Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்![/size]

முகநூலில் பைத்தியமாகி, வாழ்வைத் தொலைத்தோர் அதிகமுள்ளனர். முகமறியாது, முகவரியறியாது என்ற நினைப்பில், மனவக்கிரங்களை கொட்டித்தீர்க்கும் கழிப்பிடங்களாக முகநூல் மாறிவிடுமோ என எண்ணுமளவுக்கு செய்திகள் அடிக்கடி வருகின்றன.

இதைத் தவிர, தனி மனித உளவியல் தாக்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அபாயங்களை நோக்கி முகநூல் வலைப்பின்னலின் கவர்ச்சி இழுக்கின்றது.

சமீபத்திய செய்தி இதோ...

2AC74E6B5CFFD344A7654929A125D.jpg

புது தில்லி: உதவி இராணுவ அதிகாரி தரத்திலிருக்கும் ஒரு இந்திய இராணுவ அதிகாரி, அங்கீகாரமற்ற, அறிமுகமற்ற பெண் நபருடன் முகநூலில் தேனொழுக 'கடலை' போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்பெண், பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயைச் சேர்ந்தவர் என சந்தேகிகப்படுகிறது. இதே பெண், சென்ற வருடம் ஒரு இந்திய அதிகாரியை முகநூலில் தேனொழுக கடலை போட்டு, தன் வலையில் வீழ்த்தியுள்ளாரெனவும் தெரிகிறது.

வலையில் வீழ்ந்த அந்த இராணுவ அதிகாரி, ராஜஸ்தான் மாநிலத்தில், சூரத்கார் மாவட்டத்தில் பணிபுரிபவர் ஆவார். இராணுவ புலநாய்வு அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் அந்தப் பெண்ணுடன் நேரடித் தொடர்புகொள்ளாவிடினும், முகநூலின் 'உரையாடல் பகுதி'யில் (Chat Room) மட்டும் அடிக்கடி தொடர்புகளை பேணிவந்துள்ளாரென தெரிகிறது. இந்தக் கடலையை தீவிரமாக கண்காணித்த இந்திய உளவுப் பிரிவினர், இவர்களின் தேனொழுகும் கடலைப் பேச்சை அப்படியே தொடரவிட்டு, சமயம் பார்த்து அந்த உளவாளிப் பெண்ணையும், இவரையும், ஒரே அமுக்காக அமுக்கி கைது செய்துள்ளனர்.

'சீபா' என்ற பெயருடைய அந்தப் பெண், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயால் நிர்பந்திக்கப்பட்டு இவ்வாறு முகநூலில் நூல்விட்டு, தேனொழுகப் பேசி இராணுவ அதிகாரிகளுக்கு வலை விரிக்க, பாகிஸ்தானால் அமர்த்தப்பட்டாளென தெரிய வருகிறது.

தமிழாக்க மூலம்:

http://news.in.msn.c...facebook#page=1

டிஸ்கி:

"பகலில் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதுவும் பேசாதே!" என்ற சொலவடையை,

"(முக)நூலில் ஆள்பார்த்து பேசு, 'சாட்'டில் அதுவும் பேசாதே!" என்று மாற்றிட வேண்டியதுதான். :icon_idea:

ஆகவே, முகநூலில் நூல் விடுவோர்களே, ஜாக்கிரதை! புலநாய்வு நபர்களால் நீங்கள் கண்காணிக்கப் படலாம். :o

.

Edited by ராஜவன்னியன்

.

முக நூலை ஏன் ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறீர்கள் ராஜவன்னியன் ? :D

உளவு செய்யத்தானே. இவ்வளவு லட்சோப‌ லட்சம் நபர்களின் தகவல்கள், படங்கள், அவர்களிற்கிடையேயான தொடர்புகள் போன்றன மிகப்பெரிய உளவு நிறுனங்களாலும் திரட்டுவது கடினம். சீனாவில் தடா.

ஒருமுறை ஒரு புதியவரை சந்திக்க வேண்டும். ஒரு இடத்தில் காத்திருப்பதாகச் சொன்னார். முகநூலில் தேடினேன். அவர் படம் கிடைத்தது. நேரே அவரிடம் சென்றேன். அவருக்கு சொஞ்சம் அதிர்ச்சி. :D

.

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வடமாநிலத்தில் உள்ள சட்டசபை பெண் அமைச்சர் ஒருவர், முகநூலில் ஒருவரை நட்பு ஏற்படுத்தி, தனது கணவரை விவாகரத்து பெற்றுவிட்டார் என்று.. சிலமதங்களுக்கு செய்தி ஒன்றில் வாசித்தேன். :o

ஸ்ரீலங்கா அரசின் உளவாளிகள் தமிழீழம் , புரட்சி , வேங்கை போன்ற பெயர்களில் முகநூலில் உலா வருவது போல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.