Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்

Featured Replies

ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்


திருச்சி வேலுசாமி, தொகுப்பு: பா.ஏகலைவன்
 
 
 

 அந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்று முழுமையாகத் தெரியவில்லை. இந்தியப் பிரதமர் நாற்காலியில் இருந்த ராஜீவ் காந்தியின் பச்சைப் படுகொலையில்கூட இத்தகைய மெத்தனமான விசாரணை நடத்த முடியுமானால் சாமான்யனின் மரணத்தில்? சட்டத் தின் ஆட்சி என்பது பல முக்கியமான நிகழ்வுகளில் தனி மனிதர்களின் ஆட்சியாக மாற்றப்படுகிறது என்பதற்கு உதாரணம் சொல்லக்கூடிய வழக் காக ராஜீவ் கொலைச் சதி அமைந்திருப்பதாகவே முடிவுக்கு வரத் தூண் டுகிறது இந்தப் புத்தகம்!

ராஜீவ் கொலை சம்பந்தமாக இரண்டு முக்கியமான புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. ஒன்று, அதன் விசாரணையைத் தலைமையேற்று நடத்திய வி.ஆர்.கார்த்திகேயன் எழுதியது. இன்னொன்று, அவருக்குக் கீழே பணியாற்றிய ரகோத்தமன் எழுதியது. விசாரணை மற்றும் தீர்ப்பை அடிப்படையாக வைத்து கார்த்திகேயன் எழுதினார். சி.பி.ஐ. சில விஷயங்களைக் கண்டும் காணாமல் விட்டு விட்டது என்பதை ரகோத்தமன் சுட்டிக் காட்டினார். வேலுசாமியின் இந்தப் புத்தகம், விசாரணையின் அடித்தளத்தையே தகர்க்கிறது. 'எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்பது கிராமத்துப் பழமொழி. எய்தது யார் என்பதே வேலுசாமி திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி!

p14.jpg

 

சம்பவம் நடந்த காலத்தில் சுப்ரமணியன் சுவாமியுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் வேலுசாமி, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விவரிக்கிறார். அன்றைய தினம் சென்னையிலும் இல்லாமல் டெல்லியிலும் இல்லாமல் சுவாமி தன்னுடைய இருப்பை மறைத்துக்கொண்டதும், ஜெயின் கமிஷனில் பதில் அளிக்க முடியாமல் திணறியதும் சுப்ரமணியன் சுவாமிக்காக வாழப்பாடி ராமமூர்த்தி பேசியதும், காஞ்சிபுரத்தில் நடந்த திடீர் யாகமும், சுவாமியுடன் இலங்கைப் பெண் ப்ரியதர்ஷினி மற்றும் சீறிசபா ரத்தினத்தின் சகோதரர் ஸ்ரீகாந்தா ஆகியோர் தொடர்பில் இருந்ததும்... என்று தன் கண்ணால் பார்த்த, நேரடியாய் அறிந்த செய்திகளின் பின்னணியை வைத்து சி.பி.ஐ. கண்டுகொள்ளாத பக்கங்களை வேலுசாமி அடுக்குகிறார். இவர் சொல்லும் தகவல்களை சி.பி.ஐ. கண்டுகொள்ளவே இல்லை. ஜெயின் கமிஷன் உதாசீனப்படுத்துகிறது. வேலுசாமியை தனது வீட்டுக்கே வரவழைத்துப் பேசிய சோனியாவும் மௌனம் ஆனது ஏன் என்று தெரியவில்லை.  

 

'கொலைகாரர்கள் சுதந்திரமாகத் திரிவதற்கும் அப்பாவிகள் சிறையில் 21 ஆண்டுகளாக வாடுவதற்கும் இந்தப் புலனாய்வுப் போக்குதான் காரணம். அவர்களின் கைகளைக் கட்டி, வேண்டுமென்றே விசாரணையைத் திசை திருப்ப அல்லது முடக்கி வைக்க இருந்தார்களோ என்ற சந்தேகத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்’ என்று, தன்னடக்கத்தோடு வேலு சாமி கூறி இருந்தாலும், அவர் சொல்லும் நிகழ்வுகள் இந்தியாவின் அஸ்திவாரத்தை அசைக்கும் பன்னாட்டுச் சதி வலையின் பின்னணி கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய உளவுத் துறையும் உள் துறையும் படிக்க வேண்டிய ஏராளமான பாடங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. தூக்குக் கயிற்றில் நிஜம் தொங்கிக்கொண்டு இருக்கிறது. கருணை மனு போட்டுக் காத்திருக்கிறார் வேலுசாமி!

 

- புத்தகன்

 

Junior  vikatan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் புலிகளால், சுட்டுக்கொலை செய்யப்படவில்லை.
இந்திய அரசின் கோவணக் கொள்கையால்.... இந்தியர் திட்டமிட்டு செய்த சதி.
போற..... போக்கிலை, மகாத்மாகாந்தியையும், இந்திராகாந்தியையும்.... புலிகள் தான் சுட்டார்கள் என்று.. சொல்வார்கள்.
சொல்லிட்டிட்டுப் போகட்டும்..... அதுகும், திறமை தானே...

இது ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்னதற்கே அந்தாள் பட்டபாடு நெருங்கி இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை நாங்கதான் செய்தனாங்கள் மன்னித்துக் கொள்ளுங்க என்று அந்தாள் சொல்லியிருந்தால் ......

 

புத்தகம் நல்லா விக்குதுபோலை..... எப்படி போட்டா எப்படி உழைக்கலாம் என தெரிஞ்ச ஆளப்பா... ம்......

 

நியானி:  சில சொற்கள் தணிக்கை

Edited by நியானி

இது ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்னதற்கே அந்தாள் பட்டபாடு நெருங்கி இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை நாங்கதான் செய்தனாங்கள் மன்னித்துக் கொள்ளுங்க என்று அந்தாள் சொல்லியிருந்தால் ......

 

புத்தகம் நல்லா விக்குதுபோலை..... எப்படி போட்டா எப்படி உழைக்கலாம் என தெரிஞ்ச ஆளப்பா... ம்......

 

நியானி:  சில சொற்கள் தணிக்கை

 

 யாரை சொல்லுறீங்க? யாரை சொல்லுறீங்க? நீங்கள் Melbourne Thu?

இது ஒரு துன்பியல் சம்பவம் என்று சொன்னதற்கே அந்தாள் பட்டபாடு நெருங்கி இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை நாங்கதான் செய்தனாங்கள் மன்னித்துக் கொள்ளுங்க என்று அந்தாள் சொல்லியிருந்தால் ......

 

புத்தகம் நல்லா விக்குதுபோலை..... எப்படி போட்டா எப்படி உழைக்கலாம் என தெரிஞ்ச ஆளப்பா... ம்......

 

நியானி:  சில சொற்கள் தணிக்கை

 

 உங்களை சாத்திரியின் திரிக்கு நீங்க எழுதியபோதே தெரிந்துவிட்டது. அத்துடன் அந்தாள் என்று யாரை சொன்னீங்க?  

 

தேசத்தின் குரல் பாலா அண்ணவையா?

 

அவரின் வயதிற்க்கும், சேவைக்கும், அறிவுக்கும் கால் தூசிக்கு கூட யாரும் ஈடாக மாட்டார்கள்

 

 அவரைப்பற்றி எழுதும்போது ஒரு பண்பாக என எழுத வேண்டாமா இதுதான் உங்களின் தராதரமா?

 

நியானி இதை நீங்க கவனிக்கவில்லையா அல்லது வேணுமென்றே விட்டுவிட்டீர்களா?

சோனியாவுடன் தனிப்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்த  ராஜீவை வைத்து யார் யாரோ எல்லாம் புத்தாகம்  எழுது விக்கிறார்கள்.

வேலுசாமி High Court/Supreme Court க்கு போயிருக்கலாம் தானே...சரியான சாட்சியிருந்தால் எல்லாம் வெளிவரும் தானே...

சோனியாவுடன் தனிப்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்த  ராஜீவை வைத்து யார் யாரோ எல்லாம் புத்தாகம்  எழுது விக்கிறார்கள்.

 

இதில் 'புலிகளை' இணைக்க மறந்து விட்டீர்கள்  :D

இதில் 'புலிகளை' இணைக்க மறந்து விட்டீர்கள்  :D

 

ராஜீவை நெருங்கும் பலம் புலிகளிடம் இருந்ததா?

அவர்களின் பலத்துக்கு டக்கிலஸும்  அவர்களிடம் இருந்து பிரிந்த கருணாவும் தான் சரி :D:lol:

ராஜீவை நெருங்கும் பலம் புலிகளிடம் இருந்ததா?

அவர்களின் பலத்துக்கு டக்கிலஸும்  அவர்களிடம் இருந்து பிரிந்த கருணாவும் தான் சரி :D:lol:

 

எல்லா கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் மற்றும் கையாலாகதவர்களும் புலிகளை குறை சொல்லவும் அவர்கள் தலைமேல் பழியை போடவுமே தெரியும்/முடியும்  :D  :D

செய்யாத குற்றத்தையும்  தற்பெருமைக்காக  சுமக்கவும்  ஒரு கூட்டம் தேவைதான்.

தமிழனுக்கு நாடு இல்லை. நல்ல தலைமை இல்லை.

ஒரு ஒழுங்கான தலைமை கொஞ்ச நாள் கிடைத்தது.

எமக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பலமான எதிரிகள் எமது இனத்தின் தலையில் கொலைகளை கட்டி விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனுக்கு நாடு இல்லை. நல்ல தலைமை இல்லை.

ஒரு ஒழுங்கான தலைமை கொஞ்ச நாள் கிடைத்தது.

எமக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பலமான எதிரிகள் எமது இனத்தின் தலையில் கொலைகளை கட்டி விட்டார்கள்

 

 

அதை  எதிரி  மறந்தாலும்

நாம் விடாது காவித்திரிகின்றோம்

எம்மை  சொறிவதில்  இருக்கும் இன்பம்..............???? :(  :(  :(

இதுவும் வில்லர்கள் இல்லாமல் கதாநாயகர்கள் மட்டும் நடிக்கும் நாடகம்.

எழுபது பேர் அறுபது தேங்காயை முக்கி முக்கி சுமந்தார்களாம். I.V.சசி நாடக மன்றத்தின் பெருமையை தானும் சுமக்க என்று ஓடோடி வந்து  எழுபத்தொன்றாவதாக முக்கி முக்கி சுமக்கிறார்.

தமிழனுக்கு நாடு இல்லை. நல்ல தலைமை இல்லை.

ஒரு ஒழுங்கான தலைமை கொஞ்ச நாள் கிடைத்தது.

எமக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் பலமான எதிரிகள் எமது இனத்தின் தலையில் கொலைகளை கட்டி விட்டார்கள்

ராஜீவை கொலை செய்தது  புலிகள் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை , சரி புலிகள் செய்யவில்லை என்றாலும்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதுவும் வில்லர்கள் இல்லாமல் கதாநாயகர்கள் மட்டும் நடிக்கும் நாடகம்.

எழுபது பேர் அறுபது தேங்காயை முக்கி முக்கி சுமந்தார்களாம். I.V.சசி நாடக மன்றத்தின் பெருமையை தானும் சுமக்க என்று ஓடோடி வந்து  எழுபத்தொன்றாவதாக முக்கி முக்கி சுமக்கிறார்.

 

:D  30 வருசமா முக்கும் போது பேசாமல் இருந்து விட்டு 3 வருசமாக முக்குபவர்கலை பார்த்து ஏன் மூகு சிந்துறீங்கள்? :lol:

இதுவும் வில்லர்கள் இல்லாமல் கதாநாயகர்கள் மட்டும் நடிக்கும் நாடகம்.

எழுபது பேர் அறுபது தேங்காயை முக்கி முக்கி சுமந்தார்களாம். I.V.சசி நாடக மன்றத்தின் பெருமையை தானும் சுமக்க என்று ஓடோடி வந்து  எழுபத்தொன்றாவதாக முக்கி முக்கி சுமக்கிறார்.

 

58604_524901664209951_593258467_n.jpg

:D  :D  :D  :D  :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.