Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டம் ஒரு கழுதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டோனி மார்டின், இங்கிலாந்தின் ஒரு விவசாயி.
 
இவர் பண்ணை வீட்டினுள் அடிக்கடி புகுந்து அவரது பொருட்களை திருடி கொண்டு போகும் திருட்டுப் பயல்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்து, ஒரு நாள் இரவு துப்பாக்கியுடன் காத்திருந்தார் அவர்.
 
நள்ளிரவு நேரம். மெதுவாக இரு கொள்ளையர்கள் வேலி மேலாக பாய்ந்து குதித்து உள்ளே வந்தார்கள்.
 
முதல் வெடியில் ஒருவர் காலி. அடுத்த வெடியில், வேலி மேலால் பாய்ந்து ஓட முயன்ற அவரது கூட்டாளி காலில் காயத்துடன் தப்பி விட்டார். 
 
(பின்னர் நிரந்தர ஊனம் அடைந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார்.)
 
கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு டோனி மார்டின் நீதி மன்றில் நிறுத்தப் பட்டார்.
 
தனது சொத்தினை பாதுகாக்க முயன்ற டோனி மார்டினா, அல்லது 'இடர்' (risk) எடுத்து திருட வந்து கொலையானவரா, குற்றவாளி என பிரித்தானிய மக்கள் குழம்பினார்கள். வாதப் பிரதி வாதங்கள் நடந்தன.
 
சிறை சென்று மீண்ட டோனி மார்டின் விரைவிலேயே மக்கள் திலகம் (hero) ஆகி விட்டார்.
 
அதே இங்கிலாந்தின் வேறுஒரு பகுதி.
 
சில மாதங்களுக்குப் பின்னர் ஓர் தபால் நிலையத்தில் திடீரென புகுந்தனர் நான்கு முகமூடிக் கொள்ளையர்கள். மூவர் மக்களை கீழே படுக்குமாறு பணிக்க, ஒருவர் தடுப்பின் மேலாக தபால் அதிபரை நோக்கிப் பாய்ந்தான்.
 
கையில் இருந்த தபால் திறக்கும், கூரான, ஆயுதத்தினால், ஒரே குத்து. கொள்ளையன் வலியில் அலறிய  சத்தத்தில், ஏனையோர், கொள்ளையினை மறந்து, காயமடைந்த சகலையை தூக்கிக் கொண்டு தப்பி ஓடினர்.
 
எனினும் சகலை உயர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதனால், தெருவில் போட்டு விட்டு ஓடி விட்டனர். போலிசாரினால் மீட்கப் பட்டு பின்னர் வைத்தியசாலையில் இறந்தது போனார் அவர்.
 
தபால் அதிபர் மீது எவ்வித குற்றமும் சுமத்தி வழக்கு எடுக்கப் போவதில்லை என பொலிசார் அறிவித்தார்கள்.
 
மக்கள் மேலும் குழம்பினர். 
 
பொலிசார் சொன்னது: முதலாவது: திட்டமிட்ட கொலை, இரண்டாவது தற்பாதுகாப்பு.
 
அண்மையில், அதே இங்கிலாந்தில் ஆசிய இனத்தவர் வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையன், வீட்டில் இருந்த எல்லோரையும் கட்டி வைத்து கொள்ளை அடித்து, வீட்டினை விட்டு வெளியேறுகையில், கட்டினை அவிழ்த்துக் கொண்ட வீட்டுக்காரர், துரத்தி சென்று வீதியில் பேஸ் பால் மட்டையால் தாக்க, கொள்ளையன் கோமா நிலையில் வைத்தியசாலையில் பல நாட்கள் இருந்து மீண்டு, பின்னர் நஷ்ட ஈடு கேட்டு 'அபத்த' வழக்குப் போட்டார்.
 
இடையே பொலிசார் வீட்டு உரிமையாளர் மீது கொள்ளையனை, தனது வீட்டில் இல்லாது, வீதியில் தாக்கியது கொலை நோக்கம் கொண்டது என வழக்குப் போட்டனர் .
 
எனினும், மக்கள், மீடியா பெரும் ஆதரவு வீட்டு உரிமையாளருக்கு இருந்தது.
 
இறுதியாக, நீதிமன்றில் ஜட்ஜ் ஐயா , வீட்டு உரிமையாளரின் கோபம், வீட்டுக்கு வெளியேயாயினும், உடனடியானது, திட்டமிடப்படாதது, கொள்ளையனாலே தூண்டப்பட்டதும் அதன் தொடர்ச்சியானதும், அடக்க முடியாததும் என, மக்கள் வரவேற்பு கிடைத்த  தீர்ப்பினை அளித்து விடுதலை செய்தார்.
 
இதனால் உங்களுக்கு சொல்ல வருவது என்ன எண்டால், உங்கள் வீட்டுக்கு கொள்ளையர் வந்தால், 'அண்ண, பால் கோப்பியா, ப்ளேன் கோப்பியா? குடிச்சுப் போட்டு ஆறுதலா எடுக்கிறதை எடுங்கோவன்' எண்டு சொல்லிப் போடுங்கோ.
 
அடியை கிடியைப் போட்டு விட்டு அவதிப் படாதீங்கோ.
 
சட்டம் உங்கள் வீடு புகுந்து கொள்ளை அடிக்க வரும், கொள்ளையர் பக்கம் இருப்பது போல் இருப்பினும், மக்களும், பொலிசாரும் சட்டத்தினை  மாத்து மாறு கோரியும் அரசு தயங்கக் காரணம் என்ன?
 
வேறு என்ன: பிடிக்காத ஒருவரை வீட்டுக்கு தேத்தண்ணி குடிக்க வாங்கோவன் என்று கூப்பிட்டு, சாத்தோ, சாத்து எண்டு சாத்திப் போட்டு, ஏன் ஆளையே முடித்து விட்டு, மாஸ்டர் கொள்ளை அடிக்க வந்தார். தற்காப்பு முயற்சி கொலையில் முடிந்து விட்டது என சிலர் சொல்லக்கூடும் அல்லவா.
 
கொள்ளையருக்காக எதிராக கொண்டு வரக் கூடிய சட்டத்தில் கொள்ளை நோக்கத்தில் வராத அப்பாவிகள் பாதிக்கப் படலாம்  என்பதே அரசின் கவலை.
 
என்ன இருந்தாலும் பொறுப்பான அரசுகள் அல்லவா. 
 
நான்கு குற்றவாளிகள்  தப்பினாலும்  ஒரு அப்பாவி கூட பாதிப்புறக் கூடாது என்பது தானே, சட்டத்தின் அடிப்படை அம்சம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்க்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நாதமுனி!

தனிப்பட்ட ஒருவரின், 'தற்பாதுகாப்பு', அவர் தேவைக்கதிமான அளவு, பலத்தை உபயோகித்தாரா  ( Reasonable Force)  என்பன கவனத்தில் எடுக்கப் படும் என்று நினைக்கின்றேன்!

தேவைக்கதிகமான பலம் ( reasonable force)  என்பதை, எப்படி அளவிடுவது என்பதும், ஒரு பிரச்சனை தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.