Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயச்சுமை

Featured Replies

என் தோளில் சாய்ந்து சிரிப்பாள்,
என் நெஞ்சில் முகம் புதைத்து அழுவாள்,
பலமுறை அவளைச் சுமந்திருக்கிறேன்!
அப்பொழுதெல்லாம் சுமையாகத் தெரியாதாவள்...
இப்பொழுது தன் நினைவுகளாலேயே பாரமாக்குகிறாள்!

 

கனத்துத் தொங்கும் என் இதயம்...
அறுந்துவிழத் துடிக்கிறது...!

என் இதயத் துடிப்புகளின்
கடைசி ஏக்கங்கள்கூட...
அவளுக்குத் தெரியாமலே
அடங்கிப் போகலாம்!

 

ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள்,
ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு...
தெரியாமலேயே போகட்டும்!

ஆடி முடிந்து வரும்போது...
எல்லாமே அடங்கிப் போயிருக்கும்!

 

பல காதல்களின் சரித்திரங்களைப் போலவே...
என் காதலின் ஆத்மாவும்...
கல்லறைக்குள்ளேயே முடங்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை. நன்றிகள். கனத்துத் தொங்குது, ஆடுது, ஊசலாடுது எல்லாமே அடங்கி போகட்டும் இப்படியெல்லாம் விளக்கிய அந்த பொருள் உண்மையில் இதயம் தானா என்றுதான் சற்று சந்தேகம்.

ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள்,
ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு...
தெரியாமலேயே போகட்டும்!

ஆடி முடிந்து வரும்போது...
எல்லாமே அடங்கிப் போயிருக்கும்!

 

இதாலை ஆருக்கு என்ன லாபம் கவிதை ?? ஒவ்வொரு வீழ்விலும் ஒவ்வொரு எழுச்சி உள்ளது . ஒரு இதயம் றெட் சிக்னல் காட்டினால் உலகமே இல்லை எண்டு நினைக்கிறதுல கடைஞ்செடுத்த முட்டாள்தனம் .

  • கருத்துக்கள உறவுகள்

கனத்துத் தொங்கும் என் இதயம்...

அறுந்துவிழத் துடிக்கிறது...!

என் இதயத் துடிப்புகளின்

கடைசி ஏக்கங்கள்கூட...

அவளுக்குத் தெரியாமலே

அடங்கிப் போகலாம்!

 

 

ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள்,

ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு...

தெரியாமலேயே போகட்டும்!

ஆடி முடிந்து வரும்போது...

எல்லாமே அடங்கிப் போயிருக்கும்!

 

 

 

உன் அன்பு புனிதமானது...
அதைத் தொலைத்தவள் பைத்தியக்காறி..
எல்லாம் ஆடி அடங்கும் ஒரு நாள் வரும்..உடல் தளர்ந்து நடை பிழக்கும் நேரத்தில் கைதாங்க யாருமில்லா கணத்தில் உன் நினைவுகள் அவள் கண்களின் ஓரத்தில் கண்டிப்பாய் ஒரு துளி கண்ணீரை வரவைக்கும்..நீ உயரப் பறந்துகொண்டிரு..அடுத்த அடியையும் வெற்றியாகவே எடுத்துவை...உன்னைதொலைத்தவர்கள் கீழிருந்து உயரப்பறக்கும் உன்னைப்பார்த்து பொறாமைப்படட்டும்..

 

 

 

ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள்,

ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு...

தெரியாமலேயே போகட்டும்!

ஆடி முடிந்து வரும்போது...

எல்லாமே அடங்கிப் போயிருக்கும்!

 

இதாலை ஆருக்கு என்ன லாபம் கவிதை ?? ஒவ்வொரு வீழ்விலும் ஒவ்வொரு எழுச்சி உள்ளது . ஒரு இதயம் றெட் சிக்னல் காட்டினால் உலகமே இல்லை எண்டு நினைக்கிறதுல கடைஞ்செடுத்த முட்டாள்தனம் .

 

கோமகன் அண்ணா...இரக்கமற்ற இதயமற்றவர்களுக்காகவும் நேசிப்பை கொடுக்கும் அற்புதமான இதயங்களை இந்த பூமியில் பார்த்திருக்கிறேன்...அன்பு என்பது எதிர்பார்ப்பு அற்றது..முன்பின் தெரியாத ஒருவருக்காக நேசிப்பையும் அன்பையும் வழங்கும் பராமரிப்புநிலையம்களில் வேலை செய்பவர்களை நினைத்துப்பாருங்கள்..அவர்களாலேயே யார் என்று தெரியாத ஒருவருக்காக அன்பை கொடுத்து பராமரிக்கும் இதயம் இருக்கிறது என்றால்..பலவருடங்களாக நேசித்த,மனதையே கொடுத்துவிட்ட உறவை மறந்து விட்டு இன்னொன்றை பார் என்பது பேச இலகுவாக இருக்கும்..ஆனால் எல்லா இதயங்களாலும் செய்யமுடியாதது..என்னாலும் முடியாது..நான் நினைக்கிறேன் கவிதையும் என் இனம் என்று...ஏமாத்தவேண்டும் என்றே பழகிவிட்டு ஒருவர் எங்களை தூக்கி எறிந்துவிட்டு போனால் அதை நீங்கள் சொல்வதுபோல் மன்னிக்கவே கூடாது..அவர்களுக்காக கவலைப்படுவது வீணாக இருக்கலாம்..ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் பிரித்தவர்கள்;மரணத்தால் தொலைத்தவர்கள்,இன்னொருவரின் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்தவர்கள் என்று பல சொல்லமுடியாத காரணங்களால் பிரிந்துபோன அல்லது பிரிக்கப்பட்ட உன்னதமான காதலர்களும்,உறவுகளும் இப்பூமியில் உள்ளனர்..மரணத்தாலும் மறக்க முடியாத அற்புதமான நேசிப்பை தந்தவர்களை அல்லது அப்படி நேசித்தவர்களை மறந்து போதல் என்னும் ஒற்றை சொல்லால் மறந்துவிடமுடியாது...

Edited by சுபேஸ்

உன் அன்பு புனிதமானது...
அதைத் தொலைத்தவள் பைத்தியக்காறி..
எல்லாம் ஆடி அடங்கும் ஒரு நாள் வரும்..உடல் தளர்ந்து நடை பிழக்கும் நேரத்தில் கைதாங்க யாருமில்லா கணத்தில் உன் நினைவுகள் அவள் கண்களின் ஓரத்தில் கண்டிப்பாய் ஒரு துளி கண்ணீரை வரவைக்கும்..நீ உயரப் பறந்துகொண்டிரு..அடுத்த அடியையும் வெற்றியாகவே எடுத்துவை...உன்னைதொலைத்தவர்கள் கீழிருந்து உயரப்பறக்கும் உன்னைப்பார்த்து பொறாமைப்படட்டும்..

 

 

 

 

கோமகன் அண்ணா...இரக்கமற்ற இதயமற்றவர்களுக்காகவும் நேசிப்பை கொடுக்கும் அற்புதமான இதயங்களை இந்த பூமியில் பார்த்திருக்கிறேன்...அன்பு என்பது எதிர்பார்ப்பு அற்றது..முன்பின் தெரியாத ஒருவருக்காக நேசிப்பையும் அன்பையும் வழங்கும் பராமரிப்புநிலையம்களில் வேலை செய்பவர்களை நினைத்துப்பாருங்கள்..அவர்களாலேயே யார் என்று தெரியாத ஒருவருக்காக அன்பை கொடுத்து பராமரிக்கும் இதயம் இருக்கிறது என்றால்..பலவருடங்களாக நேசித்த,மனதையே கொடுத்துவிட்ட உறவை மறந்து விட்டு இன்னொன்றை பார் என்பது பேச இலகுவாக இருக்கும்..ஆனால் எல்லா இதயங்களாலும் செய்யமுடியாதது..என்னாலும் முடியாது..நான் நினைக்கிறேன் கவிதையும் என் இனம் என்று...ஏமாத்தவேண்டும் என்றே பழகிவிட்டு ஒருவர் எங்களை தூக்கி எறிந்துவிட்டு போனால் அதை நீங்கள் சொல்வதுபோல் மன்னிக்கவே கூடாது..அவர்களுக்காக கவலைப்படுவது வீணாக இருக்கலாம்..ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் பிரித்தவர்கள்;மரணத்தால் தொலைத்தவர்கள்,இன்னொருவரின் வாழ்க்கைக்காக விட்டுக்கொடுத்தவர்கள் என்று பல சொல்லமுடியாத காரணங்களால் பிரிந்துபோன அல்லது பிரிக்கப்பட்ட உன்னதமான காதலர்களும்,உறவுகளும் இப்பூமியில் உள்ளனர்..மரணத்தாலும் மறக்க முடியாத அற்புதமான நேசிப்பை தந்தவர்களை அல்லது அப்படி நேசித்தவர்களை மறந்து போதல் என்னும் ஒற்றை சொல்லால் மறந்துவிடமுடியாது...

 

வாழ்வில் எது தேவை அவசியமா அத்தியாவசியமா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.