Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை செய்த நர்சுக்கு 523,600 டொலர் நிதியுதவி வழங்குகிறது அவுஸ்ரேலிய வானொலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nurse-111212-150.jpg

லண்டனில் இளவரசர் வில்லியம்சின் மனைவிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.

 

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அவுஸ்ரேலிய வானொலி நிறுவன தொகுப்பாளர்கள், இளவரசரின் மனைவி கேத் பற்றி, அறிந்து கொள்ள அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு போன் செய்து, அரண்மனையில் இருந்து பேசுவதாகக் கூறி விவரங்களைக் கேட்டு அதனை வானொலியில் ஒலிபரப்பினர்.

 

தகவல் அளித்த நர்ஸ் ஜெசிந்தா இதனால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது குடும்பத்துக்கு அவுஸ்ரேலிய வானொலி நிறுவனம் 523,600 டொலரை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெசிந்தாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71824&category=WorldNews&language=tamil

 

 

நர்ஸ் மரணமான சம்பவத்துக்கு மன்னிப்புக்கோரி கதறிஅழுத அவுஸ்ரேலிய வானொலி அறிவிப்பாளர்கள்!

 

 

 

aus.radio-111212-150.jpg

லண்டனில் இளவரசி கேட் உடல்நிலை குறித்து ராணி மற்றும் இளவரசர் போல் போனில் பேசியவர்களிடம் விவரங்களை அளித்த இந்திய நர்ஸ் மர்மமான முறையில் இறந்தார். அவரிடம் போனில் பேசியவர்களான ஆஸ்திரேலிய ரேடியோ அறிவிப்பாளர்கள் நேற்று மன்னிப்பு கோரி கதறி அழுதனர்.

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். அவர் லண்டனில் உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளவரசிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுபவர் ஜெசிந்தா சல்தானா (46). கர்நாடகாவைச் சேர்ந்தவர்.

 

இளவரசிக்கு சிகிச்சை அளிக்கும்போது, இவரும் டாக்டர்களுடன் இருந்துள்ளார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2டே என்ற தனியார் ரேடியோ நிறுவனத்தின் ஹாட் நியூஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களான மெல் கிரைக், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் அந்த மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டனர். போனை எடுத்த ஜெசிந்தாவிடம், தங்களை இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளனர்.

இளவரசி மிடில்டன்னுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்துள்ளனர். உண்மையில் ராணியும், இளவரசரும்தான் பேசுகின்றனர் என்று நினைத்த ஜெசிந்தா, தனது சக நர்சிடம் போனை கொடுத்து இளவரசிக்கான சிகிச்சை பற்றி முழு தகவல்களை அளிக்கச் செய்திருக்கிறார். ஆஸ்திரேலிய ரேடியோ அறிவிப்பாளர்கள் இந்த தகவல்களை தங்களுடைய ஹாட் நியூசில் வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ராணி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஜெசிந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தாரா, கொல்லப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே தெரியும் என்று லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, ரேடியோ அறிவிப்பாளர்களிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில், ரேடியோ அறிவிப்பாளர்கள் மெல் கிரைக், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் நேற்று டி.வி.க்கு அளித்த பேட்டியில், விளையாட்டாகத்தான் நாங்கள் ஜெசிந்தாவுக்கு போன் செய்தோம். இவ்வளவு பெரிய விபரீதம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த மரணத்தால் நெஞ்சே வெடித்து விடும்போல் உள்ளது. எங்களை மன்னிக்க வேண்டும் என்று கதறினர். இதற்கிடையே, ஹாட் நியூஸ் நிகழ்ச்சியை 2டே ரேடியோ தடை செய்துள்ளது. மேலும், ஜெசிந்தாவின் மரணம் குறித்த விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 

ஜெசிந்தாவை அவரது சொந்த ஊரான கர்நாடகா மாநிலம் ஷிர்வாவில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அவரது கணவர் பெனடிக்ட் பர்போசா டுவிட்டரில் கூறியுள்ளார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கு செல்லப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=71798&category=WorldNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தாலும் ஈடு செய்யமுடியாதது இழப்பு.

இந்த ஊடகங்களின் பணம்,புகழ், பதவி, போன்ற மோகங்களினால் திரைமறைவிலும், வெளிப்படையாகவும் எத்தனை,எதனை உள்ளங்கள் வாடி வதங்கி கருகிப்போனது ..................ஊடகம் என்னும் சாக்கடை தூக்கப்பட்டு அது தேனருவியாய் ஓடும் காலம் வருமா ..............21-12-2012 இன் பிறகு பார்ப்போம் .................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'உயிர் வாங்கத்தானா ஊடகங்கள்?"!

 

பரபரப்புக்காக என்னவெல்லாம் செய்யத்தோன்றுகின்றது?!!!!!!!!!!!!! மிகுந்த வேதனையளிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே தகவல் சொன்னதுக்காக தற்கொலை செய்வாரா? யாரோ பிரச்சினை கொடுத்துள்ளார்கள்போலை..

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும். வானொலி நிலையம் தடை செய்யப்பட வேண்டும்.  ஏனையோரை பாதிக்கும் வகையில் பொறுப்பில்லாமல் prank call செய்வதும் தடை செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே தகவல் சொன்னதுக்காக தற்கொலை செய்வாரா? யாரோ பிரச்சினை கொடுத்துள்ளார்கள்போலை..

நானும் அப்படித்தான்.... நினைக்கின்றேன். பின் புலத்தில்... அரசகுடும்பமே... தோண்டித் துருவியிருக்கும். இப்படியான... பிரபலயங்கள், தங்களுக்கு... நோய் வந்தால்... வீட்டில் இருந்து வைத்தியம் பார்ப்பதே நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.