Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம்

Featured Replies

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம்

புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டு, அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம். எஸ். உதுமாலெவ்வை, சுதந்திரக் கட்சி உறுப்பினர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சு பதவிகளுக்கு மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

எம். எஸ். உதுமாலெவ்வை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராகவும், விமலவீர திஸாநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான, ஹாபிஸ் நஸீர் அஹமட் விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும் எம்.ஐ.எம். மன்சூர் - சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

அதேவேளை, முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், நிதி திட்டமிடல் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந் நிகழ்வில், ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=616951457724495784

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்புலிகளிடம் இருந்து கிழக்கை மீட்கப் போறம் எண்டவை.. நல்ல அழகாக செய்ய வேண்டிய காட்டிக்கொடுப்புகளை எல்லாம் செய்துவிட்டு.. இப்ப கிழக்கை முஸ்லீம்களிடமும் சிங்களவரிடமும் வெற்றிகரமாக தாரைவார்த்துவிட்டு... கூத்தடிக்கக் கிளம்பி இருப்பார்கள்..!

யாழில் உள்ள ஒன்றிரண்டு.. கருணா.. பிள்ளையான் விசுவாசிகளையும் இப்ப காணக் கிடைப்பதில்லை. பிரபாகரன் என்ன பெரிசு.. நானும் தான் பெரிசு.. என்ற.. காழ்ப்புணர்ச்சி.. தான் தமிழின அழிவின் முக்கிய காரணி..! :icon_idea::(:rolleyes:

Edited by nedukkalapoovan

[size=5]அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவோருக்கு இனி முதலமைச்சர் பதவி இல்லை[/size]

[size=4]மாகாணசபை அமைச்சர்களாக பதிவியேற்பவர்கள், பொய் வாக்குறுதிகளை வழங்காமல் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாடுபட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெறுவோருக்கு முதலமைச்சுப் பதவி வழங்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து அமைச்சர்களும் தங்களது மாகாணம், மற்றும் கிராமங்களுக்காக சேவையாற்ற வேண்டும். மாகாணசபை என்பது ஒரு வெள்ளை யானை போன்றது எனும் மனப்போக்கை மாற்றியமைக்கும் வகையில் செயற்படும் பொறுப்பு அமைச்சர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களாக பதவியேறோர் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/49237-2012-09-24-12-36-26.html

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்ஸ் ஆதரவு குடுத்து குடுத்தே முக்கிய அமைச்சு பதவிங்களா பிடிகிறாங்க....

துறைமுகம் கப்பல் போக்குவரத்து....... அப்புறம் நீதி அமைச்சு ஆனா எங்கட டக்கி மாம்சும் அண்டு தொடக்கம் இன்றுவரை அரசுக்கு ஆதரவளிக்கிறார் பட் ஒரு முக்கியமான அமைசுப்பொருப்பையும் ஆள நம்பி கொடுக்கிறாங்க இல்லை சுண்டக்காய் அமைசுகள் தான் இதுவரை....ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு பேரம் பேசும் சத்தியே இல்லை அதனாலா டக்கி மாமா கட்சிய கலைச்சிட்டு ஆஸ்திரேலியாக்கு வந்து அசைலம் அடிக்கலாம்....

இப்பிடிக்கு

சுண்டல்

[size=4]பிரித்தாளும் ஆட்சியாளர்கள் செய்வதையே சிங்களம் செய்கிறது.[/size]

[size=4]தமிழர்களை வலிமை இழக்க செய்யவே முஸ்லீம்களுக்கு பதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால் முஸ்லீம் சமூகம் நன்மை அடைகின்றதா? என பார்க்கவேண்டும்.[/size]

[size=4]தமிழர்கள் தமது உரிமைகளை கேட்காமல் இணங்கி வாழ வெளிக்கிட்டால் என்ன நடக்கும்? முஸ்லீம்களுக்கு என்ன நடக்கும்?[/size]

[size=5]முஸ்லிம் 4, [/size][size=5]சிங்களம் 1, தமிழ் 0: [/size]

[size=5]கிழக்கு மாகாண சபைக்கு அமைச்சர்கள் தேர்வு[/size]

[size=4]இலங்கையின் கிழக்கு மாகா[/size]ண சபைக்கு முஸ்லிம்கள் நால்வரும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

[size=3][size=4]இம்முறை தமிழர்கள் எவருக்கும் மாகாண சபையில் அமைச்சர் பொறுப்பு கிடைக்கவில்லை.[/size][/size]

[size=3][size=4]37 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் உதவியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.[/size][/size]

[size=3][size=4]22 உறுப்பினர்களை கொண்டுள்ள ஆளும் தரப்பில் 14 பேர் முஸ்லிம்கள் , 6 பேர் சிங்களவர்கள் ,2 பேர் தமிழர்கள் ஆவர்.[/size][/size]

[size=3][size=4]கடந்த முறை மாகாண சபையில் தமிழர் தரப்பில் முதலமைச்சரும் அமைச்சர் ஒருவரும் இருந்தனர். முஸ்லிம் தரப்பில் இரண்டு அமைச்சர்களும் சிங்கள தரப்பில் ஒரு அமைச்சரும் இருந்தனர்.[/size][/size]

[size=3][size=4]அச்சமயம் ஆளும் தரப்பில் 7 தமிழர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள் ஆனால் இம்முறை இருவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120924_easternprovincialcouncilministers.shtml

[size=5]கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன ? ஹக்கீம் பதில்[/size]

[size=4]கிழக்கு மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்ததன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது என்ன?[/size]

[size=3][size=4]பிபிசி தமிழோசைக்கு பதில் அளிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120924_raufhakeemeast.shtml

எப்பிடியோ கருணா பிள்ளையான் ஆசைப்பட்ட மாதிரி கிழக்கை ஒரு தமிழனும் ஆளவில்லை...... ஒரு யாழ்ப்பாணியும் ஆளவில்லை.... ஒரு வன்னிப் புலியும் ஆளவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு பத்தியெரியுது....எல்லாம் தலையெழுத்து.

  • தொடங்கியவர்

கக்கீம் உலாமாக்கள் முன் வேட்பாளர்களை சத்தியம் செய்ய வைத்தது மக்களிடம் ஒரு எண்ணத்தை உண்டாக்கியது. அந்த எண்ணம் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டால் அவர்கள் கட்சியை விட்டு அரசில் சேரக்கூடாது என்பதாகும். அதாவது தனி ந்பர்கள் பதவிகளுக்காகாக சோரம் போக்கக் கூடதென்பதாகும். அப்படியாயின் அது ஒரு பொழுதும், தனிபர் மட்டும்தான் சோரம் போக்கக்கூடாது ஆனால் கட்சியே ஒட்டுமொததமாக போகாலாம் என்று கூற முடியாதது. மக்கள் அதை கட்சி ஔட்டு மொத்தமாக போகலாம் என்றுதான் விளங்கினார்கள் எனக்கூறுவது அரசியல் விபச்சார்ம்.

மு.கா கட்சி, மத்தியில் தனக்கு எதுவும் கேடகவில்லை என்று கூறுகிறர் கக்கீம். ஆனால் பசீர் சேகுவாதா விலகிய பதவியை பற்றி கக்கீம் பிரஸ்தாபிக்கவில்லை.

மத்தியில் மு.கா எதையும் கேட்கவில்லை, ஆனால் அது வேண்டியது மாகாண ஆட்சியை மட்டும்தான் என்கிறார். இதில் மு.காவால் 14 அங்கத்தவர் கொண்டிருந்த அர்சுடன் பேரம் பேசமுடியவில்லை. கக்கீம், தானே அமைச்சர்களின் வார்த்தையில் த்ங்கியிருப்பத்தாக கூறுகிறார். அவ்வாறாயின், அப்படியான வார்த்தையில் தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லாதிருந்த முதல் அமைச்சர் பதவியை ஏற்க என்ன தயக்கம் என்று சொல்லவில்லை.

மேலும், தேர்தலின்பின், தான் கூட்டமைப்புடனும், அரசுடனும் சமச்சீரான பேரம் பேசிவருவதாக கூறிவந்தவர், இன்று தான் அரசுடன் இருந்ததால் தனது நிலையை அங்கே பலப்பிக்க தான் மக்களிடம் ஆணையை கேட்டத்தாக கூறுகிறார். அதனால் வெளிப்படையாகவே, தான் அரசில் இருக்கிறேன் என்றதை தெரிந்துகொண்டு, அரசில் தனது பலத்தை பெருக்கத்தான் தான் கூட்டமைப்புடன் பேசியதாக நாடமாடினார் எனபதை இப்போது ஒத்துக்கொள்கிறார்.

மாகாண ஆட்சியை வைத்து மாகாண நிர்வாக பிரச்சனைகளை அங்கு சீர்செய்ய முடியாதென்கிறார். ஆனால் அந்த அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி கொடுப்பதால் மட்டும்தான் மாகாண ஆட்சியில் இருக்கும் நிர்வாக பிரச்சணைகளை சரி செய்யலாம் என்கிறார். இதில் அவர் நிர்வாக பிரச்சனை என்ன எனபதை வெளிப்படையாக பேச ஆயத்தம் இல்லை. இதை மக்கள் ஒருவிதத்தில்தான் விள்ங்கிக் கொள்ளமுடியும். தொடர்ந்து கிழக்கை பறித்துகொண்டு போகும் அரசிடம், என்பாகத்தை பறியாதே;, உனக்கு தமிழர் பாகத்தை பறிக்க நான் உதவ முடியும் எனபதுதான் அந்த நிர்வாக சீர்திருத்தமாக எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹகீமோட கவலை ஹக்கீமிற்கு தான் தெரியும்.... அரசாங்கம் அந்த பழைய nurse ஓட வழக்க மீண்டும் தூசு தட்ட போவதாக மிரட்டி இருக்கலாம் :D

எப்பிடியோ கருணா பிள்ளையான் ஆசைப்பட்ட மாதிரி கிழக்கை ஒரு தமிழனும் ஆளவில்லை...... ஒரு யாழ்ப்பாணியும் ஆளவில்லை.... ஒரு வன்னிப் புலியும் ஆளவில்லை

மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள். :lol: :lol:

இவனுகளால திருகோணமலை, அம்பாறைச் சனத்துக்கும் தரித்திரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில்... ஒரு தமிழனையும் ஆளவிடாமல்...

வைக்கல் பட்டடை நாய்மாதிரி, எல்லாவற்றையையும் குழப்பியடித்த கருணா, பிள்ளையான்களுக்கு... இப்ப சந்தோசம்தானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.