Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கின் முதலமைச்சர் நானே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வடமாகாண சபையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக அரசாங்கம் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து, தென் பகுதி மக்களுடன் சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கை உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை –டக்ளஸ்

இந்திய இலங்கை உடன்படிக்கையானது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் ஆயுதப் போராளிகள் சரணடைவதாகவும், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதாகவும், வடக்கு கிழக்கிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த உடன்படிக்கையானது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதே தவிர, உரிய நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களை சில அரசியல்வாதிகள் பிழையாக வழிநடத்திய காரணத்தினால் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான மரண அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது நாம் அனைவரினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83182/language/ta-IN/article.aspx

மேலதிக செய்தி இணைப்பு.

அப்ப நான் தான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் - பிரதி அமைச்சர் கருணா

அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் டக்லஸ் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் ஏற்படும் வெற்றிடத்துக்கு பிள்ளையானுக்கு பதிலாக தன்னை தான் அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என்று பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஈடுபட்டு வரும் பாரம்பரிய ஆட்கடத்தல் மற்றும் சிறுதொழில் முயற்சிகளான கப்பம் கோருதல், அரசியல் எதிரிகளை பழிவாங்குதல் போன்றவற்றில் தான் அரசாங்கத்துடன் சிறந்த புரிந்துணர்வுகளுடன் செயற்படுவதாகவும், மதுபான வியாபாரம், டிஸ்கோ போன்றவற்றில் பெரும் பங்காற்றுவதாகவும், தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை காட்டி கொடுத்து சிங்கள பெண்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா - அரசாங்க உடன்படிக்கை உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை – கருணா

கருணா - அரசாங்க உடன்படிக்கையானது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ம் திகதி அப்போதைய இலங்கை பிரதமர் ரணிலுக்கும் , அப்போதைய புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

புலிகளை காட்டி கொடுப்பதாகவும் , கிழக்கு மாகான முதலமைச்சராக கருணா அல்லது கருணாவின் கூட பிறந்த சகோதரிகளில் ஒருவரை ஆக்குவதாகவும், பிள்ளையான், இனிய பாரதி போன்றவர்களுக்கு மாகாண அமைச்சு பதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த உடன்படிக்கையானது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதே தவிர, உரிய நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கொள்ளுபிட்டி ஹோட்லில் நடைபெற்ற டிஸ்கோ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு-கிழக்கு மக்களை தமிழீழ விடுதைப்புலிகள் பிழையாக வழிநடத்திய காரணத்தினால் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான மரண அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது எனது கடமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நடை பெற்று முடிந்த கிழக்கு தேர்தலில் சகோதரியின் தோல்வி குறித்து கேட்டபோது அதை விட தோல்வி முதலமைச்சர் ஆவேன் என்று சொல்லி ஆலோசகரான பிள்ளையானுக்கு தான் என்று தனது மீசையை தடவி கொண்டார்.

நிருபர்கள் அவரது மீசையை கூர்ந்து கவனித்த போது அதில் மண் ஒட்டி இருக்கவில்லை.

மூலம் : www.கற்பனை.com

:lol: :lol: :lol:

[size=4]பிள்ளையானிடம் (கருணாவிடம் ) இருந்தாவது டக்கி பாடம் படிக்கவேண்டும்.[/size]

[size="3"] [/size][size=4]'மீண்டும் நான் முதலமைச்சராக வரமுடியாது என்பதை தேர்தல் முடிவின் மூலம் விளங்கிக் கொண்டேன்' என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

'இந்தமுறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை. இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழைவிட்ட அரசியல் சக்திகள், குறிப்பாக சம்பந்தன் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/49011-2012-09-20-11-52-23.html

அடுத்த சனியன் தொடங்கிட்டுது இப்பவே ஊளையிட.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அப்ப இருந்தே சொல்லி வாறார்

பிரபாகரன் இல்லாவிட்டால் நானும் இல்லை என்று.

அவர் பிரபாகரனை தமிழீழத்துடன் ஒப்பிட்டது புரியாமல் இன்னும் நிற்கின்றோம்.

அன்றிலிருந்து அவரது குறிக்கோள் அர்யுனனில் அம்பு போன்றதே.

அதை அவர் அடைவார்.

பல்லாயிரம் மக்களின் தலையை பரிசாகக்கொடுத்து.

மானம்பூ வந்து போய்விட்டது. பிள்ளையானின் அனுமார் ஆட்டம் முடிந்துவிட்டது. பிள்ளையான் உடுப்பை களட்டமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவன். மகிந்தா உருவி இழுத்தெடுத்துப்போட்டர். அது இவ்வளவு விரைவில் வரும் என்று நான் நினைக்கவிலை. மகிந்த விரைவாக சுவாமியை விரைவாக ஆட்டி கெதியாக ஊர்வலத்தை முடித்துவிட்டார். இனிமேல் தனக்காக பாங்க் உடைக்கவோ, பெட்டைகளை கடத்தவோ முடியாது. அரசருக்காக மட்டும்தான் செய்யலாம். செய்ய வேண்டும். செய்து பிடி பட்டால் LLRC அறிக்கையை நடை முறைப்படுத்துவது என்ற பேரில் உள்ளே இருக்க வேண்டும். பொன்சேகாவுக்கு அமெரிக்கா இருந்தது. பிள்ளையானின் நண்பி நிருபம்மா ராவோ அவ்வளவு உரத்த ஆள் அல்ல. கிருனிக்கா மாதிரி வடிவான பெட்டை ஒன்றை பெற்றுக்கொள்ளாததால் கொஞ்ச நாள் கூட உயிர் வாழலாம். (கிளியை பிடிக்க கூண்டுக்கு வெருப்பு வைக்க வேண்டிய தேவை இல்லை.)

தேவானந்தா பயப்படுகிறார். மகிந்தா, மந்திரி பதவியை விட்டு விட்டு தான் போட்ட சோறுக்கு வடக்கில் தனக்கு என்ன செய்தார் என்பதை நிரூபிக்க நேரம் வருகிறதென்று நேரத்திற்கே அறிவித்தல் கொடுத்து விட்டார், அழுதளுதும் பிள்ளை அவளே பெற வேண்டும்! அதற்கிடையில் அடிக்க வேண்டிய பல்கலைக்கழக பேராசிரியர்களை அடித்து முடிக்கட்டும். கெடுக்க வேண்டிய மாணவர்களை கெடுக்கட்டும்.

வெளிநாட்டு ஜனநாயக அரசியல் விழுமியங்களை வடக்கு கிழக்கு மக்கள் சரியாக அறியாத காலங்களில் ஜி.ஜி பிழைகளை விட்டார். கூட்டணியில் இணைந்து திருத்த முயன்றார். ஆனால் காலம் கடந்துவிட்டது. நாடாளுமன்ற அரசியலை தான் நிதம் வெற்றிவாகை சூடும் கோட்டு சீனுக்குள் முடக்கி, குறுக சிந்தித்து, அரசியல் பண்ணிய அரசியல்வாதியின் முடிவின் சரித்திரம் அது. காக்கீமின் கடைசி நடவடிக்கைகள் அவர் முஸ்லீம்களின் பொன்னம்பலத்தின் கதிரையை மட்டும்தான் கேட்கிறாரா அல்லது ஒரு படி மேலே சென்று முஸ்லீம்களின் துரையப்பா, கதிர்காமர் களின் கதிரைகளையே கேட்கிறாரா என்பது இறுதியில் முஸ்லீம் மக்கள் அவருக்கு வழங்கும் தீர்ப்பிலிருந்துதான் எழுதி வைக்க வேண்டிய சரித்திரம்.

தேவானநந்தாவுக்கு பிள்ளையானின் அவலக்குரல் கேட்கிறது. கக்கீமுக்கும் நிச்சயம் கேட்டிருக்கும் என்று நம்புவோம்.

Edited by மல்லையூரான்

நாங்களும் காலம் காலமா பந்தி பந்தியாக ஆய்வுகள் எழுதுகின்றோம் .எழுதிய ஒன்றும் நடக்குதில்லை .

அரசு கடந்த தேர்தலில் பெரும்பான்மை எடுக்க இனி கருணா ,டக்கிளஸ் எல்லாம் சரியென்று ஆய்வெழுதி பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கவில்லை .

விக்கிரமாதித்தன் கதை போல விடாமல் தொடர்ந்து கொண்டிருப்போம் .எங்கேயும் எப்போதும் ஒன்றாவது சரிவரும் தானே

மேலதிக செய்தி இணைப்பு.

அப்ப நான் தான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் - பிரதி அமைச்சர் கருணா

அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் டக்லஸ் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் ஏற்படும் வெற்றிடத்துக்கு பிள்ளையானுக்கு பதிலாக தன்னை தான் அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும் என்று பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஈடுபட்டு வரும் பாரம்பரிய ஆட்கடத்தல் மற்றும் சிறுதொழில் முயற்சிகளான கப்பம் கோருதல், அரசியல் எதிரிகளை பழிவாங்குதல் போன்றவற்றில் தான் அரசாங்கத்துடன் சிறந்த புரிந்துணர்வுகளுடன் செயற்படுவதாகவும், மதுபான வியாபாரம், டிஸ்கோ போன்றவற்றில் பெரும் பங்காற்றுவதாகவும், தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை காட்டி கொடுத்து சிங்கள பெண்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

கருணா - அரசாங்க உடன்படிக்கை உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை – கருணா

கருணா - அரசாங்க உடன்படிக்கையானது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ம் திகதி அப்போதைய இலங்கை பிரதமர் ரணிலுக்கும் , அப்போதைய புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

புலிகளை காட்டி கொடுப்பதாகவும் , கிழக்கு மாகான முதலமைச்சராக கருணா அல்லது கருணாவின் கூட பிறந்த சகோதரிகளில் ஒருவரை ஆக்குவதாகவும், பிள்ளையான், இனிய பாரதி போன்றவர்களுக்கு மாகாண அமைச்சு பதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த உடன்படிக்கையானது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதே தவிர, உரிய நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கொள்ளுபிட்டி ஹோட்லில் நடைபெற்ற டிஸ்கோ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு-கிழக்கு மக்களை தமிழீழ விடுதைப்புலிகள் பிழையாக வழிநடத்திய காரணத்தினால் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான மரண அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது எனது கடமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நடை பெற்று முடிந்த கிழக்கு தேர்தலில் சகோதரியின் தோல்வி குறித்து கேட்டபோது அதை விட தோல்வி முதலமைச்சர் ஆவேன் என்று சொல்லி ஆலோசகரான பிள்ளையானுக்கு தான் என்று தனது மீசையை தடவி கொண்டார்.

நிருபர்கள் அவரது மீசையை கூர்ந்து கவனித்த போது அதில் மண் ஒட்டி இருக்கவில்லை.

மூலம் : www.கற்பனை.com

அரோகரா ...................... :D:icon_idea:

:D

அரோகரா ...................... :D

நாங்களும் காலம் காலமா பந்தி பந்தியாக ஆய்வுகள் எழுதுகின்றோம் .எழுதிய ஒன்றும் நடக்குதில்லை .

அரசு கடந்த தேர்தலில் பெரும்பான்மை எடுக்க இனி கருணா ,டக்கிளஸ் எல்லாம் சரியென்று ஆய்வெழுதி பார்த்துக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கவில்லை .

விக்கிரமாதித்தன் கதை போல விடாமல் தொடர்ந்து கொண்டிருப்போம் .எங்கேயும் எப்போதும் ஒன்றாவது சரிவரும் தானே

புலிகள் கட்டாய ஆள் சேர்ப்பு செய்த போது பிள்ளைப்பாசத்தில் தாய் தந்தை தவித்தார்கள் அதே பிள்ளை வீரச்சாவடைந்ததும் எதிரியை விழ்த்தி மடிந்தான் என்று ஆறுதல் பட்டார்கள்.

புளோட் சோர்த்து பாசல் சேர்ந்தே தமிழ்மக்களை அழவைத்தார்கள். அதுவும் பள்ளிவிட்டு மதிய உணவுக்கு பிள்ளைகள் பசியோடு வந்து காவல் இருக்கும் போது பாசல் எடுதவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.