Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் மரணம் இல்லை: கருணாநிதி

Featured Replies

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார்.

மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று அவரிடம் கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார்.

போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இன்று டெசோ அமைப்பின் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சனையை தீவிரமாக கையில் எடுப்பதாக கூறுகிறார்களே?

பதில்: ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப் படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப் படை இந்தியா வந்தபோது அன்று முதலமைச்சராக இருந்த நான் வரவேற்கச் செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதைத் தடுக்க தவறிய நீங்கள் இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாக விமர்சிக்கிறார்களே?

பதில்: விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். நாங்கள் ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்?.

பதில்: முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

பதில்: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்ற போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

பதில்: உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது திமுகவால் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்: அவர்களை ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. என்றார்

http://thaaitamil.com/?p=17581

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
:D:icon_idea::icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேரே கண்றாவி வாயில் வருகுது இல்லை டோ சோ கேசோவோ.. ஏற்கனவே இவன் ஆரம்பித்து போராளிகளுக்குள் பிளவு உண்டாக்கியது வரலாற்றில் பதிக்கபட்டுள்ளது. இப்ப மறுபடியும் ஆரம்பித்து போட்டு இருக்கார்.வெளிநாட்டில் இருக்கும் போராடாதா /போராடும் குழுக்கள் உசாராக இருங்கப்பா.. இவரின் அடுத்த டார்கெட்டு அங்கத்தான் நகரும்..

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. என்றார்

http://thaaitamil.com/?p=17581

ஈழத்தமிழர்களின் குருதியில் நீந்தித் தமிழகம் முழுவதும் சென்றுஅடுத்த   தேர்தலில் எமது வெற்றிக்காகப் பாடுபடுவோம் என்பதைச் சொல்ல மறந்து   விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலுக்கு கலைஞர் இப்பவே தயாராகி விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.