Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?

Featured Replies

நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?. நாடுகடந்த தமிழிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டார்கள். வென்றார்கள். விலகினார்கள். நியமிக்கப்பட்டார்கள் விலகிறார்கள். ஏன் வாறார்கள். ஏன் போறார்கள் ஏன் விலகுகிறார்கள் யாருக்காவது இதன் விளக்கம் தெரியுமா?,

இந்தத் திரியைத் தொடங்கியதற்கு மிகவும் நன்றி. எல்லாம் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள் என்பதனால்தான் செம்பகம். தமிழ்நாட்டு அரசியலைவிட அது மோசமாக இயங்குவதனால்தான் அதற்குள்ளிருந்து தாக்குப் பிடிக்க முடியாமல் விலகுகிறார்கள்.

/நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?/

Started by Sembagan, Today, 02:03 PM /

அதைத்தவிர மற்ற அனைத்திலும் நல்ல முன்னேற்றம் செம்பகன்.......

  • தொடங்கியவர்

தமிழிச்சி, தமிழ்சூரியன் உங்கள் வரவுக்கு எனது நன்றிகள்.

தமிழிச்சி ... அதற்குள் இருந்து தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் ஏன் அதற்குள் போக வேண்டும்.

தமிழ்சூரியன் எழுதியதுபோல் அரசியலில் முன்னேற்றம் அடையாதவர்களாக அவர்கள் இருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு

2009 க்குப்பின் புலம் பெயர்ந்தவர்களின் நம்பிக்கை ஒளி.

பலவற்றை செய்திருக்கணும். செய்யணும்.

ஏன் முடியவில்லை.

ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கணும்.

தப்பு அவர்கள் மேல் என்று சொல்வது தப்பிக்க மட்டுமே உதவும்.

நம்மீது என்பதே சரி.

நாம் என்ன செய்தோம்?????

செய்கின்றோம்??????

செய்யப்போகின்றோம்??????????????????

என்னைப்பொறுத்தவரை

என்னால் முடிந்ததை செய்துள்ளேன்

செய்து வருகின்றேன்.

தொடர்ந்து செய்வேன்.

நல்லதுகளை வெளியிலும் ஏற்காதவற்றை நேரடியாக அவர்களிடமும் சொல்ல எனக்கு அவர்களுடனான தொடர்பு உள்ளது.

அதை எல்லோரும் செய்யணும்.

அதன் பின்பே இது போன்ற கேள்விகளுக்கு நாம் பதில்களை காணமுடியும்.

செய்யவும் மாட்டோம்

செய்பவர்களையும் இடஞ்சல் செய்வோம் என்ற மனநிலையும் நண்டுக்குணமும் மாறவேண்டும்.

எம்மால் முடிந்ததை ஒவ்வொருவரும் செய்யவேண்டும்.

இதுவே தமிழினம் அடுத்த கட்டத்துக்கு போக ஒரே ஒரு வழி.

நன்றி.

யார் குத்தியும் அரிசி ஆனால் சரி என்பது தான் இன்றைய எனது நிலை.

அதேநேரம் நானும் எல்லோருக்கும் ஒரு கை கொடுக்கணும் என்பதே கொள்கை.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

செய்யவும் மாட்டோம்

செய்பவர்களையும் இடஞ்சல் செய்வோம் என்ற மனநிலையும் நண்டுக்குணமும் மாறவேண்டும்.

எம்மால் முடிந்ததை ஒவ்வொருவரும் செய்யவேண்டும்.

இதுவே தமிழினம் அடுத்த கட்டத்துக்கு போக ஒரே ஒரு வழி.

நன்றி.விசுகு

செம்பகம், நாடுகடந்த தமிழீழ அரசென்பது கோட்பாடு மிகத் தேவையான கோட்பாடுதான். ஆனால், அதனை விளங்கி நடக்கும் நிலையில் அங்குள்ளவர்கள் இல்லை. அனைத்துலகம் மீண்டும் தலைமைத்துவம் என்ற பெயரில் அதற்குள் புகுந்து விட்டது. அங்கு விபரம் தெரிந்தவர்களுக்கோ அரசியல் தெரிந்தவர்களுக்கோ இடமில்லை. இருப்பவர்களையும் குழுமங்களாகச் சேர்ந்து வெளியேற்றும் நிகழ்ச்சி நிரல்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இதைவிட அதிக விபரமாக எழுத விரும்பவில்லை.

விசுகு, சுமப்பவனுக்குத்தான் அதன் அருமை தெரியும். பக்கத்தில் நடந்து போகின்றவனுக்கல்ல. வேண்டுமானால் நீங்களும் அதன் பாரத்தைச் சுமந்து கொள்ள முயற்சியுங்கள். வெளியிலிருந்து ஆலோசனை கூறாது கொஞ்சம் உள்ளேயும் சென்று பாருங்கள். அப்போது உங்களுக்கு விளங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வையத்திற்கே புதுமையாயனதொரு கோட்பாடு என்ற பெருமையுடன் உருவாக்கப்பட்டது தான் நாடு கடந்த தமிழீழ அரசு. நிச்சயமாக உண்மையும் அதுதான். ஆனால் நடந்ததுதான் பரிதாபகரமான குரங்கின் கை பூமாலை நிலை.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி நேற்று முன்தினம் மொன்றியலின் லசீன் பகுதிக்கான பிரதிநிதியான தெய்வேந்திரம் என்பவரும் தன்னுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் பிரதமர் உருத்திரகுமாரனின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்க விடயமாகும்.

இந்தப் பதவி விலகல்களுக்கான மேலதிக விளக்கங்களை யாழிற்கு அடிக்கடி வந்து போகும் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்போதைய துணைப் பிரதமர்களில் ஒருவரான சுபா சந்தரலிங்கத்திடம் கேட்டால் புழுகோ, புனைகதையோ குறைந்த பட்சம் ஒரு பொய்யாவது பதிலாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன் செம்பகம்.

சட்டப் புத்தகத்தில் பல துவாரங்கள் இருப்பது போல் இந்த நாடு கடந்த அரசிலும் பல துவாரங்கள் இருக்கின்றன அவற்றை பிரதமரும் அவரது சீடர்களும் முதலில் அடைக்க வேண்டும் அப்போது தான் தமிழினத்திற்கு விமோசனம் கிட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே என்ன மாதிரியோ தெரியவில்லை, ஆனால் இன்று இன்னுமொரு இணைப்பில் போட்டிருந்தார்கள், மகிந்த சொன்னதாக..தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு எனவும், அதனால் தான் அவர்கள், தெரிவுக்குழுவுக்கு வரவில்லை என்றும், என்னெனில் அப்படிவந்தால் வந்தவர்களை "துரோகிகள்" என்று கூறுவார்கள் என்று. அந்தளவில் இருக்கிறது எங்களது பட்டமளிப்பு விழாக்கள்...சிலவேளை..உந்த பட்டமளிப்புகள் இங்கே ஒபாமா, மிட் ரோமனி க்கும் கிடைக்குமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, சுமப்பவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

பக்கத்தில் நடந்து போகின்றவனுக்கல்ல. வேண்டுமானால் நீங்களும் அதன் பாரத்தைச் சுமந்து கொள்ள முயற்சியுங்கள். வெளியிலிருந்து ஆலோசனை கூறாது கொஞ்சம் உள்ளேயும் சென்று பாருங்கள். அப்போது உங்களுக்கு விளங்கும்.

கொஞ்சம் விபரமாக எழுதணும் சகோதரி

நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. எழுதுகின்றேன். முடிந்தால் தொடர்கின்றேன்.

என்னைப்பொறுத்தவரை என்று தான் நான் தொடர்ந்து இங்கு குறிப்பிட்டு எழுதுகின்றேன்.

அதனால் அது உங்களையோ மற்றவர்களையோ குத்திக்காட்டவேண்டும் என்ற அர்த்தம் தராது.

நாடுகடந்த அரசை நான் தொடர்ந்து ஆதரிப்பதற்கு காரணம்.

அது ஒரு வரலாற்றுத்தேவை. என்னதான் இருந்தாலும் தொடர்ந்து கூட்டமைப்பைத்தானே தாயக மக்கள் தெரிவு செய்கிறார்கள். கூட்டமைப்பிடம் குறையில்லையா? அதற்குள் பிரிவு குத்து வெட்டு இல்லையா?

நீங்கள் உள்ளே போங்கோ என்று கேட்டதற்கு.....

ஆரம்பத்தில் எனது தொகுதியில் என்னை தேர்தலில் நிற்கும்படிதான் கேட்டார்கள். மறுத்துவிட்டேன். ஆனால் பின்னால் நின்று முழுஉதவியும் செய்வேன் என்று உறுதியளித்தேன். அந்தவகையில் என்னால் முடிந்ததற்கும் மேலாக உதவியுள்ளேன்.

மறுத்ததற்கு காரணம்.

நாடுகடந்த அரசு வரலாற்றுத்தேவை என்று நான் கருதுவதன் அர்த்தம்.

எம்மால் அதாவது புலிகளால் வெல்லமுடியாமல் போனதற்கு காரணம் என உலகம் சொல்வது.

ஆயுதம் வன்முறை மற்றும் பயங்கரவாத பட்டியல்.

அந்த வரலாற்றுப்பாடம் சொல்வதன் படி நாடு கடந்த அரசு அமையவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

எனவே வன்முறையற்ற ஐனநாயக வழிகளிலும்

முடிந்தவரை புலிகள் என அறியப்பட்டவர்கள் வெளியில் நிற்கணும் என்பதே எனது நிலைப்பாடு.

அந்தவகையில்

இங்கு நானும் அறியப்பட்டவன். தொலைபேசியிலிருந்து வீடு வேலைவரை கண்காணிப்புக்குட்பட்டவன். இவர்களுடைய வலை அமைப்புக்களை மீறி நான் வேலை செய்வதென்பது நிரந்திரமில்லாதது. எந்த நேரமும் தடைப்படலாம். புலிகள் மீதான தடை இருக்கும்வரை இந்த முயற்சியால் எந்த பலனுமில்லை.

நாடு கடந்த அரசிடம் இருக்கும் குறைகளைக்களையணும். அதை நாம் ஒவ்வொருவரும் செய்யணும். எமக்குள் உலாவுபவர்கள் எமது உதவி இன்றி இயங்கமுடியாதவர்கள் என்பதால் துரோகம் என்ற அளவுக்கு எல்லாம் அவர்களால் போகமுடியாது என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

நாடு கடந்த அரசிடம் நிறைகள் இல்லையா? நன்மைகள் செய்யவில்லையா?

ஆயிரம் செய்துள்ளனர். அதை நாம் வரவேற்கணும். உற்சாகப்படுத்தணும். இன்னும் செய்ய உதவணும்.

கொஞ்சம் விபரமாக எழுதணும் சகோதரி

நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. எழுதுகின்றேன். முடிந்தால் தொடர்கின்றேன்.

என்னைப்பொறுத்தவரை என்று தான் நான் தொடர்ந்து இங்கு குறிப்பிட்டு எழுதுகின்றேன்.

அதனால் அது உங்களையோ மற்றவர்களையோ குத்திக்காட்டவேண்டும் என்ற அர்த்தம் தராது.

நாடுகடந்த அரசை நான் தொடர்ந்து ஆதரிப்பதற்கு காரணம்.

அது ஒரு வரலாற்றுத்தேவை. என்னதான் இருந்தாலும் தொடர்ந்து கூட்டமைப்பைத்தானே தாயக மக்கள் தெரிவு செய்கிறார்கள். கூட்டமைப்பிடம் குறையில்லையா? அதற்குள் பிரிவு குத்து வெட்டு இல்லையா?

நீங்கள் உள்ளே போங்கோ என்று கேட்டதற்கு.....

ஆரம்பத்தில் எனது தொகுதியில் என்னை தேர்தலில் நிற்கும்படிதான் கேட்டார்கள். மறுத்துவிட்டேன். ஆனால் பின்னால் நின்று முழுஉதவியும் செய்வேன் என்று உறுதியளித்தேன். அந்தவகையில் என்னால் முடிந்ததற்கும் மேலாக உதவியுள்ளேன்.

மறுத்ததற்கு காரணம்.

நாடுகடந்த அரசு வரலாற்றுத்தேவை என்று நான் கருதுவதன் அர்த்தம்.

எம்மால் அதாவது புலிகளால் வெல்லமுடியாமல் போனதற்கு காரணம் என உலகம் சொல்வது.

ஆயுதம் வன்முறை மற்றும் பயங்கரவாத பட்டியல்.

அந்த வரலாற்றுப்பாடம் சொல்வதன் படி நாடு கடந்த அரசு அமையவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

எனவே வன்முறையற்ற ஐனநாயக வழிகளிலும்

முடிந்தவரை புலிகள் என அறியப்பட்டவர்கள் வெளியில் நிற்கணும் என்பதே எனது நிலைப்பாடு.

அந்தவகையில்

இங்கு நானும் அறியப்பட்டவன். தொலைபேசியிலிருந்து வீடு வேலைவரை கண்காணிப்புக்குட்பட்டவன். இவர்களுடைய வலை அமைப்புக்களை மீறி நான் வேலை செய்வதென்பது நிரந்திரமில்லாதது. எந்த நேரமும் தடைப்படலாம். புலிகள் மீதான தடை இருக்கும்வரை இந்த முயற்சியால் எந்த பலனுமில்லை.

நாடு கடந்த அரசிடம் இருக்கும் குறைகளைக்களையணும். அதை நாம் ஒவ்வொருவரும் செய்யணும். எமக்குள் உலாவுபவர்கள் எமது உதவி இன்றி இயங்கமுடியாதவர்கள் என்பதால் துரோகம் என்ற அளவுக்கு எல்லாம் அவர்களால் போகமுடியாது என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை.

நாடு கடந்த அரசிடம் நிறைகள் இல்லையா? நன்மைகள் செய்யவில்லையா?

ஆயிரம் செய்துள்ளனர். அதை நாம் வரவேற்கணும். உற்சாகப்படுத்தணும். இன்னும் செய்ய உதவணும்.

அந்த ஆயிரத்தில் நூறையாவது குறிப்பிட முடியுமா விசுகு?

எதோ செய்கின்றார்கள் என்று பின்னால் போக உது திருவிழா இல்லை .

ஒரு அமைப்பு என்பது அதை நாடாத்துபவர்களில் தான் தங்கியுள்ளது .உள்ள கள்ளரேல்லாம் சேர்ந்து ஒரு நல்ல அமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

பத்து போத்தில் கள்ளு அடித்தவன் கம் என்று படுத்திருக்க அரை போத்தல் கள்ளு அடித்தவன் புசத்துகின்ற கதை போல் இருக்கு .

எதோ செய்கின்றார்கள் என்று பின்னால் போக உது திருவிழா இல்லை .

ஒரு அமைப்பு என்பது அதை நாடாத்துபவர்களில் தான் தங்கியுள்ளது .உள்ள கள்ளரேல்லாம் சேர்ந்து ஒரு நல்ல அமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

பத்து போத்தில் கள்ளு அடித்தவன் கம் என்று படுத்திருக்க அரை போத்தல் கள்ளு அடித்தவன் புசத்துகின்ற கதை போல் இருக்கு .

பத்துப்போத்தல் கள்ளையும் அடித்துவிட்டு பத்திற்கும் மேல்பட்ட பாசல் சோத்தையும் சாப்பிட்டுவிட்டு முடிவில் படுத்து நித்திரை தானே ..........................அதுக்கு மேல் எல்லாம், மௌனம் தானே அர்ஜுன் அண்ணா ...என்னத்த பேந்து சொல்ல :D

45301_296253700484053_1717424079_n.jpg
  • தொடங்கியவர்

இங்கு வருகை தந்த தமிழச்சி, தமிழ்சூரியன், விசுகு, பாகன், வல்கனோ, அர்ச்சுன், யாழ் அன்பு ஆகியோருக்கு நன்றிகள். வருகை தந்தவர்களின் பெரும்பாண்மையினரின் கருத்துக்கள் உறுதித் தன்மை வாய்ந்தவையாக இல்லை. விசுகு மட்டும் உறுதிபடத் தன் உண்மைத் தன்மையை முன்வைத்துள்ளார். இவரின் கூற்று இன்றைய சூழலில் ஏற்றுக் கொள்ள வேண்டியதொன்றாக அமைகிறது. தமிழருக்கு உள்ள ஒரே வழி நாடு கடந்த அரசைப் பலப்படுத்த வேண்டியதுதான்.

தமிழச்சி, அதற்குள் இருந்து தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் ஏன் அதற்குள் போக வேண்டுமேன்று என்னால் வைக்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலைக் கொடுக்கவில்லை. அனைத்துலகம் அதற்குள் புகுந்து விட்டார்கள் அதுதான் என்கிறார். அனைத்துலகம் என்று கூறுபவர்கள் வெளியேறி வேறொரு அணியை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசைக் கையகப்படுத்துப் போனதாகவும் அது கைகூடாத நிலையில் வெளியேறிதாகவும். தகவல். அதன்பின் அவர்களைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. மேலும் விசுகு நாடுகடந்த தமிழீழம் ஆயிரம் செய்துள்ளது. எனக் குறிப்பிட்தற்கு நூறையாவது குறிப்பிட முடியுமா? எனக் கேட்டுள்ளீர்கள். விசுகு எழுதியதுபோல் நாம் என்ன செய்தோம்? நாம் என்ன செய்கிறோம்? நாம் என்ன செய்யப் போகிறோம்? என்று எம்மை நாமே சுயவிமர்சனம் செய்து பார்த்தபின், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கேட்க வேண்டும். இங்கே தெளிவுபடுத்துவீர்களென எதிர்பார்க்கிறேன்.

பாகன், நாடு கடந்த அரசு தேவையென்கிறார். ஆனால் அது குரங்கின் கைப் பூமாலை ஆகிவட்டதாகக் குறிப்பிடுகிறார். நாடுகடந்த அரசுக்கு உவமானமாகப் பூமாலையைக் கருதினால் குரங்கோ, குரங்குகளோ எனயாரைக் கருதுகிறார்? பூமாலையை மனிதன்தான் கட்டுவான். யா

குரங்குகள் என்றோ, கள்ளர் என்றோ நாகரீகமில்லாத வார்த்தைப் பிரயோகங்களை தவிர்பது ஆரோக்கியமாக இருக்கும்.

45301_296253700484053_1717424079_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.