Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவந்தன் தமிழ் தேடித்திரியும் பிள்ளைகளில் ஒருவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதைக்கூட செய்வதற்கும் மனதில் நல்ல உறுதிவேண்டும், சும்மா களத்தில் கருத்து எழுதுவதுபோல் அவ்வளவு சுலபமானது இல்லை உண்ணாவிரதம் இருப்பது என்பதினை ஏன் உணர மறுக்கின்றீர்கள் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்கின்றார்கள் அதரவாக பேசாவிட்டாலும் தயவுசெய்து குறைகூறாதீர்கள்.

ஓம் தமிழரசு இதை செய்வதற்கு மனதில் நல்ல உறுதி வேண்டும் எனக்கு அந்த மனவுறுதி இல்லை ஆனால் நான் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினால் ஒலிம்பிக் தொடங்கும் போது உண்ணா விரதத்தை தொடங்கி ஒலிம்பிக் முடியும் போது உண்ணா விரதத்தை முடித்திருக்க மாட்டேன் எனக்கு புரியவில்லை எப்படி ஒருவரால் உண்ணா விரதத்தை தொடங்கும் போது இந்த நாளில் உண்ணா விரதத்தை முடிப்பேன் என குறிப்பிட்டு சொல்ல முடியும்?...அதுக்கு இடையில் அவருக்கு எதாவது நேராதா?...இப்படி 15,20 நாள் உண்ணா விரதம் இருக்கிறதால் ஒரு பிரயோசனமும் இல்லை...குறிப்பிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உ.விரதம் இருக்கிறார் ஆனால் அவரது கோரிக்கைக்கள் நிறைவேறாமல் குறைந்த பட்சம் அது தொடர்பாக ஒருவரும் அவருடன் கதைக்கவில்லை அல்லது உடல் நலக் குறைவால் உண்ணா விரதத்தைக் கைவிடவில்லை...இத்தனையாம் திகதி தொடங்கி இத்தனையாம் திகதி முடிப்பேன் என சொன்னால் அவர் வைத்த கோரிக்கைக்களுக்கு என்ன வலிமை இருக்குது?

பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்தார் அவரால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் மக்களை ஒன்றினைக்க முடிந்தது...அவரோடு அரச பிரதிநிதிகள் என்னவோ வந்து கதைத்தார்கள்...அவர் இத்தனையாம் திகதி உண்ணா விரதத்தை முடிப்பேன் என அறிவித்து விட்டு உ.விரதத்தை முடிக்கவில்லை.

சிவந்தன் மாதிரி உ.விரதம் இருக்கிறதை விட ஒலிம்பிக் நடந்த கிராமத்தை சுத்தி,ஒலிம்பிக் மண்டபத்தை சுத்தி நின்று கொண்டு அமைதியாக அங்கு வருபவர்களிடம் துண்டுப் பிரச்சாரங்களைக் கொடுத்து எமது பிரச்சனைகளை விளங்கப்படுத்தி இருக்கலாம் அதற்கு ஒருவர் உ.விரதம் தான் இருக்க வேண்டும் என்று இல்லை...இப்படி இன்னுமொரு ஓராள் உண்ணா விரதம் இருக்க வெளிக்கிட்டால் தமிழனின்ட மானம் தான் கப்பல் ஏறும்...லண்டனில் இருக்கிற மக்களுக்கே இப்ப லண்டனில் உண்ணாவிரதம் என்டால் சீ என்று போயிட்டுது போராட்டத்தில் நம்பிக்கை குறைந்தது ஒரு காரணம் என்டால் பரமேஸ்வ்ரனுக்கு பின்னால் உ.விரதம் இருந்தவர்கள் தான் முக்கிய காரணம்...புலம் பெயர் மக்கள் எழுச்சி கொள்ள நினைத்தால் அவர்கள் தாங்களாகவே எழுச்சி கொள்வார்கள் ஆனால் அவர்களுக்கு வழி காட்ட உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட புலம் பெயர் நாட்டில் சிலர் இருக்க வேண்டும்

இது ஓர் கவனயீர்ப்பு. அவர் தன்னால்முடியுமானதொன்றைச் செய்துள்ளார். இதையேன் வேறுபட்ட சூழ்நிலைகளில், வேறுபட்ட காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதங்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும்? 'வொய்ஸ் ஆவ் அமெரிக்கா' இவரை உண்ணாவிரதம் செய்தவேளையில் பேட்டி கண்டதாக இங்கோர் செய்தி பார்த்தேன். தாயகம் நோக்கிய ஓர் கவனயீர்ப்பு நிகழ்வு எனும்வகையில் இதுவோர் வெற்றிதானே! ரதியின் விசனமும், சுண்டலின் நக்கலும் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிவந்தனின் உண்ணாவிரதம் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்.

அதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்துவிட்டு இடையில்

கைவிடும் உண்ணாவிரதங்களை விட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமாக

முன்னெடுத்துச் சென்ற சிவந்தனுக்கு நன்றிகள்

அவருடைய உண்ணாவிரதம் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் மத்தியிலும்

பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

உங்களின் சந்தேகங்களுக்கு கரும்பு, வாத்தியார் போன்றோர் பதில் எழுதி விட்டார்கள் இருவருக்கும் நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை நான் எழுதினதில் எந்த மாற்றமும் இல்லை...உ.விரதம் இருந்து தான் கவனயீர்ப்பு செய்ய வேண்டும் என்பதில்லை ...இது பற்றி மேலும் விவாதிக்க விருப்பமில்லை நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருப்பது கூட அதிக வேதனை தராது.

அதன் பின் அது பற்றி தமிழருக்கு விளக்கமளித்து முடிவதற்குள் ஆள் முடிந்துவிடலாம். :( :( :(

இந்தத்தம்பி

தமிழரின் மாபெரும் சொத்து.

சிரித்துக்கொண்டே தன்னை வருத்துவதே அவன் சிறப்பு.

Edited by விசுகு

[size=4]கவனயீர்ப்பு வழிகள் என்பது பலவகைப்படும். அவரவர் உடல்வலு, உள்ளத்தின் பலம், அறிவு, பணம் என பல காரணிகளை வைத்து போராட்டத்தை நடாத்தலாம்.[/size]

[size=4]அந்த வகையில் இலண்டனில் ஒலிம்பிக்கின் போது முழு உலகின் கவனமும் இருந்தது. அதில் மகிந்தா கூட பங்குபெறலாம் என நம்பினோம். எம்மில் ஒரு சிலரே இந்த நிகழ்வை ஒரு பரப்புரை சாதனமாக பயன்படுத்தினர்.[/size]

[size=4]இந்த தம்பியின் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டது.[/size]

[size=4]நாங்கள் ஒவ்வொருவரும் எம்மால் ஆன கவனயீர்ப்பை / பங்களிப்பை செய்வோம். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஓர் கவனயீர்ப்பு. அவர் தன்னால்முடியுமானதொன்றைச் செய்துள்ளார். இதையேன் வேறுபட்ட சூழ்நிலைகளில், வேறுபட்ட காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதங்களுடன் ஒப்பீடு செய்யவேண்டும்? 'வொய்ஸ் ஆவ் அமெரிக்கா' இவரை உண்ணாவிரதம் செய்தவேளையில் பேட்டி கண்டதாக இங்கோர் செய்தி பார்த்தேன். தாயகம் நோக்கிய ஓர் கவனயீர்ப்பு நிகழ்வு எனும்வகையில் இதுவோர் வெற்றிதானே! ரதியின் விசனமும், சுண்டலின் நக்கலும் விளங்கவில்லை.

எங்கடை சனத்தினத்துக்கு நக்கலுக்கும் குறுக்கு கேள்விக்கும் பஞ்சமேயிருக்காது.....பிரபாகரனோடை கூடியிருந்து தேத்தண்ணி குடிச்சனாங்கள் எண்டு கதை,கவிதைகள்,வரலாறுகள் சொல்லுவினமே தவிர......ஒவ்வொரு ஈழத்தமிழனும்,புலம்பெயர் தமிழனும் இன்றைய நிலையில் என்ன செய்ய வேண்டும் யாராவது சொன்னார்களா?............உங்கள் கருத்தின் இடையில் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும் கரும்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.