Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை தாபம்

Featured Replies

[size=4]தண்ணொளிநிலவே_ தளராது

எனைதொடரும் உறவே,

கண்மணிகள் கல்லறைகள்

கண்டனையோ யென்மண்மீதினில், [/size]

தழுவிக்கடக்கும் தென்றலே_தலை

[size=4]தடவிமகிழ்த்தும் தாயே,

விழுந்திட்ட மறவர் சிதைகளை

வணங்கிச் சுமந்திங்கு வருவாயா?[/size]

வான்முகிலே, கருணையின் உருவே_என்

[size=4]விழியின் நிழலே,விலைபோகாத பொருளே

பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில்

பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா?

எழுவான்கதிரே விடியலின் திருவே_எம்

உணர்வின் வடிவே, உயிரின் முதலே

வழுவாதயெம் வீரர்துயிலிடத்தில்

வெம்மையகற்றி மெதுவாய் வருவாயா?

நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட

அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட

இன்றெமக்கொரு வழியுமில்லையே

எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்லையே [/size]

கார்த்திகை காவியங்கள் கண்திறந்தால்_எம்

[size=4]இதயத்தில் அவர்களிருப்பதை காட்டி வாருங்கள்.

வீரத்தின் ஓவியங்கள் பேசிநின்றால் _எம்

நீர்த்திரைகள் சொல்லி வாருங்கள்.[/size]

Quote: "நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட

அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட

இன்றெமக்கொரு வழியுமில்லையே

எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்லையே"

அவர்களின் கல்லறைகள் இதயமுள்ள எல்லா தமிழர்களிலும் வீற்றிருக்கின்றது. நன்றி பகிர்வுக்கு, நல்ல கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை அதுவும் மாவீரர்களின் மாதத்தில். நன்றி பகிர்வுக்கு

தமிழ்சூரியன் இதை பாட்டாக மாற்ற முடியுமா சுமேரியரை கொண்டு?

  • தொடங்கியவர்

Quote: "நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட

அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட

இன்றெமக்கொரு வழியுமில்லையே

எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்லையே"

அவர்களின் கல்லறைகள் இதயமுள்ள எல்லா தமிழர்களிலும் வீற்றிருக்கின்றது. நன்றி பகிர்வுக்கு, நல்ல கவிதை

[size=4]நிச்சயமாக. [/size]

[size=4]நன்றி ஐயா கருத்திடலுக்கு[/size]

நல்லதொரு கவிதை அதுவும் மாவீரர்களின் மாதத்தில். நன்றி பகிர்வுக்கு

தமிழ்சூரியன் இதை பாட்டாக மாற்ற முடியுமா சுமேரியரை கொண்டு?

[size=4]நன்றி ஐயா,[/size][size=1]

[size=4]பாட்டாக மாற்றமுடிந்தால் எனக்கும் சந்தோசம் தான்.யாரென்றாலும் முயற்சியுங்கள்.[/size][/size]

வான்முகிலே, கருணையின் உருவே_என்

விழியின் நிழலே,விலைபோகாத பொருளே

பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில்

பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா?

உங்கள் சொல்வீச்சு நன்று . உங்களை ஒரு பன்முகப்பட்ட கவிஞராகவும் பார்க்க ஆசைப்படுகின்றேன் . படைப்புக்கு நன்றிகள் .

நல்லதொரு கவிதை அதுவும் மாவீரர்களின் மாதத்தில். நன்றி பகிர்வுக்கு

தமிழ்சூரியன் இதை பாட்டாக மாற்ற முடியுமா சுமேரியரை கொண்டு?

இப்போதான் இதை வாசித்தேன் உடையார் .............முதலில் இந்த அற்புதமான கவிதையை எழுதிய நேற்கொழுதாசனுக்கு நன்றிகளும் ,பாராட்டுக்களும் ................இப்போ பருதி அண்ணாவுக்காக ஒரு பாடலுடன் போராடிக்கொண்டு இருக்கிறேன் ..

வருகிற ஞாயிற்று கிழமை முடித்து விடுவேன் ........அதன் பின் நிச்சயம் இந்தப்பாடலை இசையாக்கி எம் விடிவிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்த எம் மாவீரர் பாதங்களில் சமர்ப்பிக்க முற்று முழுதாக முயற்சிக்கிறேன் ........நன்றிகள்

  • தொடங்கியவர்

வான்முகிலே, கருணையின் உருவே_என்

விழியின் நிழலே,விலைபோகாத பொருளே

பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில்

பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா?

உங்கள் சொல்வீச்சு நன்று . உங்களை ஒரு பன்முகப்பட்ட கவிஞராகவும் பார்க்க ஆசைப்படுகின்றேன் . படைப்புக்கு நன்றிகள் .

[size=4]நன்றி ஐயா, உங்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் என்னை அந்தவழி நடக்க செய்யும். [/size]

  • தொடங்கியவர்

இப்போதான் இதை வாசித்தேன் உடையார் .............முதலில் இந்த அற்புதமான கவிதையை எழுதிய நேற்கொழுதாசனுக்கு நன்றிகளும் ,பாராட்டுக்களும் ................இப்போ பருதி அண்ணாவுக்காக ஒரு பாடலுடன் போராடிக்கொண்டு இருக்கிறேன் ..

வருகிற ஞாயிற்று கிழமை முடித்து விடுவேன் ........அதன் பின் நிச்சயம் இந்தப்பாடலை இசையாக்கி எம் விடிவிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்த எம் மாவீரர் பாதங்களில் சமர்ப்பிக்க முற்று முழுதாக முயற்சிக்கிறேன் ........நன்றிகள்

[size=4]நன்றி ஐயா,பாட்டாக வருவதில் எனக்கு இரட்டிப்பு சந்தோசம். மிகவும் அன்புகலந்த நன்றிகள் உடையார் மற்றும் தமிழ்சூரியன் .[/size][size=1]

[size=4]ஒரு சிறிய கோரிக்கை,மாவீரர் நாளில் இதை பாட்டாக்க முடியுமா ?[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் இதை வாசித்தேன் உடையார் .............முதலில் இந்த அற்புதமான கவிதையை எழுதிய நேற்கொழுதாசனுக்கு நன்றிகளும் ,பாராட்டுக்களும் ................இப்போ பருதி அண்ணாவுக்காக ஒரு பாடலுடன் போராடிக்கொண்டு இருக்கிறேன் ..

வருகிற ஞாயிற்று கிழமை முடித்து விடுவேன் ........அதன் பின் நிச்சயம் இந்தப்பாடலை இசையாக்கி எம் விடிவிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்த எம் மாவீரர் பாதங்களில் சமர்ப்பிக்க முற்று முழுதாக முயற்சிக்கிறேன் ........நன்றிகள்

நன்றி தமிழ்சூரியன், மாவீரர் வாரத்தில் இப்பாட்டை கொண்டுவந்தால் நல்லது.

என் நன்றிகள் உங்கள் நேரத்திற்கு சேவைக்கும், எம்மால் இயன்றதை முடிந்தவரை செய்வோம்

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.