Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர் ஜேசுதாஸ் மருமகனிற்கு 59 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15-anand-jon-300.jpg

 

நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர் ஆனந்த் ஜான், பாலியல் குற்றத்திற்காக அமெரிக்காவில், 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ள நிலையில் தன்மீதான ஒரு புகாரை அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

 

புகழ் பூத்த பாடகர் ஜேசுதாஸ் தங்கை மகனான, கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் ஜான், 1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற பேஷன் டிசைனராக இருந்தவர். பிரபல நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவரான ஆனந்த் ஜான் மீது, 2007 ஆம் ஆண்டு பாலியல் புகார் சுமத்தப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வருவதற்கு வாய்ப்பு தருவதாக கூறி தங்களை பலவந்தப்படுத்தியதாக ஜான் மீது 7 பெண்கள் புகார் தெரிவித்தனர்.

 

இவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜான் மீது 49 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றங்களின் பேரில், கலிபோர்னியா சிறையில் 59 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ஜான் மீது, மான்ஹாட்டன் நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

 

நேற்று நடந்த விசாரணையின்போது தன் மீதான குற்றங்களில் ஒன்றை ஆனந்த் ஜான் ஓப்புக்கொண்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஆனந்த் ஜான் கலிபோர்னியாவில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

 

ஆனந்த் ஜானுக்கு ஏற்கனவே 59 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள நிலையில், டெக்சஸ், நியூயார்க்கிலும் அவர் மீதான குற்றங்களின் பேரில் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/2013/02/15/world-anand-jon-gets-59-years-jail-169855.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்த தண்டனை, நியாயமானதே...
புகழ் பெற்றவர்களின், பெயரைக்கெடுகவென்றே.... பல, குடும்பங்களில் நாதாரிகள், உருவாகி விடும்.
இது, அமெரிக்காவில் நடந்த வழக்கு என்பதால்....., அருமையான சைவப் பாடகர் ஜேசுதாஸின் பெயரும் பழுதாய்ப் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

கோபி பிறையன் போன்றவர்களும் இப்படியான கேஸ்களில் மாட்டுப்பட்டுள்ளார்கள். பணத்தினால் தப்பி வெளியில் திரிகிறார்கள்.பல கேஸ்கள் பெண்கள் பணத்துக்காக மாயவலை வீசி பணத்தை கறக்க முயல்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சில ஆண்டுகள் முன் பிரிட்டிஷ் TV நிகழ்வில் பார்த்த ஒரு நிகழ்ச்சி.
 
ஒரு திறமை மிக்க ஜப்பானிய கமரா படப்பிடிப்பாளர். அவரது கமராவில் கிளிக் பண்ணப் படும் பெண்கள், modelling, fashion உலகில் கொடி கட்டிப் பறப்பார்கள். 
 
அவரது திறமை அப்படி. மோதிரக் கைக் குட்டு என்பது போன்றது. அவரும் மிளிரக் கூடிய பெண்களைத் தான் தேடி எடுப்பார். எனினும் ஆயிரக் கணக்கில் பெண்கள் அவரது கடைக்கண் பார்வை, வாய்ப்புக்கு ஆக காத்திருப்பார்கள்.
 
அவரோ அந்த மாதிரியான பேர்வழி. ஆனால் உசார் பார்ட்டி.
 
பெண்களிடம் பணம் வாங்க மாட்டார். Agency யிடம் கமிஷன் வாங்கிக் கொள்வார். ஆனால் அந்த பெண்கள் அவருடன் படுகையினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
இது குறித்து தெளிவாக agreement வைத்து இருப்பார். பின்னர் இது மாதிரி வழக்கு வம்பு வரக் கூடாது என, 17 வயதுக்கு கூடிய இளம் அழகிய பெண்களை, தெரிவு செய்யும் போது, இந்த ஒப்பந்தம் போடப்படும்.
 
அவரால் தெரிவாகும் பெண்கள் கோடி, கோடியாக உழைக்க முடியும் என்பதால், அவருடன் படுக்கைக்கு செல்ல தயங்குவது இல்லை.
 
அவர் தான் உண்மையில் மச்சக்காரர். இவர்கள் எல்லாம் அவரிடம் டியூஷன் எடுக்க வேண்டும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் ஒரு சர்வதேச பொம்புளைப்பிரச்சனை விசயங்கள்....மொடல் எண்ட பேரிலை நடக்கிற விசயங்கள் பல கொலையளிலைதான் முடிஞ்சிருக்கு.......தம்பியர் உயிரோடை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு சர்வதேச பொம்புளைப்பிரச்சனை விசயங்கள்....மொடல் எண்ட பேரிலை நடக்கிற விசயங்கள் பல கொலையளிலைதான் முடிஞ்சிருக்கு.......தம்பியர் உயிரோடை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

 

 

 

தப்பி என்ன பிரஜோசனம் அண்ண?
 
59 வருஷம் உள்ள இருக்க வேண்டியது தான்.
  • கருத்துக்கள உறவுகள்

தப்பி என்ன பிரஜோசனம் அண்ண?
 
59 வருஷம் உள்ள இருக்க வேண்டியது தான்.

 

59 வருசம், மறியல்லை.. இருந்தால்... பென்சன் காசு, எவ்வளவு குடுப்பாங்க.... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பி என்ன பிரஜோசனம் அண்ண?
 
59 வருஷம் உள்ள இருக்க வேண்டியது தான்.

 

வெளிஉலகைவிட உள்ளுக்குள் விசாலமான வாழ்க்கையாம்......சகல சௌபாக்கியங்களுடனும்..........போவீரா.....போய்ப்பார்ப்பீரா? :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இங்க ஒரு பொடி, இங்கிலிஷ் எண்டால் மூக்கைப் பொத்தினால், வாயை ஆவெண்டத் தெரியாது. சுத்தம்.
 
கன நாளுக்குப் பிறகு ஒரு நாள் ரோட்டில் கண்டால், இங்கிலிஷ்ல வெளுத்து வாங்கினான்.
 
பொறடாப்பா, பொறு, உண்மையை சொல்லு, எங்க இங்கிலீஷ் பொறுக் கிணனி எண்டு கேக்க தான், அட உனக்குத் தெரியும் எண்டு நினைச்சன், தெரியாதே; நான் ஒரு பிரச்சனையில 18 மாதம் உள்ளுகில. அங்க படிப்பிச்சுப் போட்டாங்கள்.
 
gym, நல்ல சாப்பாடு எண்டு அந்த மாதிரி வசதி எண்டு சொன்னான் பாவி!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உரிமைகளை பெறக்கூடிய சிறைக்கூடங்கள்...இது ஆசிய நாடுகளில் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகளை பெறக்கூடிய சிறைக்கூடங்கள்...இது ஆசிய நாடுகளில் இல்லை.

 

அட நம்ம கிழக்காளி அம்மான், 5 மாத படிப்பித்தலில, அங்க TV, Paper அது இது என்று முடிந்த அளவு வெளுத்துக் கட்டுகிறாரே!

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.