Jump to content

அருமையான... ஸ்பைசி மீன் மசாலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

09-fish-fry3-300.jpg

பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பொரிப்பதற்கு...

பெரிய மீன் - 2

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

வெங்காயம் - 3 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்

வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், வெந்தய பொடி, கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.

பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

இப்போது அருமையான மீன் மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

http://tamil.boldsky...ala-002149.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தேவையான பொருட்கள்:[/size]

[size=4]பொரிப்பதற்கு...[/size]

[size=4]பெரிய மீன் - 2

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]மசாலாவிற்கு...[/size]

[size=4]வெங்காயம் - 3 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கியது)

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்

வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்[/size]

தமிழரசு! உவ்வளவத்துக்கும் கிட்டத்தட்ட எவ்வளவு செலவாகும்? :D ........எவ்வளவு செலவெண்டாலும் ஆர்வத்துக்கு நன்றியப்பா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு இதைப் பார்க்க நல்லாத் தான் இருக்குது :) நீங்கள் லண்டனில் தான் இருக்கிறீங்கள் வீட்டில செய்யும் போது எனக்கும் கொண்டு வந்து தாங்கோ ஒரு வெட்டு வெட்டுறன் :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு! உவ்வளவத்துக்கும் கிட்டத்தட்ட எவ்வளவு செலவாகும்? :D ........எவ்வளவு செலவெண்டாலும் ஆர்வத்துக்கு நன்றியப்பா :)

செலவு அதிகமாகத்தான் இருக்கும், என்ன செய்ய சுவையாக சாப்பிடவேண்டும் என்றால் செலவை பார்க்கலாமா ? :rolleyes: எப்போதாவது ஒரு சில முறை தானே இந்தமாதிரி பெரிய பட்ஜெட்டில் சமைக்கப்போகின்றோம். :D

பகிர்விற்கு குமாரசாமி அண்ணை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு இதைப் பார்க்க நல்லாத் தான் இருக்குது :) நீங்கள் லண்டனில் தான் இருக்கிறீங்கள் வீட்டில செய்யும் போது எனக்கும் கொண்டு வந்து தாங்கோ ஒரு வெட்டு வெட்டுறன் :lol::D

ரதி உங்களிற்கு இல்லாத ஸ்பைசி மீன் மசாலாவா,

எங்கே இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கொண்டுவந்து தருகின்றேன். :D

பகிர்விற்கு நன்றி ரதி :)

Link to comment
Share on other sites

நீங்கள் இருக்கும் இடம் சொன்னால் நானும் வந்து ஒரு வெட்டு வெட்டுவேனாக்கும்.

இவ்வளவும் சமைக்க நேரம் இருக்குதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இருக்கும் இடம் சொன்னால் நானும் வந்து ஒரு வெட்டு வெட்டுவேனாக்கும்.

இவ்வளவும் சமைக்க நேரம் இருக்குதா?

என்ன செய்வது ........எனக்கு விதவிதமாக சமைத்து சாப்பிட பிடிக்கும் நேரத்தைப்பார்த்தால் சுவையாக சாப்பிடமுடியுமா ? :rolleyes:

நிச்சயமாக லண்டன் வரும்பொழுது சொல்லுங்கள் அழைத்து கவனிக்கின்றேன். :)

பகிர்விற்கு நன்றி சகோ

Link to comment
Share on other sites

ரதி உங்களிற்கு இல்லாத ஸ்பைசி மீன் மசாலாவா,

எங்கே இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கொண்டுவந்து தருகின்றேன். :D

பகிர்விற்கு நன்றி ரதி :)

மீன்குழம்பு பார்க்க அந்த மாதிரி இருக்கு... இணைப்பிற்கு நன்றி தமிழரசு!

அதெல்லாம் நடக்காது! :o நீங்கள் எங்க இருக்கிறீங்கள் என்று சொல்லுங்கோ, நான் வந்து சாப்பிடு ரதிக்கும் பார்சல் கட்டிக் கொண்டு போறான்.. :lol: :lol: :lol: சும்மா பகிடிக்கு... :D :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.