Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ஈழம் தீர்வு என்ற கருணாநிதியின் கருத்தை ஏற்க முடியாது!- சுஷ்மா சுவராஜ்

Featured Replies

இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்' ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது.

எதிர்க்கட்சித்தலைவர்சுஷ்மாசுவராஜுடன்ஸ்ரீரங்காஎம்.பி. சந்திப்பு

இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜை கடந்த புதன்கிழமை மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள சுஷ்மா சுவராஜின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கையில் இருந்து திரும்பிய பிறகு அவர்களின் பொதுவான கருத்து குறித்து சுஷ்மாவிடம் அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து எந்த விதமான விவாதம் நடத்தவில்லை என்ற தகவல்கள் இலங்கையில் இருந்து வெளிவருவது குறித்து சுஷ்மா சுவராஜிடம் கேட்டதற்கு எனது தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை இலங்கையில் சந்தித்த போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் .

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து, இலங்கை நாடாளுமன்ற கட்சிகளின் குழு ஒன்றை அமைத்து விவாதித்து முடிவு காணும் வகையில் இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆனால் இந்த குழுவில் பங்குகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்து வருகிறது என்றும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அவர்களை வலியுறுத்தி இந்த குழுவில் கலந்து கொள்ளச் செய்யவேண்டும் என இலங்கை ஜனாதிபதி தங்களிடம் கேட்டுக் கொண்டதாக இந்திய எம்.பி.க்கள் குழுவை தலைமை தாங்கி இலங்கைக்கு சென்று வந்த சுஷ்மா சுவராஜ் மீண்டும் உறுதிப்படுத்தினார்

http://nilavaram.com...news&Itemid=462

இவர் சுஸ்மா, சம்பந்தர் எடுக்கிற நடவடிக்கைகளை கெடுத்து காங்கிரசிடம் திரும்பவும் அதிகாரத்தை கையளிக்க முயல்கிறார்.

  • தொடங்கியவர்

எங்கட பிரச்சினையை பொறுத்தவரை அவங்களும் (காங்கிரஸ் ) நீங்களும்( பி .ஜே. பி ) ஒரே நிலைபாட்டிலை தான் இருக்கீங்க போல # அவன் சங்கி மங்கி எண்டால் நீ மங்கி சங்கி..!

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா ..சுஸ்மா....நீங்கள் போய் வந்த கையுடனேயே...பிளேட் மாத்தின மகிந்த குடும்பம்....போதாக்குறைக்கு...அவனிடம் நக்கும்ஶ்ரீரங்காவை அனுப்பி நீங்கள் நக்கினபிளேட்டில் உள்ள மிச்சம் கொடுத்து விட்டிருக்கிறான்.....நீங்கள் கண்டது கதைத்தது எல்லாம் யாரென்றும் எங்களுக்கு தெரியும்.....வாங்கின பரிசுகளும் எவ்வளவு கனதியானவை என்றும் தெரியும்....இதற்கு மேல் நாம் உங்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் கரங்கள் ஒதுங்கும்வரையில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வழியில்லை..! :unsure: கட்டுப்பாட்டைத் தங்கள்வசம் கொண்டுவர எடுக்கும் கடைசி முயற்சியே இது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கின்றதும் ஏற்காததும் உங்களின் பிரச்சனை ஆனால் ஈழதமிழருக்கு என்ன வேண்டும் என்பதினை நீங்கள் தீர்மானிக்க முடியாது ....... அதற்கான முடிவெடுக்கவேண்டியது ஈழத்தமிழர்களே

நாங்கள் ஸ்ரீலங்கா சிங்கள நாட்டிடம் சுதந்திரம் பெற இந்தியா என்ற கிந்தி நாட்டுக்கு அடிமைகளாக மாற முடியாது

வாய்ச்சொல்லில் வீரரான முன்னாள் முதல்வர் கரு.. அவர்களின் கருத்தும் இந்தியசடைதலுக்கு தற்போது கீரோயினியுமாக நியமிக்கப்பட்ட சுஷ்மா அவர்களின் கருத்துகளுக்கும் அப்பால் எமக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஈழம் தேவை என்று 30 வருடங்களாக கத்திப்போராடிக்கொண்டு வருகிறோம் என்ற உண்மையை எவன் புரிந்துகொண்ட செயல்படுகிறானோ அவரின் கருத்தே இன்று முக்கியமானது.................

ஹிந்தியக் காட்டுமிராண்டிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஓட்ட நறுக்கவேண்டிய காலம்!

ஈழத் தமிழினத்தின் உரிமைகளை கண்டகண்ட ஹிந்திய சொறிநாய்களெல்லாம் தீர்மானிக்க முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.