Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக அரசுக்கு எதிர்ப்பு: கருப்புச் சட்டை அணிந்த கருணாநிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்துவந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது"நாளைய தினம்தானே போராட்டம் அறிவித்திருந்தீர்கள்...இன்று ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி,"தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்று தான் முடிவெடுத்தோம்.

ஆனால் வேண்டுமென்றே காவல் துறையின் மூலமாக பல பகுதிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.

தடை விதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அதை அணிவகுத்துச் சென்று மீறுவதால் எதுவும் அசம்பாவிதங்கள், வன்முறைகள், விரும்பத்தகாத காரியங்கள் ஏற்பட்டு, பொது மக்களுக்கு சோதனை உருவாகக் கூடாது என்ற எண்ணத்தினால், நாளைக்கு அணிவகுப்பாக இருந்து இதை நடத்துவதை விட இன்று முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.அதன் அடையாளமாகத் தான் இன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன்” என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், " நாளை ஆயிரம் விளக்குத் தொகுதியிலே நான் துண்டறிக்கை வெளியிடவிருக்கிறேன். வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். கொளத்தூல் பொருளாளர் மு.க.ஸ்டாலின் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். நாளைய தினம் அவரவர்களும், அவரவர்களுக்குரிய எல்லைகளை வகுத்துக் கொண்டு இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள்.

அந்தப் பிரசுரங்களில் எந்தவிதமான சட்ட விரோதமான வார்த்தைகளும், அல்லது அநாகரிகமான வார்த்தைகளும் இடம் பெறாது. இடம் பெறக் கூடாது என்பது தலைமைக்கழகத்தின் ஆணை”என்றார்.

vikatan news

  • கருத்துக்கள உறவுகள்

kalaingar-karuppusattai-1.jpg

கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயம் வந்த கலைஞர்!

அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர் இன்று (04.10.2012) கருப்புச் சட்டை அணிந்து வந்தார்.

திமுக தலைவர் கலைஞர் இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்றையதினம் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். நாளையதினம் தான் போராட்டம் அறிவித்திருந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்று தான் முடிவெடுத்தோம். ஆனால் வேண்டுமென்றே காவல் துறையின் மூலமாக பல பகுதிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. தடை விதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அதை அணிவகுத்துச் சென்று மீறுவதால் எதுவும் அசம்பாவிதங்கள், வன்முறைகள், விரும்பத்தகாத காரியங்கள் ஏற்பட்டு, பொது மக்களுக்கு சோதனை உருவாகக் கூடாது என்ற எண்ணத்தினால், நாளைக்கு அணிவகுப்பாக இருந்து இதை நடத்துவதை விட இன்று முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அதன் அடையாளமாகத் தான் இன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன் என்றார்.

துண்டறிக்கை விநியோகிக்கும் போராட்டத்தில் நாளைக்கு எந்தெந்த இடங்களில், யார் யார் தலைமை வகிப்பார்கள் என்று முடிவாகியிருக்கிறதா? என்ற கேள்விக்கு, ஆயிரம் விளக்குத் தொகுதியிலே நான் துண்டறிக்கை வெளியிடவிருக்கிறேன். வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். கொளத்தூல் பொருளாளர் மு.க.ஸ்டாலின் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். நாளைய தினம் அவரவர்களும், அவரவர்களுக்குரிய எல்லைகளை வகுத்துக் கொண்டு இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள்.

அந்தப் பிரசுரங்களில் எந்தவிதமான சட்ட விரோதமான வார்த்தைகளும், அல்லது அநாகரிகமான வார்த்தைகளும் இடம் பெறாது. இடம் பெறக் கூடாது என்பது தலைமைக்கழகத்தின் ஆணை என்று தெரிவித்தார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மஞ்சள் துண்டுக்கு என்ன நிலைமை? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

05-karunaninn.jpg

கருணாநிதியின் உடை மாற்றத்துக்கு என்ன காரணம்?- கிளம்பும் வதந்திகள்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடை மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் வெளிக் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி ஆரம்ப காலத்தில் வெள்ளை உடையும், வெள்ளைத் துண்டும்தான் அணிந்திருந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மஞ்சள் துண்டுக்கு மாறினார். இதுகுறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் தனது வெள்ளைத் துண்டை கழற்றி விட்டு மஞ்சள் துண்டுக்கு கருணாநிதி மாறினார் என்று கூற ஆரம்பித்தனர். இதை கருணாநிதி மறுக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை.

இதுகுறித்து ஜோதிடர்கள் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கருணாநிதியின் ராசி ரிஷபம். அவரது நட்சத்திரம் மிருகசீரிஷம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற நிறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். இதை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் அது அவர்களுக்குப் பலன் தரும் என்றனர். எனவே ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் வெளிர் மஞ்சள் நிறத்திற்குக் கருணாநிதி மாறினார் என்கிறார்கள். இது கருணாநிதி விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை என்றும் அவரது மனைவியின் வேண்டுகோளின்படிதான் அவர் மஞ்சள் துண்டுக்கு மாறினார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையி்ல் தற்போது கருணாநிதி கருப்புக்கு மாறியுள்ளார். அதாவது கருப்புச் சட்டைக்கு மாறி விட்டார். நேற்று முதல் அவர் கருப்புச் சட்டையை கையில் எடுத்துள்ளார். இனி இதுதான் நிரந்தரம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கும் ஜோதிடர்கள் தரப்பில் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது தற்போது கருணாநிதியின் ராசியில் சனி சஞ்சாரம் செய்கிறார். மேலும் வக்கிரச் சனியும் நடந்து வருகிறது. எனவே கெடுதல் ஏதும் ஏற்படாமல், நிவர்த்தி செய்யும் வகையில், கருப்புச் சட்டையை கருணாநிதி கையில் எடுத்துக் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள் சிலர்.

உண்மை எது என்று தெரியவில்லை!

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

இனி இதுதான் நிரந்தரம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கும் ஜோதிடர்கள் தரப்பில் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது தற்போது கருணாநிதியின் ராசியில் சனி சஞ்சாரம் செய்கிறார். மேலும் வக்கிரச் சனியும் நடந்து வருகிறது. எனவே கெடுதல் ஏதும் ஏற்படாமல், நிவர்த்தி செய்யும் வகையில், கருப்புச் சட்டையை கருணாநிதி கையில் எடுத்துக் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள் சிலர்.

நன்றி தற்ஸ் தமிழ்.

குடும்பத்தினர், தொண்டர்கள் எல்லோருக்கும்... சனி பகவான் சஞ்சாராம் செய்கிறாரா?

kalaigar-666-3.jpg

kalaigar-666-1.jpg

kalaigar-666-2.jpg

kalaigar-666-4.jpg

kalaigar-666-5.jpg

kalaigar-666-6.jpg

kalaigar-666-7.jpg

kalaigar-666-8.jpg

kalaigar-666-9.jpg

kalaigar-666-91.jpg

படங்கள்: சுந்தர், ந‌க்கீர‌ன்.

D28701944.jpg

  • கருத்துக்கள உறவுகள்

kalaignar_karunanithy_tamilnational.jpg

மறுபடியும் 'கலர்' மாறிய கருணாநிதி... மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டு!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தனது சட்டை நிறத்தை மாற்றியுள்ளார். இனிமேல் எப்போதும் கருப்புச் சட்டைதான் போடுவேன் என்று அறிவித்திருந்த அவர் தற்போது மீண்டும் வெள்ளைச் சட்டை, மஞ்சள் துண்டுக்குப் போய் விட்டார்.

திருமண விழா உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது கருப்புச் சட்டையுடன் போனால் அபசகுணமாக இருக்கும் என்று குடும்பத்தார் உள்ளிட்டோர் எடுத்துக் கூறி வலியுறுத்தியதால்தான் கருணாநிதி சட்டையை மாற்றி விட்டார் என்று கூறப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.