Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களூர் வாசிகசாலைகள்

Featured Replies

எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப.

முழுப்பதிவிற்கும்

http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருந்தது உங்கள் பதிவு. பழைய யாபகங்கள் வருகின்றது.

நீங்கள் நடிகை ராதாவின் ரசிகனாக இருந்தீர்களோ அப்பொழுது?

  • தொடங்கியவர்

வணக்கம் கந்தப்பு

நீங்கள் சறோஜாதேவியின்ர ரசிகனா இருக்கேக்க நான் ராதாவின்ர ரசிகனா இருக்கலாம் தானே:-)

  • கருத்துக்கள உறவுகள்

உதையேன் யாழிலை போட்டனி தம்பி. ஆச்சிக்குத் தெரிஞ்சா உயிரோடை சங்குதான்

உங்கள் ஊர் வாசிகசாலைகள் பற்றிய பதிவு அருமை.

எங்கள் ஊரிலும் தியாகி சிவகுமாரனுடைய சிலையுடன் ஒரு புங்காவோடு கூடிய வாசிகசாலை இருந்தது. ஒவ்வொரு முறையும் பிரச்சனை தொடங்கும்போது அந்த சிலை தான் முதலில் இரையாகும். பின்னார் பிரச்சனை முடிய உடனே அதை கட்டி எழுப்புவார்கள்.

இப்போ தாயகம் போகும்போது அந்த பூங்காவில் சந்தையாக மாறி இருக்கின்றது.

உங்கள் பதிவுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

கந்தப்பு, ஆச்சியைப் பற்றிக் கனக்க யோசிக்காதேங்கோ

வணக்கம் ரமா, தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பிள்ளை ரமா நீங்கள் உரும்பிராயா?

அப்ப பிள்ளை நீங்கள் உரும்பிராயா?

:):lol::lol::lol::lol:

அருமையான பதிவு என்றும் எங்கள் பழைய ஞாபகங்களை மீட்டி நிக்கிறது. உங்கள் பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரத்துக்கு நேரம் சாப்பிட்டு போய் தூங்கிறதுக்கு ஏற்ற இடம் தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். ஊரிற்குப் போகும்போது அவதானித்த ஒன்று. ஊரில் உள்ள கிழடுகள் முதல், இளைஞவர்கள் வரை தூங்குவதற்குப் பாவிக்கும் இடம் தான் அது. :idea:

நான் நினைக்கின்றேன். வீட்டில் தூங்கும்போது சத்தம் போடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. ஆனால் நாய், ஆடு, மாடுகளும் அங்கே தூக்கம் போட்டது ஏன் என்று தெரியவில்லை! :wink: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு புல்லா சாப்பிட்டு வேலையா வெட்டியா அங்கை போய் தூங்கிற தானே. வெளிநாட்டில இருந்து காசு வருது. பிறகு என்ன கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

வயிறு புல்லா சாப்பிட்டு வேலையா வெட்டியா அங்கை போய் தூங்கிற தானே. வெளிநாட்டில இருந்து காசு வருது. பிறகு என்ன கவலை?

உங்களின் வீட்டாரில் நிறையக் கோபம் இருக்குது போல! :wink:

உண்மை தான். ஊரிற்குப் போகும்போது அவதானித்த ஒன்று. ஊரில் உள்ள கிழடுகள் முதல், இளைஞவர்கள் வரை தூங்குவதற்குப் பாவிக்கும் இடம் தான் அது. :idea:

நான் நினைக்கின்றேன். வீட்டில் தூங்கும்போது சத்தம் போடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை. ஆனால் நாய், ஆடு, மாடுகளும் அங்கே தூக்கம் போட்டது ஏன் என்று தெரியவில்லை!

நீங்க எட்டிப்பார்க்கிற போது கம்பனி தரத்தான் தூயவன் இதெல்லாம் ஒரு கேள்வியா :wink: :lol::D:lol::lol::lol:

நல்லதொரு கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட நூல்னிலையங்களில் சுண்ணாகம் நூல்னிலையத்துக்குச் சென்று படித்திருக்கிறேன். மருதனார் மடம் நூலனிலையத்தில் இருந்து ராணி முத்து போன்ற நாவல்களினை வாடகைக்கு எடுத்துப் படித்திருக்கிறேன். பலாலிக்குப் பக்கத்தில் குப்பிளான் உள்ளதினால் நாங்கள் இடம்பெயர்ந்து எனது தந்தையின் கிராமமான இணுவிலில் இருக்கும் போது அடிக்கடி கந்தசுவாமி கோவில் வீதியில் அமைந்துள்ள வாசிக சாலைக்குச் செல்வதுண்டு. எனது வீட்டில் யாழ்ப்பாணப்பத்திரிகைகள் அப்பா வாங்குவதினால் வீட்டில் செய்திகள் வாசிப்பேன்.ஆனால் துடுப்பாட்டச் செய்திகள் பார்ப்பதற்காக இந்த வாசிக சாலையில் டெயிலி நீயூஸ், ஸ்போட் ஸ்ரார் பார்க்க வாரனான்.

அண்ணன் ஒரு கோவில் பார்த்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் முதன் முதலாக தொலைக்காட்சியில் பார்த்தபடம் அண்ணன் ஒரு கோவில். குப்பிளான் பாணனின் மண்டபத்தில் இப்படத்தினைக் காட்டினார்கள். ஒரே சனம். நின்று கொண்டு பார்த்தோம். அகன்ற திரையில் படங்களினைப் பார்த்துப்பழகிய எனக்கு இப்படம் மிகவும் சிறிய தொலைக்காட்சியில் பார்க்கும் போது அப்பொழுது வித்தியாசமாக இருந்தது.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள் அரவிந்தன்.

  • தொடங்கியவர்

நன்றி ரசிகை

கனாபிரபா உங்கள் வாசிகசாலை பற்றிய விவரணம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்களுடன் இன்னும் இது போன்று எழுதவும். நானும் உங்கள் அண்ணன் போல் வாசிகசாலையில் ஆர்வங்களை காட்டிவிட்டு இடையில் புலம் பெயர்ந்துவிட்டேன்.

  • தொடங்கியவர்

வாசித்து ஊக்கப்படுத்தியமைக்கு என் நன்றிகள் சிறீ

பழைய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து கவலையளிக்கிறது...

ஆனாலும் நன்றி கனாபிராபா....உங்கள் ஊர் வாசிகசாலை விவரணம் மிக்க நன்று.....இன்னும் தாய்மண் விடயங்களை எழுதுங்கள்...வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

யூகே பெடியன்

தங்கள் ஊக்குவிப்புக்கு என் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வாசிகசாலையினை நினைக்கும் போது ஈழத்தில் சிங்கள அரசு அப்பாவி மக்களினை வாசிகசாலைக்குள் விட்டு வெளியேற முடியாதவாறு எல்லா வாசல்களினையும் அடைத்துவிட்டு குண்டுவைத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் யாபகத்துக்கு வருகின்றன.

தென் ஆசியாவில் தலை சிறந்த யாழ் நூல்னிலையத்தினை காமினி திசானாயக்கா என்ற வெறி பிடித்த மிருகத்தினால் எரிக்கப்பட்ட சம்பவமும் யாபகத்துக்கு வருகிறது.

  • தொடங்கியவர்

மேலதிக தகவலுக்கு நன்றி கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.