Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஜராத்துக்கு உதவ பிரதமர் உறுதி: சந்திப்புக்குப் பின் மோடி பேச்சு

Featured Replies

குஜராத் மாநிலத்துக்கு உதவ தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

 

இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்-கை சந்திப்பதற்காக வந்திருந்தார் நரேந்திர மோடி. புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நரேந்திர மோடி, தான் மீண்டும் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வருவதால் பிரதமரையும் சந்திப்பதற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார் மோடி.


அப்போது, வாசல் வரை வந்து தன்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றதாகக் கூறிய நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார் என்றார்.

 

குறிப்பாக, அணை நீர்தேக்கத் திட்டம், எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரியதாகவும், அதற்கு பிரதமர் உதவுவதாக உறுதியளித்ததாகவும் கூறினார். பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும், புதிதாக அமைந்த அரசுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்; அவருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது என்றும் கூறினார் நரேந்திர மோடி.


முன்னதாக சர்தார் சரோவர் அணை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை அளித்தார் மோடி. இன்று மாலை தில்லியில் மாணவர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.

 

http://dinamani.com/latest_news/article1452200.ece



  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மன்மோகன்சிங்குடன் நரேந்திர மோடி திடீர் சந்திப்பு!

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நரேந்திர மோடி, டெல்லியில் தனியார் கல்லூரி ஒன்றில் உரையாற்றுவதற்காக வந்தார்.

இதனிடையே பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் மரியாதை நிமித்தமாகவே பிரதமரை

சந்தித்துப் பேசியதாகவும்,அப்போது சர்தார் சர்வோரர் அணை தொடர்பாக பிரதமரிடம் மனு ஒன்றை தாம் அளித்ததாகவும், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

குஜராத் முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்ற பின்னர், பிரதமரை சந்திப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்

காங்கிரஸ் தேர்தலில் வெல்ல செய்யும் சில திட்டங்களில் இதுவும் ஒன்று. மோடியை தமது பக்கம் வளைத்துப்போட்டால்.... இராகுல் வெல்லலாம் என எண்ணுகின்றது !

மன்மோகனுக்கு மோடி பதவிக்கு வந்துவிடலாம் என்ற பயம். சிறிமா J.R.ரிடம் விட்டதவறுகளை தவிர்க்க முயல்கிறார். மோடி மன்மோகனை தண்டிக்காவிட்டலும் காங்கிரசை பொதுவில் தாக்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தலைவர்களைக் கொண்ட ஒரே தேசியக் கட்சியாக பாஜக மட்டுமே உள்ள நிலையில் நரேந்திர மோடிக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது.. 'நிஜ' பிரதமர் இந்திய ஜனாதிபதி ஆகிவிட்டார்!

 
 

மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் என்பதை இந்த உலகத்துக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை! யார் நிஜ பிரதமர் என்பதுதான் இப்போதைய கேள்வி. சோனியா காந்தி 'நிஜ' பிரதமராக இருந்ததில்லை. ப்ரணாப் முகர்ஜி தான் தேசத்தை ஆட்சி செய்யும் வேலை முழுவதையும் செய்துகொண்டிருந்தார். சோனியா, மன்மோகனையும் நிறைய கட்சி அரசியலையும் நிர்வகித்து வந்தார். ப்ரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் நெருக்கடிகளை மட்டும் தீர்ப்பவர் அல்ல. அரசை நிர்வகிப்பதிலும் அதிலுள்ள ஊடுபாவுகளில் நேர்த்தியாகப் பயணிப்பதிலும் அவருக்கு ஆற்றல் உண்டு. ராஜீவ் காந்தி வகித்த இடத்தில் பிரதமராக வெகுகாலத்துக்கு முன்பே ஆகியிருக்க வேண்டிய, ஜூனியரான மன்மோகன் சிங்குக்கு மாற்றாகவேனும் பிரதமராக வந்திருக்க வேண்டிய இவருக்கு தகுந்த மதிப்பு இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசில் என்ன நடக்கிறது? யார் அமைச்சர்கள் குழுவுக்கு தலைமை தாங்குவார்கள் என்பது மட்டுமல்ல பிரச்னை. அதைவிட காங்கிரசில் தலைவர்கள் என்று யார் இருக்கிறார்கள் என்பதே இப்போதைய கேள்வி.

இந்திரா காந்தியின் காலத்திலேயே மக்கள் தலைவர்களின் மரணம், உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் போனதால் துவங்கிவிட்டது. இதனால் வாரிசு அரசியலுக்கு வழி ஏற்பட்டது. இந்திராவேனும், தன்னளவில் மக்கள் தலைவராக இருந்தார். ஆனால் அனுதாப அலை வழியாக ராஜீவ் காந்தி பிரதமரான போது மக்கள் தலைவர்கள் மெதுவாக விடைபெறத் தொடங்குகின்றனர். சோனியாவின் காலத்தில் காங்கிரசில் கடைசியாக இருந்த மக்கள் தலைவரான சரத்பவார் கட்சியிலிருந்து வெளியேறினார். ராஜசேகர ரெட்டியும் வெளியேறினார். அவரது துரதிர்ஷ்டவசமாக முடிந்தது. இப்போது காங்கிரசில் யார் தான் தலைவர்கள் என்று இருக்கின்றனர். சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம், ராகுல் என அனைவருமே பெரும் மக்கள் செல்வாக்கு ஏதும் இல்லாமல் பிடுங்கி நடப்பட்ட தலைவர்களாகவே உள்ளனர்.

உண்மையான அரசியல்வாதியான- ஆனால் இவருக்கு பெரிய மக்கள் செல்வாக்கு கிடையாது- தனது பெரிய அனுபவத்தின் காரணமாக தற்போது ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் பலமுறை துரோகத்துக்கு உள்ளாகியுள்ளார். பலரும் நினைப்பது போல காங்கிரஸ் இவரை விரும்பி அந்த நாற்காலியில் அமரவைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

காங்கிரசுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பாருங்கள். அதன் தந்தை பிம்பமான எல்கே.அத்வானி முதல் இன்றைய தலைவர்களான நரேந்திர மோடி, சிவராஜ் சவுகான், ராமன் சிங், கந்தூரி முதல் எடியூரப்பா வரை அனைவரும் பெரும் மக்கள் தலைவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள். பாஜகவில் தலைவர்கள் இல்லை என்ற கணிப்புக்கு மாறாக உண்மையில் தேசம் முழுவதும் மக்கள் தலைவர்களால் பரவியுள்ள ஒரே கட்சியாக பாஜகவைத்தான் சொல்லமுடியும். சென்ற முறை எல்.கே.அத்வானி அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடாமல் செய்த்தோடு வாக்குகளையும் பிரிவதற்கும் வித்திட்டு விட்டார். இங்கும், அங்கும் சில முஸ்லிம் வாக்குகளைப் பெறுவது என்பத் வேறு விஷயம். ஆனால், குதர்க்கமான ஜின்னா துருப்புச்சீட்டை விளையாட நினைப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. மொத்தமாக முஸ்லிம் வாக்குகளை தங்களுக்கு ஆதரவாகப் பெறும் எண்ணத்தை பாஜக, அடுத்த 15 ஆண்டுகளுக்கு மறந்து விடவேண்டும். முஸ்லிம் சமூகத்துக்காக கடுமையாக உழைத்து அந்த சமூகத்தை முன்னேற்றி பின்னர் அவர்களது நம்பிக்கையைப் பெறவேண்டும். நீண்டகால அடிப்படையில் அதை அவர்களால் சாதிக்க முடியும் என்றே நான் நம்புகிறேன். 2014 இல் மக்களின் ஏகபோக ஆதரவைப் பெறுவதற்கு பாஜகவுக்கு இன்னும் எது தடையாக இருக்கிறது? 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யார் முகத்தைப் பயன்படுத்துவது என்பதில் தான் தெளிவின்மை என்பது தவிர தலைவர்கள் இன்மை கிடையாது.

 

ப்ரணாப் போனபிறகு காங்கிரஸ் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் சீக்கிரத்திலேயே விஷயங்களைக் குழப்புவார் என்பது தெளிவு. அவர் எப்போதும் தன்னுடைய செயல்பாடுகளில் உறுதியாக இருந்ததேயில்லை. ஊடகங்கள்தான் 90 களில் செயல்படுத்தப்பட்ட தாராளாவாதக் கொள்கைகளுக்காக அவருக்கு பொருத்தமற்ற அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளன. உலகளவில் எழுந்த அலை அது. இந்தியாவும் தன்னிச்சையாக அதை ஏற்றே ஆகவேண்டும்.

2014 இல் பாஜக நிச்சயமான வெற்றியாளராக ஆவதற்கும், போட்டியில் கலந்துகொள்வதற்கும் இடையில் அக்கட்சி தனது முகத்தை அறிவிக்க வேண்டியது அவசியம். நரேந்திர மோடியை அக்கட்சி ஏன் தனது முகமாக அறிவிக்கக்கூடாது? அவரது நிர்வாகத்தில் குஜராத் இதுவரை இல்லாத அளவு அபிவிருத்தி அடைந்துள்ளது. முஸ்லிம்கள் கூட மற்ற மாநிலங்களை விட அங்கு சிறப்பாக இருக்கின்றனர். குஜராத் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் உள்ளது. அம்மாநிலம் நேர்மையாக ஆளப்படுகிறது. இந்தியாவில் பாஜகவுக்கு 18 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் நிச்சய வாக்குவங்கி உள்ளது. நரேந்திர மோடி மட்டுமே அந்த வாக்குவங்கியை தொடர்ந்து தக்கவைக்க இயலக்கூடியவராக இருக்கிறார். பாஜகவின் தீவிர ஆதரவாளர்களை அவர் தான் கவரக்கூடியவராக இருக்கிறார். 3 சதவிகிதம் முதல் 4 சதவிகிதம் மாறக்கூடிய வாக்குகளை முன்வைத்து காங்கிரசும், சிபிஎம்மும் மோடி மீதான அவதூறுகளை கிளப்பக்கூடும். ஆனால் மோடி மீது காங்கிரசும், சிபிஎம்மும் பரப்பவுள்ள அவதூறுப் பிரசாரம் மக்கள் மோடி குறித்து அதிகம் சிந்திக்கக் கூடியதாகவே மாற்றிவிடும். பரிதாபகரமான ஊழல் மற்றும் குளறுபடியிலிருந்து இந்தியாவை மீட்கும் வலுவான தலைவரை அவர்கள் விரும்பலாம். மோடிக்குள் ஒரு பிரதமர் காத்திருக்கிறார். உலகளாவிய வர்த்தக சமூகத்தினர் அவரை விரும்புவது மட்டுமல்ல காரணம். அறிவுஜீவிகளிடம் நான் பேசும்போதெல்லாம் அவர்கள் நரேந்திர மோடி, உயர்ந்த பதவிக்கு வருவதற்காக காத்திருப்பதை உணர்கிறேன். ப்ரணாப்தா விட்ட இடம் காலியாக இருக்கிறது என்றும் நான் சொல்லலாமா?

 
http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%EF%BF%BD%EF%BF%BD%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%EF%BF%BD%EF%BF%BD-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%EF%BF%BD%EF%BF%BD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/2530/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.