Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: நான் கொடூரமான குற்றம் செய்துவிட்டேன். என்னை தூக்கில் போட்டு கொல்லுங்கள் என்று பாலியல் பலாதகார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவன் டெல்லி நீதிமன்றத்தில் கதறினான்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று தெரியவந்துள்ளது. இதில் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேர்களில் பேருந்து ஓட்டுனரான ராம் சிங் 5 நாள் போலீஸ் காவலுக்கு நேற்று அனுப்பப்பட்டான். மீதமுள்ள முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மா ஆகிய மூன்று பேர் இன்று டெல்லி சாகெட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அதில் 2 பேர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பரை தான் இரும்பு கம்பியால் அடித்ததை ஒப்புக்கொண்டான். "நான் மிகக்கொடூரமான குற்றத்தை செய்துவிட்டேன்...நான் அந்த பையனை தாக்கினேன்.நான் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டியவன்" என்று கூறினார். இதனையடுத்து பஸ்வான் மற்றும் வினய் ஆகியோர்களை நான்கு நாள் போலீஸ் காவலுக்கும், முகேஷை 14 நாள் நீதிமன்ற காவலுக்கும் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியான பேருந்து ஓட்டுனரான ராம்சிங்கின் சகோதரரான முகேஷ்,குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் முன்பாக, அடையாள அணி வகுப்புக்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே தப்பி ஓடிய இரண்டு பேர்களில் ஒருவர் பீகாரில் பிடிபட்டுள்ளதாகவும்,மற்றொருவர் தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thatstamil

வண்டியின் டிரைவர் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார்.. 
வன்புணர்வு செய்தவர்களில் டிரைவரோடு அவர் தம்பியும் அடக்கம்... அனைவரும் புணர்ந்து முடித்த பின்பும் இரும்பு ராடு எடுத்து அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்... முப்பது கிலோமீட்டருக்கு அந்த வண்டி அந்த பெண்ணின் கதறலை சுமந்து கொண்டி ஓடியிருக்கிறது... ஆடையின்றி சாலையில் வீசப்பட்ட அந்தப் பெண் போலீஸ் வரும்வரை அங்கேயே சீந்துவாரின்றி கிடந்திருக்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மோசமான மிருகங்கள் எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும் இருக்கின்றார்கள். மாணவியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மேலும் கொடூரமாகக் காயப்படுத்திய இந்தக் ஒநாய்க் கூட்டத்திற்கு மரண தண்டனைகளை இப்போதும் நிறைவேற்றும் இந்தியாவில் தகுந்த தண்டனை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்குற்றவாளிகளுக்கான தண்டனை என்பது இனி எப்போதும் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு கிலியைக் கொடுக்கக்கூடிய அதியுச்ச தண்டனையாக பொது வெளியில்  சாகும் வரையில் சிதரவதைக்கு உட்படுத்திக் கொல்லவேண்டும். அப்படிச் செய்தால்தான் இப்படியான குற்றங்கள் ஓரளவுக்காகினும் கட்டுப்பாட்டுக்குள்வரும்.

 

 

அது சரி இப்படியான தண்டனையை இவர்களுக்குக் கொடுத்தால் அதனைத் தொடர்ந்து அமைதிப்படையாக தமிழீழப்பகுதியில் திரிந்த பல காடைச்சிப்பாய்களுக்குமல்லவா அதனை நிறைவேற்றவேண்டும்.

இந்தக்குற்றவாளிகளுக்கான தண்டனை என்பது இனி எப்போதும் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு கிலியைக் கொடுக்கக்கூடிய அதியுச்ச தண்டனையாக பொது வெளியில்  சாகும் வரையில் சிதரவதைக்கு உட்படுத்திக் கொல்லவேண்டும். அப்படிச் செய்தால்தான் இப்படியான குற்றங்கள் ஓரளவுக்காகினும் கட்டுப்பாட்டுக்குள்வரும்.

 

 

அது சரி இப்படியான தண்டனையை இவர்களுக்குக் கொடுத்தால் அதனைத் தொடர்ந்து அமைதிப்படையாக தமிழீழப்பகுதியில் திரிந்த பல காடைச்சிப்பாய்களுக்குமல்லவா அதனை நிறைவேற்றவேண்டும்.

 

உண்மை தான்!

மிக மட்டரகமான மிருகக் குணம் உடையவர்கள் கூட இவ்வாறான கொடூர செயலைச் செய்வார்களா என்று தெரியவில்லை!

 

ஆனால் இது நடந்தது இந்தியா என்பதால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவர்கள் உலகில் மிக மோசமான கலாச்சார பண்பாடுடையவர்களாக மாறிவருகின்றனர்.

அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்:

 

==================================
ராகுல் காந்தியும் நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்துப் பெண்கள் சிலரை பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் அதை பூசி மெழுகிய சம்பவம் சில வருடங்களின் முன்னர் நடந்தது.

இவ்வாறன சம்பவங்களைப் பார்த்து கொதிக்கும், கண்டிக்கும் பலர், தாயகத்தில் இவ்வாறான செயல்களைச் செய்தவர்களுக்கு விடுதலைப் புலிகளால் கடும் தண்டனை வழங்கப்பட்டபோது - அவற்றை இன்று சகோதரப் படுகொலை என்று அங்கலாய்ப்பது ஏன் என்று விளங்கவில்லை 

விடுதலைப் புலிகளுக்கு விரோதியானவர்களில் பெரும்பாலானவர்கள் தாய் மண்ணில் பெண்களை இழிவாகாக நடத்த முற்பட்டு விடுதலைப் புலிகளால் எச்சரிக்கப்பட்டவர்களே. அதுபோல் சிலர் பெண் பிரச்சினைகளால் தண்டனைக்குப் பயந்து, தப்பியோடி சிங்கள அரச பயங்கரவாதிகளின் எடுபிடிகளாக மாறியவர்களும் உள்ளனர். ஈ.பி.டீ.பி. கும்பலில் பெரும்பாலானவர்கள் இத்தகையவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாணவி உடல்நிலை கவலைக்கிடம்!
 
Posted Date : 13:05 (24/12/2012)Last updated : 13:09 (24/12/2012)
 

Rape-victim1%282%29.jpgபுதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு  ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலை  மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாணவியின் உயிரை  காப்பாற்ற  டாக்டர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதுவரை அந்த மாணவிக்கு  6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.என்றாலும் அவர் உடல் நிலை தொடர்ந்து  கவலைக் கிடமாகவே உள்ளது.

 

போதையில் இருந்த குற்றவாளிகள் கம்பியால் தாக்கியதில், அந்த பெண்ணின் சிறுகுடல்  கடுமையாக சேதம் அடைந்தது. அதில் தொற்று ஏற்படாமல் இருக்க கடந்த புதன்கிழமை  சிறுகுடல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.

 

  இதனால் மாணவிக்கு ஜீரணசக்தி இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஸ்பூனில்  கொஞ்சம், கொஞ்சமாக திரவ சத்து ஆகாரம் மட்டும் கொடுத்து வருகிறார்கள்.

 

கடந்த சனிக்கிழமை மாணவி சீராக மூச்சு விட்டதால் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த  செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும்  மோசமானது. இதையடுத்து மாணவிக்கு மீண்டும் செயற்கை சுவாசம்  அளிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே நேற்று மாணவியின் உடலில் கிருமி தொற்று அதிகரித்து இருப்பதை  டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அல்ட்ராசவுண்ட்,சி.டி. ஸ்கேன் எடுத்து  ஆய்வு செய்தனர்.

 

அதன்பிறகு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுரைப்படி மாணவிக்கு ரத்த பரிசோதனை  நடத்தப்பட்டது.அதில் மாணவி உடலுக்குள் அசுத்த ரத்தமும்,கெட்டநீரும் சேர்ந்து  இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

 

அந்த கெட்டநீரை உடனே அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இதையடுத்து  மாணவியின் வயிற்றில் ஒரு பகுதியை சிறிது வெட்டி வழி ஏற்படுத்திய அசுத்த ரத்தம்  மற்றும் கெட்டநீரை வெளியேற்றினார்கள்.

 

மாணவியின் வயிற்று பகுதியில்,பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அடுத்தடுத்து கிருமி  தொற்று ஏற்பட்டப்படி உள்ளது.அந்த கிருமி தொற்றை கட்டுப்படுத்த டாக்டர்கள் மிக  கடுமையாக போராடியபடி உள்ளனர்.இந்நிலையில் அவர் நேற்று வாந்தி எடுத்ததாக  தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவரது உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

 

http://news.vikatan.com/?nid=11753#cmt241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.