Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

இது ஜசீர் அரபாத்தும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் போல நிலமைகள் வெளிக்காட்டப்படுவது போல் இல்ல...அப்ப இதில தீய சக்திகள் தலையீடு என்பது நிச்சயம்.....உண்டு போலத்தான் தெரிகிறது...!

இந்தியா போன்ற நாடுகளின் நோக்கம் பிரபாகரனை விடுதலைப் புலிகளின் தனித் தலைவராகக் காட்டாக் கூடாது என்பதும்....அதன் அடிப்படையில் புலிகளுக்குள் பிளவைக் எழுப்பி நிற்கலாம்....சரி கருணா இப்படி கோரிக்கைகளை மட்டக்களப்பில் இருந்து கொண்டே விடாமல் ஏன் தற்போது வன்னிக்குச் சென்று நேரடியாகப் பேசலாமே...உண்மையில் மக்களின் மீதும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தால்..அதைவிடுத்து ஒருவரை ஒருவர் துரோகி என்பதன் அர்த்தம் என்ன....????!அதுவும் தன் சக தளபதிகளையே....???!

:twisted: :P :lol:

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

இதுதான் தாத்தா போட்ட இணைப்பில் உள்ள செய்தி...!

என் மாவட்ட மக்களுக்காக உரிமைகளை கேட்பது எந்த வகையில் துரோகமாகும்? கிழக்குப் பிராந்தியத் தளபதி கேணல் கருணா அம்மான்;

கிழக்கு மாகாண தளபதி கேணல் கருணா அம்மான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்ட்டுள்ளார் என்ற செய்தி வன் னித்தலைமையில் இருந்து வெளிவந் துள்ளதையடுத்து கேணல் கருணா அம்மான் கருத்துத் தெரிவிக்கையில்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதி ராக செயற்படுவதற்கு தீயசக்திகளி னால் து}ண்டப்பட்டுள்ளேன் என்பது முற்றுமுழுதாக பொய்யான குற்றச் சாட்டாகும் என்பதனை நான் உறுதி யாகக்கூறுகிறேன். வன்னித்தலை மையகம் 1000 போராளிகளை வன் னிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொ ண்டதற்கு மட்டக்களப்பு நிருவாகம் மறுதலித்தது. இதற்கு போராளிகளின் பெற்றோர் விரும்பாததே காரண மாகும். இதைவிட, மேலாக தமி ழீழ விடுதலைப்புலிகளின் நிருவா கக்கட்டமைப்பில் சுமார் 30ற்கு மேற்பட்ட தமிழீழ துறைசார் பொறு ப்புக்கள் அனைத்தும்; வட தழிழீழ த்தில் உள்ளவர்களுக்கே வழங்கப்ப ட்டுள்ளது. அப்பதவிகளுள் எதுவும் மட்-அம்பாறை மாவட்ட உறுப்பினர் களுக்கு வழங்கப்படாமை குறித்து இங்குள்ள புத்தி ஜீவிகளும், அறிவு சார் மக்களும் என்னிடம் சுட்டிக்காட் டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் எமது தேசியத் தலைவருக்கு தெரியப்டுத்தியதே என்மேல் தமிழீழ துரோகி என முத்திரை குத்தப்பட் டுள்தற்குக் காரணம்.

இதற்கு முன் பே கிழக்கு மக்கள் பல தடவைக ளில் தங்களிடத்தில் கேட்டுக் கொ ண்டதாக தற்போது இங்கிருந்து வன் னிக்கு தப்பியோடிய துரோகிக ளான ரமேஷ், கௌசல்யன் ஆகியோர் என்னிடம் தெரியப்படுத்தியவர்கள் இன்று என்னை துரோகி என்று கூறு கின்றனர். இன்றைய நாள் என்ன? எமது மாவ ட்டத்தில் வவுண தீவு இராணுவ முகாம் தாக்குதல் வெற்றி ச்சமரில் வீரகா வியமான மாவிர ர்களின் நினைவு தினம். இன்றைய நாளில் தப்பியோடிய துரோகிகள் வன்னியில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியதுரோகிகள் என்னை துரோகி எனபட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாய மானதாகும். இதனை தலைமைப் பீடமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது எனக்கு வியப்பையும், வேதனையையும் தரு கின்றது.

தமிழீழ மக்களுடன் வாழ் ந்து மக்களுக்காக மடி வதையே விரும்புகிறேன். ஒட்டு மொத்த தமி ழீழப்பிரதேசத்தில் நானும் மட்- அம் பாறைப் போராளிகளும் சென்று சமர் புரிந்ததை வட-தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்ப தில் எனக்கு திடமான நம்பிக்கை இருக்கின்றது. என்பதை நான் மீண் டும் தெளிவுபடுத்தவிரும்புகிறேன்.

தமது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வன்னித் தலைமைகளுக்கு முன் வைப்பது நியாயமானது. ஐரோப்பிய வானொலி ஒன்றின் ஆய்விலிருந்து.

கிழக்குப்பிராந்தியத் தளபதி கேணல் கருணாவிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு துரோகி என்று பட்ட மளித்துள்ளமை அந்த அமைப்பைப் பொறுத்தவரை புதிய விடைய மற்றது என்று அரசியல் விமர்சகர்க ள் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய வானொலி ஒன்று தனது செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கருணா அம்மான் அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருப்பதனாலே யே கேணல் கருணாவை விலக்குவ தாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அது குறித்து எதுவும் குறிப்பிடவி ல்லை என்றும் விமர்சகர்கள் தெரி விக்கின்றார்கள். அத்துடன் கேணல் கருணா அவர்கள் மீது குற்றம் சாட்டும் தெளிவான காரணம் அந்த அறிக்கையில் காணப்பட வில்லை என்றும் கருத்துத் தெரிவிக் கின்றார்கள். இனிமேல் தான் அவர் மேல் குற்றங்களை ஜோடிப்பதற்கு காரணங்களை விடுதலைப் புலிகள் தேடியுள்ளனர் என்றும் விமர்சகர் கள் கருத்து வெளியிடுகின் றார்கள்.

ஒரு போராளி விடுலைப்பு லிகள் அமைப்பிற்கும் தேசிய விடு தலைப்போராட்த்திற்கும் எவ்வ ளவோ பங்களிப்பைச் செய்திரு க்கின்ற போதிலும் அவர்கள் வேலு ப்பிள்ளை பிரபாகரன் உடைய தொட ர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எத னையும் சுட்டிக்காட்ட முனைந்தால் அவர் மீது துரோகி என்று குற்றம் சுமத்துவது விடுதலைப்புலிகளின் போக்காகும் அந்த வகையிலேயே தனது கிழக்கு மாகாண மக்கள் துன்பம் அடைந்துள்ளது குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத் துக்கு அறிவித்தது குறித்தும் குற்ற ம்சாட்டி கேணல் கருணா மீது துரோ கி என்ற குற்றச்சாட்டு அந்த அமை ப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் அமைப்பு பிரிக்கப்பட்டுள்ள போரா ளிகளின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் மோதல் ஏற்படும் என ஆய் வாளர்கள் கணித்துள்ளார்கள்.

குறிப்பாக கேணல் கருணா அம்மானின் தலைமையில் 6000 போ ராளிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களி;ல் முக்கிய சில து ரோகிகள் பிரிந்து வடபுலத்துக்கு தங்கள் குடும்பங்களுடன் தப்பியோ டிய போதும் தென் தமிழீழப் போரா ளிகள் கேணல் கருணா அம்மான் தலைமையில் உறுதியாகவே உள் ளனர். எப்படியாகிலும் தனது மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு ள்ளதற்காக கேணல் கருணா அம் மான் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமது பிராந்தியம் வடபகு தி மக்களால் புறக்கணிக்கப்பட்ட போ திலும் போர்க்காலங்களில் ஒன்றாகச் சேர்ந்து நின்ற கிழக்கு மாகாணப் போராளிகள் அமைதி வேளையில் தமது மாகாணத்தேவைகளைக் குறி த்து கோரிக்கைகளை முன்வைத்துள் ளதில் நியாயம் உள்ளதாகவும் தெரியப்படுகின்றது.

மட்டக்களப்பு பகுதி மக்க ள் இத்துரோகிகள் மீது விசனம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிட த்தக்கது.

வீரம் விளை நிலம் வீணர்களுக்கு அடிமையாகுமா? விழித்தெழுங்கள்.

எமது விடுதலைப் போரா ட்ட வரலாற்றில் தேசியத் தலைவ ரையும், வட தமிழீழ மக்களையும் எதிரியிடமிருந்து விடு விப்பதற்கு விலை மதிக்க முடியாத 2250 ற்கும் அதிகமான எமது உடன் பிறப்புக்க ளின் உயிர்களை நாம் தியாகம் செய்திரு க்கிறோம். தேசிய தலைவ ருக்க ஏற்பட்ட ஒவ்வொரு ஆபத்து நிகழ்வுகளின் போதும் தோளோடு தோள் நின்று போராளிகளை வழி நடாத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றிய சாத னைப் பெருமை எமது தளபதி கேணல் கருணா அம்மானையே சாரும்.

இவ்வாறு வீரம் விளை நிலம் வெற்றி பெரும் தளமாக மாறி சாதனைகள் படைத் தால் பெற்றுக் கொண்ட பேறுதான் என்ன? ஆம்! அது பசியும் பட்டினியும் வறுமைவா ழ்வு ஓலைக்குடிசைச் சீவியமும் தான். அது மட்டுமல்ல எமது மட்டு அம்பாறை மாவட்டம் இன்று ஏற்க முடியாத ||துலேராகி|| என்றும் பட்டத்தினையும் பெற்றுள்ளது.

துரோகிகள் பட்டம் !

சமாதானச் சு10ழல் ஏற்பட் டுள்ள இந்த இரண்டு வருடகாலத் தில் வடகிழக்கு அபிவிருத்திககு என வெளிநாடுகளில் வாழும் எமது மக்களிடமிருந்து சேர்க்கப்படும் பணம் வடக்கிக்கு மட்டும் பயன் படுவதும்,, மட்டு அம்பாறை மாவட் டத்தில் டத்தலைமைக்குத் தெரியாமல் வன்னியில் உள்ள தலை மையின் உத்தரவுக்கிணங்க புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக ளும், கடத்தல் மற்றும் கொள்ளைகளும் எமது தளபதி கேணல் அம்மானை அவப் பெருயருக்கு இட்டுச்செல்லும். தமிழழீழத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30க்கு; மேற்பட்ட துறை களும், அவற்றிக்கு தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் வட தமிழீழத்தைச் சேர்ந்தவர்களா வர். இருப்பதும் தென் தமிழீழம் என்னும் மட்டு அம்பாறை மாவட்டத்தை ஓரம் கட்டும்; நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் எமது மாவட்ட ங்களின் மாவீரர் போராகளின் குடும்ப நிலை யினைக் கருத்தில் கொண்டு அக்குடும்பங் களில் வாக்கைத்தரத்தினை மேம்படு த்தவும் , மாவட்டத்தில் அபிவிருத்தி னை மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் ஒரு துறைச்சார்ந்த பொறுப்புக்களை அல்து பதில் பொ றுப்பக்க ளையாவது எமது மாவட்டப் போராளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமென தளபதி கேணல் கருணா அம்மான் தமிழீழத் தலைவரிடம் கேட்டிருந்தார்.

ஆனால் இன்று தீர ஆர விசாரித்த றியாமல் விடதமிழீழத் தலைமை கேணல் கருணா அம்மா னை தமிழீழ விடுதலைப் இயக்கத்தி லிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியது மாவட்டத்தினையும், அதன் மக்களின் எதிர்பார்ப்பினையும்; ஆரா யாமல் ஓதுக்கிருப் பது அவ்வளவு நல்லதல்ல அப்படி அது நடந் தால் எமது ஒற்றுமை சீரமிந்து இலக்கின்றி விடுதலைப் போர் நிகழ்த்தப்பட்டால் ஒன்றினை ந்தது செயல்பாடுன்றி இலக்கின்றிச் செல்லும் எனவே! நீதியானதும், நியாயமானதுமான கோரிக்கையினை முன்வைத்து எமது தமிழீழம் பிளவு படாமல் ஒரே தலை மையின் கீழ் இரு நிருவாகக்கட்டமைப்பின் ஒழுங்கின் படி செயற்படவே நாம் விரும்புகிறோம் தற்போது தலைமைப்பீடம் அறிவித்துள்ள இந்த முடிவி னை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

~~தமிழீழ வீரம் விளைநில மக்கள்||

யார் துரோகி

மக்களின் உரிமையைக் கேட்டவர் துரோகியா? அதைக் கொடுக்க மறுத்தவர் துரோகியா?

சண்டை பிடிக்கும் போது வீரர்! உரிமையைத்தட்டிக் கேட்கும்போது துரோகியா?

இத்தனை காலமும் தமிழீழம் எங்கும் படை நகர்த்தி சண்டை பிடித்தவர் துரோகியா? இப்போது இதை மறுதலித்தவர் துரோகியா?

மட்டு - அம்பாறை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்டவர் துரோகியா? அதை ஏற்க மறுத்தவர் துரோகியா?

மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவபர் துரோகியா? அதைப் பொருள்படுத்தாதவர் துரோகியா?

மக்களை மதிப்பவர் துரோகியா? மக்களை மிதிப்பவர் துரோகியா?

வட தமிழீழத்தில் எமது மட்டு -அம்பாறை போராளிகள் செய்த தியாகங்களை வரலாற்றிலே எழுத முற்பட்டவர் துரோகியா? அதை வரலாற்றில் எழுத மறுத்தவர் துரோகியா?

வட தமிழீழப் போர்முனையில் தென்தமிழீழப் போராளிகள் 2248 பேர் வீரச்சாவைத் தழுவியதைச் சுட்டிக்காட்டியவர் துரோகியா? அதை மறந்தவர் துரோகியா?

இவைகள் அனைத்தையும் நாங்கள் புரிந்து விட்டோம்.

இனிமேலும் இத்தவறுக்கு இடமளிக்க மாட்டோம்.

பொங்கி எழுவோம் எதனையும் எதிர்கொள்வோம்.

இந்த மண்ணின் சொந்தக்காரன் இந்த மண்ணிலேயே இருப்போம்.

கிழக்கு மண்ணில் நாம் கிழர்ந்தெழுவோம்.

மட்டு-அம்பாறை வாழ் தமிழ் மக்கள்

அப்போ மட்டக்களப்பில் உயிர்நீத்த மற்றைய பகுதி தமிழீழப் போராளிகள் கருணாவின் பார்வையில் யார்....??????!

அதுவும் மக்கள் ஒன்றுபட்டு தம் சக்தியைக் காட்ட வேண்டிய தேர்தல் சமயத்தில் ஏன் மக்களை பிளவுபடுத்தி நிற்க வேண்டும்....தேர்தலின் முன்னரோ...அல்லது பின்னரோ ஏன் இதைக் கோரவில்லை....??! உண்மையில் இது மக்களின் நலன் கருந்தி எழுந்த கோரிக்கையா.....?????!

:twisted: :roll:

கரிகாலனும் மற்றும் பல தளபதிகளும் இன்று ஞாயிறு காலை வன்னியை வந்தடைந்துள்ளனர்...இவர்கள் கிழக்கு மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட நிலைமைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கும் விளக்கி உள்ளனர்...!

இது குறித்து கரிகாலன் கூறும் போது எல்லா மக்களும் போராளிகளுன் புலிகளின் தேசிய தலைமையில் நம்பிக்கையோடு இருப்பதாகவும் பிளவுத் தளபதி சில வெளியாரின் தூண்டிதலின் பெயரில் தனது சுய விருப்பப்படி செயற்படுவதாகவும் இப்படியே அவர் செயற்பட்டால் பொல் பொட்டின் கதிக்குத்தான் அவர் தள்ளப்படுவார் என்றும் கூறி இருக்கிறார்...இச் செய்து தமிழ்நெற்றில் உள்ளது...!

Karikalan condemns Karuna as Pol Pot

[TamilNet, March 07, 2004 06:45 GMT]

"Karuna will be seen as a Pol Pot if he continues to act irresponsibly towards our people", said Mr. Sivagnanam Karikalan, one of the senior leaders in the East to arrive in Kilinochchi Sunday morning for discussions with his leadership about the situation in Batticaloa. Mr. Karikalan is a close confidante of Mr. Karuna, the eastern LTTE leader who was sacked from the Liberation Tigers Saturday on charges of treason.

Several heads of divisions and commanders of the LTTE troops in the Batticaloa-Ampara district also arrived in Kilinochchi Sunday for consultations with the leader of the Liberation Tigers.

Mr. Karikalan met the press briefly at the LTTE media coordinating office sunday noon. He charged that there were outside elements behind Mr. Karuna's decision to act traitorously.

"Karuna's decision to betray us was a decision that he took on his own without consulting any of his colleagues and senior staff. He is trying to compell commanders and heads of divisions in the Batticaloa-Ampara district to accept his decision. He won't succeed.

"Today none of the people in the Batticaloa-Amapara district are prepared to reject our national leader. I want to reiterate this point. Even at the recent Pongu Thamil festival in Batticaloa, thousands of our people carried photos of our national leader with the slogan 'Tamils are tigers. Tigers are Tamils', expressing their commitment to the Tamil national cause and to our national leadership" said Mr. Karikalan.

Tamilnet.

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அப்ப உது றாயதந்திரம் இல்லையோ..?சிவாஜினிச்சேது..?

:?: :!: :arrow:

இது றாயதந்திரம் அப்பா பொறுத்திருந்து பாருங்கோ எல்லாம் நன்றாகவே நடக்குது

அர்ரா அர்ரா இது இணையகாலம் ஆதலால் எல்லோருக்கும் சுதந்திரம் ஆனால் நாம எந்த செய்தியை உண்மை என நம்புவது நல்லாக சனத்த குளப்புறேங்க பாப்பம் என்னம் எத்தனை நாளைக்கு......

சொல்லுங்க சொல்லுங்க என்னம் சனமும் தேடி தேடி வாசிக்குங்கள்...

:x :evil: :idea:

அங்கை ஓப்பிணா சண்டைபிடிக்கிறாங்கள்.. பேப்பரிலை விளாசுறாங்கள்.. இஞ்சை செய்தியளிலைகூட மிண்டி விழுங்கிறாங்கள்.

பழைய ஆய்வுகளெல்லாம் திரும்பவும் அசைபோடுறாங்கள்.. உதுபற்றி மூச்சும் விடுறாங்களில்லை.

உதுகளைப் பார்க்கேக்கை தந்திரமோ இராஜதந்திரமோ விஷயம் வலு சீரியஸ்..

இது றாயதந்திரம் அப்பா பொறுத்திருந்து பாருங்கோ எல்லாம் நன்றாகவே நடக்குது

Renegade Tamil Tiger fears attack

The Tamil Tigers accuse Colonel Karuna (right) of disloyalty

A renegade rebel commander has accused the Tamil Tigers'leadership in Sri Lanka of planning to attack him.

"These moves can lead to internal killing," Colonel Karuna told the Associated Press news agency.

His warning came a day after Tamil Tiger leaders in the north announced that they had expelled the eastern commander because of his betrayal.

Western diplomats have warned that the unprecedented split could challenge the faltering peace process.

"It's a very tricky situation that could seriously affect the cease-fire and the peace process," said a deputy chief of a European team of truce monitors.

But the head of the Tigers' political wing, SP Thamilselvan, said they remained committed to peace and would ensure negotiations were not disrupted by the actions of a single individual.

'Dangerous situation'

Colonel Karuna - whose real name is Vinayagamoorthi Muralitharan - said he had received reports that death squads had been sent to target him after he was dismissed.

"We have reliable information that killer squads sanctioned by the northern leadership have been sent with the intention of attacking me and my forces," he told the Associated Press.

The Sri Lankan army is on alert for fighting between the rival factions.

We are facing a very dangerous situation

Sri Lankan army commander

"We are facing a very dangerous situation," said an army commander in the east of the island.

"They could target us to drag us into the crisis. We are keen to avoid getting involved and have alerted troops."

Military officials said students from the eastern University of Batticaloa had left their hostels over the weekend, concerned about a possible outbreak of factional fighting.

The university has a large number of students from Jaffna in the north, who reportedly fear reprisals.

Internal crisis

Reports have suggested that Colonel Karuna is unhappy that the bulk of the rebel fighters come from eastern Sri Lanka, and yet all the top leadership comes from the north.

Thamilselvan (right) said the Tigers remained committed to peace

Tamil Tiger leaders told reporters on Saturday that Colonel Karuna had been dismissed because of his betrayal and stressed that he was a lone individual without supporters.

The rebel commander dubbed the move "ridiculous" because he said he had already left the movement.

One of his officials quoted him as saying that he would not relinquish control of his 6,000 troops.

A top defence ministry official said on Friday that the government could not agree to Colonel Karuna's request for a separate defence pact.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/3540229.stm

எல்லாம் நன்மைக்கே

நற்பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும்

கெட்ட பெயர் எடுக்க ஓரு விநாடி போதும்

ம் ம் எல்லாம் சரிதான்

கருணா அம்மானின் துணைவியாரும் போராளிதான் அவருடைய பக்கத்திலும் போராளிகள் இருக்கின்றார்கள். அதைப்பற்றி செய்திகள் வெளிவரவில்லையே

மனைவியார் மலேசியாவில் பிள்ளைகளும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே

நற்பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும்

கெட்ட பெயர் எடுக்க ஓரு விநாடி போதும்

ம் ம் எல்லாம் சரிதான்

கருணா அம்மானின் துணைவியாரும் போராளிதான் அவருடைய பக்கத்திலும் போராளிகள் இருக்கின்றார்கள். அதைப்பற்றி செய்திகள் வெளிவரவில்லையே

கருணாவின் துரோகத்தனத்தை உலகத்தமிழருக்கு அறிவிப்போம்.

அண்மைய நாட்களாக கருணா விவகாரம் பற்றிய பேச்சே ஊடகங்களின் கவனத்தை இழுத்து வைத்திருக்கிறது.

தமிழீழத்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அன்னிய சக்திகளின் தலையீடுகள் விடுதலைப்போராட்டத்தை நசுக்க கருணா போன்றோரின் சுயநலங்கள் உதவியிருக்கின்றன. இதுவே அண்மைய செய்தியாக வந்த கருணா விடயமும்.

காலத்துக்குக்காலம் இந்தச்சுயநலக்காரர்களின் சதி நடந்து கொண்டே வருகிறது. 1980இல் உமாமகேஸ்வரன் சுந்தரம் என்பவரைப்பயன்படுத்தி ஆரம்பகாலத்தில் இயங்கிய சிலதொகையிலிருந்து 13பேரை தனியாக்கிப்பிரித்து புளொட் அமைப்பை உருவாக்கினார்.

அதேபோல் ராகவன் , நிர்மலா நித்தியானந்தன் ஆகியோரின் வெளியேற்றம். அடுத்தகட்டமாக 1993இல் மாத்தையா எனப்பட்ட மகேந்திரராசா அயல்நாட்டு சக்தியின் வலையில் விழுந்து இதேபோலொரு சதியில் இறங்கி அது முளையிலே கிள்ளப்பட்டு பத்து வருடம் கழித்து இன்னொரு வலையில் கருணா என்ற முரளீதரன் சிக்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

யாரிந்தக் கருணா ? 5வருடங்களாக தாயகத்தமிழரிலிருந்து புலம்பெயர் தமிழர்களாலெல்லாம் பேசப்பட்ட தளபதி கருணா அவர்களை ஒரு உன்னதமான போராளியாக தளபதியாகவே மக்கள் நம்பியிருந்தனர். நேற்றுவரையும் இந்த நம்பிக்கை எள்ளளவும் குறையாது இருந்தமையை மறுக்க முடியவில்லை. இதுகாலவரையும் ஒரு தளபதியாக மதிக்கப்பட்டவர் இதுவரை செய்த தியாகம் என்னவென்று நோக்கிப்பார்த்தால் 25வருடகாலமாக தமிழின விடுதலையை முன்னெடுத்து இதுகாலவரையும் முன்னால் வந்து நின்ற தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கட்டிவளர்த்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் நின்று அவரது நேரடி நெறிப்படுத்தலின்படியும் போராளிகளை வழிநடாத்தினார் அவ்வளவே. மற்றப்படி உயிர்க்கொடை புரிந்தது , குருதி சிந்தியது எல்லாமே போராளிகள்தான்.

கருணா அந்நியசக்திகளின் சதிவலையில் தான் சிக்கியிருப்பதை , தமிழினத்துக்கே மாபெரும் துரோகத்தைப் புரிந்துள்ளதை மறைப்பதற்காக தன்னை தென்தமிழீழ மக்களைக்காக்கும் சக்தியாகவும் கருதிக்கொண்டு மட்டக்களப்பு மக்களே தன்பக்கம் என்ற மாயையையும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் தென்தமிழீழ மக்களைப்பொறுத்தவரை அந்த மக்களுக்கு நீதியை அல்ல கொடும் அநீதியே இழைத்துள்ளார். அத்து மீறிய வரியறவீட்டிலிருந்து அண்மையில் மட்டக்களப்புப்பகுதியில் இடம்பெற்ற மூன்றாந்தரப்பில் செய்த கொலைகளைச் செய்ததற்கும் காரணமானவர் இந்தக் கருணா என்ற முரளீதரனே.

மக்களுக்காக தான் உழைக்கப்போவதாகவும் தமது பிரதேசத்தவர்கள் சண்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும

மக்களுக்காக தான் உழைக்கப்போவதாகவும் தமது பிரதேசத்தவர்கள் சண்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும

மன்னிக்கவும் தாத்தா நாங்கள் யாரையும் காட்டிக்குடுத்திட்டோ இல்லை தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்திட்டோ இங்க வரவில்லை இல்லை மனைவியை அனுப்பவில்லை!!!

உயிரோடு வாழும் உரிமை எல்லாருக்கும் உண்டு ஆணால் துரோகிக்கு இல்லை அது நான் என்டாலும் சரி நீங்கள் எண்டாலும் சரி கருணா அம்மான் என்டாலும் சரி!!!!!!!!

தாத்தா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கனும்!!

எவ்வளவோ உயிர்தியாகங்களால் நாம் இவ்வளவோ வளர்ந்து உள்ளோம் !!!!

அது சரி இத போய் உங்களுக்கு ம் தேவையா????

:P :lol::lol:

அந்தப்பிள்ளை மலேசியாவிலை இருக்குதோ இல்லையோ எனக்கு சரியாத் தெரியேல்லை.. சரி இருக்குதெண்டே ஒரு கதைக்கு வச்சுக்கொண்டு கேக்கிறன்..

நீங்கள் ஜேர்மனிக்கு ஏன் வந்தனியள்..?

இல்லை ஒரு கதைக்குத்தான் கேக்கிறன்.. அந்தப்பிள்ளை மலேசியாவுக்குப் பிள்ளைகளோடை போயிருந்தால் என்ன..?

உங்களுக்கு மட்டும்தான் உயிரோடை இருக்கிறதுக்கு உருத்து..

அந்தப் பிள்ளைக்கு அப்பிடி ஒண்டும் இருக்கக்கூடாது எண்டு சொல்லுறமாதிரியல்லவோ இருக்கு..

_________________

Truth 'll prevail

என்ன என்ன கொஞ்ச நாளுக்கு முன்னம் எதிரி இப்ப உங்கள் பட்டியலில வந்ததும் அந்தபிள்ளை

உலகில எந்தமுலையில ஓளிந்தாலும் துரோகி துரோகி தான்!!!!!!!!!!!!!!!

தலைவர் தனது காட்சட்டை பொக்கட்டுக்குள் இருந்த ஓட்டையை கன்டறிய மறந்திட்டாரோ?

  • தொடங்கியவர்

கருணா பிரிந்து போகும் முடிவு தன்னிச்சையாக அவரால் மாத்திரமே எடுக்கப்பட்டதாகும் நேற்று வன்னி திரும்பிய புலிகளின் சிரேஷ்ட தலைவர் கரிகாலன் கூறுகிறார்

தமிழ் மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாவாக்க முயலும் வகையில் கருணா நடந்து கொள்வாரேயானால் அவரை மற்றுமொரு ""பொல்பொட்'' ஆகவே தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கரிகாலன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்னி விரைந்த கரிகாலன், கிளிநொச்சியில் வைத்து ஊடகவியலாளர் மத்தியில் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த புலிகளின் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், தளபதிகள் ஆகியோர் நேற்று கிளிநொச்சி வந்திருந்தனர்.

அங்கு நேற்று நண்பகல் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடிய கரிகாலன் மேலும் தெரிவித்ததாவது:

கருணாவினுடைய பிரிந்து போகும் முடிவானது தன்னிச்சையாக அவரால் மட்டும் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பொறுப்பாளர்களையோ தளபதிகளையோ கலந்தாலோசிக்காமல் தானாக எடுத்த முடிவிற்கு போராளிகளையும் பிரதேச பொறுப்பாளர்களையும் செயற்பட வைக்க முனைகின்றார். இது நிச்சயமாக வெற்றியடையப் போவதில்லை.

அதேவேளை, அவர் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு பின்புலம் உள்ளதாக நாங்கள் ஊகிக்கின்றோம். அது பற்றி நீங்கள் காலப் போக்கில் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இன்று தமிழ்த் தேசிய தலைமையை வெறுத்து மட்டக்களப்பு, அம்பாறை மக்கள் செயற்படத் தயாராக இல்லை என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறோம்.

ஏனெனில் கடந்த 25 வருடகால போராட்டத்தில் தேசியத்தலைமையையும் அரசியல் தலைமையையும் வலியுறுத்தியே போராடி வந்திருக்கின்றோம். அண்மையில் நடைபெற்ற பொங்குதமிழில் கூட புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என்று தேசியத் தலைவரின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களின் மனதிலே இருக்கின்ற நினைவையும் தலைவரின் மீதான பற்றையும் எவராலும் நீக்கவோ, அழிக்கவோ முடியாது.

ஆகவே கருணா தனி மனித பிரச்சினைகளுக்காக மக்களை பலிக்கடாவாக்கி ஆயிரக்கணக்கான போராளிகளையும் பலிக்கடாக்களாக ஆக்குவாராக இருந்தால் அவர் மக்கள் மனதில் ஒரு பொல்பொட்டாகவே பார்க்கப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த பிரச்சினைக்கு விரைவிலே தீர்வு கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு எல்லா மக்களும் செயற்படுகின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்பதை நம்பிக்கையோடு தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.கரிகாலன், புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட கருணாவினால் மட்டுஅம்பாறை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thanx: வீரகேசரி

என்ன செய்றது நம்பிகை அளவுக்கு மீறி வைச்சது அவர் தப்பு தான் !!!!

ஆணால் இந்த தப்பு இது தான் கடைசியாக இருக்கும் என்று நினை க்கிறேன் (என் அறிவுக்கு எட்டியவரை!!) :P :lol::lol:

  • தொடங்கியவர்

புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராய பேதம் மன உளைச்சலைத் தருகிறதுஆனந்தசங்கரி கூறுகிறார்

விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்டுள்ள அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு, பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது என தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

விடுதலைப்புலிகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது என்னைப் பொறுத்தளவில் தப்பாகத் தோன்றினாலும் பாதிப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் என்ற வகையில் என் கருத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட அபிப்பிராயபேதம் தமிழ் மக்களுக்கு பெருமளவில் மன உளைச்சலைத் தருகின்றது. இருபது ஆண்டுகளுக்குமேல் பல்வேறு போராட்டங்கள் மூலமும் பெரும் பங்களிப்போடும் பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதித்தீர்வு ஏற்படக்கூடிய நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை படைத்தவர்களும் விடுதலைப் புலிகள் தான் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் தியாகத்தோடு கூடிய தமிழ் மக்களின் பல்வேறு பேரிழப்புக்களை ஏற்படுத்திய இப்போராட்டம் எம் தமிழ் மக்களின் விடிவுகாலம் வரக்கூடிய அறிகுறிகள் தென்படும் இவ்வேளையில் அபிப்பிராய பேதங்களை களைந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு ஓர் முடிவு கட்டலாம் என்பதே பலரின் அபிப்பிராயமாகும்.

இவ் அபிப்பிராய பேதம் தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படும் வடக்குகிழக்கு இணைப்பின் அடித்தளத்தையே ஆட்டங்காணவைத்து எதிரிகளை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்து உடனடியாக நடந்தவற்றை மறந்து மீண்டும் ஒன்றிணைந்து நாமெல்லோரும் தமிழர் என்ற அடிப்படையில் செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Thanx: வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தாத்தா நாங்கள் யாரையும் காட்டிக்குடுத்திட்டோ இல்லை தமிழ்மண்ணுக்கு துரோகம் செய்திட்டோ இங்க வரவில்லை இல்லை மனைவியை அனுப்பவில்லை!!!

உயிரோடு வாழும் உரிமை எல்லாருக்கும் உண்டு ஆணால் துரோகிக்கு இல்லை அது நான் என்டாலும் சரி நீங்கள் எண்டாலும் சரி கருணா அம்மான் என்டாலும் சரி!!!!!!!!

தாத்தா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கனும்!!

எவ்வளவோ உயிர்தியாகங்களால் நாம் இவ்வளவோ வளர்ந்து உள்ளோம் !!!!

அது சரி இத போய் உங்களுக்கு ம் தேவையா????

:P :lol::lol:

தாத்தா :idea: :!:

  • தொடங்கியவர்

கருணா பிரதேச உணர்வுகளை கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார்ஈ.பி.டி.பி. அறிக்கை

புலிகள் தலைமையின் ஜனநாயக விரோத போக்குகளோடு கடந்த பல ஆண்டுகளாக ஒத்துழைத்து வந்த கருணா இப்போக்குக்கு தானும் இலக்காகியுள்ள இத்தருணத்தில் பிரதேச உணர்வுகளைக் கிளப்பி தனக்குப் பாதுகாப்புத் தேட முயல்கின்றார். புலிகளுக்குள் கருத்து முரண்பாடு இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்குமிடையிலான முரண்பாட்டை வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிழக்கு தமிழ் மக்களுக்குமிடையிலான மோதலாக மாற எவரும் இடமளிக்கக்கூடாது என ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கருத்து வேறுபாடுகள் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ளும் சர்வாதிகாரப் போக்குகள் ஒரு போதும் நல்ல விளைவுகளைப் பெற்றுத் தராது. புலிகளுக்கு இடையிலான தற்போதைய கருத்து முரண்பாடுகளும் இதற்கு ஒரு சான்று ஆகும்.

புலிகள் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டது. இதுதான் முதல் தடவையல்ல.

இதனை உணர்ந்து கொண்டு ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழ் பேசும் மக்கள் துணிவுடன் முன்வர வேண்டுமென்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.

ஏற்கனவே தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகளை பகைமையுடனான சந்தேகப்பார்வைக்கு தள்ளியும் முஸ்லிம் மக்களை தமிழ் தேசிய இனத்திற்குள் தனிமைப்படுத்தியும் வந்துள்ள புலிகளின் போக்கு இப்போது பிரதேச ரீதியான பிரிவினைக்கும் இட்டுச் செல்லும் ஆபத்துக்கு வந்துள்ளது. இதனை முளையிலேயே இனங்கண்டு நிராகரிக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

Thanx: வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா

:idea: :idea: :idea: :idea: :idea:

கருணாவின் புதிய திட்டங்கள்.

கருணா அவர்கள் தனது அரசியல் தலைவர் எனக்கூறிக்கொண்ட கரிகாலன் அவர்கள் கருணாவின் சிறைப்படுத்திலிலிருந்தும் தப்பி வன்னி சென்றடைந்துள்ளதாக வன்னித்தகவல்கள் nதிரிவிக்கின்றன. தனது சொந்த ஊரான கிரான் குளத்தில் மட்டும் நம்பிச்செயற்படும் கருணா அடுத்த அரசியல்பிரிவுத் தலைவராக கிரானைச் சேர்ந்த விசுவை நியமிக்கலாம் எனத் தெரிகின்றது.

அண்மைக்காலத்தில் தேசியத்தலைமையுடன் நெருக்கமாகச் செயற்பட்டதால் பொறுப்புக்கள் எதுவும் வழங்கப்படாது ஒதுக்கி வைக்கப்பட்ட விசுவிற்கு இப்பொறுப்பினை வழங்கி தனது கட்டுப்பாட்டில் செயற்படப்பேரம் பேசுவதாக இந்நெருக்கடி காரணமாக தப்பித்தனது சொந்தங்களுடன் இருக்கும் புளிம்தீவு அரசியல் பிரிவில் செயற்பட்ட போராளி முகுந்தன் இந்நிலமைகளை உலகத்தமிழருக்குத் தெரிவிக்கும்முகமாக இணையம் ஊடாக உலகத்தமிழ் ஊடகங்களுக்குச் செய்தி வழங்கிவருகிறார்.

கிழக்கு மக்களின் தலைவனாகத்தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள கருணா தனது சுயநலப்பதவியைத் தக்கவைக்க மக்களை இம்சைப்படுத்தி வருகிறார். கிழக்கில் தனக்கு ஆதரவு உள்ளதாக ஊடகங்களில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பொதுமக்களைப் பலவந்தப்படுத்தி ஊர்வலங்கள் , கூட்டங்களை நடாத்த முற்படுவதாக அங்கிருந்து செய்திகள் வந்த வண்ணமுள்ளன. இதன்படி கிரான் , கொக்கட்டிச்சோலை , வந்தாறுமூலை போன்ற இடங்களில் பலவந்தப்படுத்தலுக்கு எதிர்ப்புக்காட்டிய மக்கள் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் ஆயுதங்கள் காட்டிப்பயமுறுத்தப்பட்டதாக

  • தொடங்கியவர்

வீட்டுச் சின்னத்திற்கு வாக்கு சேர்ப்பதை விடுத்துவேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்வது கவலைக்குரியது - தமிழ் கூட்டமைப்பு அம்பாறை வேட்பாளர்

""தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்தியம்ப வேண்டும் என்று கூறிப் புறப்பட்ட தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வீட்டுச் சின்னத்திற்கு வாக்குச் சேர்ப்பதை விடுத்து தமக்குள் முட்டி மோதிக் கொள்வது வேதனைக்குரியது'' இவ்வாறு ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் விவேகானந்தன் கவலையுடன் கூறினார்.

விளையாட்டுக் கழக உறுப்பினர் சகிதம் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கில் வேட்பாளர் வேலூரான் விவேகானந்தன் மேலும் உரையாற்றுகையில்:

""விடுதலைப் புலிகளின் வழிகாட்டலுடன் இலட்சியம், கொள்கைக்காக புறப்பட்ட நாம் முதலில் 65 ஆயிரம் வாக்குகளையாவது பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயம் கிடைக்கும் அதேவேளை ஒற்றுமை கூடினால் இரண்டாவது பிரதிநிதித்துவமும் கிடைப்பது உறுதி.

ஆனால் இதனை விடுத்து வேட்பாளர்கள் சிலர் மட்டும் ஒன்று கூடி கூட்டம் வைப்பதும் சிலர் கூட்டுச் சேராமல் தனியாக ஆதரவு திரட்டுவதும் மக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னை யாரும் விலை கொடுத்து வாங்கமுடியாது. நான் விலைபோகவும்மாட்டேன். நான் சாகும்வரை தமிழ் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.

பட்டம், பதவி, பஜிரோ, பாராளுமன்ற ஆசனம் என்பவற்றை எண்ணி போட்டியிடவில்லை. தமிழினத்தின் ஒற்றுமை, இறைமை, சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை சர்வதேசத்திற்கு வலியுறுத்தவே தேர்தலில் இறங்கியுள்ளேன்.

எனவே, தமிழர்களே, ஒன்றுபட்டு வீட்டிற்கு வாக்களியுங்கள். ஈழம் தானாக மலரும்'' என்றார்.

கூட்டத்தில் ஜொலிவோய்ஸ், விறேய்ன் வோய்ஸ், உதயசூரியன்கழகம், பவர்கழகம், பிளே வோய்ஸ் போன்ற பல கழகங்களின் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Thanx: வீரகேசரி

  • தொடங்கியவர்

கருணாவை மீண்டும் அமைப்பில் சேர்க்கக் கோரி பேரணி

விடுதலைப் புலிகளின் உள்வீட்டு முரண்பாடு தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு பேரணியும் கருத்தரங்கும் நேற்று இடம்பெற்றது.

நேற்றுக்காலை திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

காலை 10.00 மணியளவில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் ஆரம்பித்தபேரணி 11.30 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தது. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களான அரியநாயகம் சந்திரநேரு, க.பத்மநாதன், சா.விவேகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மகளிரணித்தலைவி மார்க்கிரட் தலைமையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டோர் பலசுலோகங்களடங்கியபதாதைகளைத

  • தொடங்கியவர்

Effigies of Prabhakaran & Ramesh burnt

About 3000 people marched from Valachchena along the Batticaloa road to Chenkaladi burning effigies and photographs of Prabhakaran, the tiger supremo and Ramesh, the leader appointed to Eastern Province by the tiger organization after removing Karuna from that post and later held a massive agitation.

According to our sources the agitators declared Karuna as their leader and stated they were not prepared to carry out orders given by Prabahakaran. Those who participated in the agitation, which lasted for more than three hours, carried large photographs of Karuna. At a rally held in the town of Chenkalady thereafter the speakers criticized the policies of Prabhakaran and Ramesh.

http://www.lankatruth.com/full_story_page/..._07032004_2.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.