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.