Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத்துக்கு எதிராக நாடெங்கும் நீதித்துரையினர் நேற்று போர்க்கொடி நீதிமன்றங்கள் அனைத்தும் முற்றாக முடங்கின

Featured Replies

[size=5]ரிஷாத்துக்கு எதிராக நாடெங்கும் நீதித்துரையினர் நேற்று போர்க்கொடி நீதிமன்றங்கள் அனைத்தும் முற்றாக முடங்கின[/size]

[size=4]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டடத்தொகுதி தாக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். [/size]

[size=2][size=4]நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முற்றாக முடங்கின. மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனுக்குத் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை நீதிபதிகள் சங்கத்தினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் நீதிபதிகள் மீதான அச்_றுத்தலைக் கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மல்லாகம், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை நீதிமன்றங்களிலும் இரண்டாவது நாளாகவும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.[/size][/size]

[size=2][size=4]கொழும்பு உயர்நீதிமன்றம், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் வழக்குகளைப் பிற்போட வேண்டிய நிலைமை நேற்று ஏற்பட்டது. அநேகமான நீதிமன்றங்களில் நேற்று நீதிமன்ற அமர்வுகள் கூட இடம்பெறவில்லை.[/size][/size]

[size=2][size=4]நாடெங்கிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் நேற்றுப் பணிபுறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அநேகமான சட்டத்தரணிகள் தத்தமது நீதிமன்றங்களின் முன்பாக ஒன்றுகூடி கண்டனங்களை வெளிப்படுத்தும் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியனர். அமைச்சர் றிசாத் பதியூதினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். [/size][/size]

[size=2][size=4]அதேபோன்று நீதிபதிகளும் நேற்று நீதிமன்ற அமர்வுகளை புறக்கணித்தனர். இதனால் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் நேற்று முற்றாக முடங்கின.[/size][/size]

[size=2][size=4]மன்னார் சம்பவத்தைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரணிகளும் நேற்றுமுன்தினம் தொடக்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட அனைவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]யாழ். நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]நேற்று யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் முன்பாக கண்டனச் சுலோகங்களை ஏந்திய வண்ணம் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் வாதிக்கு நீதிமன்றில் என்ன வேலை? றிசாத் எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு, எங்களோடு மோதாதே முகவரி இழப்பாய், நீதித்துறைக்கே சவாலா?, றிசாத்தே எங்கள் பொறுமையைச் சோதிக்காதே, நீதித்துறையில் தலையிட றிசாத் யார், நீதிமன்றம் என்ன என் கைப்பொம்மையா? என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[/size][/size]

[size=2][size=4]இதில் மல்லாகம், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை நீதிமன்றங்களை மையப்படுத்தும் சட்டத்தரணிகளும் இணைந்துகொண்டனர். இவர்களுடன் யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் சட்டத்தரணிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[/size][/size]

[size=2][size=4]பருத்தித்துறை நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]பருத்தித்துறை நீதிமன்றச் சட்டத்தரணிகளும் நேற்று நண்பகல் 12 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் நீதிபதி மீதான அச்சுறுத்தல், பருத்தித்துறை நீதிபதியின் வாசஸ்தலம் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து இவர்கள் கோஷம் எழுப்பினர். குற்றவாளிகளை உடன் கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.[/size][/size]

[size=2][size=4]கிளிநொச்சி நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் பொது மக்களும் இணைந்து கிளிநொச்சி நீதிமன்றின் முன்பாக நேற்று மு.ப. 9.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை ஏ9 வீதியை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த வீதியூடான போக்குவரத்துத் தடைப்பட்டது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயற்சி மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிவடைந்தது.[/size][/size]

[size=2][size=4]முல்லைத்தீவு நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]முல்லைத்தீவு நீதிமன்றிலும் நேற்றுத் திறந்த நீதிமன்று பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. சட்டத்தரணிகளும் உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் பணிகள் எதுவும் நேற்று இடம்பெறவில்லை. [/size][/size]

[size=2][size=4]மன்னார் நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]மன்னார் நீதிமன்றச் சட்டத்தரணிகளும் சுமார் 20 நிமிடங்கள் கண்டனங்களை தெரிவிக்கும் சுலோகங்களை ஏந்திய வண்ணம் நீதிமன்றின் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உள்ளே சென்று தமது பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்தனர்.[/size][/size]

[size=2][size=4]யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள நீதிமன்றங்களுக்கு வழக்குகளுக்காகச் சென்றிருந்த பொது மக்களும் வழக்குகள் எதுவும் நடைபெறாததனால் நீதிமன்றின் வெளியே நெடுநேரமாகக் கூடிநின்று சட்டத்தரணிகள், உத்தியோகத்தர்களது போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.[/size][/size]

[size=2][size=4]வவுனியா நீதிமன்றத்தில்[/size][/size]

[size=2][size=4]வவுனியா நீதிமன்ற சட்டத்தரணிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக்கோரி சுலோகங்களைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பணிப்புறக்கணிப்பையும் மேற்கொண்டனர்.[/size][/size]

[size=2][size=4]நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீதித்துறையின் போராட்டம் காரணமாக நேற்று நடைபெறவிருந்த வழக்குகள் அனைத்தும் பிறிதொரு தினத்துக்கு பிற்போடப்பட்டன. [/size][/size]

[size=6]தொடர்புபட்ட செய்தி: [/size]

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு : http://www.yarl.com/forum3/index.php?showtopic=105170

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]மன்னார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துங்கள் மஹிந்த ராஜபக்ச உத்தரவு[/size]

[size=4]மன்னார் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் மன்னார் நீதிமன்ற வளாகம் சேதமாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.[/size]

[size=4]ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தம்மை அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் பிரதேச காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நாடு முழுவதிலுமுள்ள சட்டத்தரணிகளும்,நீதவான்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இன்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் விஜயதாச ராஜபக்ச சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=882241246421345001

  • தொடங்கியவர்

[size=5]தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை அமைச்சர் றிசாத் பதியூதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]கடந்த 16ஆம் மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது திகதி கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.[/size]

[size=4]விடத்தல்தீவில் உள்ள வீடு ஒன்றின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]இந்த விவகாரம் குறித்து கவனிக்க தான் உடனடியாக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று றிசாத் பதியூதீன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் உலங்குவானூர்தி ஒன்றைக் கோரியிருந்தார்.[/size]

[size=5]பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவை அடுத்து, றிசாத் பதியூதீன் உலங்குவானூர்தி ஒன்றில் தள்ளாடி இராணுவ முகாமுக்கு சென்றார். அப்போது மன்னார் நீதிமன்றத்துக்கு வெளியே சுமார் 1000 முஸ்லிம்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.[/size]

[size=4]அவர்கள் மன்னார் நீதிமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்க பொலிஸார் தடைகளை ஏற்படுத்த முயன்றனர். நீதிமன்றத்துக்கு வெளியே அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.[/size]

[size=4]மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசப்பட்டபோது அதை பொலிஸார் தடுக்க முனையவில்லை. அதற்குக் காரணம், மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக ஆய்வாளரான துசார தளுவத்த, றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள் மூலம் கண்டிக்கு மீன்களை அனுப்பி வியாபாரம் செய்து வந்ததேயாகும்.[/size]

[size=4]றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள், நீதிமன்றம் மீதும்பொலிஸார் மீதும் கற்களை வீசிய போதும், ஆய்வாளர் தளுவத்தவும் காயமடைந்தார். இதையடுத்து அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]இதற்கிடையே, இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது தாம் மன்னாரில் இருக்கவில்லை என்று அமைச்சர் றிசாத் பதியூதீன் கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வந்த பின்னர் ஒருபோதும் மன்னார் நீதிமன்றத்துக்கே சென்றதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]உப்புக்குளம் செல்வதற்காக தாம் உலங்குவானூர்தி மூலம் பிற்பகல் 3.30 மணியளவிலேயே தள்ளாடி இராணுவ முகாமில் தரையிறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒற்றுமை வரவேற்க பட வேண்டியது இதேய் வேளை இலங்கையின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் இவர் நடவடிக்கை எடுப்பாரா?

இந்த ஒற்றுமை வரவேற்க பட வேண்டியது இதேய் வேளை இலங்கையின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் இவர் நடவடிக்கை எடுப்பாரா?

  • தொடங்கியவர்

இந்த ஒற்றுமை வரவேற்க பட வேண்டியது இதேய் வேளை இலங்கையின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் இவர் நடவடிக்கை எடுப்பாரா?

இந்த ஒற்றுமை வரவேற்க பட வேண்டியது இதேய் வேளை இலங்கையின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் இவர் நடவடிக்கை எடுப்பாரா?

[size=4]தெரியாது. ஆனால் நிச்சயம் மீண்டும் ஜெனீவாவுக்கு சென்று சிங்களத்திற்காக வக்காளத்து வாங்குவார். [/size]

[size=1]

[size=4]இந்த (ஹக்கீம்) சட்டத்தரணியால் சக சட்டத்தரணிகளுக்கு அவமானம். [/size][/size][size=1]

[size=4]இந்த நீதி அமைச்சரால், சக உலக நீதி அமைச்சர்களுக்கும் அவமானம். [/size][/size]

அவர்களுக்குத் தெரியாத நீதியா? ஆகவும் மிஞ்சினால் மன்னிப்புக் கேட்டால் பிரச்சனை முடியப்போகிறது. இதுதானே இறுதியில்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் அமைச்சரானதேய் தன்னோட ஐஸ் கிரீம் கடைய நல்ல லாபத்தோட நடத்த தானேய் அது இருக்க முஸ்லிம்களோட பாராளுமன்ற எண்ணிக்கை மொத்தம் 14 ஆனாலும் அளவுக்கு அதிகமாவேய் அமைச்சர் பதவி வைச்சு அரசியல் செய்றாங்க நாங்க ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]இந்த [/size][size=5]றிசாத் பதியூதீன் போன்ற ஒரு சிலரின்[/size] கேவலமான செயல்பாடுகளும் , அதற்காக தமிழ் முஸ்லிம் , தமிழ் சிங்கள , முஸ்லிம் சிங்கள பிரிவினைகளை தூண்டி அதில் குளிர் காய நினைக்கும் இவர்களை மக்களாக பார்த்து ஒதுக்கி வைக்க வேண்டும் . அடுத்த முறை இவர்கள் வாலாட்டாதவாறு இவர்களுக்கெதிரான செயல்பாடுகள் அமைய வேண்டும்.

  • தொடங்கியவர்

[size=4]

அந்தாள் அமைச்சரானதேய் தன்னோட ஐஸ் கிரீம் கடைய நல்ல லாபத்தோட நடத்த தானேய் அது இருக்க முஸ்லிம்களோட பாராளுமன்ற எண்ணிக்கை மொத்தம் 14 ஆனாலும் அளவுக்கு அதிகமாவேய் அமைச்சர் பதவி வைச்சு அரசியல் செய்றாங்க நாங்க ?

நாமும் அரசியல் அவர்களை போல செயல்பட வேண்டும் என்றால், இல்லை செயல்பட்டால், அதாவது அவர்கள் தமிழர்களை வைத்து அரசியல் செய்வது போன்று, இறுதியில் அவர்களும் இல்லை நாமும் இல்லை என்ற நிலை தான் வரும். அதுவே சிங்களத்தின் இலக்கு. துரதிஸ்டவசமாக முஸ்லீம் தலைவர்கள் அதற்கு உடந்தையாகின்றனர்.[/size]

[size=4]நாமும் அரசியல் அவர்களை போல செயல்பட வேண்டும் என்றால், இல்லை செயல்பட்டால், அதாவது அவர்கள் தமிழர்களை வைத்து அரசியல் செய்வது போன்று, இறுதியில் அவர்களும் இல்லை நாமும் இல்லை என்ற நிலை தான் வரும். அதுவே சிங்களத்தின் இலக்கு. துரதிஸ்டவசமாக முஸ்லீம் தலைவர்கள் அதற்கு உடந்தையாகின்றனர்.[/size]
எல்லா விசையமும் எல்லா வெளிநாட்டு திருகுதாளங்களுக்கும் விளங்குகிறது. முன்னரும் நோர்வேயை இனி சிங்களத்துடன் ஒற்றுமையாக முடியாது என்று கண்டபின்னர்தான் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பிவைத்தவர்கள். அதே மாதிரி போலத்தான் இனி இலங்கை முஸ்லீம் மந்திரிகளை திருத்த முடியாது என்று கண்டுதான் பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வேயை அனுப்புகிறார்கள் போலும்.

எல்லோருக்கும் பிரச்சனைகள் நன்கு முற்றிகொண்டு போவது தெரிகிறது. முற்றி மட்டுமல்ல அதற்கு மேலே போய் பழுத்தி வெடித்து உள்ளே ஒன்றும் இல்லாத இலவம் பஞ்சாக பறந்தாலும் இவர்கள் முன் வந்து ஏதாவ்து செய்யபோகிறார்களா என்பது ஐயம்.

இது வரையில் முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்த்களில் ஈடுபட்டிருந்த நோர்வே தேவை இல்லாத பொய் அறிக்கைகள் மட்டும் தனே வெளிவிட்டிருக்கு. இதைபற்றி கண்டித்து ஒரு அறிக்கையும் வெளிவிடவில்லை. எந்த இலங்கை தூதுவராலயமும் இதை கண்டிக்கவில்லை.

  • தொடங்கியவர்

எல்லா விசையமும் எல்லா வெளிநாட்டு திருகுதாளங்களுக்கும் விளங்குகிறது. முன்னரும் நோர்வேயை இனி சிங்களத்துடன் ஒற்றுமையாக முடியாது என்று கண்டபின்னர்தான் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பிவைத்தவர்கள். அதே மாதிரி போலத்தான் இனி இலங்கை முஸ்லீம் மந்திரிகளை திருத்த முடியாது என்று கண்டுதான் பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வேயை அனுப்புகிறார்கள் போலும்.

எல்லோருக்கும் பிரச்சனைகள் நன்கு முற்றிகொண்டு போவது தெரிகிறது. முற்றி மட்டுமல்ல அதற்கு மேலே போய் பழுத்தி வெடித்து உள்ளே ஒன்றும் இல்லாத இலவம் பஞ்சாக பறந்தாலும் இவர்கள் முன் வந்து ஏதாவ்து செய்யபோகிறார்களா என்பது ஐயம்.

இது வரையில் முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்த்களில் ஈடுபட்டிருந்த நோர்வே தேவை இல்லாத பொய் அறிக்கைகள் மட்டும் தனே வெளிவிட்டிருக்கு. இதைபற்றி கண்டித்து ஒரு அறிக்கையும் வெளிவிடவில்லை. எந்த இலங்கை தூதுவராலயமும் இதை கண்டிக்கவில்லை.

[size=4]இந்த நிகழ்வுகள் நிச்சயம் அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் ஆதாரத்துடன் முன்வைக்கப்படும். அது சிங்களத்திற்கு மேலும் நெருக்கடிகளை தரவேண்டும். [/size]

[size=1]

[size=4]குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறை அரசால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவது என்பது பாரதூரமான விடயம். நீங்கள் கூறுவது போன்று இந்த 'உலக நாடுகள்' மௌனமாக இருப்பது வேதனை கலந்த ஆச்சரியமாக உள்ளது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில்

நீதி அமைச்சர் தனது பதவியை ராஜீனாமாச் செய்யவேண்டும் :)

  • தொடங்கியவர்

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில்

நீதி அமைச்சர் தனது பதவியை ராஜீனாமாச் செய்யவேண்டும் :)

[size=4]இது முதுகெலும்பு உள்ள நீதி அமைச்சர்களுக்கு மட்டுமே பொருந்தும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

எங்க போய் இருந்தின்கப்பு?

  • தொடங்கியவர்

[size=4]நீதி மன்றங்களின் இறைமையைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பேராதனை கண்ணொறுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம் பெற்று வரும் விவசாயக் கண்காட்சியில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் நீதிமன்ற விவகாரமொன்றில் தலையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்திற்கு அரசு என்ற வகையில் நான் வருந்துகிறேன். ஆனால் கடந்த காலங்களில் நீதிபதிகளது வீடுகளுக்கு கல் எறிந்த சம்பவங்களும் உண்டு. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார். ___[/size]

[size=4]http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39592[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த போடும் நாடகம்.

அமைதிப் போராட்டத்திற்கு நாட்டில் பஞ்சமில்லை என இந்தியாவிற்கும்

மேற்குலகிற்கும் அடித்துக் கூற விரும்புகின்றார் மகிந்த மாத்தய

  • தொடங்கியவர்

[size=4]அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் நீதிமன்ற விவகாரமொன்றில் தலையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்திற்கு அரசு என்ற வகையில் நான் வருந்துகிறேன். ஆனால் கடந்த காலங்களில் நீதிபதிகளது வீடுகளுக்கு கல் எறிந்த சம்பவங்களும் உண்டு. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றார். ___[/size]

2012-07-24.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.