Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தரின் பாராளுமன்றப் பேச்சை வன்மையாக கண்டிப்போம். - ஈழதேசம்

Featured Replies

தாயகத் தமிழர்கள் தெளிவான பாதையில் பயணிக்க எத்தனித்துள்ள இத்தருணத்தில் அவர்களை வழிநடத்தி விடுதலையை நோக்கி பாதையில் அழைத்துச் செல்வதைவிட்டு சிங்களத்திற்கு காவடிதூக்கும் சம்பந்தரின் பாராளுமன்றப் பேச்சு வன்மையாக கண்டிக்க வேண்டியதாகும்.

சிங்கள அடக்குமுறைக்குள் முழுவதுமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தாயகத்தமிழர்கள் அந்த அடக்குமுறையை உடைத்தெறிந்து விடுதலைக்கான பாதையில் நடைபோட உறுதிபூண்டு போர்கோலம் கொண்டு நிற்கையில் தமிழர்களது அரசியல் தலைமையாக கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் சம்பந்தன் அவர்கள் தான்தோன்றித்தனமாக இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் பேசியுள்ள விடையமானது உலகத்தமிழர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டுசென்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத இயக்கம் எனவும் அவர்களது நடவடிக்கைகளினாலேயே அவர்களுக்கு அழிவு ஏற்பட்டதாகவும் பிதற்றியுள்ள சம்பந்தர் வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறு தாம் கோரவில்லை எனவும் இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியுள்ளார்.

தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திவந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது இருப்பை இனத்தின் நலனிற்காக மறைவாக்கியுள்ள இத்தருணத்தில் தமிழர்களது அரசியல் தலைமையாக தாயகத்தில் தலைவரால் அடையாளம் காட்டப்பட்டு தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றார்.

சிங்கள அடக்குமுறை இராணுவத்தின் இரும்புக்கரங்களிற்குள் சிக்குண்டு சொல்லணாத்துயரங்களை அனுபவித்துவந்த தமிழர்கள் தன்னெழுச்சியாக தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி வீரத்துடன் முகம்காட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவர்களிற்கு பக்கபலமாக நின்று வழிகாட்டவேண்டிய சம்பந்தன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமையானது ஏமாற்றத்தையும் வேதனையையும் தருவதுடன் தாங்கமுடியாத கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தர் அய்யா காலம் உங்களிற்கு தந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முடிந்தால் தமிழினத்திற்கு நன்மைசெய்ய முயற்சிசெய்யுங்கள். இல்லையென்றால் ஒதுங்கிநின்று வேடிக்கை பாருங்கள். வீணாக முரண்டுபிடித்து தமிழர்களின் கோபத்திற்றகு ஆளாகாதீர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பன்னெடுங்காலமாக பல துரோகிகளை நமது இனம் கண்டுவருகின்றது. அவர்களது முடிவு என்ன ஆனாது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தாயகத்தில் தமிழர்களது அரசியல் தலைமையாக இருக்க வாய்த்துள்ளது. அதைக்கெடுத்துக்கொண்டு துரோகிகள் பட்டியலில் உங்களை நீங்களே இணைத்துக்கொள்ள வழிஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.

தமிழர்களாகிய நாம் எமது தலையெழுத்தை தீர்மாணிக்க துணிந்துவிட்டோம். எத்தடை வரினினும் முடிவுகான நாம் முன்னேறத்தலைப்பட்டுவிட்டோம். வழிகாட்டும் தலைவராக இருந்தால் வணங்கிச் செல்வோம். குழிபறிக்க நினைத்தால் குருதி குடித்து தொடர்வோம் எமது விடுதலைப் பயணத்தை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
 

 

மூலம்: http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17754:2012-12-08-09-40-07&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திவந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது இருப்பை இனத்தின் நலனிற்காக மறைவாக்கியுள்ள இத்தருணத்தில்
அப்ப அவரும்(பிரபாகரனும்) தலைவர் இல்லை மக்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் முடிவடைந்து விட்டது .அவரின் இருப்புக்காக அவர் நினைத்த படி செய்ய முடியாது அதை அவரும் விரும்பமாட்டார்.மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராடினார் .அதற்கு தலை வணங்குவோம் ... இன்றைய காலகட்டத்தில் மக்களின் இருப்புக்காக தலைவர்கள் எதாவது செய்ய வேண்டும் .தலைவர்கள் தங்களின் இருப்புக்காக ஒன்றும் செய்யத்தேவையில்லை.
குழிபறிக்க நினைத்தால் குருதி குடித்து தொடர்வோம் எமது விடுதலைப் பயணத்தை.
உந்த டயலோக் எல்லாத்தையும் தமிழ் சினிமா எடுத்தால் எழுதுங்கோ ... குருதி குடிக்காமலயே விடுதலை போராட்டத்தை தொடரலாம் உண்மையிலயே தமிழ்மக்கள் மீது அக்கறை இருந்தால்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அங்கே எங்கள் புத்தஸ் அண்ணாவை கோபம் கொள்ள செய்ததது :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது நல்லது. சம்பந்தன் புலிகளைப் பயங்கரவாதின்னு உச்சரிக்கிறதில அவருக்கு திருப்தி இருக்கலாம்.. இதனால் பாதிக்கப்படப் போவது சிறைகளில் உள்ள போராளிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட ஈடுபடும் மக்களுமே. அவர்களைப் பற்றி சம்பந்தன் கிஞ்சிதமும் கவலை கொள்ளவில்லை.

 

அண்மைய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உட்பட எதனையும் சம்பந்தன் கண்டிக்கவில்லை. எந்த சிங்களப் படைகளுக்கு அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் சம்பந்தன் ஈடுபட்டதில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்து ரணிலோட சேர்ந்து சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சதோடு அவருடைய போராட்டம் ஓய்ந்துவிட்டது. இப்போது இந்திய தூதராலயங்களைத் திருப்திப்படுத்த பேசி வருகிறார்.

 

சம்பந்தன் என்ன கோருவது.. சிங்களப் படைகளால் தினமும் துன்பங்களை அனுபவிக்கும்.. மக்கள் கோருகிறார்... ஏன் அவரின் கட்சியை சேர்ந்த மாவை கோருகிறார் படைகளே வெளியேறுன்னு. சம்பந்தன் என்ன கோருவது. அவர் முதலில் சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு தீர்வைக் காணட்டும். அதன் பிறகு யார் பயங்கரவாதின்னு.. பட்டியலிடலாம்..!

 

இன்றைய காலத்தில் சம்பந்தன் அநாவசிய.. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பது நன்று. விடுதலைப்புலிகள் ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வரேல்ல. அவர்களும் தமிழ் மக்களே. தமிழ் மக்களின் பிள்ளைகளே. அவர்கள் பயங்கரவாதின்னா.. சம்பந்தனும் பயங்கரவாதியே..! அதை உணராமல் சம்பந்தன் உளறிக்கிட்டு திரிவது.. யாரையோ திருப்திப்படுத்த என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்படியாக சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து மற்றவர்களைத் திரிப்திப்படுத்தி சம்பந்தன் வாழலாம்.. ஆனால் தமிழ் மக்கள்..????! இதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் கிடைக்கப் போறதில்லை. மாறாக தமிழ் மக்களின் அழிவுகளை தமிழர்களே நியாயப்படுத்தியதான வரலாறே நடந்து முடியப் போகிறது. இது கேவலம். :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் சொல்வது சரி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை  நினைக்க பெருமையாக இருக்கிறது

வாழ்ந்தாலும்

வீழ்ந்தாலும்

எத்தனை  பேருக்கு சோறு போடுகிறார்கள். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியலை முன்னெடுக்கக் கூடிய ஆற்றல் உள்ள ஒரு தலைமை இப்போது இல்லை என்பதே உண்மை. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரித்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல அரசியல் தலைமைக்கு ஆசைப்படும் எல்லோரும் ஒரு தெளிவான தூர நோக்கத் திட்டமின்றி தமக்குள் குத்துவெட்டுப்பட்டிருக்கின்றார்கள்.

 

சம்பந்தர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதுமில்லை. உருப்படியாக எதுவும் செய்யப்போவதுமில்லை. ஆனால் மக்களுக்கு வேறு தெரிவுமில்லை!

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டிற்கு  தி.மு.க.(திருத்த முடியாத கழுதை) கருணாநிதிபோல் தமிழீழத்திற்கு சம்பந்தா்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.