Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி; நேரில் ஆஜராக உத்தரவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி; நேரில் ஆஜராக உத்தரவு!

Posted Date : 16:10 (18/10/2012)Last updated : 16:10 (18/10/2012)

Duglus%281%29.jpgசென்னை: தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1985-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்தபோது, திருநாவுகரசு என்பவரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1991-ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கை சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

[size="2"] [/size] இந்த வாரண்டை ரத்து செய்யக்கோரி, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"தன்னை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து,தனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் " என்று கூறியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை செசன்ஸ் நீதிமன்றம்,டக்ளஸ் தேவானந்தா மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

http://news.vikatan.com/?nid=10860

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி என்ன. அன்னை சோனியா இந்திய விசேட படைப்பிரிவு ஒன்றை அனுப்பி இவரைக் கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு சென்று தமிழக அரசிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வகை செய்ய வேண்டும். அத்தோடு இவரை டெல்லிக்கு அழைத்து கைலாகு கொடுத்து விருந்து சாப்பிட்ட மன்மோகன் சிங் உட்பட எல்லோரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்..!

இந்தக் கொலைஞனை ஈழத்து எம் ஜி ஆர் என்று வர்ணித்து எம் ஜி ஆரை கேவலப்படுத்தி காங்கிரஸ் ஆளை உள்ள தூக்கிப் போடனும். அவருக்கும் இவருக்கும் இடையில் ரகசியத் தொடர்பு இருக்கிறது போல..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நடக்கிற காரியமா :rolleyes:

டக்கிளஸ் (குத்தியன்) தமிழ்நாட்டில் தேடப்படுவபராக இருந்தாலும், இந்தியாவின் செல்ல பிள்ளையல்லவா :D

அவர் ஒருபோதும் ஆஜராகமாட்டார் :icon_mrgreen:

தர்மச் சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதாகச் சொல்வது உண்மையானால் என்றோ ஒரு நாள் எல்லாம் நடக்கும்.

இதைதான் நான் ஆரம்பம் விரும்பவில்லை. போயும் போயும் இவனை ஈழத்து MGR என்று அழைக்கும் காங்கிரஸ் இவனை நாடுகடத்த சொல்லி கேளாது. ok டிவியில் கதை என்று சொல்லி விட்டு நாலு நல்ல சாட்சிகளை போட்டு கொலைகுற்றம் தீர்ப்பளித்திருந்தால் உலகம் முழுக்க பார்த்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸின் கோரிக்கையை சென்னை நீதிமன்றம் நிராகரிப்பு

index107.jpg

பிணையில் விடுதலை ஆக இயலாத வகையில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்யக் கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 1986-ம் ஆண்டு தமிழகத்தில் தங்கியிருந்தனர்.

அப்போது 1.11.1986 அன்று சென்னை சூளைமேட்டில் இலங்கை போராளிக் குழுக்களைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் பிறகு டக்ளஸ் இலங்கை சென்று விட்டார். நீதிமன்ற விசாரணைகளில் அவர் ஆஜராகவில்லை. இதனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் விடுதலை ஆக இயலாத பிடியாணையை 1990-ம் ஆண்டு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது. பின்னர் 1994-ம் ஆண்டு அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே இலங்கை அரசியல் சூழ்நிலைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, தற்போது அந்நாட்டின் அமைச்சர் பொறுப்பில் டக்ளஸ் உள்ளார். இந்நிலையில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார்.

தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தான் சென்னை வந்தால் அதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக் கூடும். ஆகவே, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராக நான் தயாராக உள்ளேன். அங்கிருந்து விடியோ வசதி மூலம் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும். மேலும், எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் டக்ளஸ் கோரியிருந்தார்.

இந்த மனு மீது சென்னை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜகோபாலன் விசாரணை நடத்தினார். டக்ளஸ் சார்பில் வழக்குரைஞர் பி.என். பிரகாஷ், அரசுத் தரப்பில் சென்னை மாநகர அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம். பிரபாவதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜகோபாலன், டக்ளஸ் தேவானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை சூளை மேட்டில் திருநாவுக்கரசு சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆனந்தன் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த ஆனந்தன் நான்தான் என்று இப்போது டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது உண்மைதானா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.