Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்தைகள் எல்லா திசையிலும் கழுத்தை திருப்பும் ரகசியம்

Featured Replies

ஆந்தைகள் எல்லா திசையிலும் கழுத்தை திருப்பும் ரகசியம்

 

ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.

 

இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும்.

 

இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், ஜான்ஸ் ஹாப்கின் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர். இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவதுதெரியவந்தது.இதன் மூலம் ஆந்தைகளின் கழுத்து அதிகபட்சம் திரும்புவதால், அவற்றின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதுடன்,அதிக அளவில் நாளங்களில்தேங்கும் ரத்தம், அளவில் பெரிதான அவற்றின் மூளை மற்றும் கண்களின் செயல்பாட்டுக்கு பெரிய அளவில் உதவுவது தெரியவந்துள்ளது.

 

இந்த கண்டுபிடிப்பு மூலம், விபத்துகளில் சிக்கி கழுத்துமுறிவு போன்ற பாதிப்புகளைஎதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்படும் என, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4-005500769.html

  • கருத்துக்கள உறவுகள்


 

ஆந்தைகள் இரவில் உணவு தேடும் பழக்கமுள்ளாதால்.... அமைதியாக இருக்கும் இரவில், கண்டபடி பறந்து... எதிராளியியை, உசார் படுத்தாமல் இருக்க... 270 பாகை கழுத்தை திருப்பி, பின் பக்கமும் பார்க்கக் கூடியதாக இருக்கலாம்.
-கண்டுபிடிப்பு தமிழ்சிறி- :D

 

Edited by தமிழ் சிறி

ஆராச்சியாளர்  கலாநிதி தமிழ் சிறி அண்ணாவின் கண்டு பிடிப்புக்களை  ஐநா பாதுகாக்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்யுறேன்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆந்தைகள் இரவில் உணவு தேடும் பழக்கமுள்ளாதால்.... அமைதியாக இருக்கும் இரவில், கண்டபடி பறந்து... எதிராளியியை, உசார் படுத்தாமல் இருக்க... 270 பாகை கழுத்தை திருப்பி, பின் பக்கமும் பார்க்கக் கூடியதாக இருக்கலாம்.

-கண்டுபிடிப்பு தமிழ்சிறி- :D

 

நான் நினைக்கிறன், தமிழ் சிறி!

 

ஆந்தையும் ஒரு காலத்தில, தமிழனா இருந்திருக்கும்! அந்தக் காலத்தில, அது 360 பாகையில திரும்ப வேண்டிய கட்டாயம்! பிறகு, 270 பாகையில செட்டில் பண்ணியிருக்கும் ! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

800px-Fieldofview01.png

 

ஆந்தைக்கு இன்னொரு சிறப்புண்டு. மனிதர்களைப் போல இருவிழிப் பார்வை (binocular vision)  உண்டு. மற்றைய பறவைகளுக்கு தலையில் பக்கம் பக்கமாகவே கண்கள் உள்ளன. அதனால் அவை தலையை ஓரளவுக்கு திருப்பினாலே.. ஒரு விழியால் அதிக வீச்சுக்குப் பார்க்க முடியும் (அவற்றின் இருவிழிப் பார்வைக்கான வீச்சுக் குறைவு). ஆனால் ஆந்தைக்கு நம்மைப் போல கண்கள் தலையின் முன்னே உள்ளது. அதனால் அதன் இரு விழிப் பார்வை வீச்சு அதிகம். ஆனால் தன்னைச் சுற்றியான பார்வை வீச்சு குறைவு. அதனால் தலையை அதிகம் சுழற்ற அதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

 

அது மட்டுமன்றி ஆந்தை ஒளி அலைக்கு மேலதிகமாக.. செந்நிறக் கீழ்க் கதிர்களையும் காண முடியும்.

 

Stereopsis_duck_owl.jpg

 

நமக்கு முள்ளந்தண்டில் உள்ள முதல் இரண்டு எலும்புகள் தான் தலையின் அசைவை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் அவை ஏற்படுத்தும் சுழற்சித் தடைதான் எம்மை தலையை 360 க்கு சுற்ற முடியாது தடுக்கிறது. இருந்தாலும்.. நாமும்  கழுத்தைத் திருப்பி கிட்டத்தட்ட..200 பாகைகள் வரை பார்க்க முடியும்.

 

ஆந்தையின் பார்வை நுட்பமும் மனிதனின் பார்வை நுட்பம் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பினும் ஆந்தையின் பார்வைப் புலன் மனிதனை விட கூர்மையானது.

 

binocular_vision.gif

 

graphic020.gif

இந்த உணர்வுகள்  மனிதர்களுக்கும் இருந்து பரிணாம வளர்ச்சியில்  மாற்றம் கண்டிருக்கும். இன்றும் மனிதர்களுக்கு, பின்னால் இருந்து யாரும் பார்த்தாலே பிடரியில் ஒரு குறு குறுக்கும் உணர்வு ஏற்படும்.
 

வீட்டுக்கு வரும் காட்டுப் புறாக்களைப் பார்க்கும் பொழுது, பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு  தேடி வரும் உணவை உண்ணாமலேயே பறந்து விடும். நாட்டுப் புறாக்கள் யாரையும் சட்டை பண்ணாது.    

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆராச்சியாளர்  கலாநிதி தமிழ் சிறி அண்ணாவின் கண்டு பிடிப்புக்களை  ஐநா பாதுகாக்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்யுறேன்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

 

ஐ.நா. இதைப் பாதுகாத்தால்.... எனக்கு சோறு கிடைக்குமா?

நோபல் பரிசுக்கு, பரிந்துரை செய்திருக்கலாம்... யாழன்பு. :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.