Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு?

Featured Replies

veerapan.png

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கர்நாடகா மாநிலம் பெல்காமில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

  

இதற்கிடையில்நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை  ரத்து செய்யக் கோரி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

 

நாளையே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சத்தில் 4 பேரது உறவினர்களும் உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.

 

மேலும் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக விசாரிக்க மறத்து விட்டது. மேலும் நாளையே தூக்கு நிறைவேற்றடுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என நீதிபதி அல்டமாஸ் கபீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட கருணை மனு: வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானபிரகாஷ், பிலவேந்திரன்,சைமன் ஆகிய 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி கடந்த 11-ம் தேதி நிராகரித்தார்.

 

இத்தகவலை உறுதிசெய்த கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என கடந்த 13ம் தேதியன்றே தெரிவித்தார்.

 

மேலும் 14 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற, தூக்கிற்கான தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயிப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

 

தற்போது கர்நாடகாவின் பெல்காம் சிறையில் உள்ள இந்த நான்கு பேரும் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

http://puthiyathalaimurai.tv/veerapan-aides-to-be-hanged-tomorrow

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் 4 தமிழர்கள்...... :(

 

ஈழத்தில் இறுதிப் போரில் ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களின் சாவுக்கு (உண்மை தெரிந்தும் பொருளாதார, ஆயுத, ஆளனி உதவியளித்துக்) காரணமான மன்மோகன், சோனியா, பிரணாப், சிதம்பரம், கருணாநிதி, அந்தோனி ஆகியோருக்கு எப்போது தூக்குத் தண்டனை?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் 4 தமிழர்கள்...... :(

 

ஈழத்தில் இறுதிப் போரில் ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களின் சாவுக்கு (உண்மை தெரிந்தும் பொருளாதார, ஆயுத, ஆளனி உதவியளித்துக்) காரணமான மன்மோகன், சோனியா, பிரணாப், சிதம்பரம், கருணாநிதி, அந்தோனி ஆகியோருக்கு எப்போது தூக்குத் தண்டனை?

 

இவர்களுக்கு தூக்குத் தண்டனை கிடைப்பது அரிதிலும் அரிது.. ஆனால் தண்டனை தருவது முக்கியம் அல்லவா??

 

அதனால்தான் இப்படியானவர்களுக்கு....... :rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பனை  வளர்த்த

லஞ்சம் வாங்கிய

அவனுக்கு எல்லாவித உதவிகளையும் செய்த

அவனைவிட பெரும் திருடர்கள்  நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இருப்பதால் தான்

இவர்களுக்கு தூக்குவருகிறது

இவர்கள் வெளியே  வந்தால் தங்களைப்பற்றிய  ரககசியங்கள் வெளியே வந்துவிடும் என்று பயப்படுகின்றாரர்களோ  என்னமோ.

ஆனால் தூக்குத்தண்டனை  பெறும் அளவுக்கு இவர்கள் தப்பு செய்யவில்லை.

செய்தவர் நாட்டை ஆள்கிறார்கள்

  • தொடங்கியவர்

இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

 

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

 

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

 

- முகநூல்

  • தொடங்கியவர்

தூக்குத் தண்டனை இடைக்காலத் தடை
February 18, 2013


வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனை இடைக்காலத் தடைசந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ம் ஆண்டில் சிறப்பு அதிரடிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வர் மீதான தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

 

1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 22 போலீசார் உயிரிழந்திருந்தனர்.

 

தொடர்பான வழக்கில் வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், மற்றும் பிலவேந்திரன் ஆகிய நால்வருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

 

அவர்களது மேல்முறையீட்டில், கடந்த 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவர்களது ஆயுள் தண்டனையை மாற்றி தூக்குத் தண்டனை என அறிவித்தது.

 

அவர்களது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், எந்நேரமும் அவர்கள் தூக்கிலடப்படக்கூடும் என்ற நிலை உருவானது.

 

கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை மறுநாள் புதனன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அதுவரை நால்வரும் தூக்கிலிடப்படக்கூடாது எனவும் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று காலை உத்திரவிட்டது.

 

தமிழ் ஆர்வலர் அமைப்புக்கள் பல இந்த நால்வரும் தூக்கிலடப்படக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.alaikal.com/news/?p=122674

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.