Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இவர்களுக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், 13 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டளைத்தளபதி ஹமட் ஜாபரி, அவரது பாதுகாவலர் மொஹமட் அல்-ஹம்ஸ் ஆகியோரும் அடங்குவர்.

இவர்கள் காஸா பகுதியில் சென்ற போது குண்டு வீச்சில் உயிரிழந்தனர். காஸா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது.

இதனால், பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

121115020623-05-gaza-1115-horizontal-gallery.jpg

இஸ்ரேல் வடக்கு பகுதியில் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர். அதில் இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

இதனால், காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காஸாவில் போர் பதட்டம் நிலவுகிறது.

பொதுமகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு சிரியா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

http://www.virakesar...rld.php?vid=273

[size=5]30.000 படைகளுடன் இஸ்ரேல் சன்னத ஏற்றம்[/size]

காஸா வட்டகைக்குள் மறுபடியும் ஒரு போரை ஆரம்பிக்க இஸ்ரேலியப் படைகள் எத்தனித்து சுமார் 2000 படைகள் எல்லையை நெருங்கிவிட்டன.

[size=2][size=4]இதே நேரம் உடனடியாக 30.000 போர் வீரர்களை போர்ச் சன்னதத்துடன் களமிறங்க அழைத்துள்ளது இஸ்ரேல்.[/size][/size]

[size=2][size=4]கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரும்பு தண்டனை என்ற கொலைப் பெயர் கொண்ட இஸ்ரேலிய ஏவுகணைகள் 28 பாலஸ்தீனப் பகுதிக்குள் ஏவப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2][size=4]இந்த ஏவுகணைகள் மிகவும் நவீனமானவை, இடை நிறுத்தாமலே ஏவுகணைகளை பொழியும் ஆற்றல் மிக்கது, எதிர்வரும் 2014 லேயே போர்க்களம் வரும் என்று கணிக்கப்பட்ட இக்கருவி இப்போது காஸாவில் பரிசீலிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]வெற்றி கொள்ள இலகுவான இலக்கை தாக்கி பயிற்சி எடுக்கும் இஸ்ரேல் அதைத் தொடர்ந்து ஈரானுடனான இன்னொரு போருக்காக தன்னை தூசு தட்ட ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்த எகிப்து தனது நாட்டு பிரதமர் கிஸ்காம் கன்டீலை உடனடியாக பாலஸ்தீனம் அனுப்பியது.[/size][/size]

[size=2][size=4]அதைத் தொடர்ந்து குறுகிய யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது, தாக்குதலில் கொல்லப்பட்ட 11 பாலஸ்தீனக் குடும்பங்களுக்கும் இவர் ஆறுதல் தெரிவித்து, ஹமாஸ் தலைவர்களுடன் பேச்சுக்களை நடாத்தினார்.[/size][/size]

[size=2][size=4]இஸ்ரேலின் செயல் கண்டனத்திற்குரியது அது ஓர் ஆக்கிரமிப்புச் செயல் என்றும் அவர் கூறினார்.[/size][/size]

[size=2][size=4]ஆனால் ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவரை இழந்துள்ள போராளிகள் பெரும் கொதிப்புடன் காணப்பட்டார்கள், எகிப்திய பிரதமரின் நிபந்தனைகளை தூக்கிக் குப்பையில் வீசினார்கள்.[/size][/size]

[size=2][size=4]எகிப்திய பிரதமர் பேசிக் கொண்டிருக்கவே இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதில் இரண்டு பாலஸ்தீன சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள்.[/size][/size]

[size=2][size=4]எகிப்திய பிரதமர் நிற்கும்போதே ஹமாஸ் மோட்டார் தாக்குதலை நடாத்தியதாகவும் அவர்கள் எகிப்திய பிரதமரை கடுகளவும் மதிக்கவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகு தெரிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]குறுகிய நேரத்தில் சமாதானம் முறிவடைந்தது, யுத்த நிறுத்தம் என்ற செய்தி சூடாற முன்னரே இஸ்ரேலிய இரண்டாவது பெரிய நகர் ரெல்அவிவ்விற்கு 15 கி.மீ தெற்கே ஹமாஸ் ஏவிய மூன்று மோட்டார் செல்கள் தரையிறங்கின.[/size][/size]

[size=2][size=4]கடந்த 1991 வளைகுடா போரின்போது இஸ்ரேலை நோக்கி சதாம் உசேன் ஏவிய ஏவுகணைக்குப் பிறகு சுமார் 21 ஆண்டுகால இடைவெளியில் மறுபடியும் இஸ்ரேல் தலைநகரை ஷெல் தாக்கியிருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]காஸா வட்டகை இடிபாடுகளும் புகைக் காண்டமுமாகக் காட்சியளிக்கிறது, அடுத்த கட்டம் போர் என்ற நிலை உருவாகியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை 1800 மோட்டார் தாக்குதல்கள் இஸ்ரேலை தீண்டும்படியாக குறுங்காலத்தில் செய்யப்பட்டதாக இஸ்ரேல் செய்திகள் கூறுகின்றன.[/size][/size]

[size=2][size=4]சற்று முன் ஹமாஸ் ஏவிய நீண்ட தூர ஏவுகணை ரெல்அவிவ்வில் மீண்டும் விழுந்துள்ளது, யுத்த நிறுத்த காலத்தில் இரு தரப்பும் போருக்கு தயாராகியிருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=117185

இதுவரை ஆக 21 பேர் தான் மரணமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.