Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

Featured Replies

கட்டுரை வாசித்து அதிலிருக்கின்ற உண்மை,பொய்களை பகுத்தறியாமல் இதை பற்றி ஓன்றுமே தெரியாத சாஸ்திரி எப்படி நேரில் பார்த்த மாதிரி எழுதுகிறார் என இதைப் பற்றி எல்லாம் தெரிஞ்ச‌ விற்பன்னர்கள் கேள்வி கேட்பதை நினைத்து ஆச்சரியமாய் இருக்குது...வருங்காலத்தில் இப்படியான கொலைகளை எப்படி தடுக்கலாம் என ஒருத்தரும் எழுதவில்லை அதை விடுத்து சாஸ்திரி எப்படி இதை எழுதலாம் என்ட‌ கேள்வியும் மாற்றுக் கருத்தாளாரால் இயக்கப்படுகின்ற இணையத்தில்[பூபாளம்]வந்ததால் அதன் நம்பகதன்மை குறித்த கேள்வியும் தான் தொக்கி நிற்கிது...சாஸ்திரி எழுதினது பொய் என்டால் அதை நிருபீயுங்கோ அதற்கு ஆதார‌மாக எழுதுங்கோ...இல்லை உண்மையைத் தான் சாஸ்திரி எழுதுகிறார் என்டால் இந்த கொலைகளை எப்படித் த‌டுக்கலாம் என எழுதுங்கோ

 

 சாத்திரி எறிந்தது பாறங்கல்லு குளத்துக்குள். தமிழ் மக்களின் குழப்ப நிலையை இன்னும் கூட்டவே. அவர் என்ன நோக்கத்திற்க்காக இதை எழுதினார், தனது பொக்கற்றை நிரப்பவா? அதற்குத்தான் காம களியாட்ட கதைக்கள் இருக்கே.

 

இது அவருக்கு முதலே தெரியும் என்றால் ஏன் ஆதரத்துடன் அப்பவே கேட்கவில்லை அல்லது வெளியிடவில்லை?

 

மக்களை குழப்ப சிங்களவன் தேவையில்லை, எங்களில் ஒரு சிலர் போதும்.

  • Replies 93
  • Views 7.9k
  • Created
  • Last Reply

உண்மையாக பூபாளம் பத்திரிகையை இயக்குவது ஜோர்ச்,லெனின்,கற்சுறா போன்றோர்கள்.சாத்திரியையும் நான் இவர்களுடன் சேர்க்கவா?ஒரு காலத்தில் கற்சுறா மற்றும் தீபம் எல்லாம் பாரிசிலிருந்து துண்டைகாணோம்  துணியைக்காணோம் என்று ஓடியவர்கள் தானே! ஏனெனில் இப்பத்திரிகை மக்களின் மனதை கவர்ந்தவுடன் புலிகளுக்கெதிராக திரும்பும் என்பதில் சந்தேகமே இல்லை.ஒன்று மட்டும் உண்மை கனடாவில் காசு சேர்த்தவர்களில் பலர் பொதுமக்களின் பணத்தை தனதாக்கி விட்டார்கள்.(உடனே ஆளை சொல்லுங்கோ  என்று கேட்காதீர்கள்)இப்போ பல தமிழர்கள் இலங்கையிலிருந்து இலங்கை அரசால் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் முள்ளிவாய்க்காலில் நின்றோம் அண்ணனிடம் நின்றோம் என்று கூறி கதையளந்து தற்போது தேசியத்தை முடிந்த அளவுக்கு சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.பாரிஸ்,கனடாவில் வெளிவரும் பத்திரிக்கை இரு நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் வருகிறது அதுவும் கே.பி யின் கட்டுபாட்டில் உள்ளது.கனடாவில் முன்பு இருந்த சிறிலங்காவின் துணைத்தூதர்தான் முன்னைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராசேந்திரன் மூலம் (இவரின் மனைவி சிங்களப்பெண்மணி)தேசியத்துக்கு எதிரானவர்கள் மற்றும் கம்யூனிசவாதிகளையும் அரவணைத்து அவர்களுக்கு மாதாந்த பண உதவிகளையும் வழங்கி அமைத்த தளம் தற்போது வெகு சிறப்பாக இயங்குகின்றது.இங்கு  வெளி நாடுகளில் இயங்கும்தமிழர் அமைப்புகள் உண்மையாய் உழைத்தவர்களை கைகழுவி புதிதாகவரும் புலனாய்வாளர்களை அரவணைத்துகொண்டிருக்கிறார்கள்.இப்படிப் பாதிக்கப்பட்டவர்கள் தான் தற்போது தங்களுக்கு நடந்த மற்றும் நடக்காத கொடுமைகள் என்று வர்ணிப்பதையெல்லாம்  திவயின  மற்றும் தமிழ் தேசியத்துக்கு எதிரான பத்திரிகைகள் வெளியிட்டுகொண்டிருக்கின்றது.இன்னும் வெளிவரப்போகின்றது. இவர்கள் அனைவரும் புலனாய்வு செய்து அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்பிகொண்டிருக்கிறார்கள்.ஆகவே மிருகங்கள் பறவைகள் கூட ஒரு அணியாகத்தான் ஒன்றன்பின் ஒன்றாகச்செல்லும்.இந்த கேடு கெட்ட தமிழினம் மட்டும் குலைந்து செல்கின்றது

அதி தீவிர தேசியவாதிகள், தேசியப் பிழைப்புவாதிகள், போலித் தேசியவாதிகள், மையவாதத் தேசியவாதிகள், குறுந்தேசியவாதிகள், மென்தீவிர தேசியவாதிகள், மிதவாதத் தேசியவாதிகள், புலித் தேசியவாதிகள், புலத் தேசியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மேட்டுக்குடித் தேசியவாதிகள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நல்ல தேசியவாதிகள் என்று கேள்விப்படவில்லை.

 

சாத்திரிக்கு முக்காலமும் தெரிந்திருப்பதால் நம்பிக்கைவாதிகள் பயப்படத்தானே வேண்டும்.

 

ஒருபக்கம் வண்டு அண்ணாவை குற்றம்சாட்டுவது போல் காட்டிக்கொண்டு இன்னொருபக்கம் தேசிய ஆதரவாளர்களை குறிவைத்து தாக்கியுள்ளீர்கள்.

"தேசியவாதிகள்" என்ற சொல்லை பயன்படுத்தாமல் உங்கள் பிழைப்பு ஓடாது போலிருக்கே.... :icon_mrgreen: சரியான பிழைப்புவாதி தான் போங்கோ.... :D

யாரவது இப்படி சிங்கள உள்ளடி வேலைகளை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.

 

 

இன்று எமக்கு தேவையான முக்கிய விடயங்கள் பல உள்ளன. ஆனால், நாம் ஆதரவு தருகிறோமா? இல்லை. 

அதை செய்வதே எம்மை ஒற்றுமையாக்கி பலமாக்க உதவும்.

 

உதாரணத்திற்கு கனேடிய தமிழர் பேரவை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் இந்த செய்தி அறிக்கையை விட்டுள்ளது. இதை சரியாக செய்ய வேண்டிய தேவையும் கடமையையும் உள்ளது. ஆனால், எம்மில் எத்தனை பேர் பண தேவையா எனக்கூட கேட்கிறோம்? இல்லை எமது நேரத்தை ஒதுக்கி உதவுகின்றோம்?? ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=112380 )

 

ஆகக்குறைந்தது சில முன்னெடுக்கும் கையெழுத்து போராட்டங்களுக்கு உதவுகின்றோமா? எவ்வளவு தூரம் எமது முகபுத்தகங்களில் குறுஞ்ச்செய்திகளில்  தரவேற்றம் செய்கின்றோம்?

http://www.yarl.com/forum3/index.php?showforum=146)

 

இன்று பல நாடுகளிலும் மாணவர் சமூகம் தமது படிப்பை நிறுத்தி தாயக மக்கள் போராட்டங்களுக்கு உதவுகின்றன. அவர்களுக்கு கூட எம்மில் பலர் எந்த விதத்திலும் ஆதரவு தருவதில்லையே?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் வண்டு அண்ணாவை குற்றம்சாட்டுவது போல் காட்டிக்கொண்டு இன்னொருபக்கம் தேசிய ஆதரவாளர்களை குறிவைத்து தாக்கியுள்ளீர்கள்.

"தேசியவாதிகள்" என்ற சொல்லை பயன்படுத்தாமல் உங்கள் பிழைப்பு ஓடாது போலிருக்கே.... :icon_mrgreen: சரியான பிழைப்புவாதி தான் போங்கோ.... :D

 

முதலில் நான் தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தேசியவாதி என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். :mellow:

அத்தோடு தேசியத்திற்கு சேவை செய்கின்றேன் என்று சொல்லி பணம் பொருள் பெருக்கவோ, சுகவாழ்வை காணவோ முயலவில்லை. மேலும் சக தமிழர்களின் அவலங்களையும் அழிவுகளையும் காரணம் காட்டி புலம்பெயர்ந்து வாழவுமில்லை.

முதலில் நான் தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தேசியவாதி என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். :mellow:

அத்தோடு தேசியத்திற்கு சேவை செய்கின்றேன் என்று சொல்லி பணம் பொருள் பெருக்கவோ, சுகவாழ்வை காணவோ முயலவில்லை. மேலும் சக தமிழர்களின் அவலங்களையும் அழிவுகளையும் காரணம் காட்டி புலம்பெயர்ந்து வாழவுமில்லை.

 

நீங்கள் தேசியவாதியா இல்லையா என்று நான் கருத்து கூற வரவில்லை.

தேசியத்தை நேசிப்பவன், தேசியத்துக்காக உழப்பவன் எல்லோரையும் தேசியவாதி என்று கூறலாம்.

நடிப்பவர்கள் என்று நீங்கள் கருதுவோரை பிழை பிடிப்பதற்காக "தேசியவாதி" என்ற சொல்லுக்கு முன்னுக்கோ பின்னுக்கோ வேறு சொற்களை போட்டு கருத்து கூறுவதன் மூலம் (உதாரணமாக போலி தேசியவாதிகள்...) "தேசியவாதிகள்" என்ற சொல்லை கொச்சைப்படுத்துகிறீர்கள். பல திரிகளில் அவதானித்து விட்டேன். அதை தான் கூறினேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பவர்கள் என்று நீங்கள் கருதுவோரை பிழை பிடிப்பதற்காக "தேசியவாதி" என்ற சொல்லுக்கு முன்னுக்கோ பின்னுக்கோ வேறு சொற்களை போட்டு கருத்து கூறுவதன் மூலம் (உதாரணமாக போலி தேசியவாதிகள்...) "தேசியவாதிகள்" என்ற சொல்லை கொச்சைப்படுத்துகிறீர்கள். பல திரிகளில் அவதானித்து விட்டேன். அதை தான் கூறினேன். :)

 

நான் பாவித்த தேசியவாதிகள் சம்பந்தமான சொல்லாடல்கள் எதையும் நான் இட்டுக்கட்டவில்லை. அவை எல்லாவற்றிற்கும் தெளிந்த வரைவிலக்கணங்கள் உள்ளன. முடிந்தால் நிறைய விடயங்களைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

 

அத்தோடு எவரையும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்துகின்றேன் என்று எங்கு போட்டுக்கொடுக்கின்றீர்கள்? உதறல் இப்பவே வந்துவிட்டது!

நான் பாவித்த தேசியவாதிகள் சம்பந்தமான சொல்லாடல்கள் எதையும் நான் இட்டுக்கட்டவில்லை. அவை எல்லாவற்றிற்கும் தெளிந்த வரைவிலக்கணங்கள் உள்ளன. முடிந்தால் நிறைய விடயங்களைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

 

அத்தோடு எவரையும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்துகின்றேன் என்று எங்கு போட்டுக்கொடுக்கின்றீர்கள்? உதறல் இப்பவே வந்துவிட்டது!

 

ஒரு இடமும் போட்டுக்கொடுக்கவில்லை.

 

நீங்கள் பல திரிகளில் மாற்று கருத்து எழுதும் போது "தேசியவாதிகள்" என்று விளித்து பின்னர் அவர்கள் மேல் குற்றம் சாட்டுவதும் இந்த திரியில் "நம்பிக்கைவாதிகள்" என்று புதிதாக இன்னொரு சொல்லை சேர்த்து எழுதியிருப்பதையும் பார்த்தால் புரிகிறதே.

உதறல் உங்களுக்கு எடுக்குதோ தெரியவில்லை. நிச்சயம் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாவித்த தேசியவாதிகள் சம்பந்தமான சொல்லாடல்கள் எதையும் நான் இட்டுக்கட்டவில்லை. அவை எல்லாவற்றிற்கும் தெளிந்த வரைவிலக்கணங்கள் உள்ளன. முடிந்தால் நிறைய விடயங்களைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

 

அத்தோடு எவரையும் கொச்சைப்படுத்தவில்லை. கொச்சைப்படுத்துகின்றேன் என்று எங்கு போட்டுக்கொடுக்கின்றீர்கள்? உதறல் இப்பவே வந்துவிட்டது!

 

துளசியுடன் தொடர்ந்து உரையாடல் செய்வது பற்றி  இந்த பயம் இருக்கணும் எல்லோருக்கும்.

துளசியுடன் தொடர்ந்து உரையாடல் செய்வது பற்றி  இந்த பயம் இருக்கணும் எல்லோருக்கும்.

 

இல்லை, எனக்கு உதறல் வந்துவிட்டது என்ற ரீதியில் சொன்னார் என்று நினைக்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, எனக்கு உதறல் வந்துவிட்டது என்ற ரீதியில் சொன்னார் என்று நினைக்கிறேன். :D

 

துளசிக்கு உதறலா?

இதை நாம் நம்பமாட்டன்...... :lol:  :D  :D

துளசிக்கு உதறலா?

இதை நாம் நம்பமாட்டன்...... :lol:  :D  :D

 

கிருபன்

Posted Yesterday, 10:32 PM

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கும். :D

நம்பிக்கைவாதிகள் - believers

 

Believer - a cult organization with the goal of achieving purity of self and reaching "the land of comfort"

 

தங்கள் செளகரியங்களுக்காக தூய்மைவாதிகளாக இருக்க விளைவோர்.

 

நன்றி ஜீ.இப்ப விளங்கீட்டு ஜீ.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்

Posted Yesterday, 10:32 PM

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையிருக்கும். :D

 

கிருபனுக்கு கிடைத்த பெரும் வெற்றி இது. :icon_idea:

எனக்குப் புரியாவிட்டால் எவருக்குமே புரியாது என்று யாழில் மமதை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர்.

 

சிலருக்கு உண்மையிலேயே புரியாது, ஆனால் சிலருக்கு புரிந்தாலும் உண்மைகளைத் திரைபோட்டு மறைக்க அதிகம் சக்தியை செலவழிக்கின்றனர். இது சூரியனைக் கையால் மறைப்பது போலத்தான்.

 

எனக்கு உங்கள் விளக்கத்தை படிக்க முன்னர் உணமையிலேயே புரியலை.ஆனால் இப்ப விளங்கீட்டு.

முதலில் நான் தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தேசியவாதி என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். "பலர் எல்லோரும் அப்படிதான் " :mellow:

அத்தோடு தேசியத்திற்கு சேவை செய்கின்றேன் என்று சொல்லி பணம் பொருள் பெருக்கவோ, சுகவாழ்வை காணவோ முயலவில்லை. மேலும் சக தமிழர்களின் அவலங்களையும் அழிவுகளையும் காரணம் காட்டி புலம்பெயர்ந்து வாழவுமில்லை.

 

 கிருபன் என்ன சொல்லவாறீங்க?

 

நீங்க நிதானம் தவறி எழுதினீங்காளா அல்லது உங்கள் எண்ணமே இப்படிதானா?

 

ஆக, நீங்கள் படிச்சி SKILL MIGRATION இல் புலம் பெயர்ந்திருக்கின்றீர்கள், மற்றவனெல்லாம் அகதியா வந்து அழிவு அவலத்தை சொல்லி வாழ்கை நடத்துகின்றான்.

 

விளக்கம் தர முடியுமா உங்களின் கருத்திற்க்கு?

  • கருத்துக்கள உறவுகள்

 கிருபன் என்ன சொல்லவாறீங்க?

 

நீங்க நிதானம் தவறி எழுதினீங்காளா அல்லது உங்கள் எண்ணமே இப்படிதானா?

 

ஆக, நீங்கள் படிச்சி SKILL MIGRATION இல் புலம் பெயர்ந்திருக்கின்றீர்கள், மற்றவனெல்லாம் அகதியா வந்து அழிவு அவலத்தை சொல்லி வாழ்கை நடத்துகின்றான்.

 

விளக்கம் தர முடியுமா உங்களின் கருத்திற்க்கு?

 

"மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது" வந்தியத்தேவன். :)

 

சக தமிழர்களின் அழிவுகளிலும் அவலங்களிலும் சுகவாழ்வைத் தேடியோர் தமிழர்களில் பலர் இருக்கின்றார்கள்.

 

யுத்தம் மிக மோசமாக நடைபெற்ற காலங்களிலும், அதற்கு முன்னரும், பின்னரும் பலர் யுத்தத்தைச் சாட்டி புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் கழிவிரக்கம் காரணமாக தேசியத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் அமிர்தலிங்கம் போன்ற கனவான் அரசியல் செய்தவர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அது போன்றே தற்போதும் தமது குடும்பம், வாழ்வுக்கு அப்பால்தான் தமிழர்களின் மீதான அக்கறை பலருக்கு இருக்கின்றது.

 

பி.கு. SKILL MIGRATION இல் வருமளவிற்கு எனக்கு skills இருக்கவில்லை.

"மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது" வந்தியத்தேவன். :)

 

சக தமிழர்களின் அழிவுகளிலும் அவலங்களிலும் சுகவாழ்வைத் தேடியோர் தமிழர்களில் பலர் இருக்கின்றார்கள்.

 

யுத்தம் மிக மோசமாக நடைபெற்ற காலங்களிலும், அதற்கு முன்னரும், பின்னரும் பலர் யுத்தத்தைச் சாட்டி புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் கழிவிரக்கம் காரணமாக தேசியத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் அமிர்தலிங்கம் போன்ற கனவான் அரசியல் செய்தவர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அது போன்றே தற்போதும் தமது குடும்பம், வாழ்வுக்கு அப்பால்தான் தமிழர்களின் மீதான அக்கறை பலருக்கு இருக்கின்றது.

 

பி.கு. SKILL MIGRATION இல் வருமளவிற்கு எனக்கு skills இருக்கவில்லை.

 

 ரெம்ப பிடிச்சிருக்கு கருத்து. நன்றி கிருபன் உங்கள் பதிலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எமக்கு தேவையான முக்கிய விடயங்கள் பல உள்ளன. ஆனால், நாம் ஆதரவு தருகிறோமா? இல்லை. 

அதை செய்வதே எம்மை ஒற்றுமையாக்கி பலமாக்க உதவும்.

 

உதாரணத்திற்கு கனேடிய தமிழர் பேரவை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் இந்த செய்தி அறிக்கையை விட்டுள்ளது. இதை சரியாக செய்ய வேண்டிய தேவையும் கடமையையும் உள்ளது. ஆனால், எம்மில் எத்தனை பேர் பண தேவையா எனக்கூட கேட்கிறோம்? இல்லை எமது நேரத்தை ஒதுக்கி உதவுகின்றோம்?? ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=112380 )

 

ஆகக்குறைந்தது சில முன்னெடுக்கும் கையெழுத்து போராட்டங்களுக்கு உதவுகின்றோமா? எவ்வளவு தூரம் எமது முகபுத்தகங்களில் குறுஞ்ச்செய்திகளில்  தரவேற்றம் செய்கின்றோம்?

http://www.yarl.com/forum3/index.php?showforum=146)

 

இன்று பல நாடுகளிலும் மாணவர் சமூகம் தமது படிப்பை நிறுத்தி தாயக மக்கள் போராட்டங்களுக்கு உதவுகின்றன. அவர்களுக்கு கூட எம்மில் பலர் எந்த விதத்திலும் ஆதரவு தருவதில்லையே?

 

அகூதா அவர்களே உண்மை.

இது போன்ற பல விடயங்கள் நடக்கின்றன. அதைத் தடுப்போரும் இருக்கின்றார்கள். இந்தத் திரியோடு தொடர்பற்ற விடயம் என்றாலும் உங்களின் கருத்தோடு இசைவுள்ளதால்..........

அண்மையில் இளையோர்கள் முகநூலூடாக ஒரு தகவலைப் பரிமாறிவிட்டுத் தமிழ்ப் பாடசாலை இடைவேளையில் உரையாடத் தொடங்கியபோது, அந்தப் பாடசாலைப் பொறுப்பாளரின் துணைவியார் (அவரும் ஆசிரியை) நீங்கள் என்ன செய்வதென்றாலும் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பொறுப்பாளரிடம் கதைத்து முன்பே அனுமதி பெற்றிருந்தார்கள். அவ்வேளையில் அவர் கூறியிருந்தார் ... இளையோரின் விடயங்களை நீங்கள் செய்யலாமென.. ஆனால் பாருங்கள் சாமிவரங்கொடுத்தாலும் ...என்பதுபோல் .. இது தான் தாமும் தேசியமென்போரின் நிலை. தேசியத்தைச் சொல்லித் தம்மை நிலைப்படுத்தியோரே அதிகம். இனிவருங்காலங்களிலாவது இதுபோன்ற நிலைமாறி உண்மையாகத் தேசியத்தை நேசிப்போரை இனம் கண்டு செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவவும் தட்டிக் கெட்கவும் தமிழினம் துணிய வேண்டும: ஒவ்வொருவரும் தாம் வாழும் நகரை அவதானித்தாலே தமிழரின் நலம் பேணுதல் சாத்தியமாகும்.

---- எமக்கென்ன என்பதைவிட எமக்கானது என்றாலே தீர்வுண்டு ----

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.