Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய யோசனை

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து படகுகளுக்கும் ஜிபிஎஸ் கருவி, வயர்லெஸ் வழங்கலாம் என இந்திய மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

5 கலங்கரை விளக்கங்கள், சர்வதேச கடல் எல்லை மீனவர்களுக்கு தெளிவாக தெரியும்படி பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பாக்கி வழங்க வேண்டும் என மதுரை சட்டத்தரணி பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினோத்குமார் சர்மா, ஏ.செல்வம் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட் ஜெனரல் வில்சன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக கடலோர பாதுகாப்பு படை இணை இயக்குனர் ஜெனரல் வர்க்கீஸின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு பாக் ஜலசந்தி பகுதியில் கூடுதல் நடவடிக்கைகள் எடுககப்பட்டுள்ளன. நாட்டு படகு, விசைப்படகு மற்றும் கட்டுமரங்களுக்கு தலா ஒரு ஜிபிஎஸ் கருவி மற்றும் வயர்லெஸ் கருவி வழங்கலாம். இக்கருவிகள் கடலில் இருக்கும் போது உதவிகள் பெற பயன்படும்.பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள 5 கலங்கரை விளக்கங்கள் பராமரிக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி இல்லாத படகுகள் சர்வதேச கடல் எல்லை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லையில் விளக்குகள் ஒளி விழச்செய்யப்படும்.

பகல் நேரங்களில் சர்வதேச கடல் எல்லையை தெரிவிக்க கடலில் ஒளிரும் மிதவைகள் நிறுவப்படும். ஜிபிஎஸ் கருவி மூலம் கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் துல்லியமாக கண்காணிக்கலாம்.

அதோடு கடல் வானிலை நிலவரத்தையும் உடனுக்குடன் மீனவர்களுக்கு தெரிவித்து, உஷார்படுத்தலாம். வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கி, மீனவர்களுடன் தொடர்பில் இருக்கலாம். கடலோர பாதுகாப்பு மீட்பு படையினரை 1554 என்ற எண்ணில் வயர்லெஸ்சில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

(தினகரன்)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவருக்கு ஏ.கே. துப்பாக்கிகளையும், அதற்குரிய ரவைகளையும்...

அடுத்த தேர்தலில்.... இலவசமாக வழங்குவர்களுக்கே... நமது ஒட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் வேலைக்ககாது ................ மீனவர்கள் தாங்களாக தற்பாதுகாப்பை மேற்கொள்வதே ஒரே வழியாகும் , ஏனெனில் கிந்திய அரசு தமிழர்களை ஒருபோதும் காக்கப்போவது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும், ஜெயலலிதாவும்..... கன்னியாகுமரியில்... அம்மணமாய் நின்றால்..பிரச்சினை தீரும் என்று..., பிரபல கிளி ஜோசியர் சொல்லியுள்ளார். அவர்கள் கழட்டிப் போடும்... உடுப்புக்களை ஏலம் எடுக்க, மக்கள் இணையத்தில் போட்டி, போடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியும், ஜெயலலிதாவும்..... கன்னியாகுமரியில்... அம்மணமாய் நின்றால்..பிரச்சினை தீரும் என்று..., பிரபல கிளி ஜோசியர் சொல்லியுள்ளார். அவர்கள் கழட்டிப் போடும்... உடுப்புக்களை ஏலம் எடுக்க, மக்கள் இணையத்தில் போட்டி, போடுகின்றார்கள்.

:lol:

இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள தமிழக மீனவர்கள் (ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் இல்லை) மீதான தாக்குதல்களைத் தடுக்க ஒரே வழி - அவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழையாமல் விடுவதுதான். குறிப்பிட்ட பகுதி தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதில் தமது கவனத்தை திருப்ப வேண்டும். இதற்கு தமிழக அரசு உதவலாம்.

இலங்கைக் கரையில் இருந்து 2 km தூரம் வரை வந்து மீன் பிடிக்க நினைப்பது அடாவடித்தனம். இது நிறுத்தப்பட வேண்டும்.

இந்த யதார்த்தத்தை வடமேற்கு கரையில் வாழாத ஈழத்தமிழர் விளங்கிக்கொள்ள வேண்டும். வடமேற்கு கரையில் வாழும் ஈழத் தமிழ் மீனவர்கள் குறித்த தமிழக மீனவர்களின் ஊடுருவலினால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள்.

இதுவும் ஒரு கசப்பான உண்மை தான்!

Edited by ஆராவமுதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

images115.jpgகடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 800 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்திய-இலங்கை கடல் எல்லையில் அவர்கள் மாலை நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 3 ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.

மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறி கருங்கற்களை சரமாரியாக மீனவர்கள் மீது வீசி எறிந்தனர்.

மீனவர்கள் படகில் படுத்து கல் வீச்சிலிருந்து தப்பினர். இதையடுத்து தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாகுல அந்தோனி, பிச்சை இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட 10 படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தப்பி இரவோடு-இரவாக மீனவர்கள் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.