Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குங்குமம்.

காலங்கள் தோறும்....!

  • Replies 2.1k
  • Views 180k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ரொம்ப நாட்கள் கழித்து இன்று இந்த அருமையான பாடலை கேட்க நேர்ந்தது...

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

நிழல் போல தோன்றும் நிஜமே .

இன்று மாலை நாவலர் வீதியிலுள்ள TCT க்கு சில பொருட்கள் வாங்க போயிருந்தபோது இப்பாடல் ஒலிபரப்பாகியது. என்னால் நகரவே முடியவில்லை - அற்புதமான இசை, பாடல் வரிகள். பாடல் முடியும்வரை சிலையாகிவிட்டேன். விற்பனைக்கு உதவி செய்யும் பெண்ணும் வந்து என்ன சார் வேணும் என்றார். கையாலேயே சைகை காட்டினேன் பாட்டு கேட்கிறேன் முடிந்ததும் கேட்கிறேன் என்று சிரித்துவிட்டு சென்று விட்டார். பின்னர் பேசியபோது கேட்டார் என்ன  சார் மலரும் நினைவுகளா என்று. நானும் இல்லை. இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும், ஆனால் பல வருடங்களின் பின்னர் கேட்டேன் அதுதான் என்றேன்.  உண்மையும் அதுதான். இப்பாடலை இங்கு முன்னரே யாராவது பதிந்திருந்தால் மன்னிக்கவும்.

படம்: அக்னி சாட்சி 
பாடியவர்கள்: எஸ்.பீ.பீ., சரிதா (கவிதை) 
பாடலாசிரியர்: வாலி 
இசை: மெல்லிசை மன்னர் 

பிடித்த வரிகள்.

குமரி உருவம் குழந்தை உள்ளம் 
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் 
தூங்கும் சேயோ 
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி 
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட 
நிழல் போல தோன்றும் நிஜமே 

1982 -ல் வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் திரு. கே. பாலசந்தர். இந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகியாக சிவக்குமார் மற்றும் சரிதா நடித்துள்ளனர். படத்தில் சிவக்குமார் பொறுமையும், அன்பும் நிறைந்த கணவனாகவும், சரிதா சிறு சிறு விஷயங்களைக் கூட இயல்பாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் உணர்ச்சி வசப்படும் ஒரு பெண்ணாக, மிகுந்த மன அழுத்தம் கொண்டவராகவும் நடித்துள்ளார்கள். 

இது ஒரு அழகான, இனிமையான தாலாட்டு பாட்டு. படத்தில் சிவக்குமார், சரிதா அவர்களை தூங்க வைக்க பாடுவதாக வரும் பாடல் இது. கணவன், மனைவியை தூங்க வைக்க பாடும் தாலாட்டு என்றால் அது காதல் தாலாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கணவன் மன அழுத்தம் கொண்ட தன் மனைவியை தூங்க வைக்க தாலாட்டு பாடுவதாக காட்சி இருப்பதால், ஒரு தகப்பன் மகளுக்கு பாடுவது போல, தன் மனைவியை உறங்க வைக்க தாலாட்டு பாடுகிறான். 

இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவை. கவிஞரின் வார்த்தை தேர்வு, பாடல் வரிகளில் சில இடங்களில் மிகவும் அற்புதமாக இருக்கும். 
பொதுவாக பலர், குழந்தைகளை தூங்கவைக்க தாலாட்டு பாடும்போது ஏதாவது ஒரு கதையையோ அல்லது அந்த குழந்தையின் விளையாட்டுத்தனம், குணம், பெருமை, சிறப்பு இவைகளை பற்றி பாடியோ உறங்க வைப்பார்கள். இந்த பாடலின் சரணங்கள் இரண்டுமே அந்த கணவன், தன் மனைவியை பற்றிய தன் கணிப்பையே, பாடல் வரிகளாக கொண்டு பாடுவது போல கவிஞர் எழுதி உள்ளார். 
பாடலின் முதல் சரணத்தில் 'குமரி உருவம், குழந்தை உள்ளம்' என்று அவள் மன நிலையை விளக்க ஆரம்பித்து, பின் தனக்கே இன்னும் புரியாத புதிராக இருக்கும் அவள் குணத்தை அழகாக 'நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி, விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி' என்றும், இந்த இரண்டு வரிகளுக்கு இடையில் அவளை கொஞ்சலுடன் 'தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ' என்றும் எவ்வளவு அற்புதமாக எழுதி இருக்கிறார். 

படத்தில் அந்த நாயகி பாரதியின் அபிமானி, மேலும் அழகாக புதுக் கவிதைகள் எழுதுபவள். அதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த பாடலின் இடையில் அவள் தன் அன்பான கணவனின் மேல் தனக்கிருக்கும் காதலை புதுக் கவிதையாக எழுதி, அதை அவளே சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு கவிஞர் எழுதி இருக்கும் வரிகள் மிகவும் அழகு என்றால், படத்தில் அந்த கவிதையை, அந்த மனைவியாக வரும் சரிதாவே சொல்வதாக மெல்லிசை மன்னர், பாடலின் நடுவில் அதை அழகாக புகுத்தி இருப்பது இன்னும் அழகு. இந்த கவிதையை, வெறும் உரைநடை படிப்பது போலவும் இல்லாமல், பாடலாக ராகத்துடன் பாடுவது போலவும் இல்லாமல், அன்பான, ஆழமான காதலுடன், மனதில் இருந்து உணர்ச்சி ததும்ப சொல்வது போல் மெட்டமைத்து, அதை அற்புதமாக சரிதாவின் குரலில், நம் மெல்லிசை மன்னர் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பது இந்த பாடலின் மிகவும் சிறப்பான அம்சமாகும். 

பாடலின் இரண்டாவது சரணம், இவ்வளவு அழகாக கவிதை எழுதும் தன் மனைவியை இந்த தாலாட்டில் பாராட்டுவது போல் 'புதிய கவிதை புனையும் குயிலே' என்றும், தனக்கும் புலப்படாத, அவளுக்கும் சொல்ல இயலாத அவள் மனக் காயங்களை தான் தெரிந்து கொள்ள விரும்புவதை 'நெஞ்சில் உண்டான காயம் என்ன?' என்றும், அடுத்து அவளுக்காக தான் படும் வேதனையை தாலாட்டின் வரிகளாக 'நினைவு அலைகள், நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன?' என்றும் பின் எல்லாவற்றுக்கும் ஒரு விடிவும், முடிவும் உண்டு என்ற உண்மையையே வரிகளாக 'கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்' என்றும், தன் அன்பான காதல் மனைவிக்காக தான் அந்த நாள் வரை காத்திருக்கப் போவதாக, அவளுக்கு நம்பிக்கையுடன் 'விடியும் நாள் பாத்து இருப்பேனே நானும்' என்றும், இறுதியில் 'வருங்காலம் இன்பம் என்று, நிகழ் காலம் கூறும் கண்ணே' அதாவது உன்னுடைய நிகழ் காலமாகிய நான், நம் வருங்காலம் இன்பமாக இருக்குமென்று உறுதி அளிக்கிறேன், நீ தூங்கு கண்ணே என்று பாடி, எவ்வளவு அழகாக தாலாட்டுகிறான். 

எஸ்.பீ.பீ. அவர்களுக்கு இந்த பாடல் ஒரு வரப் பிரசாதம். மெல்லிசை மன்னரின் அற்புதமான மெட்டுக்கு ஏற்ப அற்புதமாக பாடி இருக்கிறார். அந்த இரவில் இருக்கும் அமைதி, தன் மனைவியின் மனதில் இல்லையே என்று ஆதங்கப்பட்டு, ஒரு வேதனையுடன் பாடும் அந்த அன்பு கணவனின் சோகத்தை, எஸ்.பீ.பீ. தன் குரலில் கொண்டு வந்திருப்பார். 

மெல்லிசை மன்னரின் இசையை பற்றி என்னவென்று எழுதுவது! பாடலின் தொடக்கத்தில் இரவின் இதமாக தொடங்கும் இவரின் இசை, அந்த பெண்ணின் மன வேதனையை கண்களுக்கு உணர்த்தும் காட்சியில், அருமையான வயலினில் தொடங்கி, அற்புதமான இசையால், நம் செவிகளின் மூலம், நம் மனதை உணர வைக்கிறார். அப்படி ஒரு பின்னணி இசை இந்த பாடலுக்கு! கண்களை மூடிய வண்ணம் இந்த பாடலை கேட்டால், நம் மனமும் இரவில் மெதுவாக நடை போட துவங்கி, பின் வேகமாக சுழன்று ஆடி, களைத்து, பின் அமைதி கண்டு, உறங்க தொடங்கும்.

http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2463&view=next&sid=763c7e4a8933a4981ae99ca757dbff18

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று கேட்டதில் பிடித்தது - வீடியோவில் செய்யப்பட்ட சில சமரசங்களுடன் எனக்கு உடன்பாடில்லாததால் இதனை போடுகின்றேன்.

நன்றி - இசைக்கலைஞன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.