Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் மீள் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

riya.jpg

சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாத் மீள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. 

ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56649-2013-01-10-13-46-38.html

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பற்றிய ஐநா கூட்டத்தொடரில்.. சிறீலங்கா தொடர்பான அமெரிக்கப் பிரேரணை.. இறுதி வாக்கெடுப்பில்.. முஸ்லீம் நாடுகள் பல.. சிங்களத்தின் தமிழினப் படுகொலைக்கு வக்காளத்து வாங்கி வாக்களிச்சது என்பதையும்.. அதற்கு ரவுவ் கக்கீம் பிரச்சாரப் பீரங்கியாகச் செயற்பட்டார் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூறுவது நல்லது..! :icon_idea: :icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

இதெல்லாம் அவங்க நாடகம்.

 

I.V.சசி இன் கேள்வி "தூதுவர் திரும்ப அழைப்பு" நாடகமாடிவிட்டு இன்னமும் அதிக வியாபாரப்புத்தி கூடிய புதிய தூதுவரை சவூதிக்கு அனுப்பாமல், சவுதியில் தொழில் புரியும் 600,000 சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்களையும் இலங்கை திரும்ப அழைக்குமா? இல்லை- புதிதாக ஆரம்பித்த எண்ணை வியாபாரத்தை நிறுத்துமா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம் அரங்கேற்றும் இதுவும் ஒரு தொடர் நாடகம்தான் இந்த மெகத்தொடரின் பாகங்களை வருவாரங்களில் காணலாம். 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவை பத்தோடு பதினொன்றாக நினைத்துவிட்டது சௌதி அரேபியா.. தெற்காசியாவின் இஸ்ரேல் என்பது இனி போகப்போக புரியும்.. :D

சிறீலங்காவை பத்தோடு பதினொன்றாக நினைத்துவிட்டது சௌதி அரேபியா.. தெற்காசியாவின் இஸ்ரேல் என்பது இனி போகப்போக புரியும்.. :D

 

இலவசமாக ஒரு லீட்டர் பெற்றோல்  அதிகமாக குடுக்காவிட்டால்  திரும்பி போக மாட்டார் போல தான் கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

மனித நாகரிகம் இல்லாமல் காண்டுமிராண்டிதனமாக இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் சவுதிக்காரன் நடந்து கொள்கிறான் என்பதை மேற்குலகம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. மனித உரிமை பற்றி சவுண்டு விட்டு கொக்கரிக்கிற நோர்வே போன்ற நாடுகளும் சவுதி போன்ற தமது நட்பு நாடுகள்( அல்லது தனது நட்பு நாடுகளுக்கு வேண்டப்பட்ட நாடு என்ற வகையில்) மனிதர்களை சித்திரவதை செய்து வீதியில் வைத்து கையை வெட்டி தலையை வெட்டி தண்டனை கொடுப்பதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

இதெல்லாம் அவங்க நாடகம்.

 

I.V.சசி இன் கேள்வி "தூதுவர் திரும்ப அழைப்பு" நாடகமாடிவிட்டு இன்னமும் அதிக வியாபாரப்புத்தி கூடிய புதிய தூதுவரை சவூதிக்கு அனுப்பாமல், சவுதியில் தொழில் புரியும் 600,000 சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்களையும் இலங்கை திரும்ப அழைக்குமா? இல்லை- புதிதாக ஆரம்பித்த எண்ணை வியாபாரத்தை நிறுத்துமா?

 

நீங்கள்  சொன்ன கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை( இப்ப தான் கவலையாக இருக்கு நான் 8ம் வகுப்பை பாஸ் பன்னி இருக்கனும்) :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
மனித நாகரிகம் இல்லாமல் காண்டுமிராண்டிதனமாக இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் சவுதிக்காரன் நடந்து கொள்கிறான் என்பதை மேற்குலகம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. மனித உரிமை பற்றி சவுண்டு விட்டு கொக்கரிக்கிற நோர்வே போன்ற நாடுகளும் சவுதி போன்ற தமது நட்பு நாடுகள்( அல்லது தனது நட்பு நாடுகளுக்கு வேண்டப்பட்ட நாடு என்ற வகையில்) மனிதர்களை சித்திரவதை செய்து வீதியில் வைத்து கையை வெட்டி தலையை வெட்டி தண்டனை கொடுப்பதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

 

இதையே தலிபான்கள் செய்திருந்தால்.. பிபிசி ஒரு நாலு நாளைக்காவது அதையே பிரதான செய்தியா ஓட விட்டிருக்கும்..! ஏன்னா.. தங்கட ஆக்கிரமிப்புக்கு நியாயம் தேட. இங்க... எல்லாம் பின்கதவால கிடைக்குதில்ல..! சோ.. அந்தப் பெண்ணின் மீது பாஸ்போட்டில்.. வயதைக் கூட்டி.. கள்ள வயது காட்டினது என்ற குற்றத்தைச் சொல்லிட்டு அமுங்கிட்டாங்கள்..! என்னே ஒரு சன நாய் அக உலகம் இது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
மனித நாகரிகம் இல்லாமல் காண்டுமிராண்டிதனமாக இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் சவுதிக்காரன் நடந்து கொள்கிறான் என்பதை மேற்குலகம் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது. மனித உரிமை பற்றி சவுண்டு விட்டு கொக்கரிக்கிற நோர்வே போன்ற நாடுகளும் சவுதி போன்ற தமது நட்பு நாடுகள்( அல்லது தனது நட்பு நாடுகளுக்கு வேண்டப்பட்ட நாடு என்ற வகையில்) மனிதர்களை சித்திரவதை செய்து வீதியில் வைத்து கையை வெட்டி தலையை வெட்டி தண்டனை கொடுப்பதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

 

சவுதிக்காரன் அமெரிக்கனை உள்ளை இருக்க விட்டிருக்கிறான்.. :D ஆ.. வெறை என்ன கேட்டனீங்கள்?? மனித உரிமை? :D

நீங்கள்  சொன்ன கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை( இப்ப தான் கவலையாக இருக்கு நான் 8ம் வகுப்பை பாஸ் பன்னி இருக்கனும்) :icon_idea:

 

நீங்க சொன்ன எதோ திரும்ப எழுத முயற்சித்தேன். அவ்வளவுதான். பிரசனை வந்து நீங்கள் சொல்லவந்தது எனக்கு விளங்கவில்லையோ அல்லது விளங்காத மாதிரி சரியாக நடிக்க தெரியவில்யோ என்பதுதான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூதுவரை திருப்பி அழைக்கும் உத்தரவு ஒரு ஏமாற்று நாடகம் – கொழும்பு அரசியல் வட்டாரங்கள்

 

 

rizana.jpg

றிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அங்குள்ள சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளது, சிறிலங்கா மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஏமாற்று நாடகமே என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

றியாத்தில் நேற்று முன்தினம் தலை துண்டிக்கப்பட்டு றிசானாவின் மரணதண்டனையை சவூதி அரேபியா நிறைவேற்றியது. 

றிசானாவின் உடலை சிறிலங்காவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளிலும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தோல்வியைத் தழுவியுள்ளது. 

அவரது உடல் நேற்று சவூதி அரேபியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிறிலங்கா அரசின் மீதும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மீதும் பொதுமக்கள் கடும் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்தநிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம், சவூதி அரேபியாவுக்கான தூதுவர் அகமட் ஜே ஜவாட்டை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், றிசானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே றியாத்தில் உள்ள தூதுவரை நாடுதிரும்ப உத்தரவிடப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்திருந்தார். 

"எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு அடையாளமாகவே தூதுவரை நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. றிசானாவுக்கு மன்னரின் மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். 

றிசானாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும் என்றும் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது. அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது எமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

றிசானாவுக்கான பல முறையீடுகளை செய்து வாதிட்டபோதும், அவரை மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. றிசானாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு அப்பாவி என்பது உறுதி. 

அவர் 18வயது வந்த பெண் என்று போலியான கடவுச்சீட்டை பெற்றிருந்தது உண்மை. அவர் உண்மையிலேயே 18வயதுக்கு குறைந்தவர் என்பதை நாம் சவூதி அதிகாரிகளிடம் நிரூபித்திருந்தோம். 

சவூதி அரேபியாவுக்கான துதுவரை திருப்பி அழைத்துள்ளபோதிலும், அந்த நாட்டுடனான உறவுகளை நாம் முறித்துக் கொள்ளவில்லை. இதன்மூலம் எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறோம். திருப்பி அழைக்கும் கடிதம் நேற்று வழங்கப்பட்டது. அவர் விரைவில் சிறிலங்கா திரும்புவார். 

இன்னொரு தூதுவரை அனுப்பும் வரை றியாத்தில் உள்ள தூதரக நிர்வாகப் பணியை அதிகாரி ஒருவர் பொறுப்பேற்பார். எப்போது புதிய தூதுவர் நியமிக்கப்படுவார் என்பதை என்னால் கூறமுடியாது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் றிசானாவைப் பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேறகொண்டபோதும், சவூதி அரேபிய சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் அனுமதியுடனேயே மன்னிப்பைப் பெறமுடியும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பொதுமன்னிப்பை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்று ஏற்கனவே ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியிருந்தது. 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பொதுமன்னிப்பைப் பெறுவதற்கு முயற்சிகாமல், சவூதி அரேபிய அரசாங்கத்தை நம்பிய சிறிலங்கா அரசாங்கம், அதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவே தூதுவரைத் திரும்ப அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அத்துடன், சவூதியில் இருந்த தூதுவரை திருப்பி அழைத்துள்ள சிறிலங்கா புதிய தூதுவரை நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளது, தூதுவருக்கான தண்டனையா அல்லது சவூதிக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் நடவடிக்கையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130111107576

சவுதி இவர்களுக்கு நிறையத்தான் தொழில் வாய்ப்பு கொடுக்கிறது. வயதை கூட்டி போட்டுக்காட்டி போயிருக்கிறார்கள். அப்போ மற்றய வயதில் போக விரும்பியர்கள் எல்லாம் போய்விட்டர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.