Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் அடுத்த பலி யார்? டக்ளஸா, கருணாவா?

Featured Replies

இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில் மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.



traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma



இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு.

 

ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள் என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு. அந்தக் கொலைகளை நாங்கள் செய்யவில்i என புலிகள் உரத்த குரலில் கூறியபோதும் உலகம் இதனை நம்பவில்லை.

சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்ட சிங்கள அரசை, பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்துவதற்கு பதிலாக தமிழரின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக உலகம் பிரகடனப்படுத்தியது தமிழருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.

 

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பல தமிழ் இளைஞர்களின் கொலைக்கு காரணமாக இருந்தவர் என்பது உண்மைதான். ஆனால் அவரை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை.


அவர் மேல்மாகாணசபைத் தேர்தலின்போது ஐ.தே.க.வின் சார்பில் போட்டியிட்டவர். அவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாயிருந்தது. அங்கு நிச்சயம் வெற்றிபெற முடியாது என்பதை அரசு உறுதிசெய்ததின் பின்பே அவரைக் கொலை செய்யத்திட்டம் வகுக்கப்பட்டது.

 

அந்தத் திட்டத்திற்கு கருணா தலைமை தாங்கினார். குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டு வைத்தே அவர் கொல்லப்பட்டார். அவருடன் 60 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறான கொலைகளை அதாவது ஒருவரைக் கொலை செய்வதற்காக 59 பொதுமக்களை பலி கொடுப்பதை விடுதலைப் புலிகள் செய்ய மாட்டார்கள்.


மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் கருணா நியமன எம்.பி.யாக மகிந்தவினால் நியமிக்கப்பட்டார். மகிந்த அரசு எதிர்பார்த்ததைப் போன்றே அப்போது மேல்மாகாண சபைத் தேர்தலில் அவரின் கட்சி வெற்றிபெற்றது.

புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஜானக பெரேரா கொல்லப்பட்டதாக மகிந்த அரசு செய்த பரப்புரையை ஐ.தே. கட்சியும் நம்பிவிட்டது. அவர்களும் புலிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததினால் உலகம் புலிகளை பயங்கரவாதிகளென தவறாகக் கணித்துவிட்டது. இவ்வாறானதொரு சந்தர்ப்பம் மகிந்த அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.


உள்நாட்டிலும் பல பிரச்சனைகள். வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் குறைவில்லை. பிரதம நீதியரசர் விவிகாரம், யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது, வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கொலைகள் என பல பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மகிந்த அரசு திணறுகின்றது.

அதேநேரத்தில் கடந்த மூன்றரை ஆண்டு காலமாக மனித உரிமை பேரவையை ஏமாற்றி வந்த மகிந்த அடுத்து வரும் மார்ச் மாத மகாநாட்டில் பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவற்றிலிருந்து மகிந்த தப்பிக்க வேண்டுமானால், ஆபத்பாந்தவனாக விடுதலைப் புலிகள் வந்தேயாக வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும்.


அரசுடன் மிக நெருக்கமாகவுள்ள தமிழர் ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும். அதை அப்படியே புலிகள் மீது சுமத்த வேண்டும். அதனால்தான் மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் என மகிந்த முழு உலகமும் கேட்கும் வண்ணம் ஒப்பாரி வைக்க வேண்டும்.

அந்த நடிப்பை உலகம் ஏற்றுக்கொண்டால் மகிந்த ஓரளவு தப்ப முடியும். ஆனால், மீண்டும் தமிழ் இளைஞர்களை மகிந்த அரசு ஆயுதம் ஏந்தத் தூண்டுகின்றது என ஒருசில நாடுகளே குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளதால் நடிப்பு எடுபடும் என்று சொல்வதற்கில்லை.


ஆனால், யாரைப் பலியெடுப்பது என்பதில் மகிந்த அரசு ஆலோசித்து வருகின்றது. மகிந்தவின் உடனடி ஆலோசனைக்கு டக்ளஸ், கருணா ஆகிய இருவர் மாத்திரமே உட்படுத்தப்பட்டுள்ளனர். இருவரில் யார் என்பதை அறிய ‘பூவா தலையா’ போடப்பட்டாலும் வியப்பதற்கில்லை.

 

டக்ளஸ் முள்ளிவாய்க்காலின் பின் கூடுதலான தமிழர்களை கொலை செய்துள்ளார். பாலியல் வல்லுறவு, கொள்ளை, ஆட்கடத்தல், சிங்களக் குடியேற்றத்துக்கு உதவி செய்தல் போன்ற தமிழருக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர். தமிழரிடம் கொள்ளையடித்த பணத்தை மகிந்தவுக்கு கிடைக்கும்படி செய்தவர்.


கருணா ஜானக பெரேராவைக் கொலை செய்ததுடன், பல தமிழர்களையும் கொலை செய்தவர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் புலிகளின் இராணுவ உடையுடனேயே இருந்துள்ளார். போரின் இறுதிக் கட்டங்களில் புலிகளின் இராணுவு உடையுடன் மேலும் சிலரையும் அழைத்து வந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய தமிழர்களில் சிலரை சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டை ஏற்படுத்தியவரும் அவரே. தமிழர்களைப் பாதுகாத்து வந்த புலிகள் ஏன் அவர்களைக் கொலை செய்ய வேண்டும்?

 

மகிந்த அரசு மார்ச் மாதத்துக்கு முன்பாக டக்ளஸ் அல்லது கருணாவை அல்லது இருவரையுமே மறைந்திருந்து கொலைசெய்து விட்டு அதனை புலிகள் மீது சுமத்த தயாராகி வருவதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. அதைத் தவிர வேறு வழியேதும் அரசுக்குத் தெரியவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருணா பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ததின் பின்பே பிரதி அமைச்சராகும் தகுதியைப் பெற்றார். ஆனால், இப்போது மாத்திரமல்ல இனிமேலும் தமக்குப் பயன்பட மாட்டார் என மகிந்த முடிவெடுத்து விட்டாராம். அப்படியானால் கருணா விரைவில் கொல்லப்பட்டு விடுவாரா?

 

சர்வதேச மன்னிப்புச்சபைப் பொறுப்பாளர் திருமதி. நவநீதம் பிள்ளையிடம் உலகின் பிரதான இருபதிற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் இலங்கையைப் பற்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகளை புதிதாகத் தாக்கல் செய்துள்ளதாக ‘இன்னர் சிட்டி பிரஸ்’ தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரில் செல்லாமலேயே அவர் இலங்கை பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமளவுக்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அங்கு இடம்பெறுவதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.


சுருக்கமாகக் குறிப்பிடுவதாக இருந்தால், மார்ச் மாதம் கூடும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு உதவும் பல தவறுகளை இலங்கை புரிந்து வருகின்றது என்றே குறிப்பிடப்படுகின்றது.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்விவகாரத்தில் தன்னிச்சையாக நடந்துகொள்வதனால் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுவதன் மூலம் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


இறந்தவர்களுக்கான வணக்க நிகழ்வைக் காரணம் காட்டி அது ஒரு பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

 

ஏற்கனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை தவறானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி பிரதம நீதியரசரே மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் மீது சபாநாயகர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக் கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


யாழ். பல்கலைக்கழக மாணவர் தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டால் அது மற்றொரு பாரிய சட்டப் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். தீர்புகள் எங்ஙனம் அமைந்தாலும், இலங்கை அரசின் மீதான உலகின் பெரும்பான்மை நாடுகளின் நம்பிக்கைக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.

 

வட பகுதியில் கைது செய்யப்பட்ட 45 இளைஞர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் என இலங்கையின் காவற்றுறையினர் தற்போது அறிவித்துள்ளது மேலும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்னாள் போராளிகள் என பாதுகாப்பு அமைச்சு மூன்றரை வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது.


ஆனால், அவர்கள் பாரதூரமான குற்றம் புரிந்தவர்கள் அல்லர் என்பதனால், விசாரணையின் பின் அவர்கள் தடுப்புக்காவலில் இருந்து புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.

 

பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டனர். இதனை இலங்கை அரசு வெளிநாடுகளில் பெரும் பரப்புரையாகவே மேற்கொண்டது. ஆனால், அவர்களில் 45 பேரை இரகசியமான முறையில் மீண்டும் கைது செய்து அவர்கள் விடுதலைப் புலிகள் என்று மீண்டும் அடையாளம் காட்டுவது பெரும் கேலிக்கூத்தாக இருப்பதாக கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.


அவர்கள் தொடர்பான சகல விசாரணைகளையும் மூன்றரை ஆண்டு காலமாக காவலில் வைத்து விசாரணை செய்துவிட்டு, விடுதலையான ஒருசில நாட்களுக்குள் மீண்டும் கைது செய்துவிட்டு ‘அவர்கள் விடுதலைப் புலிகள். அதனாற்றான் கைது செய்யப்படுகிறார்கள்’ எனக் குறிப்பிடுவது எந்தச் சட்டத்தின் கீழ் சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புவதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

அதேநேரத்தில் அவர்கள் காவற்றுறையினரிடம் சிக்காமல் மறைந்து வாழ்ந்தவர்கள் என காவற்றுறைப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார். முன்பு அவர்கள் கைது செய்யப்பட்டவர்களோ, புனர்வாழ்வு முகாம்களில் இருந்தவர்களோ அல்லர் என அவர் குறிப்பிடுகிறார்.


எனவே, இதில் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது நீதிமன்ற விசாரணைகளின் மூலமே தெரியவரும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். கைதானவர்களில் மூன்று பெண்களும், பத்தொன்பது வயது பல்கலைக்கழக மாணவரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வீ.ஆர். வரதராஜா

 

http://www.eelamview.com/2012/12/29/who-is-killed-next-traitors/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தின் ஆட்சி மாறவேண்டும். இந்த நான்கு தமிழர்களின் சந்தர்ப்பமுகங்கள் உலகம் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

தேவை ஏற்படின் கருணாவை வைத்து டக்ளசையோ அல்லது டக்ளசை வைத்து கருணாவை போட்டுத்தள்ள  சிறிலங்கா அரசு தயங்காது. மொத்தத்தில் புலிகளை தங்களது படத்துக்குள்(picture) கொண்டு வர மகிந்த அரசு படாத பாடு படுகிறது என்பது மட்டும் தெரிகிறது.அடேலை போர்க்குற்றவாளி என அண்மையில் செய்தி வந்தது அறிந்ததே. புலிகள் இல்லாத நிலையில் தமக்கு விருப்பம் இல்லாதவர்களை (புலிகளை சாட்டி) போட்டு தள்ளுவது மிகுந்த கஸ்டமாக உள்ளது.

மகிந்த உந்த வரதராஜாவை போட்டால் எங்களுக்கு கொஞ்ச அலுப்பு தீரும் .

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு.

 

வரதராஜாவுக்கு விசயம் தெரியாது கதிர்காமரை புலிகள் கொன்றதாக அடித்து கூறும் சாட்சிகளும் யாழ் களத்திலும் இருக்கினம் என்றால் நம்பவா போகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக... வடக்கில் இருந்து தான், ஆரம்பிப்பார்கள். :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.