Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு பிரித்தானிய விஜயத்தை நிறுத்தினார் மகிந்த!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda%20cring_CI.jpg

[size=3][size=4]லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் தனது லண்டன் விஜயத்தை இரத்துச் செய்யுள்ளதாக. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில்இ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.[/size][/size]

[size=3][size=4]இதனையடுத்தே ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் தமது முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொண்டதாக அறியப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க பிரித்தானிய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தமைஇ இலங்கை அரசாங்த்தின் ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படுகின்றது.[/size][/size]

[size=3][size=4]லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.[/size]

[size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் இலண்டனுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தி இருந்ததாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டபோதும்இ அதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயம் செய்த போதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அவர் உரையாற்றவிருந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size][/size]

[size=4]பிரித்தானியா (தமிழர்களுக்கு நன்றிகள்) மறுத்தமை போன்று எல்லா நாடுகளும் மறுக்கும் வரை நாம் போராடவேண்டும். [/size]

[size=4]சி.கு. சிலவேளைகளில் விழா முடிவு நிகழ்வில் கலந்து கொள்ள முயற்சிக்கலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை வேண்டுமென்றே ஜனாதிபதி லண்டன் வரப்போவதாக அறிவித்துவிட்டு தமிழர்களை வந்து நின்று ஆர்ப்பாட்டத்தில்.ஈடுபடுத்த வைத்து ஏமாற்ற வேண்டுமென்று இலங்கையரசு திட்டமிட்டதோ தெரியவில்லை

சிங்களப் பயங்கரவாதி மகிந்த நாளடைவில் போற்குற்றங்களை சர்வதேசம் மறந்துவிடும், தமிழர்களும் சலித்துவிடுவார்கள், அதுவரை காலத்தை இழுத்தடித்து ஓட்டவேண்டும் என்றும், இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு தனிமைப் படுத்தப்பட்டதை முறியடிக்க வேண்டும் என்றும், அதனால் சர்வதேச நிகழ்வுகளில் தான் கலந்துகொள்ள கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும் தவற விடப்போவதில்லை என்றும் சில நெருங்கிய பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் சொன்னதாக செய்தி கசிந்துள்ளது.

இந்தப் பின்னணியில் தமிழர் போராட்டம் மாபெரும் வெற்றியை தந்துள்ளது என்றே கூறலாம். கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்!

இனி மகிந்த கலந்து கொண்டாலும் அனைத்து நாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட தொடக்க விழாவில் மகிந்த ராஜபக்சா இல்லாதது நிச்சயம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆர்ப்பாட்டத்தை வேற்று நாட்டு தலைவர்களும் பார்த்திருப்பார்கள். எனவே நடந்த ஆர்ப்பாட்டத்தால் நன்மையே தவிர தீமை இல்லை. எனவே ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற மக்களுக்கு என் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வருவதுபற்றி இன்னுமா சிந்திப்பார் மகிந்தர்

லண்டன் வருவதுபற்றி இன்னுமா சிந்திப்பார் மகிந்தர்

மகிந்தவை பிரித்தானிய அரசு கூப்பிடாவிட்டால் அல்லது பாதுகாப்பு வழங்க மாட்டேன் என்று கூறினால் சரி. மற்றபடி மகிந்த எப்பொழுதும் பிரித்தானியா வருவதற்கு தான் நினைப்பார்.

எவ்வளவு அவமானப்பட்டாலும் :D தான் வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு விட்டேன் என்ற பெயர் எடுக்க வேண்டும், முக்கிய பிரமுகர்களுடன் கை குலுக்கி கொண்டு 4 photo என்றாலும் எடுக்க வேண்டும் என்பது தான் அவர் குறிக்கோள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே லண்டனில் மட்டும் நின்றுவிடாது, இவன் போகுமிடமெல்லாம் நாம் இவனது தோலையுரிக்க வேண்டும்.

ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் ஒவ்வொரு நாட்டு அணிகளையும் அறிமுகப் படுத்தும் பொழுது, பெரிதாக வெளியே தெரியாத சிறிய நாடுகளுக்குக் கூட நீண்ட நேரம் கொடுத்தார்கள். சிறிலங்காவின் அறிமுகம் மிகக் குறுகிய நேரத்தில் முடிந்து விட்டது. இது தற்செயலாக நடந்ததா எனத் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.