Jump to content

மீன் குழம்பு


Recommended Posts

post-8572-0-52211300-1349209376.jpg

[size=5]மீன் குழம்பு - யாழ்ப்பாணம் முறை[/size]

[size=5]வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.

இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது

தேவையான பொருட்கள்[/size]

[size=5]மீன் - 1 கிலோ[/size]

[size=5]சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3[/size]

[size=5]தக்காளி: 4[/size]

[size=5]பூண்டு: 7 - 8 பற்கள்[/size]

[size=5]பச்சைமிளகாய்: 4 -5 [/size]

[size=5]புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு[/size]

[size=5]கடுகு: 1/4 தேக்கரண்டி[/size]

[size=5]வெந்தயம்: 1/2 தேக்கரண்டி[/size]

[size=5]சரக்கு மிளகாய் தூள்: 2 - 3 தேக்கரண்டி[/size]

[size=5]எண்ணெய்: 100 மில்லி[/size]

[size=5]உப்பு: தேவையான அளவு

செய்முறை

1. மீனை செதில் நீக்கி, சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி, கழுவி, கொஞ்ச உப்பு போட்டு வைக்கவும்.[/size]

[size=5]2. தக்காளியை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக் கொள்ளவும்.[/size]

[size=5]3. பச்சைமிளகாய், வெங்காயதை சுத்தம் செய்து நீளமாக வெட்டி இரண்டாக வெட்டவும் (சின்ன வெண்காயமாயின் இரண்டாக வெட்டத் தேவையில்லை)[/size]

[size=5]4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.[/size]

[size=5]5. அடுத்து நறுக்கிய வெங்காயம், வெட்டி வைத்த பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.[/size]

[size=5]6. பின்னர், வெண்காயம் பொன் நிறமாகியதும்; வெட்டிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்; தண்ணீர் கொஞ்சம் விட்டு அவிய விடவும். இப்போது தக்காளியை மசித்து பேஸ்ற்று போல் ஆக்கி விடவும்;[/size]

[size=5]7. இதனுடன் புளியை கரைத்து விட்டு அதற்குள் மீன்களைப் போட்டு; உப்பு, சரக்கு மிளகாய்த்தூள் என்பன வற்றை சேர்த்து மூடி நன்கு கொதிக்கவிடவும்.[/size]

[size=5]8. குழம்பு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் நடுநிலையாக இருக்கும்போது மீனைப்போடவும்.[/size]

[size=5]9. மீனைப்போட்டு மூடி அவிய விடவும் (இடைக்கிடை குழம்பை அகப்பையால் மீன் துண்டுகள் பிய்யாது கவனமாக கலக்கி விடவும்.[/size]

[size=5]19. மீன் அவிந்ததும் நெருப்பைக் குறைத்து கணக்கான குழம்பு வரும் வரை அடுப்பில் விடவும்.[/size]

[size=5]இப்போது மீன் குழம்பு றெடி.

குறிப்பு: தக்காழிக்குப் பதிலாக சிலர் தக்காளிப் பழ சோர்ஸ் பாவிக்கின்றனர்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fish-Kulambu-001.jpg

சரக்கு மிளகாய் தூள்: என்பது கடைகளில் கிடைக்கும் யாழ்ப்பாணமுறையில் தயாரிக்கப்பட்ட வறுத்த மிளக்காயத்தூள்தானே ..... ? :D:rolleyes:

இணைப்பிற்கு நன்றி அலைமகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் மணத்தால் எனக்கு சத்திவந்துவிடுகிறது...இதனால் சிறுவயதிலிருந்தே நெத்தலி போன்ற சின்னமீன்களும் சதை வழுவழுப்பில்லாத இறைச்சிபோல் hard ஆக இருக்கும் மணமில்லாத மீன்கள் மட்டுமே சாப்பிட முடிகிறது என்னால்..வழவழ என இருக்கும்,மற்றும் வெடுக்கு மணக்கும் மீன்களை நினைத்தாலே சத்தி வந்துவிடுகிறதே..என்ன செய்யலாம் இதை போக்க..? :(

Link to comment
Share on other sites

Fish-Kulambu-001.jpg

சரக்கு மிளகாய் தூள்: என்பது கடைகளில் கிடைக்கும் யாழ்ப்பாணமுறையில் தயாரிக்கப்பட்ட வறுத்த மிளக்காயத்தூள்தானே ..... ? :D:rolleyes:

இணைப்பிற்கு நன்றி அலைமகள் :)

எல்லாம் ஈ அடிச்சான் கொப்பி தானே அரசு. சரக்குத் தூள் என்றும் இருக்கு. யாழ்ப்பாணமுறையில் தயாரிக்கப்பட்ட மிளகாய் தூளையும் போட்டு 1ரீஸ்பூன் சரக்குத் தூளையும் போடுங்கோ.(1 ஆளுக்குச் சமைப்பதென்றால்)

மீன் மணத்தால் எனக்கு சத்திவந்துவிடுகிறது...இதனால் சிறுவயதிலிருந்தே நெத்தலி போன்ற சின்னமீன்களும் சதை வழுவழுப்பில்லாத இறைச்சிபோல் hard ஆக இருக்கும் மணமில்லாத மீன்கள் மட்டுமே சாப்பிட முடிகிறது என்னால்..வழவழ என இருக்கும்,மற்றும் வெடுக்கு மணக்கும் மீன்களை நினைத்தாலே சத்தி வந்துவிடுகிறதே..என்ன செய்யலாம் இதை போக்க..? :(

சத்திக்கு மருத்து இருக்குத் தானே அதைக் குடித்து விட்டு சாப்பிடுங்கோ சுபேஸ். சாத்தைக் கேட்டால் சொல்லுவார் என்ன மருந்து கோ குடும்பத்துக்கு வாங்க்கிக் கொடுத்தவர் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் மணத்தால் எனக்கு சத்திவந்துவிடுகிறது...இதனால் சிறுவயதிலிருந்தே நெத்தலி போன்ற சின்னமீன்களும் சதை வழுவழுப்பில்லாத இறைச்சிபோல் hard ஆக இருக்கும் மணமில்லாத மீன்கள் மட்டுமே சாப்பிட முடிகிறது என்னால்..வழவழ என இருக்கும்,மற்றும் வெடுக்கு மணக்கும் மீன்களை நினைத்தாலே சத்தி வந்துவிடுகிறதே..என்ன செய்யலாம் இதை போக்க..? :(

முதல்ல கலியாணத கட்டுங்க எல்லாம் சரிவரும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கலியாணத கட்டுங்க எல்லாம் சரிவரும் :lol:

ஒரு மீன்கறிக்காக ஆயுள்தண்டனையா..? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மீன்கறிக்காக ஆயுள்தண்டனையா..? :D

எங்களயெல்லாம் பாக்க எப்பிடித் தெரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இணைப்பிற்கு நன்றி[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fish-Kulambu-001.jpg

சரக்கு மிளகாய் தூள்: என்பது கடைகளில் கிடைக்கும் யாழ்ப்பாணமுறையில் தயாரிக்கப்பட்ட வறுத்த மிளக்காயத்தூள்தானே ..... ? :D:rolleyes:

இணைப்பிற்கு நன்றி அலைமகள் :)

சரக்குத்தூள் என்பது... பிள்ளை பெற்ற‌வர்களுக்கு, வயிற்றுப்புண் ஆற மிளகாய்த்தூள் இல்லாமல்... கொத்தமல்லி, மஞ்சள், சீரகம் சேர்த்து தயாரிப்பது.

வறுத்த‌ மிளகாய்த்தூள் என்பது, சாதாரண ஆட்கள் கண்களால் நீர் வர.... கறிக்கு பாவிப்பது.

Link to comment
Share on other sites

மீன் மணத்தால் எனக்கு சத்திவந்துவிடுகிறது...இதனால் சிறுவயதிலிருந்தே நெத்தலி போன்ற சின்னமீன்களும் சதை வழுவழுப்பில்லாத இறைச்சிபோல் hard ஆக இருக்கும் மணமில்லாத மீன்கள் மட்டுமே சாப்பிட முடிகிறது என்னால்..வழவழ என இருக்கும்,மற்றும் வெடுக்கு மணக்கும் மீன்களை நினைத்தாலே சத்தி வந்துவிடுகிறதே..என்ன செய்யலாம் இதை போக்க..? :(

மூக்கை மூடிக்கொண்டு சாப்பிட்டுப் பார்க்கவும். ருசி தெரிந்த பிறகு, மணம் தெரியாது. பிறகு மூக்கை விடலாம். :lol:

சமைக்க முன்பு, மீனை கழுவிய பின் மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தால் மணம் குறையும் என்று சொல்வார்கள். சமைக்கும் போது வாசனை மெழுகுதிரியை கொளுத்தி வைக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.