Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி - முதல் பொதுக் குழுக் கூட்டம்: - தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்குவது என தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Namthamilar-211212-chennai-150.jpg

சென்னை - தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.

தீர்மானம் 1

 

தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும்; நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்து சிறப்பாக செயலாற்றி வந்த நிலையில், இன எதிரிகளின் சதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பரிதி என்கிற மதீந்திரன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

 

தீர்மானம் 2

 

தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய, இன விடுதலைப் போருக்குத் துணை நின்றவர்கள், பொதுமக்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நமது தாய்த் தமிழ் மண்ணிற்கு ஏதிலிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரை ஐயத்தின் பேரிலும், சிங்கள இனவெறி அரசின் உளவுத் துறை பரிந்துரையின் பேரிலும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தமிழக காவல்துறையின் க்யூ பிரிவினர் கைது செய்து சிகப்பு முகாம்கள் என்ற பெயரில் இருந்துவரும் தனிமைச் சிறைகளில் அடைத்து வதைத்து வருகின்றது.

 

சமீபத்தில் சென்னை, பல்லாவரத்தையடுத்த பொழிச்சலூரில் காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியில் வாழ்ந்து வரும் 4 பேரை க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சட்டப்படி அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாற்றும் கூற முடியாத நிலையில், அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதில் பயிற்சி எடுத்து வந்தார்கள் என்று ஒரு காரணத்தைக் கூறி, சுரேஷ் குமார், மகேஸ்வரன், உதயதாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளது. க்யூ பிரிவு காவல் துறையின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

மனிதாபிமானத்திற்கும், இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ள பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்திற்கும் முரணான இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நம் தமிழீழ சொந்தங்கள் அனைவரையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் 3

 

சமூக நல்லிணக்கம் தழைத்துவரும் தமிழ்நாட்டில் சமீக காலமாக நடந்துவரும் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. தமிழர்களிடையே நிலவிவரும் சகோதர மனப்பாங்கை சிதைக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகளின் பின்னணியில் சாதிய அடிப்படையில் அரசியல் செய்துவரும் சக்திகள் உள்ளன என்பதை தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இப்படி தமிழினத்திற்குள் சாதி அடிப்படையிலான மோதலையும், தாக்குதல்களையும் திட்டமிட்டு உருவாக்கி, சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைத்துவரும் அரசியல், சமூக அமைப்புகளையும், அதில் நேரடியாக ஈடுபட்ட நபர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. சாதிய வெறியையும், வெறுப்புணர்ச்சியையும் தூண்டிவிடும் சக்திகளை வேகமாக விசாரணை செய்து தண்டிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 4

 

தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் தமிழினத்தோரை ஒன்றிணைத்து போராடி வரும் ஜனநாயக இயக்கமான நாம் தமிழர் கட்சி, வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்குவது என்று இந்த முதல் பொதுக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

 

Namthamilar-211212-chennai-(1).jpg

 

 

Namthamilar-211212-chennai-(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=72474&category=TamilNews&language=tamil

அரசியலில் இறங்குவது என்ற முடிவிற்கு வாழ்த்துக்கள்.

 

தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் வாழ்வில் இந்தக்கட்சி அரசியல் ஊடாக மாற்றங்களை கொண்டுவந்து தமிழனை தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல முடிவு ......... வரவேற்கின்றேன், வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்தக் காணொளியைப் பார்த்தேன். நேரடியாகப் பேசும் அவரது இயல்பு தமிழக அரசியலுக்குப் புதுசு. :D

http://www.youtube.com/watch?v=thCoCGlRliQ

அதுதான் கனடாவில் இருந்து பக் அப் பண்ணினார்கள் .

முதலில் தான் என்ன கதைக்கிறன் ,எங்கு கதைக்கின்றன் என்று விளங்கும் பக்குவம் வேண்டும் .

இவர் விஜயகாந்து அளவு கூட வரமாட்டார் ,வெறும் உணர்ச்சி அரசியல் .

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் முதல்வர் மோடிக்கு கூட அமெரிக்கா செல்வதற்கு எத்தனயோ தடவை விசா மறுக்கப்பட்டது இன்று நான்காவது தடவையாகவும் முதல்வர் எதிர்கால பிரதமர் கூட ஆகலாம் இத்தனைக்கும் அவர் குஜாரத்தில் நடாத்தியது வெறும் டீ கடை இப்போ அமெரிக்கா பிரிட்டிஷ் தூதுவர்கள் ஓடி ஓடி சென்று மோடியை சந்திக்கிஆர்கல்

அரசியலில் பேச்சுத்தான் முக்கியம் அர்ஜுன் அண்ணா அதாவது மாத்தி மாத்தி மாறி மாறி பேசவேண்டும் தமிழக அரசியலில் that is call அரசியல் வெரி சிம்பிள்

கனடாவில் இருந்து அவர் திருப்பி அனுப்ப பட்டதற்காக அவருடைய அரசியல் வாழ்வு ஒன்றும் அஸ்த்தமித்து போக போறதில்ல

  • கருத்துக்கள உறவுகள்

உணர்சிகளின் இருப்பிடம் தான் தமிழக அரசியல் என்பதும் உணர்ச்சியாக பேசினால் தான் தமிழக அரசியல் வானில் சிறகடித்து பறக்க முடியும் என்பதும் தமிழ் நாட்டில் பல வருடங்கள் இருந்த அர்ஜுன் அண்ணாக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமே

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல ஹிந்தி மொழி திணிப்பு போராட்டங்களின் போது கருணாநிதி பேசாத உணர்சிகரமான உரைகளையா சீமான் பேசிவிட்டார்?

வெறும் இயக்காமாக நடத்தாமல் அரசியலில் இறங்க முடிவெடுத்ததே பெரிய விஷயம் ஒரு சட்டசபை உறுப்பினராக ஆரம்பித்து இன்று எதிர்க்கட்சி தலைவாராக விஜய கானத்தால் இருக்க முடியும் எண்டால் ஏன் சீமானால் முடியாது விஜையகாந்தை விடவா சீமான் உணர்ச்சிவசப்பட்டவர்? விஜயகாந்த் தன்னுடைய கட்சி காரர் எல்லாருக்கும் கோபம் வந்தா கன்னத்தில தான் சாத்துவார்......

யார் யாரோ எல்லாம் அரசியலுக்கு வரும் போது ஏன் சீமான் வரக்கூடாது

என்ன உங்கள் கண்ணை குத்துவது அவர் புலிகளின் ஆதரவாளர் அவளவு தான்

வெறும் உணர்ச்சி வசப்பட்ட வைகோ விற்கு என்ன நடந்தது ,ஒருநாளும் உணர்ச்சி வசப்பாடாத ஜெயலலிதா எப்படி முதல்வரானார் .

மோடி ஒரு மதவாதி குஜராத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு பெரும் காராணமானவர்.அதனால் தான் அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தும் தற்போதைய அவர் செல்வாக்கு கண்டு நிலையை மாற்றுவதும் அனைவரும் அறிந்ததுதான் .அப்படி ஒரு நிலைக்கு சீமான் வந்தால் கனடா அமெரிக்கா எல்லாம் செங்கம்பளம் விரிக்கும் ,

அதை விட்டு முளைக்கு முதலே கனடா வந்து என்ன கதைக்கின்றன் என்று தெரியாமல் எம்மவர்களை உசுப்பேத்த  மட்டும் தெரிந்த சீமானை மோடியுடன் ஒப்பிடவே முடியாது .

எம்மவர் செய்யும் அரசியலும் உதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேர்தலுக்கு முதல் ஜெயலலிதா உணர்ச்சிவசப்பட்டு மதுரையில் பேசிய பேச்சுக்களை கேக்க வில்லைபோல் உள்ளது முடிந்தால் கேட்டு விட்டு வந்து பேசுங்கள் அவன தூக்கி உள்ள போடுவன் இவனத்தூக்கி உள்ளபோடுவன் எண்டு அந்தம்மா எப்பிடி ஆவேசமா பேசினவங்க ன்னு பாருங்க

எத்தனையோ மாவட்ட செயலாளர்களை என்னோட கண்ணுக்கு முன்னாலை நிக்காத போய்டு எண்டு திட்டி இருக்கார் எல்லோர்முன்னாலும்

போயஸ் கார்டினில் இருக்கும் அவருடைய வீடிற்கு சென்ற ஆடிடோர் ஒருவரை செருப்பால் தாக்கியது எல்லாம் கேள்விப்படவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

http://m.youtube.com/watch?v=39fXmc2ZwG4 :D

இத விட சீமான் பருவால்ல

Edited by SUNDHAL

போன ஊராட்சி தேர்தலிலே நாம் தமிழர் கட்சி சில வேட்பாளர்களை நிறுத்தி வெள்ளோட்டம் பார்த்து விட்டார்கள். களத்தில் இறங்கி வேலை பர்ர்க்க இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் (நான் கண்டது). தமிழகத்தில் நடக்கும் சாதிய விடயங்களுக்கு எப்படி முகம் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே கட்சியின் வளர்ச்சி இருக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு மத்திய கிழக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் நானும் எனது நண்பர்களும் கலந்து கொண்டோம். அப்பொழுது அவர்களுக்கு பல விடயங்களில் தெளிவான பார்வை இருக்கவில்லை. இப்பொழுது ஒரு தெளிவு இருக்கிறது. "வாழும் உரிமை யாருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே" என்று எழுப்பும் முழக்கம் வெற்றி கொடுக்கும் என்றே நம்புகிறேன். மக்களை எழுப்ப உணர்ச்சி பேச்சு தேவை. மீடியாக்களும் படித்த வர்க்கமும் இதை குறை கூறலாம்.ஆனால் சாதாரண மக்களுக்கு இது தேவையாயிருக்கிறது. 
 
மாற்றம் ஒன்றே மாறாதது. அந்த மாற்றத்தை சீமான் தொடக்கி வைத்து விட்டார். இனி திராவிடம் என்ற சொல்லும் திராவிட அரசியலும் தமிழகத்தில் மெல்ல சாகும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.