Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறுதி[ப்]பத்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறுதி[ப்]பத்திரம்

அதிகாலையில் தொலைபேசி தொல்லை கொடுத்து என்னை எழுப்பியது நான் என்னடா காலந் காத்தால் நித்திரையை தூங்க விடாம பண்ணுதே என்று போட்டு அமத்தி வைக்கலாமே என்று பாத்து போணை தூக்கினேன் அது இலங்கையில் எனது மாமனாரின் வீட்டில் இருந்து வந்தது .எனது எனது மனைவியிடம் கொடுத்தேன்.அவளும் பேசினாள் என்னங்க அப்பா சீரியசா கிடக்காராம் வாங்க உடன்டியாக போகலாம் என்றாள். என்னடி கொப்பன் சாகப்போறான் போல என்றேன் அவளோ எனக்கு கேட்டாள் கேள்வி காது முதல் கால் வரை குளிர்ந்தது . சரி சரி உடனே போறது என்றால் சும்மாவோ அந்த வெள்ளக்காரன்ட லீவு கேட்கணும் . அவன் நம்மட ஆள் என்றாலும் பரவாயில்லை அவனிடம் முண்டித்தான் லீவு கேட்கணும் அவன் குரைப்பான் என்பது எனக்கு தெரியும்.

அதிகாலை நான் அவனிடம் சென்று எனது மாமா செத்து போயிட்டார் எனக்கு லீவு தாங்கோ நான் ஊருக்கு போய் வருகிறேன் என்றேன் .சரி நீ செல் அனுமதி தந்தான் .எனது மாமா சாகப்போகிறார் என்றால் சந்தோசப்படுவது முதல் ஆள் நானாகத்தான் இருக்கும் ஏன் என்றால் என் மாமா சும்மா ஆள் கிடையாது அவர் வட்டி தங்கராசு வட்டிக்கு வீட்டுஉறுதிகளை வாங்கி பணம் சம்பாதிப்பவர்.நான் வெளி நாடு வரவும் அவர்தான் உறுதிக்கு பணம் தந்தவர் பயணம் தொடர எனது மனைவி குழந்தைகளூடம் ஆயத்தமானேன் எனது மனிசி பெயர் ரஞ்சிதா குழத்தை அஞ்சலி ,அருண் எங்களது பயணம் லண்டன் கீத்றோ விமானநிலையத்தில் இருந்து புறப்பட ஆரம்பமானது டுபாய் ஊடாக.பயணம் தொடர்ந்தது எனது சந்தேகம் எல்லாம் இலங்கையில் இருக்கும் சூழ் நிலைதான் நுழம்பு தொல்லை.மற்றது சூடு எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் பிள்ளைகளுக்குதான் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே

விமானம் செல்ல செல்ல பிள்ளைகள் தூங்க ஆரம்பித்தது மனிசி மட்டும் முளித்துக்கொண்டிருந்தாள் .என் மனைவியை சீண்டி சண்டை பிடிப்பதில் அலாது சந்தோசம் எனக்கு . பிறகு சீண்டி பார்க்க மனது வரவில்லை பாவம் அவளுக்கு அப்பாதானே என நினைத்து பழைய ஞாபகங்கள் முகத்தில் முன் தெரிந்தது

எனது பெயர் வசந்தன் நான் மட்டகளப்பில் களூவாஞ்சிக்குடி எனது ஊர் மனைவியும் அதே ஊர்தான் .நான் குடும்பத்தில் கடைசி அண்ணன் இஞ்சினியர் கட்டார் , அண்ணா மருத்துவ தாதி ,நான் தெரு பொறக்கி முச்சந்தியில் நின்று போற வாற கொமர் பிள்ளைகளை தனகுவது சேட்டை விடுவது அதனால் வீட்டில் அப்பா தென்னம் பாளையால் என்னை சாத்துவது .போன்ற அரங்கேற்றங்கள் அப்ப அப்ப வீட்டில் நடை பெறும் .அம்மா ஏசுவது உன் மூத்த பிள்ளைகளை பார் திட்டுவதுமாக இருந்தார் .அப்போது அண்ணா போண் பண்ணூவான் தங்கராசார் வீட்டுக்கு அவர் வீட்டில் மட்டும் போண் இருந்தது அந்த காலத்தில் போய் போன் பேசகுள்ள சிக்கியதுதான் தங்கராசா மகள் ரஞ்சிதா நமக்கெல்லாம் எங்கப்பா கிடைக்கபோகுது மூச்சு விட்ட எனக்கு ரஞ்சிதவை விரும்ப‌ ஆரம்பித்தேன் .போன் வருகுதோ இல்லையோ அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன் நான் .ஆனால் எனது திட்டம் தங்கராசருக்கு தெரிய வர எங்களது தொடர்பு துண்டிக்கப்பட்டது .நாளை திருமணம் முடித்தால் என்ன செய்வது என்று எனக்கும் யோசனை அடிக்கடி மனதில் எழுவதுண்டு ஆனால் ரஞ்சிதா எனது நண்பனிடம் அடிக்கடி தூது விட்டு கொண்டிருந்தாள் .எனது நண்பனும் நானும் சில துடிப்பான வேலை செய்வோம் சில அண்ணன் மார்களுக்கு அதனால் அவனை போலீஸ் தேட எனக்குள் பயம் கிலி கொண்டது .உடனே அம்மாவிடம் சொன்னேன் நான் வட்டி தங்கராசா மகள் ரஞ்சிதாவை விரும்புகிறேன் அவளை கல்யாணம் செய்து கொள்வதென்றால் அவரை விட பணக்காரராக வேண்டும் அதனால் உங்கள் தம்பி இருக்கும் நாடான லண்டனுக்கு அனுப்புங்கள் என்றேன் அம்மாவோ கனத்த குரலில் உனக்கு என்ன விசரோ என்று அம்மா கேட்க நான் கெஞ்சி கூத்தாட அம்மாவோ ச‌ரி அவனிடம் கேட்டு பர்க்கிறேன் அவன் சொன்னால் மட்டும் உன்னை அனுப்பலாம் என்றா.நானும் சரி போட்டு விட்டு விட்டு காசுக்கு என்ன செய்வது என்று முளித்துக்கொண்டிருந்தேன் .தங்கராசர் வீட்டு அம்மாவும் நானும் சென்று கொண்டிருந்தோம் தங்கராசரோ என்னை ஏழனமாக பார்த்து கொண்டார் நான் ஒன்றும் பேச வில்லை மாமாவுக்கு அழைப்பை அம்மா எடுத்து தம்பி இங்க பிரச்சினையாக் கிடக்கு இவனை அங்க அனுப்புகிறேன் நீ பார்த்துக் கொள் என்றார் அவரும் சரி சொல்ல நான் செல்ல ஆயத்த மானேன் ஆனால் பண் பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக் இருந்தது .அம்மாவோ வரும் போதே தங்கராசரை பார்த்து எங்களுக்கு காசு கொஞ்சம் தேவைப்படும் தருவீங்களா என்று கேட்க .கொடுக்கலாம் ஆனால் சும்மா கொடுக்க முடியாது ஏதாவதை அடமானம் வைத்தால் மட்டுமே கடன் கொடுக்க முடியும் என்றார் .

அடுத்த நாள் காலை அம்மாவை சைக்கிளில் அம்மாவை ஏற்றிக்கொண்டு அவர் வீட்டுக்கு சென்று உறுதி பத்திரத்தை கொடுக்கும் போது அங்கு ரஞ்சிதா நிற்க எனக்கு வெட்கம் .கண்ணால் பேசினாள் ரஞ்சி நானும் கையால் விமானம் ஏற போகிறதை காட்டினேன் அவள் என்ன பிரச்சினை என்று கேட்க நான் சொன்னேன் இங்க பிரச்சினைதானே அதுதான் அங்க போக போறன் சொல்வதற்குள் அவர் புள்ள இங்க வா இதை கவனமா கொண்டு அலுமாரில வை என்றார் அவளூம் அதை வேண்டா வெறுப்புக்கு எடுத்து செல்ல அவர் தந்த பணத்தை எடுத்து சென்றோம் போகும் போது அம்மாவோ வட்டிக்காரன் பொண்ணையா நீ கல்யாணம் கட்ட் போற என்று இழுத்தா போண்டதையும் கிளறி பார்க்கிற ம‌னுசன் அந்தாள். அங்கேயா நீ போகப்போற எத்தனை பேருர உழைப்பை சொரண்டி வைச்சிருக்கான் . மனுசனுக்கு மனுசந்தான் உதவி செய்யுற ஆனா இந்தாழு?? சரி சரி போன பிறகு மீட்டுக்கொண்டால் சரிதானே என்று வீட்டை சென்றடைதோம் அங்குசெல்ல செல்லப்பா எனது அப்பா யாரை கேட்டு இவனை அனுப்ப போகிறாய் என்றார் அம்மவோ இஞ்ச இருந்துதான் என்னத்த கிழிக்கிறான் அங்கயாவது போய் அவனுக்கு உதவிக்கு நிற்கட்டுமே என்றார் .சரி நிற்கட்டும் யார்ர நிலத்தை கொண்டு அடமானம் வைச்சிருக்கிறியள் என்று கேட்டார் அம்மா பேசமால் நிற்க .நான் வீட்டை விட்டு கோபமாக செல்வது போல் சென்றேன் அன்று இரவு அனுமதி கிடைத்தது ஒரு மாதத்தின் பின்பு நான் லண்டனை வந்தடைந்தேன்

லண்டன் என்னை மொழி தெரியாத என்னை வரவழைத்தது நானும் மாமா வீட்டுக்கு சென்று பின்னர் அவர் கடையில் வேலை பார்த்து .மொழி பிடித்து பின்னர் ஒரு வெள்ளக்காரன்ட கம்பனியில வேலை கிடைத்தது அதன் பிறகு கோட்டில் வழக்கு தாக்கல் செய்து .நான் ரோட்டில் விழந்த ,கம்பி கிழித்த காயங்களால் எனக்கு லண்டன் வாசி என முதுகில் பாஸ்போட் குத்தப்பட்டது அது குத்த கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அதற்குள் ரஞ்சிதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து அவள் பிடிக்க வில்லை என்று சில செய்திகள் கேட்டறிந்தேன் என்னைத்தான் அவள் திருமணம் செய்ய போவதாக அவள் அப்பாவிடம் சண்டை போட எங்கள் காதல் ஜெயித்தது அவளை திருமணம் செய்ய நான் ஊர் சென்று திருமணம் செய்து பின்பு அவளை இங்கு அழைத்து கொண்டேன் அவள் வந்த பிறகு மாமா வீட்டில் இருந்த நான் தனியாக வேறு வீட்டுக்கு சென்றேன் அதுவும் வாடகை வீடுதான்

நினைவுகள் சென்று கொண்டிருக்கையில் துபாய் வந்தடைதோம் பிரமித்து போய் விட்டேன் துபாயின் விமான நிலையத்தை பார்த்து அங்கு .நானும் பிள்ளைகளும் சில சிற்றுண்டிகளை சாப்பிட மனைவி சாப்பிடவில்லை ..இரண்டு மணித்தியாலங்கள் விமான நிலையத்தை சுற்றி பார்த்து பல ஈழ இளைஞர்கள் வேலை செய்த்து கொண்டிருக்கிறார்கள் அங்கு அவர்களிடம் பேசி பழகிவிட்டு விமானம் புறப்பட்டது .

மனைவியை சமாதானப்படுத்தி அவளுக்கு சேர்த்து வாங்கி வைத்திருந்த சில உணவுகளை கொடுத்தும் விமானத்தில் கொடுத்த உணவுகளை கொடுத்தும் அவள் பசியை போக்கினேன் நான்கு மணித்தியாலங்கள் சென்ற பின் கொழும்பை வந்தடைந்தோம் பின்னர் வாடகை கார் ஒன்றை எடுத்து சொன்றோம் மட்டக்களப்புக்கு ஊரை வந்தடைந்தோம் மாமனாருக்கு உயிர் போகவில்லை [எங்களை அழுது வரவேற்றனர் சும்மா ஒரு பகிடிக்கு ] பின்னர் நானும் போய் பார்த்தேன் மாமா இன்னும் சில நாட்கள் கிடப்பார் போல கிடக்கு என்று நினைத்து வீட்டினுள் சென்றேன் பின்பு உடைகளை மாற்றி வெளியே உள்ள பந்தலுக்கு வந்தேன் எல்லாம் புது முகங்கள் ஒரு பக்கம் என்னுடைய அம்மாவும் அப்பாவும் குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தனர் பின்பு மாமாவுக்கு இழுத்து கொண்டிருந்தது மனிசி யும் நானும் பிள்ளைகளும் பால் ஊற்றினோம் ஆனால் சீவன் போவதாக இல்லை நானும் என்னடா செய்வது தெரியாமல் எனது பழைய நண்பனை சந்திப்பதாக சொல்லி அவனை சந்தித்து .நான் ஒரு பட பிரியன் யாருக்கும் தெரியாமல் சகுனி திரைப்படம் செங்கலடி தியட்டரில் பார்த்துக்கொண்டு வருகையில் நண்பன் சொன்னான் டேய் மச்சான் நீ லண்டனுல வீடு வாங்கிறாயோ? இல்லை கனடாவில வீடு வாங்கிறாயோ? இங்க ஒரு காணியாவது வாங்கி போடு என்றான் ஏன் அவனிடம் கேட்க அனனோ அங்கு நடக்கு நிலைமைகளை சொன்னான் .அப்போதுதுதான் புரிந்தது ஆனால் வெளிநாட்டி சொந்த வீடு வாங்க வேணும் சொகுசாக வாழ நினைக்கும் எத்தனையோ பேர் .எனது போண் ஒலிக்கும் சத்தம் கேட்க மனைவி இங்க அப்பா செத்து போய்ட்டார் உடனே வாங்க என்றாள்

வீடு செல்ல மாமா உடலை பார்த்து நான் பெரு மூச்சு விட்டு அப்பாடா என்றேன் மனதிற்குள் உடனே தடபுடலாக அலங்கரிக்கபட்ட ஊர்த்தியில் செல்ல ஆயத்தமானார் .அயலவர்களும் கன நாள் படுக்கையில் இருந்த ஆளை வைத்திருக்க முடியாது விரைவா எடுக்க என்றார் சவக்காலையை சென்றடைந்தோம் .குழி தோண்டப்பட்டது பக்கத்தில் இருக்கும் இன்னும் ஒருவர் சொல்கிறார் இதுதான் மனித வாழ்க்கை எதையுமே கொண்டு செல்லபோவதில்லை நானும் யாரையா அதை சொன்னது எட்டி பார்க்க அது வேற யாரும் இல்லை அவனும் ஒரு பத்து சத வட்டிக்காரன் தான் நான் நினைத்தேன் எனது மாமாவுக்காவது மண் உனக்கு மின்சார அடுப்புதான்

நான் தெரு பொறக்கி முச்சந்தியில் நின்று போற வாற கொமர் பிள்ளைகளை தனகுவது சேட்டை விடுவது அதனால் வீட்டில் அப்பா தென்னம் பாளையால் என்னை சாத்துவது .போன்ற அரங்கேற்றங்கள் அப்ப அப்ப வீட்டில் நடை பெறும் .அம்மா ஏசுவது உன் மூத்த பிள்ளைகளை பார் திட்டுவதுமாக இருந்தார் .

இப்பிடிப்பட்ட ஆக்கள்தான் புலத்தில கொடிகட்டிப்பறந்திருக்கினம் . முனிவர்ஜி அத்திப் பூ போல ஒரு கதை தந்திருக்கிறியள் . அதைப் பவள மல்லிகைப் பூ ஆக்கினால் என்ன ? நாங்களும் மணப்பம் அல்லோ . கிழக்கு மாகாண வட்டாரவளக்கில பூந்து விளையாடியிருக்கிறியள் . உங்கடை வாயுக்கை ஒரு கிலோ சீனி போடவேணும் முனிவர்ஜி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நல்ல பதிவு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜி!

கதை நன்றாக இருக்கின்றது!

இருந்தாலும் மாமா, உங்களுக்காக ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து வளர்த்து, உங்களுக்குத் திருமணமும் செய்து வைத்தவர்!

அவர் நினைத்திருந்தால், உங்கள் திருமணத்தைத் தடுத்திருக்கலாம்!

வேறு ஒரு புதிய கோணத்திலிருந்து பாருங்கள்!

சில வேளைகளில், அவரது நல்ல பக்கங்கள் தெரியக் கூடும்! :D

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூவருக்கும் நன்றிகள் இப்ப தான் நன்றி சொல்ல முடிஞ்சது
 இங்க பல பேர் வீடு வள‌வுகளை வித்துட்டு ஓடுராங்கள் பாருங்கள் .[வெளிநாடு]
அதுதான் அந்த வீடு வளவுகள் யார் யார் வாங்கி யாருக்கு  விற்கிறார்கள்  தெரியுமா ?........ :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.