Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமிக்கு அமெரிக்காவில் அதிக பட்ச தண்டணை ?

Featured Replies

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக பட்ச தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இவர் 2000ஆம் ஆண்டு நடுப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=18585

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர் குடிச்சவன் இருக்க ..... என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது.நாட்டுக்காக சேவை செய்தவன் கம்பி எண்ண வெளியில் பம்மாத்து விட்டு நடித்தவர்கள் இடாம்பீக வாழ்க்கை வாழ்கிறார்கள்.யாரை பிழை சொல்வது என்றே தெரியவில்லை. :huh: :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.boston.com/news/nation/articles/2012/05/11/us_rep_for_sri_lankan_rebels_faces_sentencing/

செய்தி தயாரிக்கும் தமிழர்களை என்ன செய்வது?

  • தொடங்கியவர்

இரண்டாம் இணைப்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்காவில் நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கருணாகரன் கந்தசாமி என்ற ஈழத்தமிழரை நியுயோர்க் நகர நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 55 வயதான கருணாகரன் கந்தசாமிக்கு எதிராக தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.

ஆனால் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

இதையடுத்து ஏற்கனவே ஆறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கருணாகரன் கந்தசாமியை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

http://thaaitamil.com/?p=18585

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை ... தின்டவன் எல்லாம் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் இப்போ.. பெயரையே காணோம்.. என்ன்னோ பெயர்கள் அந்த அணி இந்த அணி.. அடிச்ச காசு எங்கப்பா..? உண்டியல் குலுக்கியது எங்க..?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அண்ணா...

உங்களுக்கு, விடுதலை கிடைத்தை இட்டு சந்தோசம்.

இனியும்.... அப்பாவியாக இராதீர்கள், என அன்புடன் வேண்டுகின்றேன்.

இருந்து பாப்பம் மற்றதுகளுக்கும் என்ன நடக்க போகிறது என்று. உண்மை ஒரு நாள் வெளிவரவேண்டும். நீதியை தேடி அமெரிக்க போனபோது, அநீதியின் உச்சத்தில் இருக்கும் அரசுக்கு சட்ட உதவிகள் செய்வதாக கூறி அமெரிக்காவால் இவர்கள் தணடிக்கப் பட்டார்கள். இப்போது, அமெரிக்காவின் கடமை, இலங்கை சென்று ஈழத்தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது.

விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரிதார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கருணாகரன் அமெரிக்க நீதிமன்றினால் விடுவிப்பு

Posted by Nilavan on May 12th, 2012

karunakaran.jpg

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்காவில் நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கருணாகரன் கந்தசாமி என்ற ஈழத்தமிழரை நியுயோர்க் நகர நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 55 வயதான கருணாகரன் கந்தசாமிக்கு எதிராக தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரச சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.

ஆனால் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, 5 ஆண்டுகள் சிறையில் இருந்தது போதுமானது என்று தீர்ப்பளித்து, கருணாகரன் கந்தசாமியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் வாகனச் சாரதியான இவர் சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இராணுவம் சாராத – மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே தொடர்புபட்டிருந்தார் என்று நம்புவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

http://sankathi.com/dailynews/?p=91

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவருடன் சேர்ந்து, சில தமிழ்நாட்டு ஆதரவானவர்களும் கைது செய்யப்பட்டார்களே...

அவர்களின் விடுதலை, என்னாச்சு?

செய்திகளை தொகுக்கும், இணையத்தளங்களே....

முண்டி, முழுங்காமல்... உண்மைச் செய்திகளைச் சொல்ல முயலுங்கள்.

தெரியாவிட்டால்...... குப்புற போத்திக் கொண்டு படுங்கள்.

உங்களை ஆர்... சனல் 4 போல் எதிர்பார்த்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பார்வை சிங்களம் மீதா?

அல்லது ஈழத்தமிழர்களின் மீதா ?

எனக் காலம் பதில் சொல்லும்.

ஈழவிடுதலை ஆதரவாளரின் விடுதலை

மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.