Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து

Featured Replies

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி),

ஹெச்.ராஜா (பாஜக), கோபண்ணா (காங்.),

விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாதத்தின் முழு காணொளி:

  • தொடங்கியவர்

அப்சல் குரு பாராளுமன்றத்தினை தாக்கியவர்களுக்கு வாகன உதவி செய்து கொடுத்தாராம்...


போபால் விசவாயு தாக்குதலை செய்தவனை விமானத்தில் ஏற்றி காப்பாற்றிய ராஜீவ் காந்தியை தூக்கில் போட்டுவிட்டு வந்து பேசவேண்டும் நீதியை, பயங்கரவாதத்தை...

 

காங்கிரஸ்காரனை பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரவேண்டியது, “செருப்பு இனி மேல் நமக்கு காலில் அணிவதற்கு மட்டுமல்ல.. ”

 

- நன்றி முகநூல்

  • தொடங்கியவர்

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!
 
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார்.


காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான்.
 

காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட. இது காங்கிரசின் விஸ்வரூபம்.


கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
 

அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?
 

அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?
 

விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.
 

அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?
 

சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க;  ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள், அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?

 

காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.
 

கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.
 

சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
 

அவரவர்களின் மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.


எது மனிதாபிமானம்?
 

அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.
 

மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.

 

http://mathimaran.wordpress.com/2013/02/09/614/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தூக்கு தண்டனை!

ஒரு கொலைக்கு

மறு கொலை

இது பழிவாங்கல் தான்!

கேட்கவேண்டிய உதடுகள்

தூங்குகிறது

தட்டிக் கேட்க வேண்டிய

வார்த்தைகள் தடுமாறுகிறது!

துடிதுடிக்க வேண்டிய இதயம்

இறுகுகிறது!

என்னடா தேசமிது!

உண்மை

குற்றவாளிகளை மறைத்து

அப்பாவிகளுக்கு

தூக்கு தண்டனை

போபாலில் விஷவாயு கசிந்து

5 லட்சம் மக்கள் பலி

ஈழத்தில் நம் தொப்புல் கொடி உறவுகள்

3 லட்சம் பேர் உயிரோடு

சுட்டு,

மிரட்டி,

கொளுத்தி,

எரித்து,

அடித்து,

உதைத்து,

வன்கொடுமைக்கு உட்படுத்தி

படுகொலை

இக்கொலைக்குற்றவாளிகளுக்கு

சிவப்பு கம்பள வரவேற்பு

இராணுவ பாதுகாப்பு

சிறப்பு மரியாதை

என்னடா தேசமிது!

டீ போட்டு கொடுத்தவனுக்கும்,

பேட்டரி வாங்கிக் கொடுத்தவனுக்கும்

வாகன உதவி செய்தவனுக்கும்

தூக்கு என்றால்

ஈழத்தில்,

காஷ்மீரில்,

பீகாரில்,

ஒடிஷாவில்,

சத்தீஸ்கரில்,

ஆந்திராவில்,

மியான்மரில்,

ஆப்கானிஸ்தானில்,

பாகிஸ்தானில்

இன்னும் பல இடங்களில்

அப்பாவி மக்களை கொன்ற

மக்கள் விரோத

அரசுகளுக்கு

என்ன தண்டனை?

சிந்தியுங்கள்!!!!!!

 
ஆதாரம்- முகநூலில் 'சரவணன்'

இவருக்கு ஆதராவாக நான் ஏற்க்கனவே கூரி இருந்தேன், குற்றம் நிறுபிக்கப்பட்டதால் இவறின் தூக்கு தண்டனையை ஆதறிக்கிறேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த சமூகங்களிலும் தூக்குத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நீதி என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

 

ஒருவரைக் கொல்லுமாறு ஆளை அனுப்பினான் இன்னொருவன். கொலை நடந்தது. கொலையாளியும் பிடிபட்டான். இப்போது யாருக்குத் தூக்கு வழங்க வேண்டும்? எய்தவனுக்கா, கொன்றவனுக்கா அல்லது இருவருக்குமா?

 

இங்கேதான் இந்திய நீதி அடிக்கடி தவறுகிறது.

 

மரணதண்டனையை கொலையாளிக்கு மட்டுமே அதிகபட்சமாக வழங்கமுடியும். எய்தவன் வேறாக இருந்தாலும், கொல்பவனுக்கென்று சுய சிந்தனை இருந்திருக்கும். ஆகவே அவன் அவ்வாறு கொலை செய்திருக்க வேண்டியதில்லை.

 

எய்தவனுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்க முடியும், நீதி வழுவாமல் இருக்கும் ஒரு நாட்டில்..

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.