Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

கேட்பதற்கு ,இதமாயும் ,பதமாயும் உள்ளது சிறி அண்ணா ............தொடர்ந்து இணையுங்கள் ..............

 

 

.அப்படியே உங்கள் காலத்துப்பாடல்களை இணைப்பது போல் எங்கள் காலத்துப்பாடல்களையும் இணைத்தால் நன்றாக இருக்குமே .......... :D  :D

  • Replies 2.1k
  • Views 180k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

--------

அப்படியே உங்கள் காலத்துப்பாடல்களை இணைப்பது போல் எங்கள் காலத்துப்பாடல்களையும் இணைத்தால் நன்றாக இருக்குமே .......... :D  :D

 

தமிழ்ச்சூரியன் புதிய பாடல்கள் தலைப்பில், பல திரிகள் உள்ளதால்.... அதனையும் இதற்குள் சேர்த்தால் நன்றாக இருக்காது என நினைக்கின்றேன். எமது நிலையை... இசையில் ஆர்வமுள்ள நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட.... உடையார், சுமோ, குருவன், தமிழ்ச்சூரியன் ஆகியோருக்கு நன்றி. :) 
"ஆடிப்பெருக்கு"(1952) படத்திலிருந்து, "காவேரி ஓரம், கவி சொன்ன காதல்" இன்றைய பாடலாக ஒளிபரப்பாகின்றது.

கவி வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: ஏ.எம்.ராஜா.
பாடியவர்: சுசீலா.
நடிகர்கள்: சரோஜாதேவி, ஜெமினி கணேசன் & சந்திரபாபு.

 

நல்ல பாடல், தொடருங்கள்

 

 

"பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?"

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நல்ல பாடல்களை தொடர்ந்து இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலில் ஒரு சிறப்பு. இப்பாடலை சுசீலாவும் lR ஈஸ்வரியும்
பாடினார்கள். இருவருமே பாடியது நன்றாக இருக்கும். நன்றி சிறி பாடலுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த..... வந்தியத்தேவன், உடையார், சுமோவுக்கு நன்றி. :) 
"குழந்தையும் தெய்வமும்" ப‌ட‌த்திலிருந்து, "அன்புள்ள மான் விழியே.... ஆசையில், ஓர் கடிதம்"

வரிகள்: கண்ணதாசன்

இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் & சுசீலா.
நடிகர்கள்: ஜெய்சங்கர் & ஜமுனா


Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒரு முறை, ஒரு நண்பனிடம் எதிர்பாராத விதமாகப் போயிருந்தோம்! எங்களைக் கண்ட மகிழ்ச்சியில், கொஞ்சம் தண்ணியைப் போட்டவர், பக்கத்திலிருந்த தண்ணீர்க் குடத்தை எடுத்து, அதில் மேளம் தட்டியவாறே இந்தப் பாடலை, மிகவும் அழகாகப் பாடினார்! 

அதன் பின்னர், எங்களைத் தனது வீட்டுக்குச் சாப்பாட்டிற்காக அழைத்துச் சென்றபோது, உங்கள் கணவர் நன்றாகப் பாடுவார் என்று அவரது மனைவியிடம் கூறினோம்!

 

அவர் சிரித்துவிட்டுக் கூறினார்! அவர்'அன்புள்ள மான் விழியே' படித்திருப்பாரே என்று!

எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! இப்படியும் ஒரு சோடியா என்று!

 

இதை அவர் மனைவியிடம் பின்பு கேட்டபோது அவர் கூறியது இது தான்!

 

அவருக்கு வெறியேறினால் இந்தப்பாட்டைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குப் பாட வராது! :D  

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

என் கணவர் கூட நாம் காதலிக்கும் போது இப் பாடல் வரிகள் சிலதை எழுதியது பாடலைக் கேட்டதும் நினைவில் வந்தது. பாடலுக்கு நன்றி சிறி.
 

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த வந்தியத்தேவன், புங்கையூரான், சுமோ, உடையாருக்கு நன்றி. :) 
"பாசம்"(1962) திரைப்படத்திலிருந்து,"பால் வண்ணம் பருவம் கண்டு..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.
பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ் & சுசீலா.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & சரோஜாதேவி.


  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இப்பாடலைப் பார்க்கிறேன். நன்றி சிறி பாடலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான முதல் ராத்திரிப் பாடல்.

 

அவ மூக்குத்தியை விட இன்னொரு நகை மூக்கில போட்டிருக்கிறா அதுக்கு என்ன பெயர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான முதல் ராத்திரிப் பாடல்.

 

அவ மூக்குத்தியை விட இன்னொரு நகை மூக்கில போட்டிருக்கிறா அதுக்கு என்ன பெயர்?

 

 

மூக்குச் சிமிக்கி என்று சொல்வார்கள் யாழ்வாலி. அந்த கறுப்பு வெள்ளைப் ப‌டத்தில், நகைகள் என்னமாய் ஜொலிக்கிறது பார்த்தீர்களா... அதனைப் படப் பிடித்த, ஒளிப்பதிவாளாரை பாராட்ட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த, உடையார், வந்தியத்தேவன், சுமோ, யாழ்வாலி ஆகியோருக்கு நன்றி. :) 
"குங்குமம்"(1963) திரைப்படத்திலிருந்து, "தூங்காத கண்ணென்று... ஒன்று"

இசையமைப்பு: கே.வி.மகாதேவன்.
பாடல் வரிகள்: கண்ணதாசன்.
பாடியவர்: சுசீலா & சௌந்தர்ராஜன்.
நடிப்பு: சிவாஜி கணேசன் & விஜயகுமாரி.


  • கருத்துக்கள உறவுகள்

அழகிய பாடல்!

நன்றிகள் தமிழ்சிறி! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி



அழகான முதல் ராத்திரிப் பாடல்.

 

அவ மூக்குத்தியை விட இன்னொரு நகை மூக்கில போட்டிருக்கிறா அதுக்கு என்ன பெயர்?

 

அவ மூக்கில போட்டிருக்கிறதுக்குப் பெயர் விலாக்கு. அதுசரி அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு யாழ் வாலி.
 



மூக்குச் சிமிக்கி என்று சொல்வார்கள் யாழ்வாலி. அந்த கறுப்பு வெள்ளைப் ப‌டத்தில், நகைகள் என்னமாய் ஜொலிக்கிறது பார்த்தீர்களா... அதனைப் படப் பிடித்த, ஒளிப்பதிவாளாரை பாராட்ட வேண்டும்.

 


உங்கள் ஊரில் அதை மூக்குச் சிமிக்கி என்று சொல்வார்களா சிறி ???

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குச் சிமிக்கி என்று சொல்வார்கள் யாழ்வாலி. அந்த கறுப்பு வெள்ளைப் ப‌டத்தில், நகைகள் என்னமாய் ஜொலிக்கிறது பார்த்தீர்களா... அதனைப் படப் பிடித்த, ஒளிப்பதிவாளாரை பாராட்ட வேண்டும்.

 

நன்றி சிறியண்ணா. உண்மையில் பெரிய தொழிநுட்ப வசதிகளற்ற அக்காலத்தில் இப்படியான ஒளிப்பதிவுகளைச் செய்த ஓளிப்பதிவாளர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். :)

 

 

அவ மூக்கில போட்டிருக்கிறதுக்குப் பெயர் விலாக்கு. அதுசரி அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு யாழ் வாலி.

 

 

நன்றி அக்கா. விலாக்கு என்ற சொல்லை என் வாழ்நாளிலே இன்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறன். பாட்டில் அவ மூக்கில் இருந்து வில்லாக்கு மின்னும்போது அழகாயிருந்தது. அதுதான் கேட்டேன். மற்றும்படி என் மனைவிக்கு வாங்கித்தரும் எண்ணம் ஒன்றுமில்லை. அவளுக்கு நகைகளில் பெரிய ஈடுபாடு இல்லை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------

உங்கள் ஊரில் அதை மூக்குச் சிமிக்கி என்று சொல்வார்களா சிறி ???

 

பழைய ஆட்கள் சிலர் இதனை, "தொங்கட்டான்" என்றும் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன் சுமோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த புங்கையூரான், சுமோவுக்கு நன்றி. :) 
"குழந்தையும், தெய்வமும்" படத்திலிருந்து, "கோழி ஒரு கூட்டிலே.... சேவல் ஒரு கூட்டிலே..." என்னும் பாடல் இன்றைய பாடலாக ஒலிக்கின்றது.

கவி வரிகள்: வாலி.
இசையமைப்பு: எம்.எஸ். விஸ்வநாதன்.
பாடியவர்: எம்.எஸ். இராஜேஸ்வரி.
நடிப்பு: குட்டி பத்மினி.


http://www.youtube.com/watch?v=iAjaIeFvbYE

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாருக்கு! :D

 

இந்த குட்டி பத்மினியும்,பேபி பத்மினியும் ஒருவர் தானா?

 

தொங்கட்டானை மூக்கில போட்டால், மூக்குத் தாங்காது, தமிழ்சிறி! :D

 

250px-Pambadam.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாருக்கு! :D

 

இந்த குட்டி பத்மினியும்,பேபி பத்மினியும் ஒருவர் தானா?

 

தொங்கட்டானை மூக்கில போட்டால், மூக்குத் தாங்காது, தமிழ்சிறி! :D

 

250px-Pambadam.jpg

 

Kutti+Padmani+Complains+to+the+cop.jpg

குட்டி பத்மினியின் தற்போதைய படம்.

---------------------------------------------------------------------------------

மன்னிக்கவும் புங்கையூரான், ஞாபக சக்தியில் சிறு கோளாறு ஏற்பட்டு விட்டது. :D  :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த..... புங்கையூரான், உடையாருக்கு நன்றி. :) 
"கவிக்குயில்"(1977) திரைப்படத்திலிருந்து, "குயிலே... கவிக்குயிலே...."

இசையமைப்பு: இளையராஜா.
பாடியவர்: எஸ். ஜானகி.
நடிகர்கள்: ஸ்ரீதேவி & சிவகுமார்.

 

http://www.youtube.com/watch?v=5pj-UJfbKb8

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்குயில் தான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்த பறவை?

 

அதைப் பற்றி எத்தனை பாடல்கள்? :D

 

நன்றிகள்,தமிழ் சிறி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.