Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் தேசியத்தை ஒளித்து மறைத்து பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்: ஹக்கீம்

Featured Replies

[size=4]முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மு.காங்கிரஸின் பிரசாரக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனையில் இடம்பெற்றது.

மு.காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட வேண்டுகோளினை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

"[size=5]முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான விடயங்களில் ஆளும் தரப்பினரைப் போலவே, தமிழ்த் தரப்பினரும் பெரியளவான அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தயாராக இல்லை. [/size]

முஸ்லிம்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் அவர்கள் எங்களுடன் பேசட்டும். அவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் பேசி வருகின்றோம் என்று தமிழ் தேசியத் தலைமைகள் அடிக்கடி பேசுகின்றன. முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை இவ்வாறு ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும்.

இது தமிழ் தேசியத்துக்குள் நீண்ட காலமாக இருந்து வருகின்றதொரு நோயாகும். தந்தை செல்வாவின் காலத்துக்குப் பிறகு தமிழ் தேசியப் பரப்புக்குள் வந்துள்ள மிகப் பெரும் பிணி இதுவாகும். இது அகல வேண்டும்.

இந்தப் பிணியினை அகற்றுவதற்வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளை நாம் பயன்படுத்துவோம். எங்களிடம் அதற்கான ஆயுதம் இருக்கிறது. எங்கள் ஆசனம் என்கிற ஆயுதங்களை நாடி வருகின்ற போது, இவற்றையெல்லாம் மிகத் தெளிவாகப் பேசுகின்றதொரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் - ஆப்பிழுத்த குரங்காக அரசை மாற்றியிருக்கிறது. மேலும், [size=5]எல்லா தரப்பினரும் - முஸ்லிம்களுடைய அரசியல் அந்தஸ்து எனும் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தூண்டுகிறதொரு நிலைமையினை இந்தத் தேர்தல் வியூகத்தின் மூலம் உருவாக்கியிருக்கின்றோம்[/size]" என்றார்.

இந்தக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மு.காங்கிரசின் வேட்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருமான ஏ.எல்.எம். நசீர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.எம். ஜெமீல், கொழும்பு மாநகரசபையின் முன்னாளர் பிரதி மேயரும் மு.காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஆசாத் சாலி, அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக பெண்களுக்கு விளக்கமளிக்கும் பெண்கள் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மலையடி கிராமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில்,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனிநபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்ட காலம் வேண்டும். அது முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நன்றாக ஒரு பழுத்த பழமாக இருக்கின்ற நிலையில் அதனை குத்திப் குத்தி பார்போமாயின் பழம் அழுகிப்போய்விடும்.

அதனை எவரும் தற்போதைய கட்சியின் நிலவரத்தில் என்ன விடயமென்று பழத்தினை பார்க்கின்ற மாதிரி குத்த வேண்டாம் என்று கட்சி அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை வேண்டிக் கொள்கின்றேன்.

எமது பலம் பழுத்த பழம் மாதிரி தேர்தலின் வெற்றிக்காக கனிந்து வருகின்ற இந்த பழத்தினை அழுக விட வேண்டாம். தேவையில்லாத சிறு சிறு பிணக்குகளை பெரிதுபடுத்தி இதில் ஏதோ பின்புலம் இருக்கின்றது என்று புரிந்து கொண்டாலும் கட்சி அபிமானிகள், ஆதரவாளர்கள் இன்று முதிர்ச்சியுள்ளவர்கள் காலம் காலமாக இக்கட்சிக்குள் நடக்கின்ற அநீயாயங்களை பற்றி அடையாளம் கண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையிலேயே கொஞ்சம் அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்யும் என்றாலும் அவற்றினை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தனிநபர்களின் அரசியலில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களின் விளைவாகத்தான் எமது கட்சிக்குள் பிளவுகள் வந்துள்ளது. கட்சிக்குள் ஏதாவது பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டால் தனிநபர்களுடைய அரசியல் அந்தஸ்துடைய பிரச்சினைகளிலே ஏற்படுகின்ற தடுமாற்றங்களின் பி்ன்னணிலே ஏதாவது கொள்கை ரீதியான விசயங்களை கொஞ்சம் துாக்கிப்பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையில் பிரிகின்றோம் என்று சொன்னாலும் இந்த கட்சி சந்திக்கின்ற எல்லாப் பிளவுகளும் ஏதோ அடிப்படையில் தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிணக்கு பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதனை நான் சரியாக அடையாளம் கண்டுள்ளேன்.

கொள்கை ரீதியாக கட்சிக்குள் பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று எவறாவது சொல்லியிருந்தாலும் கொள்கையை வெறும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகளின் பிரதிபலிப்பாக துாக்கிப்பிடித்தால் ஒழிய உண்மையில் அது தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிரச்சினைகளின் வெளிப்பாடு என்றுதான் சொல்லலாம்.

இன்றைக்கு இருப்பது தனிநபருடைய அரசியல் சம்பந்தமான பிரச்சினையல்ல. இன்று இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சம்பந்தமான பிரச்சினையாகும். தேர்தலின் மூலம் மக்கள் தருகின்ற அரசியல் அதிகாரத்தினை எமது சமூகம் இழந்துள்ள அனைத்தினையும் மீட்டிக்கொள்கின்ற ஒரு வழியாக கிழக்குத் தேர்தல் அமையுள்ளது.

கிழக்கு மாகாண ஆட்சியில் இதுவரைக்கும் எதனையும் அனுபவிக்கவில்லை. எதிர்க்கட்சியில்தான் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுயில்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலவரத்தினை தனித்துப் போட்டியிட்டதனால் ஏற்படுத்தியுள்ளோம்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் இன்றைக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் பலத்தினைதான் நம்பியுள்ளார்கள். ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் இன்று அமைதியாக நிம்மதியாக தங்களது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சுழலில்தான் அவர்கள் எதிர்பார்த்திருப்பது முஸ்லிம்களுடைய பலத்தினைக் காட்டுவதற்கு இடம் தேவை எனின் அது கிழக்கில்தான் காட்டலாம். எனவே எதிர்வருகின்ற இத்தேர்தலில் தாய்மார்கள் சகோதரிகள் எல்லோரும் ஒன்றினைந்து எமது கட்சியின் வெற்றிக்கான பணியில் ஈடுபட்டு எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டும்' என்றார்.

இதில் வேட்பாளர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.ஐ.எம்.மன்சுர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.முஸ்தபா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பெரும்திரளான பெண்களும் கலந்துகொண்டனர்.[/size]

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/47332-2012-08-25-06-33-12.html

முஸ்லிம் ஈழம் கேட்கிறார் .............................. :rolleyes:

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் இன்றைக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் பலத்தினைதான் நம்பியுள்ளார்கள். ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் இன்று அமைதியாக நிம்மதியாக தங்களது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அஸ்வரை கக்கீம் காப்பாற்ற துடிக்கிறார்.

முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்குகளை வைத்து சர்வதேசத்திற்கு இரண்டு செய்திகள் மட்டும் தான் கக்கீம் சொல்லலாம்.

1.தேர்தலின் பின்னர் பலர் எதிர்பார்ப்பதுபோல அரசுடன் நிபந்தனைகள் இன்றி இணைவது. இதில் அவரது மந்திரிப்பதவி காக்கப்படும். முஸ்லீம் காங்கிரசின் மரச்சின்னம் அடியோடி தறிக்கப்படும். அப்பாவி முஸ்லீம் மக்கள் நடுத்தெருவில் நிற்க வைக்கப்படுவார்கள். சர்வதேச நாடுகளுக்கு சொல்வது "தமிழருக்கு தீர்வொன்று பெறும் போது அதில் முஸ்லீம்களை இணைக்க முடியாது".

2.சிங்கள அரசின் "பிரநிதிச் சிங்கள அரசை" கிழக்கு மாகணத்தில் வெட்டி ஒட்ட துணை போகாமல் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் "கிழக்கு மாகாண மக்களின் பிரதுநிதித்துவ" அரசை நிறுவல்! இதில் கக்கீம் பதவி இழப்பர். வெளிமாகாண முஸ்லீம்கள் தற்காலிக பழிவாங்கல்களைச் சந்திப்பார்கள். முஸ்லீம்களினது துரோகிகளும் கக்கீமின் எதிரிகளும் மந்திரிப்பதவிகள் பெறுவார்கள். ஆனால் சர்வதேச நாடுகளுக்கு சொல்லப்படும் செய்தி "சிங்கள அரசு இனவாத அரசு. இலங்கையில் தீர்வு ஏற்பட அவர்களின் தலையீடு அவசியம்". நாடு நிரந்தர தீர்வை நோக்கி நகரும். இறுதியில் பழிவாங்கல்களை காட்டி மிரட்டி அரசியல் செய்யும் மகிந்தா அரசு தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களால் பழிவாங்கப்படும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]அன்று தமிழீழ தேசியத்தலைவரும் இன்று சம்பந்தர் அவர்களும் முஸ்லீம்களை தமிழர்களாகவும் தேசியமாகவும் நடாத்தி வருகிறார்கள்.[/size]

[size=1]

[size=4]அவர்களிடம் இருந்து தான் ஒரு நல்ல நகர்வை தமிழினம் நீண்ட காலமாக எதிர்பார்த்து உள்ளது. அதை முஸ்லீம் மக்கள் உணரும்வரை இந்த தலைவர்கள் ஏமாற்றிய வண்ணமே இருப்பார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின் காவல் தூண் கலங்கரை விளக்கு சுபேசை சபைக்கு அழைக்கின்றோம் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலை மட்டும் தான் உங்களுக்குத் தேசிய உணர்வு வரும்

அதுக்கு நாங்கள் என்ன செய்வது

காலம் காலமாக பதவிக்கு வரும் அரசுகளுடன் கூடியிருந்து கும்மி அடித்துக் கொண்டு இப்படிக் கதைத்தால் எப்படி?

[size=4]"[size=5]முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான விடயங்களில் ஆளும் தரப்பினரைப் போலவே, தமிழ்த் தரப்பினரும் பெரியளவான அங்கீகாரத்தினை வழங்குவதற்குத் தயாராக இல்லை. [/size][/size]

எங்களுக்கே வழியில்லாமல்தான் நிற்கிறோம். முதலில் நீங்கள் பேரினவாதத்துடன் முரண்பட்டுக் காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசை கண்டிப்பவர் உண்மையான முஸ்லிமாக இருந்தால் அமைச்சர் பதவியை விலகட்டும் பார்ப்போம். செய்யவே மாட்டார்.சொந்த இனத்துக்காக எதுவும் செய்ய முடியாதவர் ஏனையவர்களை எப்படி விமர்சிக்க முடியும்?.கொத்து கொத்தாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக ஜெனிவா வரை சென்று முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்று மனிதர்களே வெறுக்கும் ஒரு நாட்டின் நீதி அமைச்சராக இருந்தவர் ஹக்கீம்.

அரசு பள்ளி வாசல்களை அழித்த போது கூட்டமைப்பு மகிந்த அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்பதை ஹக்கீம் மறுப்பாரா? இப்போ யார் பச்சோந்தி??

இந்த லட்சணத்தில் விமர்சனத்த்துக்கு மட்டும் குறைவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.