Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் 2ம் நாள் நேரஞ்சல் :

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் 2ம் நாள் நேரஞ்சல் :

http://naathamnews.com/?p=7901

[size=2]நான் நினைக்கின்றேன், 135 பேர் கொண்ட அவையில் மூன்றில் ஒரு பகுதி அங்கத்தவர்கள் [/size]

[size=2]நேரடியாகப் பங்கெடுக்காத காரணத்தால் இந்த நாடு கடந்த தமிழீழ அரச அவை முறையாக இயங்க, தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது.ஏனெனில் கோரம் இல்லை. இது பற்றிய உண்மை நிலவரத்தைத் தமிழீழக் குடிமகனான நான் அறிவதற்கான ஜனநாயக உரித்துடையவன் என்று நம்புகின்றேன். கனடாவில் முன்பு நிரந்தர வதிவிட உரிமையற்றவர்கள் தேர்தலில் நிற்க இயலாது என்ற விதி பிரயோகிக்கப்பட்டிருந்தது. அதற்கான காரணம் அனைத்து நாடுகளுக்கும் சென்று வருவதற்கான வசதியுள்ளவர்களே (வதிவிட அனுமதிப்பத்திரம் , கடவுச்சீட்டு உள்ளவர்கள் என்ற காரணமும் சொல்லப்பட்டது) இராஜதந்திர ரீதியில் அனைத்து நாட்டு அரசியலாளர்களையும் சந்தித்து வேலை செய்ய முடியுமென்று சொல்லப்பட்டது. ஆனால் பிரதமர் உருத்திராவே அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளார். ஈழவேந்தனும் கனடாவை விட்டு வெளியேற இயலாதவர். 25 அங்கத்தவர்களைக் கொண்ட கனடாவில் (அதிகூடிய அங்கத்தவர்கள் தொகை) இங்கிலாந்தில் நடைபெறும் நான்காவது அமர்வுக்குச் செல்லாத 17 பேருக்கு "ஸ்கைப்" மூலம் நிகழ்வில் பங்குகொள்ள வசதி செய்து கொடுக்கப்படவில்லை.[/size]

[size=3]நாடு கடந்த அரசின் நான்காவது அமர்வு லண்டனில் [/size]

[size=3]நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னதான மூன்று அமர்வுகள் அமெரிக்காவில் நடைபெற்றிருந்தது. இம் முறை அமர்வு பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அங்கு நா.க.த.அவை உறுப்பினர்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக வேந்தர், உப வேந்தர் ஆகியோர் போடும் உடைகள் போன்றோ அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதிமன்ற அமர்வுகளில் அணியும் உடை போன்றோ, அல்லது வத்திக்கானில் உள்ள கத்தோலிக்கப் பேராயர்களின் அணிகள் போன்றோ அணிந்து காட்சியளித்தது வினோத உடைப் போட்டி ஒன்றைப் பார்த்தது போன்று இருந்தது. [/size]

[size=3]ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் கடைப்பிடிக்கப்படாத இந்த உடை அலங்காரம் வன்னியில் அழுக்கான உடைகளுடன் எம்மவர்கள் வாடுவதைக் கேலி செய்வதற்காகவே அணியப்பட்டிருக்கின்றது என்று எனது நண்பர் ஒருவர் கிண்டலாகக் கூறினார். இந்த "அரசு" இரண்டரை வருடங்களாயும் எதனையும் செய்ததில்லை. தென் சூடானில் தூதரகம் என்று சொன்னார்கள். தமிழீழ அடையாள அட்டை வழங்கினார்கள்( யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பது ஒரு புறம்) . ஒரு நாளைக்கு ஒரு டொல[/size][size=3]

ர் வீதம் பணம் சேகரித்து வடகிழக்கில் வதைபட்டவர்களை காப்பாற்றுகின்றோம் என்றார்கள். மாவீரர் குடும்பங்களைப் பராமரிக்கப் போகின்றோம் என்றார்கள். முடிவில் ஒன்றுமே செய்ததில்லை. இதில் அங்கம் வகித்த சிலர் (செனட்டர்கள் உடபட) கொழும்பிலே கோத்தபாயாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் ஒருவரோடு தினந்தோறும் தொலைபேசியில் பேசினார்கள். நேர்டோ அமைப்பில் அங்கமானார்கள். கோர்ட்டு , சூட்டு போட்டு மைக்கை மேடையில் விழுங்கினார்கள். படங்களுக்கு "போஸ்" கொடுத்தார்கள். கண்டது ஒன்றுமில்லை.

இரண்டரை வருடங்களில் மூன்று கூட்டங்கள் நடத்தியிருந்தார்கள். அதனை வெட்டுவோம், இதனை வீழ்த்துவோம் என்று பூச்சாண்டி காட்டி பொதுமக்கள் காதில் பூச்சுத்துவதில் கண்ணாயிருக்கிறார்கள் இந்த நா.க.த.அ. அவையினர்! ஒன்றுமே செய்யாது ஏறத்தாள மூன்று வருடங்களை வாயால் வெட்டிப் பேச்சு பேசிக் கடத்திக்கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பதுதான் உண்மை! "இந்த அவையைப் பொருட்படுத்தத் தேவையில்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏனெனில் கற்பனையில் தோய்ந்து, வாழ்ந்து கனவுலகில் மிதக்கும் இவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். விடிந்ததும் எழும்பிக் கண்ணைத் துடைத்துக் கொண்டு போய்விடுவார்கள் இவர்கள் என்று! இது உண்மையா ?[/size]

[size=3].

இரண்டரை வருடங்களில் மூன்று கூட்டங்கள் நடத்தியிருந்தார்கள். அதனை வெட்டுவோம், இதனை வீழ்த்துவோம் என்று பூச்சாண்டி காட்டி பொதுமக்கள் காதில் பூச்சுத்துவதில் கண்ணாயிருக்கிறார்கள் இந்த நா.க.த.அ. அவையினர்! ஒன்றுமே செய்யாது ஏறத்தாள மூன்று வருடங்களை வாயால் வெட்டிப் பேச்சு பேசிக் கடத்திக்கொண்டிருக்கும் இவர்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராகிறார்கள் என்பதுதான் உண்மை! "இந்த அவையைப் பொருட்படுத்தத் தேவையில்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏனெனில் கற்பனையில் தோய்ந்து, வாழ்ந்து கனவுலகில் மிதக்கும் இவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். விடிந்ததும் எழும்பிக் கண்ணைத் துடைத்துக் கொண்டு போய்விடுவார்கள் இவர்கள் என்று! இது உண்மையா ?[/size]

இது முற்றிலும் உண்மை. இவர்களின் இந்த நாடகமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்.

[size=1]

[size=4]பாலஸ்தீனமும் ஒரு காலத்தில் அகிம்சையாக ஆயுதம் ஏந்தி போராடியது.[/size][/size][size=1]

[size=4]பேச்சுவார்த்தை, துரோகங்கள், பலமான எதிரி .... கொல்லப்பட்ட அரபாத். [/size][/size]

[size=1]

[size=4]இன்று பல தடைகளையும் தாண்டி முழு ஐ.நா. அங்கீகார வாசலில் நிற்கின்றது. [/size][/size][size=1]

[size=4]சுதந்திரம் என்பதை போராடித்தான் பெற வேண்டும்.தட்டில் வைத்து யாரும் தர மாட்டார்கள். [/size][/size]

முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தேன் .

இரண்டாம் புலிகேசி தான் ஞாபகம் வந்தது .எங்கட ஆட்களுக்கு இப்போ நல்லா முற்றிவிட்டது போலிருக்கு

[size=4]அர்யுன் அண்ணா,[/size][size=1]

[size=4]பாராளுமன்றம் என்றால் அப்படித்தான் இருக்கும்.[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

கருத்து சரியாக அமைக்கப்பட்ட இயக்கம். பல வெளிநாட்டு அறிஞ்ஞர்கள் வழி நடத்தியிருந்தார்கள். ஆனால் அங்கத்தவர்கள் போது மக்களை சந்திக்க தயாரக இல்லை. அந்த ஒரு விடயத்தில் வெளிநாட்டு அறிவுரைகளை காதில் வாங்க வேண்டும். மக்கள் ஆதரவை திரட்டாவிட்டால் ஜனநாயக இயக்கம் அரசு தோற்க வைக்காவிட்டாலும் தோற்கும்.

முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தேன் .

இரண்டாம் புலிகேசி தான் ஞாபகம் வந்தது .எங்கட ஆட்களுக்கு இப்போ நல்லா முற்றிவிட்டது போலிருக்கு

எந்தப் படத்தை பற்றி இந்த கதை. பிரான்சிஸ் கரிசனோடை எடுத்ததையா?

தனைத்தான் விளம்பரப்படுத்துவதை யார்தான்விட்டான்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.