Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிசில் அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைவுக் கூட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Transitional_150news.jpg

சுவிசில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 2000 ஆயிரம் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சம் நீடித்தவரும் நிலையில் இவ்விவகாரத்தினை எதிர்கொள்வதற்கான ; அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைவுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான உயிரச்சுறுத்தல்கள் சிறிலங்கா அரசினால் நீடித்த வரும் நிலையில் இவ்விவகாரத்தினை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வது குறித்தும் மற்றும் பல்வேறு வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான ஓருங்கிணைவுக் கூட்டமாக இது இடம்பெறுகின்றது.

  

எதிர்வரும் சனிக்கிழமை ( 26.01.2013) மாலை 3.30மணிக்கு FIMM Suisse, Speichergasse 39, 3011 Bern எனும் இடத்தில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது.

 

இதேவேளை சுவிசில் அகதிதஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சுவிஸ் அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான திணைக்களத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சின் சர்வதேச வழக்கறிஞர் டேவிட் மேத்தா அவர்கள் பேச்சுக்களை இவ்வார இறுதியில் மேற்கொள்ள இருக்கின்றார்.

 

இதேவேளை வழக்கறிஞர் டேவிட் மேத்தா புலம்பெயர் நாடுகள் உட்பட சர்வதேச அளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சiபியின் அகதிகளுக்கான ஆணையத்துடனும் பேச்சுவாத்தைகளை நடத்த இருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74395&category=TamilNews&language=tamil

சுவிஸ் அரசாங்கம் இப்படி தான் அடிக்கடி மக்களை வெருட்டுவது. :D கொஞ்ச மக்களை உண்மையில் சிலவேளை அனுப்புவார்கள். அதை பார்த்து ஏனைய அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் சுவிஸை விட்டு வேறு நாடுகளுக்கு ஓடி விடுவார்கள். சுவிசில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறையும்...

இது தான் இவர்கள் நோக்கம். :rolleyes:
 

Edited by துளசி

இவர்களை நாடு கடந்த அரசிற்கு இடம் பெயரலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிலையில் நாம் இல்லை  என்பதற்காக அவர்களது இந்த நிலையை  பரிகாசம் செய்யாமலாவது இருக்கவும்.

நன்றி. :( 

சுவிஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் சுவிஸ் தமது முடிவை மாற்றுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. கொஞ்ச மக்களை தன்னும் இலங்கைக்கு அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன்.

 

ஏனென்றால் செலவையும் பார்க்காமல் கொஞ்ச பேருக்கு கூட தனி விமானம் ஒழுங்கு செய்து பல போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் அரசு. வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையை முடிந்தவரை தனது நாட்டில் குறைக்கவே முயல்வார்கள்.

ஆனாலும் இவர்கள் முயற்சி செய்யட்டும். நன்மை ஏற்பட்டால் மகிழ்ச்சியே...

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் அரசாங்கம் இப்படி தான் அடிக்கடி மக்களை வெருட்டுவது. :D கொஞ்ச மக்களை உண்மையில் சிலவேளை அனுப்புவார்கள். அதை பார்த்து ஏனைய அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் சுவிஸை விட்டு வேறு நாடுகளுக்கு ஓடி விடுவார்கள். சுவிசில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறையும்...

இது தான் இவர்கள் நோக்கம். :rolleyes:

 

 

நல்ல கன்டு பிடிப்பு. :rolleyes:

நல்ல கன்டு பிடிப்பு. :rolleyes:

 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

சுவிஸை பொறுத்தவரை வெளிநாட்டவர்கள் தமது நாட்டினுள் நிலையாக தங்குவதை விரும்புவதில்லை. அதற்கு தமிழர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. காரணம் வெளிநாட்டவர்களால் நாடு குட்டிச்சுவராக்கி விடும் என்பதால்... முடிந்தவரை ஏனைய நாட்டவர்களுக்கு விசா கொடுப்பதை தவிர்த்து வருவார்கள்.

 

வெளிநாட்டவர்களால் கொலை, களவுகள், கஞ்சா கடத்தல் போன்றன அதிகரித்திருக்கின்றமையும் இதற்கு காரணம். கூடுதலாக அல்ஜீரியா, ஆபிரிக்கா காரர் தான் அங்கு மோசம். தமிழர்கள் அவர்களளவுக்கு இல்லை. ஆனாலும் சுவிஸை பொறுத்தவரை தமிழர்களும் வெளிநாட்டவர்கள் தானே.

ஐரோப்பிய நாட்டவர்கள் வருவதை இவர்களால் தடுக்க முடியாது. அதனால் தான் ஐரோப்பிய சிட்டிசன் உள்ளவர்களும் சுவிசில் இருக்கிறார்கள். ஆனால் original சுவிஸ் காரனிடம் தான் நாட்டின் முக்கிய பொறுப்புகள், பதவிகள், பாதுகாப்பு விடயம் என்பன கையளிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் சுவிஸ் என்பதை இப்பொழுது தான் கவனித்தேன் சஜீவன் அண்ணா. உங்களுக்கு நிச்சயம் இவை அனைத்தும் தெரிந்திருக்குமே... :D

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் சுவிஸ் என்பதை இப்பொழுது தான் கவனித்தேன் சஜீவன் அண்ணா. உங்களுக்கு நிச்சயம் இவை அனைத்தும் தெரிந்திருக்குமே... :D

 

உங்கள் தகவல்கள் பெரும்பாலும் தவறு.எண்பதுகளின் கடைசியில் நீங்கள் சொல்லும் நிலை இருந்தது.இப்ப அப்படி இல்லை.அதுவம் தமிழருக்கு என்று ஒரு இடமும் உண்டு.இங்கு நானறிய குடியுரிமை இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு.20 வருடத்துக்கு முன் கற்பனையும் பண்ணியிருக்க முடியாது.மற்றும் புதிதாக வந்த தமிழரின் நிலை தான் கவலைக்கிடம்.எம்மால் அவர்களுக்காக பிரத்திக்க மட்டுமே முடியும்.

உங்கள் தகவல்கள் பெரும்பாலும் தவறு.எண்பதுகளின் கடைசியில் நீங்கள் சொல்லும் நிலை இருந்தது.இப்ப அப்படி இல்லை.அதுவம் தமிழருக்கு என்று ஒரு இடமும் உண்டு.இங்கு நானறிய குடியுரிமை இல்லாத தமிழர்கள் மிகக் குறைவு.20 வருடத்துக்கு முன் கற்பனையும் பண்ணியிருக்க முடியாது.மற்றும் புதிதாக வந்த தமிழரின் நிலை தான் கவலைக்கிடம்.எம்மால் அவர்களுக்காக பிரத்திக்க மட்டுமே முடியும்.

 

சுவிசில் தமிழர்களுக்கு என்று ஒரு இடமுண்டு. அது மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கூட சுவிஸ் அரசாங்கம் ஆதரிப்பவர்கள். அது தெரியும் அண்ணா.

80 களின் கடைசி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் முன்னர் வந்தவர்களில் பலர் இடையில் பிடித்து அனுப்ப போகிறோம் என்று சொல்லும் போது பிரான்ஸ், ஜேர்மன் என்று வேறு நாடுகளுக்கு ஓடி விட்டார்கள். அதையும் மீறி களவாக இருந்தவர்களுக்கு விசா கொடுத்து விட்டார்கள். அதனால் தான் நீங்கள் குடியுரிமை இல்லாத தமிழர்கள் மிக குறைவு என்று கூறியுள்ளீர்கள்.

 

புதிதாக வந்த தமிழர்களின் நிலை கவலைக்கிடம் என்று கூறியுள்ளீர்கள். நானும் இன்றைய நிலை பற்றி தான் கதைக்கிறேன்.

2009 இன் முன்னரே தமிழர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தவர்கள் 2009 இன் பின்னர் கூடுதலாக மக்களை இலங்கை நோக்கி அனுப்ப தொடங்கி விட்டார்கள். தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிவரும் அவர்கள் நிலை இப்பொழுது சிறிது மாறி விட்டது.

அடிக்கடி தமிழர்களை இலங்கை நோக்கி அனுப்புவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இடையில் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கைக்கு தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்று இங்கிலாந்துக்கு கோரிக்கை விடுத்த நேரம், இலங்கைக்கு திருப்பியனுப்புவதை சுவிஸ் அரசு தாமும் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் திருப்பி அனுப்பியது.

வன்னி மக்களுக்கு இப்பொழுதும் விசா வழங்குகிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்டதாக  சரியான ஆதாரம் காட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டும் சரியான முறையில் ஆதாரம் காட்டாவிட்டால் அல்லது சரியான முறையில் நடைபெற்றதை அங்கு கூறாவிட்டால் அங்கு அகதி கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. எல்லோரையும் பாவம் பார்த்து விடும் அளவுக்கு அவர்கள் இல்லை. அவர்களும் தமது நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டத்தினருக்கு நாட்டில் பிரச்சினை இருந்தாலும் கூறி விசா எடுப்பது கடினம்.

 

இது இன்றைய நிலை தான் அண்ணா... :D

இந்த 2000 பேரின் நிலைக்கு அவசர தேவை இல்லாமல் தாயகத்தை நோக்கி செல்லும் நாமும் காரணம்  :( 

 

 

நாடு கடந்த அரசின் இந்த செயல்பாட்டிற்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.