Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிதி படுகொலைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை –தயான் ஜயதிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரிதி படுகொலைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை –தயான் ஜயதிக்க

11 நவம்பர் 2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கத்தினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஓர் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலி ஆதரவு தரப்பினரின் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளமை வெளிப்படையான விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

சில பிரிவினைவாத இணைய தளங்கள் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் களங்கம் ஏற்படும் வகையில், இந்தக் கொலை தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை பிரான்ஸ் அரசாங்கம் விரைவில் கைது செய்து உரிய தண்டனை விதிக்கும் என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85314/language/ta-IN/article.aspx

குற்றச்சாட்டும் ரெடிமேட்டாகவே இருக்கிறது

[size=4]ஏற்கனவே தயான் அரசுடன் முறுகல் நிலையில் உள்ள ஒரு பண்பாடான சிங்களவர். எனவே இவருக்கு கூட எது தெரியும் எது தெரியாது என்ற கேள்வி உள்ளது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ யை வைத்து மலேசியாவில் நாடகம் ஆடியதுகூட சிங்கள புலநாய்வுத்துறைதானே? ஆகவே பிரான்ஸிலும் அவர்களே செயற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதுபோல புலிகளுடன் முரண்பட்டுள்ள ஏனைய இயக்கங்கள் துணை ராணுவக்குழுக்கள் போன்றவை இன்னும் புலத்தில் இயங்குகின்றன. அவர்கள் கூட இதைச் செய்திருக்கலாம்.

ஆனால் தயானோ அல்லது சபேசனோ சொல்வதுபோல இது உள்வீட்டுப் பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை.

துணை ராணுவக் குழுக்களை வைத்து அரசாங்கம் செய்துவருகிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

உள் வீட்டு பிரசனைக்கு அரசு அறிக்கை மட்டும் விட்டு விட்டு போகாது.. அதை வைத்து பெரிய கல் கோட்டை ஒன்றே கட்டி முடித்திருக்கும். தயான் "அப்பா நெல்லு மூட்டை சாக்குக்குள் இல்லை என்கிறார். அகுத சொல்வதும் கலந்திருக்கும். தாயானின் மீது அரசு பழி வாங்க அவர் இப்படி இக்கட்டுக்களுள் வைத்து வேலையை முடித்திருக்கும். இன்டபோலுக்கும், ஊடகங்களுக்கு, முடிந்தால் கண்டு பிடியுங்கள் என்று சவால் விடுக் காட்டுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உண்மைகள் வெளிவரட்டும்

Edited by நந்தன்

இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதப் படுகொலையை நேரடியாக சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்ததாகவே ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் பயங்கரவாதி கோத்தபாய இந்தியா சென்று அங்குள்ள அரச பயங்கரவாதிகளை சந்தித்தபோது புலம் பெயர் தமிழரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகவும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் மேற்கொண்டிருக்கப் பட்டிருக்கலாம்.

[size=4]பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர் உரிமை நடுவகத்தின் ஒரு தகவலின் படி அண்மைக்காலமாக 'உருது மொழி பேசும்' சிலர் எம்மவர்களை தொடர்ந்தும் தகவல் சேர்த்தும் திரிந்ததாக கூறுகின்றனர் :unsure:[/size]

[size=4]பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழர் உரிமை நடுவகத்தின் ஒரு தகவலின் படி அண்மைக்காலமாக 'உருது மொழி பேசும்' சிலர் எம்மவர்களை தொடர்ந்தும் தகவல் சேர்த்தும் திரிந்ததாக கூறுகின்றனர் :unsure:[/size]

அவர்கள் வேறு யாருமில்லை இந்திய அரச பயங்கரவாதிகளின் ஊழியர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.