Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டும் குற்றப்புலனாய்வு பிரிவினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

srilanka-muslim-mosque-150seithykal.jpg

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை கோரியுள்ளனர்.

இந்த தரவுகள் திரட்டல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே இடம்பெறுகின்றது என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி நிராகரித்தார்.

இது தொடர்பில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் கசியொன் ஹேரத்தை தொடர்புகொண்டு வினவிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஜயம் குறித்து தாம் அறியவில்லை என்றார். முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை தன்னை சந்தித்தபோது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமை இதன் மூலம் மீறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோருவதனால் எந்த பிரச்சினையுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் தெரிவித்தார். அனைத்து சமயங்களினதும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோர வேண்டும். மாறாக, பள்ளிவாசல்கள் தொடர்பான தகவல்களை மாத்தரம் கோருவது முஸ்லிம் சமூகத்திற்கு வருத்த்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.co...&language=tamil

பதியப்படாத பள்ளிவாசல்கள் உடனடியாக இடிக்கப்பட்டு. நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதற்கு அணைவரும் முன் வறவேன்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதியப்படாத பெளத்த விகாரைகள் மட்டும் சிறிலங்காவில் கட்ட அனுமதி கொடுக்கப்பட வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு எச்சரிக்கை: தேன்கூட்டில் கைவைக்காதே!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சிங்களவனோடு சேர்ந்து நின்று தமிழர்களை அழிக்க புலனாய்வு வேலை செய்தவர்களை.. இன்று சிங்களவன் புலனாய்வு செய்யுற நிலை.... ம்ம்ம்...! இப்பாவது இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. யார் எதிரி.. யார் நண்பன் என்று..! :icon_idea::lol:

றிச்சாட் பதியுதீனிடம் இந்த விபரங்களைக் கேட்டால் கொடுத்துவிடப் போகிறார். இதற்கெல்லாம் ஏன் குற்றப் புலனாய்வுப் பிரிவு?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இந்தச் செயலை கண்டித்து, தங்கள் ஊரில் உள்ள பௌத்த விகாரைகள் மீது... கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

alevi-maulana.jpg

முஸ்லிம் பள்ளிகள் பற்றிய தகவல்களை வழங்காதீர் :அலவி மௌலானா.

முஸ்லிம் பள்ளிவாசல்களின் எந்தவொரு விவரங்கள் தகவல்களை இரகசியப் பொலிஸார் உட்பட யார் வந்து கேட்டாலும் வழங்கக் கூடாதென மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு விஜயம் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, பெயர் பதிவு செய்யப்பட்ட திகதி முதலான தகவல்களைப் பெற்றுச் சென்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபியா, ஒரு மில்லியன் டொலர், உதவி செய்தால், புத்தர் மீண்டும் கொஞ்சக் காலத்துக்குத், தியானத்தில் அமர்ந்து விடுவார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தடுப்பதற்கு உதவி கோரி உலகநாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளிற்கு ஹக்கீமை விஜயம் செய்ய சொல்லுங்கள் அவர்கள் தடுப்பார்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரேபியா, ஒரு மில்லியன் டொலர், உதவி செய்தால், புத்தர் மீண்டும் கொஞ்சக் காலத்துக்குத், தியானத்தில் அமர்ந்து விடுவார்!

இப்ப புத்தரும் தொழுகை தான் ..."அல்லாகு அக்பர்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.