Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்: கருணாநிதி சூளுரை

Featured Replies

வேணுமாயின் தமிழீழத்தை அமைத்து தந்துவிட்டு கருணாநிதி உயிர் துறக்கட்டும். நாம் வேண்டாமென்னவில்லை. ஆனால் காங்கிரசை ஒதுக்க தமிழ் நாட்டில் இந்த முறை அ.தி.மு.க. கட்டாயமாக வெல்ல வேண்டும். அதாவது ஈழத்தமிழருக்கு கருணாநிதி சொர்க்கத்தை பூமியில் கொண்டுவந்து இறக்கி விட்டாலும் இவர் தோற்கவேண்டியது கூட்டு மொத்த தமிழரின் தேவை.

நா.க.அரசை ஆரம்பிக்கும் காலங்களில் பிரதமர் உருத்திரா ஒரு விசையத்தை கூறுவார். "எல்லா இனத்திற்கும் ஒரு இடத்தில் வேதனை இருந்தால் மற்றொரு இடத்தில் ஆறுதல் காணமுடியும். தமிழனுக்கு எத்தனை நாடு இருந்தும் ஒன்றிலிருந்தும் அவனால் ஆறுதல் பெறமுடியாது. ஆகையால்த்தான் நா.க.அரசு தேவைப்படுகிறது. இதை நாம் தமிழீழம் காணவென்று அமைத்து அதைக் கணடவுடன் அழித்துவிடக்கூடாது. இனிமேல் தொடர்ந்து இது எல்லாத் தமிழர்களின் பிரச்சனைகளையும் நாடுசாரமால் கையாளத்தக்க இயக்கமாக்கவேண்டும்" என்பதாகும். இதில் அவர் கருத்தில் கொண்ட விடயம், தமிழ் நாட்டில் விடுதலை பற்றி பேசுவோரை ஒடுக்க எவ்வளவு இலகுவாக காங்கிரசால் கருணாநிதியை கையாளாக்கூடியதாக இருக்கிறதென்பதை உணர்ந்ததினால்த்தான். அதாவது தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப்போகும் கட்சி, தமிழ்நாட்டு மக்களின் உரிமை, பொருளாதாரம், மற்றய எல்லாத்தமிழரின் உரிமை, உலகத்தில் தமிழுக்கு அதன் உயர்வுக்கு தக்கதான ஒரு பெருமையான இடம் , என்பவை எல்லாவற்றையும் கவனிக்க தக்க அரசாகத்தான் பதவிக்கு வரவேண்டும். தமிழீழம் அமைக்க போவதாக கூறும் நாடகத்தால் இதுவொன்றும் நடை பெறாது. இவர் எங்கேயாவது எதையாவது கண்டுவிட்டு துள்ளுகிறாரோ தெரியாது. (காங்கிரஸ் பிரேரணைக்கு வாக்களிக்க போவதாக தெரியவந்தபின் கடல்க்கரைக்கு உண்ணாவிரதமிருக்க போவதாக அறிவித்தவர்.) ஆனால் ஈழத்தமிழருக்கு கிடைக்க தக்க கடைசி சந்தர்ப்பத்தையும் இப்படி கிழே போட்டுடைத்து தான் பதவிக்கு திரும்ப வர முயல்கிறார். ஜெயலலிதா வந்தால் யப்பானிய அரசாங்கமும் அமெரிக்காவுடன் சேர்ந்து தமிழ் நாட்டில் முதலிடும். அவர்கள், இவரின் கடந்த கால அரசியால் தம்மால் தமிழ் நாட்டில் நம்பி முதலிடமுடியாமல் இருக்கென்று வெளிப்படையாகவே கூறினவர்கள்.

நெடும்செழியனை ஒதுக்கி தி.மு.க.வை தனது பணம் கறக்கும் பால் மாடாக்கியவர் கலைஞர். காங்கிரசால் தமிழர்கள் ஈழத்தில் இறக்கும் போது தமிழுக்கு விழாவெடுத்து காங்கிரசின் கொடுமைகளை மறைக்க முயன்றவர். அண்ணா இறந்தவுடன் எப்படி தி.மு.கவை கையடக்க படுத்தினாரோ அதேமாதிரி தான் இறக்கும் போது தி.மு.க ஸ்ரலினால் கையடக்கப்படுத்த பட்டுவிடவேண்டும் என்ற திட்டத்திற்குதான் ஈழக்கோரிக்கையை பலியிடுகிறார்.

இதுதான் சாத்தான் வேதமோதுகிறது என்பது. ராசபக்சா காட்டும் 13+ ம், கருணாநிதியின் தமிழ் ஈழமும் ஒரே தாயின் பிள்ளைகள்தான். பொன்சேக்கா வெளியில் வரப்போகிறார். அப்போது கருணாநிதியுடன் சரிக்கு சரியாக கோமாளித்தனம் காட்டி பகிடிவிட ஒருவர் கிடைத்துவிடுவார். அதுவரை கருணாநிதி சீமான் கேட்பது போல பேசாமலிருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1816462038car-26.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இருக்கிற நிலமையில தமிழ் ஈழக்கோசம் காசு குடுக்காமலே வாக்குச் சேகரிக்கக் கூடிய விடயமாக இருக்கிறது.திமுக வில் நடக்கும் சகோதர யுத்தத்தை மறைக்கவும் தமிழ் உணர்வாளர்களின் வாக்குகளை பெறவும் அவர் அதைக் கூறகிறார்.ஜெயலலிதாவும் இந்திய தமிழ் ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என் கடந்த தேர்தல் காலங்களில் கூறியவர்தான்.தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தமிழ் ஈழக் கோசத்தை முன்வைத்தால் காங்கிரசு கூட தமிழ்ஈழக் கோசத்தை தமிழ் மக்களின் வாக்குகளுக்காக முன்வைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.(அவர்களுக்கு இப்ப புலிகள் களத்தில் இல்லாததால் அந்தக் கோசத்தை தயக்கமில்லாமல் தமிழ் மக்களிஜன் கோரிக்கை என்று சொல்லி முன் வைப்பார்கள்.அவர்களுக்கத்தான் வெட்கம் ரோசம் கிடையாதே.அரசியல் வாதிகள் தங்கள் நலனுக்காகச் செய்வது எமக்கு நன்மை பயக்குமானால் அதை நாம் வரவேற்க வேண்டும்.வைகோவும் சீமானும் நெடுமாறனும் இந்த விடயத்தை விமர்சிக்காமல் விடுவது நல்லது. நமக்கு யார் குற்றியும் அரிசியாக வேண்டும்.இதை விமர்சிப்பதால் எமக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கேட்க வேண்டியது எப்போது டெசோ வை ஆரம்பிக்க போகிறிர்கள் என்பதாகவே இருக்க வேண்டும், கருணாநிதி எதை செய்தாலும் தனது நலன் இல்லாமல் இராது, ஆனாலும் மனுஷன் தற்போது கதைப்பதை எம்மக்கு சார்பாக நகர்த்த வேண்டும். சரி பிழை களுக்கு அப்பால் எங்களுக்கு இப்போது உதவிகளே தேவை, அதற்காக அவரின் சந்தர்பவாத /கீழ் தர அரசியல்களை மறக்கவேண்டியதிலை.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன் கைப்பட எட்டப்பன் கருணாநிதியை பற்றி நெடுமாறன் ஐயாவிற்கு எழுதிய கடிதம்.

23-7--97

தமிழீழம்

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் கண்டதைப் போட்டேன்.உண்மையை பகுத்தறிய வேண்டியது தமிழ் மக்களே!

முகப்புத்தகத்தில் கண்டதைப் போட்டேன்.உண்மையை பகுத்தறிய வேண்டியது தமிழ் மக்களே!

நெடுமாறன் ஐயாவிற்கு தலைவர் கடிதம் எழுதியதில் வியப்பேதும் இல்லையே!!?

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் கண்டதைப் போட்டேன்.உண்மையை பகுத்தறிய வேண்டியது தமிழ் மக்களே!

சந்தேகப்பட்டு முகக்குறி போடவில்லை புலவர்.. :D உண்மையான கடிதமாக இருக்கும் பட்சத்தில் டாக்டர் கலைஞர் என்ன நினைப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.. அவ்வளவுதான். :D

540475_443535949006437_100000501084795_1721447_1472964676_n.jpg

... சில தினங்களுக்கு முன் நெடுமாறன் ஐயாவை சந்தித்த தமிழக நண்பர் ஒருவரிடம் ...

இன்று பழ. நெடுமாறன் அய்யாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது டெசோவை பற்றிய பேசினார். டெசோவை தன்னிச்சையாக இருக்கும் அங்கத்தினர் யாரையும் கேட்காமல் கருணாநிதி கலைத்த பொழுது வீரமணியும் நெடுமாறன் அய்யாவும், விடுதலை சம்பந்தம் அவர்களும் கருணாநிதியை சந்தித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிராபகரன் என்னை மதிக்கவில்லை அவருக்காக நான் எதையும் செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார். வீரமணியும், நெடுமாறன் அய்யாவும் ஈழமக்கள் முக்கியமா? பிராபகரன் முக்கியமா? என்று கேட்டதற்கு இதை பற்றியெல்லாம் பேசவேண்டாம் பிராபகரன் என்னை மதிக்கவில்லை நான் இயக்கங்கள் அனைவரையும் அழைத்த பொழுது வந்து என்னை சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு முன் நடந்த திமுக பொது குழு கூட்டத்தில் பாலஸ்தின விடுதலை ஆதரவாக தீர்மானம் இயற்றி இருந்தார்களாம், விடுதலை சம்பந்தம் கருணாநிதியின் பால்யகால நண்பர் அவர் உடனே “பாருங்கள் கலைஞர் நீங்கள் பாலஸ்தீன விடுதைலையை ஆதரித்து தீர்மானம் இயற்றி இருக்கிறீர்கள் ஆனால் இன்று வரை அந்த திமிர் பிடித்த யாசர் அராபத் உங்களை வந்து சந்திக்கவில்லை, என்ன திமிர் அவருக்கு” என்று சொல்லியிருக்கிறார்.

உடனே கலைஞர் சத்தம் போட, சம்பந்தம் அவர்களும் விடாமல் நான் இதை விடமாட்டேன் யாசர் அராபத்தை கண்டிப்பாக இதற்காக கேள்வி கேட்பேன் என்று விடாமல் வாதிட்டு இருக்கிறார். வீரமணியும் நெடுமாறான் அய்யாவும் பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது சம்பந்தம் அவர்களை வெளியில் அழைத்து வந்துவிட்டனராம்......

இப்பொழுது தெரியும் டெசோ என்பது எதற்காக... கருணாநிதியின் சுயநல அரசியலுக்கானது மட்டுமே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.