Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி ஒழிக்க வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]a3(676).jpg[/size]

[size=4] (அப்துல் அஸீஸ்) [/size]

[size=4]ஜனாதிபதி எவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்தாரோ அதேபோன்று தற்போது காணப்படும் பயங்கரவாதத்தையும் அது காவி உடை அணிந்த பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் சாய்ந்தமருதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், ஏ.ஆர்.அமீர், துல்கர் நயீம் ஆகிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

"தற்போது தலைதூக்கியிருக்கும் இந்தப் பயங்கரவாதமானது வட, கிழக்கில் இருக்கும் முஸ்லிம்களை விட வட, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களை மிக மோசமாக பாதித்துள்ளது. நிம்மதியாக பள்ளிவாசல்களில் தொழமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்த ரமழான் மாதத்தில் கூட முஸ்லிம்கள் கூட்டாக சேர்ந்துகொண்டு ஒரு வீட்டில் தொழமுடியாத ஒரு அச்ச சூழ்நிலையை இந்தப் பயங்கரவாதம் தோற்றுவித்துள்ளது.

இந்த பயங்கரவாதத்தை இல்லாமல்ச்செய்ய காத்திரமான நடவடிக்கைகள் இல்லையா என மக்கள் என்னிடத்தில் ஆத்திரத்துடன் கேட்கின்றனர். இவ்வாறான விடயங்களை பேசக்கூடாது என்ற வரையறையுடன் நாங்கள் இருக்கவேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான விடயமாகும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும். அந்தத் தீர்வைக் காண வட, கிழக்குக்கு வெளியே அச்சத்துடன் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களது வாக்குப் பலத்தினால் அதிருப்தியை வெளிக்கொணர வேண்டும்" என்றார்.

ruf1(2).jpg

ruf2(2).jpg

ruf3(2).jpg

ruf4.jpg

http://www.tamilmirr...6-07-23-40.html[/size]

சிறீ லங்காவின் நீதி அமைச்சர் தன்னிலை மறந்து பேசுகின்றார், என்னையா கொடுமை இது?

தாம் மட்டும் தலையில் தொப்பி அணிந்து மதவாதத்தை மையப்படுத்தும் ஓர் கட்சியூடாக இலங்கை திருநாட்டில் பல்வேறு வகைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மதவெறியை வெளிப்படுத்தலாம் என்றால் காவியுடை தரித்த பெளத சமூகத்திற்கு தமது உரிமைகளை வெளிப்படுத்தவும், தமது பூர்வீக பூமியை அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் உரிமை இல்லையா?

காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி ஒழிக்க வேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

அப்பாவிகள் அல்லது கிராமத்து பாமர முஸ்லீம் மக்களை ஏமாற்றாமல் கக்கீம் இதை பதியுதினிடம் கூறட்டும். பாராளுமன்றத்தில் பேசட்டும். மந்திரி சபையில் விவாதிக்கட்டும். நீதிமன்றங்களில் நடை முறைப்படுத்தட்டும். பயங்கரவாதிகளை நீதியின் கீழ் கொண்டுவந்து சிறையில் அடைக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக ஹக்கீம் தனது மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை அரசிடம் முறையிடுகிறார்.வெளி உலகுக்கு சொல்கிறார்.இரண்டு தமிழ் அமைச்சர்கள் அரசில் இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் அவலங்கள் பற்றி வாய் திறக்காமல் மௌனிகளாக தானே இருக்கிறார்கள்.

தேவானந்தா, பிள்ளையான், நிலைக்கும் அரசுடன் இணைந்துகொண்டிருந்து, அரசை சர்வதேச நாடுகளுக்கு நல்லதாக காட்டி, ஐ.நா.பிரேரணையை குழப்ப முனைந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதை கூட்டமைப்பு கிழக்கு மாகாண மக்களுக்கு விளங்கவைக்க வேண்டும். எப்படி தமிழர் தமது இரு காவடிகளையும் தள்ளி வைக்கிறார்களோ அதே மாதிரியே முஸ்லீம் மக்களால் கக்கீமும் தள்ளிவைக்கப்படவேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]a3(676).jpg[/size]

[size=4]ஜனாதிபதி எவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்தாரோ அதேபோன்று தற்போது காணப்படும் பயங்கரவாதத்தையும் அது காவி உடை அணிந்த பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.[/size]

[size=4]---------[/size]

முஸ்லீம் பயங்கர வாதத்தையும், ஜனாதிபதி ஓழிக்க வேண்டும் என்று, ரவூப் ஹக்கீம் சொல்வாரா?

[size=1]

[size=4]அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யலாம் ...[/size][/size]

[size=4]ஒவ்வொரு முஸ்லீம் / அரபுநாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகளிடம் இதை முறையிடலாம் ....[/size][size=1]

[size=4]கொழும்பில் உள்ள முஸ்லீம் / அரபுநாடுகளின் தூதுவர்களிடம் இதை முறையிடலாம்....[/size][/size]

[size=1]

[size=4]நடக்குமா? [/size][/size]

காவியுடைப் பயங்கரவாதம், தொப்பிப் பயங்கரவாதம் இரண்டுமே அழிக்கப்பட வேண்டும்!

காவியுடைப் பயங்கரவாதம், தொப்பிப் பயங்கரவாதம் இரண்டுமே அழிக்கப்பட வேண்டும்!

இதற்கு தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் கிழக்கில் கூட்டமைப்பை தெரிவுசெய்ய வேண்டும். நாம் எல்லோரும் நாடுகடந்த அரசின் வெள்ளை மாளிகை மனுவுக்கு வாக்களிக்க வேண்டும். சிலவற்றை நாம் செயலிலும் காட்ட வேண்டும். கக்கீமுக்கு பதில் சொல்வது மட்டும் போதாது.

Edited by மல்லையூரான்

[size=1][size=4]அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யலாம் ...[/size][/size]

[size=4]ஒவ்வொரு முஸ்லீம் / அரபுநாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகளிடம் இதை முறையிடலாம் ....[/size]

[size=1][size=4]கொழும்பில் உள்ள முஸ்லீம் / அரபுநாடுகளின் தூதுவர்களிடம் இதை முறையிடலாம்....[/size][/size]

[size=1][size=4]நடக்குமா? [/size][/size]

நடக்கிற விடயத்தைப்பற்றி பேசுவம் அகூதா........... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.