Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுவை ரத்தினதுரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதுவை ரத்தினதுரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்?
 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளரும், கவிஞருமான புதுவை ரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள நாளேடான திவயினவின் பாதுகாப்பு செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கவிஞர் புதுவை ரத்தினதுரையை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதுவை ரத்தினதுரை பிரபாகரனின் உத்தியோகபூர்வ கவிஞராகவும் கருதப்படுகின்றார்.

 

Puthuvai.jpg

 

புதுவை ரத்தினதுரையை விடுதலை செய்யும் நோக்கில் இணைய மகஜர் ஒன்றை கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்த ஆண்டின் மே மாதம் 13ம் திகதியும் புதுவை ரத்தினதுரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக திவயின தகவல் வெளியிட்டிருந்தது.

 

புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த யோகரட்னம் யோகியின் மனைவி, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

தமது கணவர், புதுவை ரத்தினதுரை உள்ளிட்ட 50 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக யோகியின் மனைவி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86894/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
உயிரோடு இருந்தால் சந்தோச‌ம்
 
  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளரான கவிஞர் புதுவை இரத்தினதுரை இராணுவத்தின் தடுப்புக்காவலில்? : இந்திய ஊடகங்கள்
2012-12-25 13:53:48
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ளதாக சிங்கள ஊடகமொன்றை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
 
இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு.
 
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.
 
ஏற்கெனவே இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பான சாட்சியமளித்திருந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகரத்தினம் என்ற யோகியின் மனைவி, தனது கணவர் மற்றும், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக கூறியிருந்தார்.
 
இருப்பினும் புதுவை இரத்தினதுரை, பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த புலிகளின் தலைவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாமலேயே இருந்து வந்தது. தற்போது புதுவை இரத்தினதுரையின் நிலையை இலங்கை அரசு தெரிவிக்க கோரி இணையம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள நாளேடொன்று புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

புதுவை இரத்தினதுரை விடுதலைக்கான முன்னறிவிப்பா?

 
 

puthuvai-300x199.jpg

 

இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள், தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) போன்றவற்றின் ஆரம்பகால செயற்பாட்டாளரும் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்துகொண்டவருமான புதுவை இரத்தினதுரை இன்னமும் தடுப்புக்காவலில் உள்ளதாக இலங்கை அரச சார்பு பேரினவாத ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளின்  இலக்கிய நிகழ்வுகளில் இணைந்துகொண்ட  புதுவை பின்நாட்களில் புலிகளின் பிரச்சாரக் கவிஞரானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராகவிருந்த புதுவை இரத்தினதுரை வன்னிப்படுகொலையின் பின்னர் இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

சரணடைந்த புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் புதுவை இரத்தினதுரை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளை புதுவை இரத்தினதுரையை விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரங்களை சிலர் புலம்பெயர் நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://inioru.com/?p=32353

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.