Jump to content

அரிசிமாக் கூழ் -யாப்பாணம் முறை


Recommended Posts

[size=5]அரிசிமாக் கூழ் - யாழ்ப்பாணம் முறை

தேவையான பொருட்கள்:[/size]

[size=5]பச்சரிசி மா – பச்சைசியை ஊற வைத்து கிறைண்டரில் அரைத்து அல்லது இடித்து மாவாக்கியது 250 கிராம்[/size]

[size=5]சுத்தம் செய்த இறால் - 100 கிராம்[/size]

[size=5]சுத்தம் செய்த நண்டுத் துண்டுகள் -10[/size]

[size=5]மீன்தலை – (சீலா, கலவாய், கொடுவா அல்லது முள்ளு சப்பக்கூடிய மீன்) சுத்தம் செய்யப் பெற்று சிறு துண்டுகளாக வெட்டப் பெற்றவை[/size]

[size=5]கீரை மீன் அல்லது சூடைமீன் - 10[/size]

[size=5]புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி[/size]

[size=5]பயிற்றங்காய் – 10 சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தவை[/size]

[size=5]புளி - ஒரு சின்ன உருண்டை[/size]

[size=5]பாலாக்கொட்டை - 100 கிராம் சுத்தம் செய்து இரண்டாக வெட்டியவை[/size]

[size=5]வறுத்த கடலை - கொஞ்சம்[/size]

[size=5]சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம்[/size]

[size=5]கறி முருக்கம் இலை - 250 கிராம்[/size]

[size=5]தண்ணீர் - தேவையான அளவு[/size]

[size=5]உப்பு - தேவையான அளவு[/size]

[size=5]மஞ்சள் - சிறிதளவு[/size]

[size=5]பச்சை மிளகாய் – 3-5[/size]

[size=5]மிளகு - சிறிதளவு[/size]

[size=5]நற்சீரகம் - சிறிதளவு[/size]

[size=1][size=5]செத்தல் மிளகாய் - சிறிதளவு[/size][/size]

[size=1][size=5]செய்முறை:[/size][/size]

[size=5]1. கீரை மீன் அல்லது சூடை மீனை உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பொரித்து வைக்கவும்.[/size]

[size=5]2. மஞ்சள், மிளகு, நற்சீரகம் ,செத்தல் மிளகாய் ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து அம்மியில் அல்லது கிறைண்டரில் நன்றாக அரைத்து உருண்டையாக்கி எடுங்கள்.[/size]

[size=5]3. அந்த உருண்டையோடு புளியையும் சேர்த்து கரைத்து வைக்கவும்.[/size]

[size=5]4. பின்னர் கழுவிய அரிசியுடன், பலாக்கொட்டை, கடலை, மரவள்ளிக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பானையில் இட்டு அவிய விடவும். அத்துடன்;[/size]

[size=5]5. மீன்தலைத் துண்டுகள், நண்டு, இறால் ஆகியவற்றையும் பானைக்குள் போட்டு அவிய விடவும்.[/size]

[size=5]6. அரிசி பாதி அவிந்த நிலையில் பயிற்றங்காய், முருக்கம் இலை எம்பனவற்றையும் பானைக்குள் போட்டு அவிய விடவும்.[/size]

[size=5]7. கடைசியாக கரைத்த புளிக் கரைசலையும் உப்பையும் சேர்த்து பாணையில் இட்டு கூழ் தடிப்பானவுடன் இறக்கவும்.[/size]

[size=5]8. சூடாக சுவையான யாழ்ப்பாணத்துக்கூழ் தயார்.

கூளோடு பொரித்து வைத்த மீன் பொரியலையும் கடித்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.[/size]

[size=5] [/size]

[size=5]http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=1006:2010-12-24-04-22-35&catid=90:games&Itemid=455[/size]

Link to comment
Share on other sites

[size=5]கூளோடு பொரித்து வைத்த மீன் பொரியலையும் கடித்துச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.[/size]

மெய்யாலும் பிள்ளை உண்மையோ :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

Link to comment
Share on other sites

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

நவராத்திரி முடியக் குடிக்க அக்கா!! கருத்துக்கு நன்றி அக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேர்தான் அரிசிமாக்கூழ் :D ......ஆனால் இது ஒடியல்மா கூழின்ரை கொப்பி :lol: .......அரிசிமாகூழ் எண்டால் கிட்டத்தட்ட.......ஆடிப்பிறப்புக்கு காய்ச்சிற கூழ் மாதிரியிருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், அலை!

அதுவும் அந்தப் பொரிச்ச சூடை மீனின்ர தலையைக் கண்ணோடு சேர்த்துக் கடிக்கேக்க வருகிற சுவை இருக்கே!

அதுவும் தேங்காய் எண்ணையில் பொரித்ததாக இருந்தால், ஆளை இருத்தி எழுப்பும்!

அந்தளவுக்கு, மீன் பொரியலுக்கு அடிமை! :D

Link to comment
Share on other sites

பேர்தான் அரிசிமாக்கூழ் :D ......ஆனால் இது ஒடியல்மா கூழின்ரை கொப்பி :lol: .......அரிசிமாகூழ் எண்டால் கிட்டத்தட்ட.......ஆடிப்பிறப்புக்கு காய்ச்சிற கூழ் மாதிரியிருக்கும். :icon_idea:

ஓ.... அப்படியா குசா, எல்லாம் ஈ அடிச்சான் கொப்பி தான்!! :D

நன்றிகள், அலை!

அதுவும் அந்தப் பொரிச்ச சூடை மீனின்ர தலையைக் கண்ணோடு சேர்த்துக் கடிக்கேக்க வருகிற சுவை இருக்கே!

அதுவும் தேங்காய் எண்ணையில் பொரித்ததாக இருந்தால், ஆளை இருத்தி எழுப்பும்!

அந்தளவுக்கு, மீன் பொரியலுக்கு அடிமை! :D

நன்றி புங்கை! :)

புங்கை நல்லாய் தான் இரசித்து மீன் பொரியல் சாப்பிடுறார் :lol:

Link to comment
Share on other sites

நவராத்திரி நடக்குது இந்த நேரத்தில உங்களுக்கு கூழ் தேவையாயிருக்குதோ <_<

அக்கோய் நான் கேள்விப்பட்டனான் ஊரிலை திருவிழா விரதங்கள் தொடங்க முன்னமே ஆடு பிடிச்சந்து கட்டுவினமாம். இவை விரதமிருக்கேக்கை ஆட்டுக்கு நல்ல இலை ஆட்டுக்கு குழையெல்லாம் போட்டு வளப்பினமாம்.அப்பத்தான் விரதம் முடிய ஆடு கொழுத்திருக்குமாம் வேள்விக்கு தயாரா. அதுமாதிரித்தான் இதுவும் இப்ப செய்முறையை பாத்து தேவையான சாமான்களை வாங்கி தயாரா பிரிஜ்சிலை வைச்சா நவராத்திரி முடிய காச்ச வேண்டியதுதானே.

Link to comment
Share on other sites

அலை, இது ஒடியல் கூழின் செய்முறை தான். அரிசிமாவில் செய்வது பற்றி தெரியாது.

அதுசரி - அரிசிமாவை என்ன செய்வது? சொல்லவே இல்லை? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.