Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

  • தொடங்கியவர்

நல்லதொரு முயற்சி.

- பொதுவான ஒரு பெயரை மாத்திரம் குறிப்பிடாமல் ஒவ்வொரு பிரதேசத்திலும் வேறு பெயர்களில் அழைப்பதை குறிப்பிட வேண்டும்.

உதாரணமாக King Fish இன் பெயர் ஒவ்வொரு இடத்திலும் வேறு பெயர்களில் அழைக்கப்படும். (அறுக்குளா - இலங்கை,

வஞ்சிரம் - இந்தியா) சில மீன்களின் பெயர்கள் பிரதேசத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

இலங்கை, இந்திய பிரதேசத்தில் இல்லாத மீன்களுக்கு இணையத்தில் ஏதோ ஒரு பெயரைக் கொடுத்துள்ளார்கள். அது சரியாக இல்லாவிட்டால், சந்தேகத்தை குறிப்பிட்டு விட வேண்டும். தெரிந்தவர்கள் பதிவிடுவார்கள்.

உதாரணமாக Salmon - கால / திரவாளை

, Hering -கொய் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உண்மைதான் தப்பிலி உங்கள் ஆலோசனையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை . ஆவணப்படுத்தும்பொழுது உங்கள் யோசனைக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் . அதாவது படம் , மீனினது விபரம் அடங்கிய இணைப்பு ,அதன் மறுபெயர்கள் என்று செய்கின்றேன் . வருகைக்கு நன்றிகள் .

  • Replies 700
  • Views 77.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொய் மீன்.. :D

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

நன்றிகள் கோம்ஸ்.. இந்த சாதனையை வாழ்நாளில் மறக்க மாட்டேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பொய்க் கெண்டை என அழைக்கப்படும் கொய் மீனைப் பற்றி அப்பர் தேவாரத்திலிருந்து சிறுகுறிப்பு..

கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்

கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே"

  • தொடங்கியவர்

[size=5]27 கொப்பரன் மீன் ( black marlin ) [/size]

black32.jpg

http://www.outsideed...tos/black32.jpg

இந்தபடத்தலுள்ள மீனுக்கான தூயதமிழ் " கொப்பரன் மீன் " ஆகும் . இதை தமிழ்நாட்டில் சில இடங்களில் " மயில் மீன் " என்னும் அழைப்பார்கள் . பலர் போட்டியில் பங்குபற்றினாலும் , இறுதியில் இருவர் ஓர் நூல்இழை இடைவெளியில் சிக்கலான பதிலைத் தந்திருந்தார்கள் . தலபத்து மீனா கொப்பரன் மீனா என்று அலசி ஆராய்ந்ததில் இரண்டுமே வகைப்படுத்தலில் ஒன்றானாலும் , குடும்பங்களில் வேறுபடுகின்றன . தலபத்து மீனில் தலையில் இருந்து வால்வரை உயரங்கூடிய சிறகுகள் காணப்படும் . ஆனால் கொப்பரன் மீனில் தலையில் மட்டுமே சிறகு காணப்படும் . உருவத்திலும் இவை வித்தியாசப்படும் . தலபத்து மீன் நீளத்தில் குறைவாகவும் , கொப்பரன் மீன் கருப்பு நிறத்துடன் நீளம் கூடவாக இருக்கும் . இவையிரண்டுமே அதிவேகமாக மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் நீந்தக்கூடியவை . எனவே போட்டி விதிமுறைகளின்படி சிறப்புபரிசான பச்சைப்புள்ளியை மல்லையூரானுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன்னைப்பற்றிய விளக்கத்திற்கு இங்கே நுளையுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Black_marlin

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தலப்பத்து :D

தளப்பத்து

(சீரியல் பார்த்து பருத்துப் போன 'obesed முரல்') :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன் ஒன்று ஆயிரம் டொலர்களுக்கு மேலையும் போகும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தளப்பத்து

(சீரியல் பார்த்து பருத்துப் போன 'obesed முரல்') :D

சீரியல் பார்த்து இவ்வளவு பருத்து போக இல்ல...சீயில துள்ளி குதிச்சு தான் பருத்திருக்கு..

கொப்பரன்

கொப்பரைக்குல்லா

Kopparaikulla/ Kopparan

Edited by மல்லையூரான்

தலப்பத்து :D

கொப்பரன் -Makaira indica

தலப்பத்து ([size=4]Thalapaththu[/size]) - Istiophorus platypterus

கவனம். ஆரோ தோளுக்கு மேலால்லை பாக்கினம். :lol: :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்



  1. Sword Fish. Thalapaththu. தலப்பத்து
    sword.jpg

[size=4]2.கொப்பரன் -Makaira indica[/size]

black.jpg

கொப்பரன் கறுப்பு(கருனீலம்-Indica). பெரியது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பரனும் இல்லை.. கிப்பரனும் இல்லை.. :D இரண்டுமே சோர்ட் மீன் தான்.. பச்சை எனக்கே.. :D

மீன் நீலமா அல்லது கடல் பின் புலத்தால் மீன் நீலமாக காணப்படுகிறதா என்பதை. கோ தெளிவு படுத்தவேண்டும். :unsure: இரண்டு மீன்களும் உருவமைப்பில் ஒரே மாதிரி காணப்படுவதால், சரியான பெயரை கண்டு பிடிக்க, கோ மேலதிக விபரங்களை வேளியிட வேண்டும். :icon_idea::(

ஆனால் இனி கோ என்ன சொன்னாலும் பரிசு எனக்குத்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

மார்லன் என்று இதை, அவுசில் செல்லமாக அழைப்பதுண்டு!

நல்ல ஸ்போர்ட் பிஷ் எண்டு சொல்லிப் பிடிச்சுப் போட்டுத் திரும்ப விட்டு விடுவார்கள்!

நல்ல வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தரும், மீன்வகை!

  • தொடங்கியவர்

பொய்க் கெண்டை என அழைக்கப்படும் கொய் மீனைப் பற்றி அப்பர் தேவாரத்திலிருந்து சிறுகுறிப்பு..

கை அனைத்தும் கலந்து எழுகாவிரி

செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்

கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா

ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே"

உண்மை............. இலக்கியத்திலும் கெண்டை ( கொய் மீனுக்கு ) க்கு தனி இடம் உண்டு . உதாரணத்திற்கு ,

“எள்ளல், இளமை, பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர்.

பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும். மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,

பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான். பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.

(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள் ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)

குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

5 உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)

தோழி கூற்று (மருதம் - ஊடல்)

குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது.

பாடல்வழி அறியலாகும் கருத்து,

• கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.

• கொக்கிடம் மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.

• மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி யாயினி :) :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

மீன் நீலமா அல்லது கடல் பின் புலத்தால் மீன் நீலமாக காணப்படுகிறதா என்பதை. கோ தெளிவு படுத்தவேண்டும். :unsure: இரண்டு மீன்களும் உருவமைப்பில் ஒரே மாதிரி காணப்படுவதால், சரியான பெயரை கண்டு பிடிக்க, கோ மேலதிக விபரங்களை வேளியிட வேண்டும். :icon_idea::(

ஆனால் இனி கோ என்ன சொன்னாலும் பரிசு எனக்குத்தான் :D

துள்ளிப்பாயிற மீனின்ரை கலருக்கும் கடலின்ரை கலருக்கும் ஒரு தொடசலும் கிடையாது . அதோடை கமறா ரிறிக் கிடையாது . என்னும் மாட்டேலையேப்பா......... :lol: .

தூண்டிலில் சிக்கிப்போய்விட்ட மீன் தப்பிக்க கடலுக்கு வெளியே துள்ளி விழுகிறது. துள்ளி விழுந்த பின் முள்ளு இன்னும் சற்று இறுகியிப்பதைதான் மீன் அனுபவப்படப்போகிறது. தமிழரின் விடுதலை போராட்டங்கள் 1948ல் இருந்து எடுத்துவரும் திசை இது. கோடீஸ்வரன் வழக்கு போட்டத்தால்த்தான் பண்டாரநாயக்கா நீதி மன்றங்கள் தான் சொல்வதை மட்டும்தான் தீர்ப்பாக தரவேண்டும் என்று கூறி சிங்கள ம்க்களிடம் வாக்குகள் வாங்கி பிரிவிக்கவுன்சில் அப்பீலை இல்லாமல் செய்தவர்கள். இது சிராணிவரைக்கும் வருகிறது. சிராணியும் முடிவு அல்ல. முடிவுக்கு இன்னும் சில காத தூரம் போக இருக்கு. மீன் எனது உறவாக இருந்திருந்த்தால் தூண்டில் முள்ளில் விழுந்த மீனுக்கு "முள்ளில் விழுந்த சேலையை இழுத்து கிளிச்சு போடாதை. அடங்கிப் போ. வலி இல்லாத இறப்பு வரும்." என்று சொல்லிக்கொடுத்திருப்பேன்" :rolleyes:

பிரச்சனை நான் உருவாக்க இல்லை; தானாக உருவாகிவிட்டது. இசைக்கலைஞன் சில பொறிமுறைகளை வைத்து விவாத்தித்தால் என்ன சொல்லாம் என்று யோசிக்கிறேன். "வெள்ளைச் சேட்டை அம்மா துவைக்கும் போது பார்க்கவில்லையா?. துவைத்து முடிய நீலத்தண்ணிர் தோய்த்து எடுக்கும் போது அது நீலமாக காணப்ப்டுகிறது. ஆனல் காயப்போட்டு தண்ணீருலர்ந்தவுடன் சேட்டு வெள்ளையாக வருவதில்லையா? அதுதான் நீலக்கடலில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்ட மீனும் சற்று நீலமாக இருக்கிறது. வெளியிலை எடுத்து கடுவாடு போட வெள்ளை ஆகிடும். ஆகவே கொப்பாரன் , கிப்பாரன் என்று ஒன்றும் இல்லை தலப்பத்து மட்டும்தான் இருக்கு என்றால்" நான் என்ன செய்ய? :(

:D :D :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தூண்டிலில் சிக்கிப்போய்விட்ட மீன் தப்பிக்க கடலுக்கு வெளியே துள்ளி விழுகிறது. துள்ளி விழுந்த பின் முள்ளு இன்னும் சற்று இறுகியிப்பதைதான் மீன் அனுபவப்படப்போகிறது. தமிழரின் விடுதலை போராட்டங்கள் 1948ல் இருந்து எடுத்துவரும் திசை இது. கோடீஸ்வரன் வழக்கு போட்டத்தால்த்தான் பண்டாரநாயக்கா நீதி மன்றங்கள் தான் சொல்வதை மட்டும்தான் தீர்ப்பாக தரவேண்டும் என்று கூறி சிங்கள ம்க்களிடம் வாக்குகள் வாங்கி பிரிவிக்கவுன்சில் அப்பீலை இல்லாமல் செய்தவர்கள். இது சிராணிவரைக்கும் வருகிறது. சிராணியும் முடிவு அல்ல. முடிவுக்கு இன்னும் சில காத தூரம் போக இருக்கு. மீன் எனது உறவாக இருந்திருந்த்தால் தூண்டில் முள்ளில் விழுந்த மீனுக்கு "முள்ளில் விழுந்த சேலையை இழுத்து கிளிச்சு போடாதை. அடங்கிப் போ. வலி இல்லாத இறப்பு வரும்." என்று சொல்லிக்கொடுத்திருப்பேன்"

பிரச்சனை நான் உருவாக்க இல்லை; தானாக உருவாகிவிட்டது. இசைக்கலைஞன் சில பொறிமுறைகளை வைத்து விவாத்தித்தால் என்ன சொல்லாம் என்று யோசிக்கிறேன். "வெள்ளைச் சேட்டை அம்மா துவைக்கும் போது பார்க்கவில்லையா?. துவைத்து முடிய நீலத்தண்ணிர் தோய்த்து எடுக்கும் போது அது நீலமாக காணப்ப்டுகிறது. ஆனல் காயப்போட்டு தண்ணீருலர்ந்தவுடன் சேட்டு வெள்ளையாக வருவதில்லையா? அதுதான் நீலக்கடலில் இருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்ட மீனும் சற்று நீலமாக இருக்கிறது. வெளியிலை எடுத்து கடுவாடு போட வெள்ளை ஆகிடும். ஆகவே கொப்பாரன் , கிப்பாரன் என்று ஒன்றும் இல்லை தலப்பத்து மட்டும்தான் இருக்கு என்றால்" நான் என்ன செய்ய? :(

இப்ப என்ன நடந்து போச்சுதெண்டு இவங்கள் எல்லாம் வந்து நிக்கிறாங்கள் :lol: :lol: ?? எந்த இராணி அப்புக்காத்து ( கியூசீ ) மார் வந்து வழக்காடினாலும் , அரசசபையில நீதி நியாயம் தோக்காது கண்டியளோ :D . இப்பிடியெல்லாம் பீல் பண்ணாமல் நல்லா வலையை தூர வீசுங்கோ :D . ஏழு சமுத்திரத்துக்குள்ளை ஒண்டுக்கையாவது மாட்டும் :) .

  • தொடங்கியவர்

கொப்பரன் -Makaira indica

தலப்பத்து (Thalapaththu) - Istiophorus platypterus

கவனம். ஆரோ தோளுக்கு மேலால்லை பாக்கினம். :lol: :lol: :lol: :lol:

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . மல்லையூரான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

  • தொடங்கியவர்

தலப்பத்து :D

நீங்கள் சொன்ன தலபத்து இது பாருங்கோ :D .

640px-Istiophorus_platypterus_.jpg

640px-Istiophorus_platypterus_.jpg

நீங்கள் போகவேண்டிய இணைப்பு,

http://en.wikipedia.org/wiki/Sailfish

  • கருத்துக்கள உறவுகள்
flyingfish1.gifமீன்கள் பெயருக்கு தமிழ் இணையங்களை நம்பக்கூடாது போலை இருக்கே..?! :D

flyingfish1.gifமீன்கள் பெயருக்கு தமிழ் இணையங்களை நம்பக்கூடாது போலை இருக்கே..?! :D

அதுக்கு மட்டுமல்ல எதுக்குமே நம்ப கூடாதவை தமிழ் இணையங்கள். :icon_idea::D

  • தொடங்கியவர்

[size=5]28 செவ்விளைமீன் ( RED SNAPPER ) .[/size]

800px-Red_Snapper.jpg

640px-Red_Snapper.jpg

இந்தப் படத்தில் உள்ள மீனுக்குரிய தூயதமிழ் " செவ்விளை மீன் " ஆகும் . இதனை " சங்கரா செவ்விளை மீன் " , " செப்பலி மீன் " , " செப்பிலி மீன் " என்றும் அழைப்பர் . இந்த மீனுடன் பலரும் ஈடுபாடு காட்டினார்கள் . ஆயினும் , போட்டி விதிகளின்படி தப்பிலிக்கு பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இந்த மீன் பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Red_snapper_(fish)

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

விளைமீன்.. (Red Snapper) :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.