Jump to content

ரங்கன் போய்விட்டான் !


Recommended Posts

kuperan.jpg?fit=500%2C350

 

ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 

 

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

 

இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப்பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவன் தனது இயக்கப்பெயருடனேயே பழகினான்.அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான். பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில்வைத்திருந்து அதன்பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சிமுகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள்.அப்படியான ஒரு

 

தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது.அங்குதான் அவன் குபேரான மாறினான்.அவனின் இயக்கப்பெயர் குபேரன்.அதிலும் ‘சிரிப்புக்குபேரன்’ என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும். 3வது பயிற்சிஅணியில் பயிற்சிபெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்தவீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சிமுகாமின் 6வது 9வது பயிற்சிஅணிகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டராகவும்’ விளங்கினான்.பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான்.அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான்.தாயகம்வந்ததும் யாழ்அணியில் குபேரனும் ஒருவனாகிறான்.

 

தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான்.அதன்பின் யாழ்கோட்டைமீதான் முற்றுகைப்போரில் முக்கியபங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பாராஅண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கியவீரர்களில் ஒருவானாகவும் ரங்கன் விளங்குகின்றான். அதன்பின் பாலாஅண்ணையுடனேயே இந்தியாவந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான்.கேட்டால் ‘அமைப்பைவிட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு
இங்கு இருப்பதாகவும்’ சென்னையில் சொல்லிக்கொண்டிருந்தான்.விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனைவாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிகநிறைய சித்திரவதைகளும் நடந்தேறின.அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களைவைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.

 

முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும்மேற்பட்டோர்) மரணதண்டனையை நீதிமன்றம் வழங்கியது.புலன்விசாரணையை தலைமைதாங்கி நடாத்திய கார்த்திகேயன் ‘இது வாய்மையின் வெற்றி’ என்று புளகாங்கிதம் அடைந்ததார்.அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன்.ஆனாலும் பின்னர்நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான்.ஆனால் இந்த காலத்தில் பத்துவருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடிஇருக்கின்றான். அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழவிடுதலைமீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காணமுடிந்திருந்தது.ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்துகொண்டே இருப்பான்.

 

முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்துவிட்டுபோன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது.ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை.மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்று வேலை செய்யதொடங்கிவிட்டான்.இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கிவிடமுடியாத ஒரு உற்சாகமனிதன் அவன். இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது.அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான்.அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்துவிட்டது. அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது. இறுதிவரைக்கும் தமிழீழநினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.


ச.ச.முத்து

 

http://rste.org/2012/12/29/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/

Link to comment
Share on other sites

இறந்தவருக்கு அஞ்சலி அனால் இவரது கதைதான் புரியவில்லை இந்திய பிரதமர் கொலை வழக்கு விபரங்களில் இவரது விவரங்களை படித்தாக எனக்கு நினைவில்லை விபரங்கள் இருந்தால் இணைத்து விடலாம் அல்லவா ?

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலையில், சந்தேக நபர்களாகக் கைதான முருகன் நளினி போன்றவர்களுடன் கைதாகிய நடராஜா ராஜசூரியர் (ரங்கன்) நேற்றிரவு லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

 

சிறுவயதிலேயே புலிகள் இயக்கத்துக்கு உதவியாளராக செயல்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்தவேளை ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டார். கைதான ரங்கனுக்கு, பழ.நெடுமாறன் ஐயா , வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் வைகோ அவர்கள் உதவினார்கள். இவர்கள் உதவியால் விடுதலையான, ரங்கன் பின்னர், பிரித்தானியாவில் வசித்துவந்தார். லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர், முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்கவேண்டும் என்று கூறிவந்தார்.


பல வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்த ரங்கன் சில மாதங்களுக்கு முன்னர், தாம் குறிப்பிட்டதுபோல, முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மணம் முடிக்க விரும்பி அவரை லண்டனுக்கு அழைத்துள்ளார். வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

Link to comment
Share on other sites

பல தகவல்கள் தவறானவை. ஆனாலும் குபேரனிற்கு அஞ்சலிகள்.85 ம் முதன் முதலாக பலாலி முகாமை சுற்றி காவலரண் அமைக்கும் பணியில் என்னோடு வந்து வசாவிளான் ஒட்டகப்புலம் முகாமில் ஒன்றாக இருந்தவன். பின்னர் ராஜுவ் கொலையுடன் சட்பந்தப் பட்ட சிவராசன் குழுவினருடன் பெங்களுரில்  ரங்கநாத்தின் வீட்டில் தங்கியிருந்த போது குபேரன் வெளியே பெற்றோல் வாங்க போயிருந்தான்  அவன் திரும்பி வந்போது ரங்கநாத் வீடு சுற்றி வழைக்கப்பட்டிருந்தது அங்கிருந்து தப்யோடி தமிழ் நாட்டிற்குள் வர முயன்றபோது வழியில் வைத்தே காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தான்.பொன்னம்மான்  ஊருக்கு வந்தது  86ம் ஆண்டு  நாவற்குழி முகாம் தாக்குதலிற்கு சில காலத்திற்கு முன்னர். குபேரன் 84ல் இருந்தே யாழில்தான் இருந்தான். லண்டனில் வசித்த இவர் ஏற்கனவே  திருமணமாகி மறமுறிவு பெற்றவர். அண்மையில்தான் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய லண்டனிற்கு அழைத்திருந்தார். இவரது மரணம் நடந்த வேளை நான் இலண்டனில் நின்றிருந்தேன் மரண வீட்டிற்கு போவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

 

ஜனனம்: 29.12.63 மரணம்: 27.12.12
காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட
ரங்கன் மற்றும் குபேரன் என அழைக்கப்படும் நடராஜா இராஜசூரியர் இன்று 27.12.12 காலமானார்.
அன்னார் நடராஜா, தனபாக்கியம் (இந்தியா) ஆகியோரின் அன்பு மகனும், இராஜமோகனா (ரதி - இலண்டன்), இராஜயோகன் (ரமணன் -கனடா), இராஜாம்பிகை (ரூபி - இலண்டன்), இராஜபிரகாஸ் (ருத்திரா - இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்தித் (இலண்டன்), சகுந்தலா (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்), சமரன், சரித்திரா (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி, மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். . லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர்,வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் - மைத்துனர் - இலண்டன்
07850648395

இராஜாம்பிகை - ருபி - சகோதரி - இலண்டன் - 07413726545

இராஜயோகன் - ரமணன் - சகோதரன் - கனடா -
00 1 4389 309 241

இராஜபிரகாஸ் - ருத்திரா - சகோதரன் இந்தியா -
00 91 44 245 10 468

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தகவல்கள் தவறானவை. ஆனாலும் குபேரனிற்கு அஞ்சலிகள்.85 ம் முதன் முதலாக பலாலி முகாமை சுற்றி காவலரண் அமைக்கும் பணியில் என்னோடு வந்து வசாவிளான் ஒட்டகப்புலம் முகாமில் ஒன்றாக இருந்தவன். பின்னர் ராஜுவ் கொலையுடன் சட்பந்தப் பட்ட சிவராசன் குழுவினருடன் பெங்களுரில்  ரங்கநாத்தின் வீட்டில் தங்கியிருந்த போது குபேரன் வெளியே பெற்றோல் வாங்க போயிருந்தான்  அவன் திரும்பி வந்போது ரங்கநாத் வீடு சுற்றி வழைக்கப்பட்டிருந்தது அங்கிருந்து தப்யோடி தமிழ் நாட்டிற்குள் வர முயன்றபோது வழியில் வைத்தே காவல்துறையால் கைது செய்யப் பட்டு சிறையில் இருந்தான்.பொன்னம்மான்  ஊருக்கு வந்தது  86ம் ஆண்டு  நாவற்குழி முகாம் தாக்குதலிற்கு சில காலத்திற்கு முன்னர். குபேரன் 84ல் இருந்தே யாழில்தான் இருந்தான். லண்டனில் வசித்த இவர் ஏற்கனவே  திருமணமாகி மறமுறிவு பெற்றவர். அண்மையில்தான் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்ய லண்டனிற்கு அழைத்திருந்தார். இவரது மரணம் நடந்த வேளை நான் இலண்டனில் நின்றிருந்தேன் மரண வீட்டிற்கு போவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை.

 

ஜனனம்: 29.12.63 மரணம்: 27.12.12

காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட

ரங்கன் மற்றும் குபேரன் என அழைக்கப்படும் நடராஜா இராஜசூரியர் இன்று 27.12.12 காலமானார்.

அன்னார் நடராஜா, தனபாக்கியம் (இந்தியா) ஆகியோரின் அன்பு மகனும், இராஜமோகனா (ரதி - இலண்டன்), இராஜயோகன் (ரமணன் -கனடா), இராஜாம்பிகை (ரூபி - இலண்டன்), இராஜபிரகாஸ் (ருத்திரா - இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவரஞ்தித் (இலண்டன்), சகுந்தலா (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்), சமரன், சரித்திரா (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னார் காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையாபிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலம் சென்ற சோமநாதர் சின்னத்தம்பி, மீனாட்சிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இறுதிக்கியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். . லண்டனில் உள்ள ஸ்டோன்லி அம்மன் கோவில், தொண்டராகப் பணி புரிந்துவந்த இவர்,வழமைபோல ஆலய திருப்பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய அவர் உறங்கியவேளை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமான அவர் இன்று அதிகாலை மரணமானார் என்று மேலும் அறியப்படுகிறது.

தொடர்புகளுக்கு:

சிவரஞ்சித் - மைத்துனர் - இலண்டன்

07850648395

இராஜாம்பிகை - ருபி - சகோதரி - இலண்டன் - 07413726545

இராஜயோகன் - ரமணன் - சகோதரன் - கனடா -

00 1 4389 309 241

இராஜபிரகாஸ் - ருத்திரா - சகோதரன் இந்தியா -

00 91 44 245 10 468

 

தகவலுக்கு நன்றி சாத்திரி  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.